ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன்  
சிரிப்பு  சிரிப்பாக  வருகின்றது  
இதுதாண்டா  உலகம்   
எதையும் புரியாது  பாராட்டும் 
 என்ன என்று கேட்டால்  
கோபங்கொள்ளும்   
வேடிக்கை  மாந்தர் என்றான்
 எட்டைய புரத்தான்
 சரியாகத்தான்  இருக்கின்றது 
 என்று சொல்லிக்கொண்டே
 ரஞ்சித்  என் கண்பார்வையிலிருந்து
 மறைந்தான்,  மழை  மீண்டும் 
துமித்தது  தொடர்வதற்காக . 
அங்கே கிழக்காலே  வானம் 
இருட்டிக் கிடந்தது  
கடல்  அலைகள்  சிரித்து சிரித்து 
மேலெழும்பி  அடங்கின  
அங்கையர்க்கண்ணி  அனைத்தையும் 
 வேடிக்கை  பார்த்தாள்  அவளுக்கென்ன
அவன்  துணை  பக்கத்தில்  இருக்கையில் .

ம.ரமேஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக