நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன்
சிரிப்பு சிரிப்பாக வருகின்றது
இதுதாண்டா உலகம்
எதையும் புரியாது பாராட்டும்
என்ன என்று கேட்டால்
கோபங்கொள்ளும்
வேடிக்கை மாந்தர் என்றான்
எட்டைய புரத்தான்
சரியாகத்தான் இருக்கின்றது
என்று சொல்லிக்கொண்டே
ரஞ்சித் என் கண்பார்வையிலிருந்து
மறைந்தான், மழை மீண்டும்
துமித்தது தொடர்வதற்காக .
அங்கே கிழக்காலே வானம்
இருட்டிக் கிடந்தது
கடல் அலைகள் சிரித்து சிரித்து
மேலெழும்பி அடங்கின
அங்கையர்க்கண்ணி அனைத்தையும்
வேடிக்கை பார்த்தாள் அவளுக்கென்ன
அவன் துணை பக்கத்தில் இருக்கையில் .
ம.ரமேஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக