வெள்ளி, 27 பிப்ரவரி, 2015


தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லை
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லை


திருடித்தான்  களவாடித்தான்   கொள்ளையடித்துத்தான்
வாழ்வது என்று முடிவெடுத்தவர்களை எந்த சட்டமும் ஒன்றும்  செய்ய  முடியாது.


என்ன அதிசயம்   அல்லது கேவலம் -  நாட்டின்  சொத்தை கொள்ளை அடித்தார் என்று 
சட்டம் தண்டிக்கின்றது அவருக்கு  சிறப்பான கவனிப்புகளுடன் கூடிய  சிறப்புச் சிறை
கொடுக்கப்படுகின்றது . இதுதான்  சம நீதியா - கொழுத்த செல்வத்தில்  இருந்து கொண்டு
மேலும் மேலும்  ஆசைப்பட்டு  மக்களுக்கு செல்ல வேண்டிய  பணத்தை  தாமே  அறிவு பூர்வமாக
கொள்ளையடித்து  நாட்டில் பெரிய புள்ளிகளாக  நடமாடி  கொள்ளைக்காரர்களாக  இருக்கும்
வல்லமை கொண்ட கொள்ளையர்களுக்கே   கடுமையான   தண்டனை  கொடுத்து  வாட்ட வேண்டும்.
அங்ஙனம் செய்தாலே பின்னால்  வரும்  ஒரு  அரசியலாளன்  பயந்து மக்கள் சொத்தில் கை வைக்காது இருப்பான் .  இன்று என்ன  நாட்டில்  நடக்கின்றது ?  அரசியலாளர்கள்   கொள்ளை அடித்தால் வசதியான கவனிப்புகள்   கிடைக்கும் நிலையென்றால்   இனி   எவர்தான் ஒழுக்கமாக  அரசியலில் இருப்பார்கள்? இதற்கு   ஏன்   சட்டம்?   சிறை ?   மருந்து வாங்க , பசி  வேதனை   என்று  ஒரு ஏழை  எங்காவது  திருடினால்   அடி உதை  இன்னோரன்ன  கொடுமைகள் அந்த ஏழைக்கு   . 


குற்றவாளியான  முன்னாள் அரசியலாளருக்கு  நாட்டின்  பிரதமர்  வாழ்த்து செய்தி சொல்கின்றார் என்றால்  ஒவ்வொரு குடிமகன் மனதிலும்  என்ன எண்ணம்  ஓடும் . அரசியலில் இருந்து கொண்டு கொள்ளை அடிக்கலாம்  ஒன்றும் வெட்கமில்லை என்றே  கருத்துக்கொள்வான் - ச்சீ  வெட்கம்.
 

வீதி  விடுப்பு




நான்  நூல் நிலையத்திலிருந்து கண்ணாடியினூடாக  வீதியில் அமைந்திருக்கும்  அந்த  கொசோவோ நாட்டு மனிதரின்  கடையை பார்க்கின்றேன் . அதிகமாக முஸ்லீம்களே  அங்கு வந்து வட்ட வட்ட  ரொட்டிகளை  (சப்பாத்திபோன்றது )  அள்ளிக்கொண்டு போகின்றார்கள் ,  பழங்களையும் தாராளமாக  வாங்கிக்கொண்டு செல்வது அவர்களின் பைகளுக்குள்  தெரிகின்றது.   இது நாளும் நான்  நூல்நிலையத்திலிருந்து காணும் காட்சி.  தெருவின்  நடை பாதையில்  மரக்கறிகள் , பழங்கள்  அழகாக பெட்டிகளில் வைத்திருக்கின்றார் அந்த இனிய மனிதர் .  உள்ளே முஸ்லீம்களின் மார்க்கப்படியான  பாவம்  நீக்கப்பட்ட   இறைச்சிகள் (கலால் )  விற்பனையில் இருக்கின்றது.  அந்த கொசவோ மனிதரும் மனைவியும் பிள்ளைகளும்  ஓடியோடி உள்ளே உழைக்கும் காட்சி  பார்க்க அழகாக இருக்கும் .
ஆனால்  எங்கள்  செல்வங்கள் (தமிழர்கள்)  யாரும் வந்து போவதாக இதுவரை காண வில்லை.
நான்  நூல் நிலையத்திலிருந்து கண்ணாடியினூடாக  வீதியில் அமைந்திருக்கும்  அந்த  கொசோவோ நாட்டு மனிதரின்  கடையை பார்க்கின்றேன் . அதிகமாக முஸ்லீம்களே  அங்கு வந்து வட்ட வட்ட  ரொட்டிகளை  (சப்பாத்திபோன்றது )  அள்ளிக்கொண்டு போகின்றார்கள் ,  பழங்களையும் தாராளமாக  வாங்கிக்கொண்டு செல்வது அவர்களின் பைகளுக்குள்  தெரிகின்றது.   இது நாளும் நான்  நூல்நிலையத்திலிருந்து காணும் காட்சி.  தெருவின்  நடை பாதையில்  மரக்கறிகள் , பழங்கள்  அழகாக பெட்டிகளில் வைத்திருக்கின்றார் அந்த இனிய மனிதர் .  உள்ளே முஸ்லீம்களின் மார்க்கப்படியான  பாவம்  நீக்கப்பட்ட   இறைச்சிகள் (கலால் )  விற்பனையில் இருக்கின்றது.  அந்த கொசவோ மனிதரும் மனைவியும் பிள்ளைகளும்  ஓடியோடி உள்ளே உழைக்கும் காட்சி  பார்க்க அழகாக இருக்கும் .
ஆனால்  எங்கள்  செல்வங்கள் (தமிழர்கள்)  யாரும் வந்து போவதாக இதுவரை காண வில்லை.
போரென்றால்  மக்கள் சாவார்கள் தானே  என்று தமிழர்கள் சாவை ஆமோதித்தவளை   தலைமேல் தூக்கிக்  கொண்டாடி, அவள்  கொள்ளையடித்தாள் , என்று  குற்றம் சாட்டப்பட்டு  சிறைக்குப்  போனதற்கு  193 தமிழர்கள்  அவளுக்காக  சோகம் தாழாது  தற்கொலை செய்ததும் இந்த  பிரபஞ்சத்துக்குள்ளே  நடந்த வெட்கம்  மிகு துயரம் வேடிக்கை ,  அது மட்டுமா   மோடி அவளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லுகின்றார்,   யாரின் பிறந்தநாள்!! மக்கள்  சொத்தை கொள்ளையடித்து கொட நாட்டில்  அரண்மனை கட்டி வைத்திருக்கும்  முன்னாள் ஆட்டக்காரிக்கு  இந்நாள் குற்றவாளிக்கு
நாட்டின் பிரதமர் வாழ்த்து சொல்லும் பக்குவத்தில்  அரசியலும்   தலைகளும்  நகர்கின்றன . மானஹ்த்துக்கும் மரியாதைக்கும் பண்புக்கும் அறத்துக்கும்   உயிர்வாழ அனுமதி கேட்க வேண்டிய நிலையில் உலக நடப்புகள் ,  கடவுள் பெயரால்  மனித  கழுத்துக்களை  அங்காலே  வெட்டுகிறான்
கைதி என்று பிடித்த  வெள்ளையர்களின்  கழுத்தை ஒரு கும்பல் தண்டனை என்று  அறுக்கின்றது .
வன்னியிலே மக்கள் சோற்றுக்கு அவதிப்படுகின்றார்கள் அனுப்ப கொஞ்சம்   காசு தாங்கோ என்றால் என் தமிழன்   குண்டியை காட்டுகின்றான் ,  முந்தநாள்  எனது நகரில் உள்ள  செல்வங்களிடம்   உதவி செய்யுங்கள் என்று கோரியிருந்தேன்  இந்நேரம் வரை  ஒருவர் கூட  அழைக்க வில்லை  உதவி செய்ய.
ஏறத்தாழ 250 பேர்கள்  வாழும் நகரம் ,  இதுவே  வருகிற சனிக்கிழமை  பிறந்தநாள் விழா   அல்லது திரைப்படம்  என்றால்   கேள்விகள் கேட்டு ஆடைகள் வாங்க ஆயிரங்களில் செலவு  நடந்துகொண்டிருக்கும் ,  ஆதரவில்லார்க்கு ஆதரவளிக்க  ஒரு பிட்சா  வாங்கும்  60 குறோண்  தர
எண்ணார்   நம் தமிழ் உறவுகள்.  இவர்களுக்குள்   சிரித்துப் பேசி  வாழ வேண்டும்.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

கவியரசின்  வடிப்பில்


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

புதன், 25 பிப்ரவரி, 2015

வணக்கம்  நண்பர்களே.


இதனால்  ஊரிலே  (வன்னி)  பசியின் கொடுமை தாங்க முடியாது  பெருந்துன்பம் அனுபவித்து இறுதியில்  விபச்சாரம் செய்யும் நிலைக்கு செல்ல விருந்த பெண்ணை  ஒருவாறு மீட்டிருக்கின்றோம்.
அப்பெண்ணுக்கு நிரந்தர  தொழில் ஒன்றை  கொடுத்து அவருக்கான எதிர்கால  வாழ்வை அவரே
சொந்தமாகப்   பார்க்கும் நிலைக்கு கைதூக்கி விட்டு  உதவ வேண்டியது எமது பொறுப்பாகின்றது
போரில்  வீசப்பட்ட குண்டில் கணவனையும் மூன்று பிள்ளைகளையும் இழந்து  இன்று ஒரு கைக்குழந்தையுடன்  தவிக்கின்றார் .  ஆதலினால் உங்களால் முடிந்த  பொருள் தந்து  உதவும் படி  அன்புடன் வேண்டுகின்றேன் .


எனது தொலை பேசி  -
52699910


நெட்  பாங்க் 


Ramesh  Manivasagam
sydbank


reg - 7051


kontonr - 0001073960



செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

அடி - தொடர்  7

நேராக  அதிபர்  அறைக்குள் சென்ற முத்தர்  கடுங் கோபத்துடன் கேட்டார்,   நாதன் வாத்தியோட  பேசவேணும் .

அதிபர்  - ஐயா கொஞ்சம் மரியாதையா  பேசவேணும் நீங்கள். 

முத்தர்-   மரியாதை எங்கை ஆருக்கு  எப்பிடி குடுக்கிறதெண்டு  எனக்குத் தெரியும்.   வாத்தியை  கூப்பிடுங்கோ ,  பிள்ளையளை  நாலு  விசயம் படிக்கச்  சொல்லி   உங்களிட்டை  அனுப்பினா
அடிக்கிறது உதைக்கிறது  கண்ட மாதிரி திட்டுறது பேசுறது,  இதுதான்  உங்களுக்கு தெரிஞ்ச  மரியதையாக்கும் -பின்னை  என்ன  நீங்களே சொல்லுங்கோவன் என்று அதிபரைப்  பார்த்து கடுப்புடன்
கேட்டார் முத்தர்  .

அதிபர் - எல்லாம் கேள்விப்பட்டனான்  ,  பிழைதான்,  ஐயா  இனிமேல்  அப்படி  நடக்காது பார்த்துக்கொள்ளுறன்  என்று அதிபர்  சமாதானம் சொல்லவும்,  நாதன் ஆசிரியரை  அழைத்துவர  அனுப்பிய  மாணவன்  அவரை அழைத்து வந்து விட்டு தனது வகுப்புக்கு செல்ல,  இவர்தானே
என்று  கேட்ட முத்தர்  புலிபோல்  பாய்ந்து  நாதனை  தாக்கி  கீழே  விழுத்தி விட்டு  சில தூசண
வார்த்தைகளையும்  பரவி விட்டு  இரத்தம்  ஏறிய   சிவப்புக்கண்ணுடன்  பாடசாலையை விட்டு  மின்னலாக  வெளியேறினார் --  படிப்பிக்கிறாங்களாம்    பாடம்,  முதல்ல  வாத்தியளுக்கு  சரியா
படிப்பிக்க வேணும்  என்று  புறு  புறுத்தபடி  முத்தர்  தவறணை  நோக்கி  நடந்தார்,  குளிர்ந்த கள்ளால்  ஆத்திரத்தை  அணைக்க------

தொடரும் -------

திங்கள், 23 பிப்ரவரி, 2015

யாழ் இந்துக்கள் (பிராமணர் தவிர்ந்த)  மச்சம் சாப்பிடுபவர்கள் என்பதால்  இந்திய இந்துக்கள்  (பிராமணர்கள்)  ஈழ இந்துக்களை  இந்துக்களாக  மதிப்பதில்லையென,   மிக நல்ல  இருநாட்டு
சமூக  உறவுகளை  ஆராய்ந்த  அறிஞர்  ஒருவர் கூற கேள்வியுற்றேன் .  கோப்பன்ஹாகன் அகதிகள் முகாமில் இருந்த உத்தரப்பிரதேசத்து இந்திய  பிராமணர் ஒருவர்  மாட்டு மாமிசம் உண்டது கண்டிருக்கிறேன்  அவர்  சகல  மாமிசமும் உண்டார் .  அதுபோல்  யாழ் குருக்கள் ஒருவர்  கோழி  சாப்பிட்டதை  ஜெர்மன் அகதிகள்   முகாமில் கண்டேன் . பாகிஸ்தானின் தந்தை  என்றழைக்கப்படும் ஜின்னா   பன்றி இறைச்சியை மிகவும் விரும்பி  உண்பவர் என்று,  தமிழருவி மணியன் ஐயா பேச்சில் கேட்டிருக்கின்றேன் . இங்கு என்னுடன் வேலை செய்த  ஈரானியர்  பன்றி இறைச்சியை  சாப்பிட்டது  கண்டிருக்கின்றேன்.  வேறும் சில  ஈரானியர்கள் (இசுலாத்தில் பற்றில்லாதவர்கள்) முன்பு பன்றிமாமிசத்திலாலான சிப்சுகள்   உண்டதைக் கண்டிருக்கின்றேன் . ஆக  எல்லாம் நமது மனமே . மாடு தின்பவன் நாடுகளுக்கே (ஐரோப்பா, அமேரிக்கா) தொழில் செய்ய ஆசைப்பட்டு  இந்திய  பிராமணர்கள்  படையெடுக்கின்றார்கள்  நாளும் . சமயம் சொல்லி  மக்களின்  உணவு விருப்புகளை  எவரும்  தடுத்தல் ஏற்புடையதல்ல - அவனவன் வாங்கும் இறைச்சி அவனவன்  வீட்டு அடுப்புக்குள்ளே . அன்று யாகங்களுக்குள்  போட்ட  குதிரை  ஏனை  மிருகங்கள்  யாவும்  பிராமணர்களால்  உண்ணப்பட்டதாக புராணம்  சொல்வதாக  அறிஞர்கள்  கூறுகின்றார்களே ,  குசேலர்  அவலுடன்  செல்கையில்  கிருஷ்ணன் ஆமை வடை உண்டுகொண்டு  இருந்ததாக  சுலோகம்  சொல்வதாக  கதாப்பிரசங்கம்  செய்த பிராமணப் பெண்ணே  ஒத்துக்கொண்டு  கூறியதைக் கேட்டிருக்கின்றேன்.   பாகிஸ்தானில் மற்றைய முஸ்லீம் நாடுகளில் வாழும்  முஸ்லீம் அல்லாத பிற மதத்தவர்கள் ரமழான் காலத்தில்  சிரமப்படுகின்றார்கள்,   உணவு  விடுதிகள் திறப்பதில்லை   மற்று மத மக்கள்  உணவு உண்பதை முஸ்லீம்கள்  ஏற்பதுமில்லை அக்காலத்தில்.  இதுவும்  முஸ்லீம் நண்பர்களிடமிருந்து  தெரிந்து கொண்ட உண்மை,  அவ்வகையில்  அதுவும் ஏற்க முடியாது.   ஆக  எங்கு எங்கு பெரும் பான்மை இருக்கின்றதோ அங்கே அது வைப்பதே சட்டமாகின்றது.

 
சீகன் பால்க் நினைவு தினம் பிப்ரவரி 23, 1719
பிறந்த தினம் ஜூன் 20, 1682
நினைவு தினம் பிப்ரவரி 23, 1719
** இந்தியாவிலேயே முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமே ஆகும்.முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளர் சீகன்பால்க்.
1682 ஆம் ஆண்டு, ஜூன் 20 ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள புல்ஸ்னிட்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார்.பெற்றோர் பர்த்தலோமேயு - கத்தரின் .இவருடைய தந்தை பர்த்தலோமேயு நவதானியங்களை விற்பனை செய்து வந்த வணிகர்.சீகன் பலவீனமான தேகத்தைக் கொண்டிருந்தார்.சீகன்பாலின் தாயார் பக்தி நிறைந்தவர்.இவரின் தாயார் மரணப்படுக்கையில் கூறி வார்த்தைகள் இவைகளே: "என் அருமை குழந்தைகளே! திருமறையை ஆராய்ந்து பாருங்கள், அவற்றின் ஒவ்வொரு பக்கங்களையும் என் கண்ணீரால் நனைத்திருக்கின்ற படியால் நீங்கள் அதில் பொக்கிஷத்தைக் காண்பீர்கள்." சீகன்பால்க் அவ்வார்த்தைகளை மறவாது திருமறையைக் கருத்தாய் கற்று வந்தார். சீகனுக்குச் சிறுவயதாயிருக்கும் போதே தாயார் இறந்து போனார். தாயை இழந்த இரண்டே வருடத்தில் தந்தையையும் இறந்தார்.
சீகன்பால்க் ஆரம்பக் கல்வியை புல்ஸ்னிட்ஸ் மற்றும் காமென்ஸ் ஆகிய இடங்களில் உள்ள லத்தீன் பாடசாலைகளில் பயின்றார். இவர் 12ஆம் வயதில் கோயர்லிட்ஸ் என்னும் இடத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 8 ஆண்டுகள் கல்வி கற்றார். பள்ளியின் பதிவேட்டில் இவரது பெயருக்கு அருகில் சரீரத்திலும், ஆன்மாவிலும் வளர்ச்சியடையாத மாணவன் (in body and soul an immature person) என எழுதப்பட்டிருந்தது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நற்செய்தி சார்பான மறைமெய்மை சார்ந்த (Evangelical Mysticism) வட்டத்துக்குள் அறிமுகமானார். இவர் திருமறையைத் தொடர்ந்து படித்ததினாலே மறைமெய்மைக் கொள்கையினால் முற்றிலும் இழுக்கப்படாமல் உணர்ச்சி வசப்படும் அனுபவத்துக்கும் வேதாகம அறிவுக்கும் சமநிலைத் தந்து இரண்டையும் தனக்கு முக்கியமானதாய் வைத்திருந்தார். நற்செய்தி சார்பான மரைமெய்மை (Mysticism) அனுபவம் இவரை இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற உதவியது. இவருக்குள் ஓர் அற்புதம் நிகந்தது. இதன் விளைவாக இவரது வாழ்வில் அடிப்படை மாற்றம் தோன்றியது. இந்த மாற்றத்திற்கு பிறகு சாட்சி பகர உந்துதலும் மிஷனரி அருட்பணியில் ஆர்வமும் இவரில் எழுந்தது.
1702 ஆம் ஆண்டு சீகன்பால்க் பெர்லின் பட்டணத்தில் உயர்கல்விக்காகச் சேர்ந்தார்.உடல் நலம் சரி இல்லாததால் இவருக்கு 9 மாதங்கள் கல்வி தடைபட்டது. 1703 ஆம் ஆண்டு இறையியல் கல்விக்காக ஹலே சென்றார். அங்கும் இவர் அடிக்கடி
உடல் நலம் சரி இல்லாமல் இருந்தார்.அங்கு இவர் எபிரேய மொழியைக் கற்றார்.
சீகன்பால்க் அருட்பணியாளாராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய உடல் பலவீனத்தினால் இவருக்குக் கொடுக்கப்பட்ட அருட்பணி அழைப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார். இருப்பினும் கடவுளின் விருப்பம் என்று எண்ணி அதை ஏற்றுக் கொண்டார். சீகன்பால்க் மற்றும் ஹென்ரிச் புளுட்ச்சோ (Henrich Pluetchau) ஆகிய இருவரும் லுத்தரன் சபை பேராயரால் அபிஷேகம் செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது.மன்னர் அழைப்பை ஏற்று டென்மார்க் சென்றனர்.
அப்போஸ்தலர் நடபடிகளின் நூலின் அடிப்படையில் ஓர் சிறப்பு செய்தியை மன்னரின் குடும்பத்திற்கு சீகன்பால்க் அளித்தார். அந்த நாள் முதல் அரச குடும்பத்துடன் மிகுந்த நட்பு ஏற்பட்டது. இவரது மரணம் வரை அந்த நட்பு தொடர்ந்தது.
1705ஆம் ஆண்டு, நவம்பர் 29ஆம் தேதி இருவரும் மன்னர் சார்பில் அவருடைய செலவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பயணத்தின் போது, கப்பலில் இறந்தவர்களின் சடலங்களைக் கடலில் வீசியெறிவதையும், அலைகளாலும், புயல்களாலும் கப்பல் அலைக்கழிக்கப்பட்டதையும் நேரடியாகக் கண்டார சீகன்பால்க். தனது கடற்பயணத்தை மரணக் கல்விச் சாலை (Academy of death) என்று குறிப்பிட்டார். இவர் இந்தக் கடற்பயணத்தின் போது The General School of True Wisdom என்னும் புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம் பின்னர் 1710 ஆண்டில் டென்மார்க் இளவரசி சோபியாவின் உதவியால் வெளியிடப்பட்டது.
இருவரும் ஏழு மாதக் கப்பல் பயணத்தில் 1706ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் நாள் இந்தியாவில் தமிழ்நாட்டின் கடற்பகுதியான தரங்கம்பாடியை வந்தடைந்தனர்.. தரங்கம்பாடிக்கு வர அனுமதியாமல் மூன்று நாட்கள் கப்பலில் தங்கும் நிர்பந்தத்தை ஆளுநர் ஏற்படுத்தினார்.அனைத்து சூழ்நிலைகளும் இவர்களுக்கு எதிராய் செயல்பட்டன. டென்மார்க் அரசனால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் என்று மக்கள் இவர்களை சந்தேகிக்கப்பட்டனர்.இந்தியாவில் சீர்திருத்த திருச்சபை முதல் மிஷனரிகள் அனைத்து பிரச்சனைகளையும் துன்பங்களையும் சகித்தனர். பின்னர் அடிமைகளாக எண்ணப்பட இந்திய ஏழை எளிய மக்கள் வாழும் பகுதியில் சென்று தங்கினர்.
சீகன்பால்க் கடவுளுக்கான அருட்பணியை உடனே ஆரம்பித்தார். முதலியப்பா என்ற இந்தியர் சீகனுக்கு உதவியாளரானார்.எல்லய்யா என்பவரிடம் தமிழ் கற்றார். சீகன் தன்னைச் சுற்றியிருந்த தொழிலாளர்களால் பேசப்படும் போர்ச்சுக்கீசையும், தமிழையும் கற்றார்.
தனது மொழிபெயர்ப்பாளரான அலப்பூ மூலம் 5,000 தமிழ் வார்த்தைகளைத் தெரிவு செய்து மனப்பாடம் செய்தார். கடற்கரை மணலில் விரலால் எழுதி தமிழ் எழுத்துக்களைப் பழகினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.
சீகன்பால்க் ஐரோப்பியர்களின் வீடுகளிலும் தோட்டங்களிலும் வேலை செய்தயும் தமிழர்களுக்காக முதல் மிஷன் பாடசாலையையும், குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார். டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஜெர்மன் வீரர்களுக்காக வேதாகமம், பாடல் புத்தகம், தியானப் புத்தகம் கொண்ட ஒரு ஐரோப்பிய நூலகம் ஒன்றையும் ஏற்படுத்தினார்.
ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், மற்றும் ஸ்பானிய வேதாகமங்கள், தியானப் புத்தகங்கள் இங்கிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் எடுத்துச்செல்லப்பட்டது. சீகன்பால்க் முயற்சியால் 1707ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்திய கிறிஸ்தவர்களுக்கென்று ஒரு தனி ஆலயத்தை ஏற்படுத்தினார்.
சீகனின் தீவிர முயற்சியால், தரங்கம்பாடி மிஷனை, ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் ஆதரித்தன. இவர்களால் கொடுக்கப்பட்ட பணத்தால் மிஷனரிகளுக்கு வீடுகளும், மூன்று பள்ளிக்கூடங்களும் வாங்கப்பட்டன. பொறையாறு என்னும் ஊரில் அழகிய தோட்டம் ஒன்றையும் இவர் வாங்கினார். பொறையாற்றில் காகிதத் தொழிற்சாலையை நிறுவினார். சென்னை மற்றும் கடலூரில் பள்ளிக்கூடங்கள் நிறுவினார்.
சீகனின் மிஷனெரிப் பணிக்கு, கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் ஹாசியஸ் பெரிதும் இடையூறாகவே இருந்தார். இந்தியர்கள் கிறிஸ்தவர்களாக மாறினால் வியாபாரம் பாதிக்கப்படும் என்று ஹாசியஸ் கருதினார்.சீகனின் வீட்டிற்குள் நுழைந்து ஜெபம் பண்ணிக் கொண்டிருந்த இவரைக் கைது செய்தனர். கவர்னர் முன் நிறுத்தினர். தவறான குற்றச்சாட்டுகளால் சீகன் சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு மாத சிறைவாசத்தில் இரண்டு ஜெர்மன் வீரர்கள் இவருக்கு உதவி செய்தனர் .இருவரும் ஜன்னல் வழியாக காகிதமும் பேனாவும் மையும் சீகனுக்குக் கொடுத்து உதவினர் .அங்கு ‘The God pleasing State of a Christian’, ‘The God pleasing Profession of Teaching’ என்னும் இரு சிறிய புத்தகங்களை இவர் எழுதினார்.
தமிழ்நாட்டு மக்கள் கிறிஸ்துவில் எப்போதும் நிலைத்திருக்க போதனைகள் மட்டும் போதாது, வேதமும் அவர்கள் கைகளில் அவர்களின் மொழியிலே கொடுக்கப்பட வேண்டும் என்று சீகன்பால்க் எண்ணினார். எனவே சீகன் 1708ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.
மொழி இவருக்குப் புதிது.யாரும் வேதத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கவில்லை.வேதத்தில் பல வார்த்தைகளுக்குச் சரியான பதங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஸ்கிமிட்டின் (Schmidt) கிரேக்க புதிய ஏற்பாடு, லத்தீன் வல்கேட், மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு முதலானவைகளை ஆதாரமாகக் கொண்டு, டேனிய, போர்ச்சுக்கீசிய வேதாகமங்களின் உதவியுடன் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வேலையை 1711 மார்ச் 31இல் முடித்தார். இந்தியாவில் தமிழ் மொழியில்தான் முதலாவதாக வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது.தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவினார்.இதுவே இந்தியாவைன் முதல் அச்சுக்கூடம் ஆகும்.தமிழில் முதலில் அச்சிடப்பட்டது தம்பிரான் வணக்கம் என்ற நூல் ஆகும்.
1715, ஜூலை 15ஆம் தேதி தமிழ் புதிய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. இவ்வரிய தொண்டினால் வேதம் தமிழில் வாசிக்க ஏதுவாயிற்று. சீகன்பால்க்கின் தமிழ் நடை எளிமையானது. இவர் தம்மை சுற்றியிருந்த சாதாரண மக்களுடைய தமிழ் நடையிலேயே மொழிபெயர்த்திருந்தார். இந்தியாவிலேயே முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமே ஆகும்.முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளர் சீகன்பால்க்.
சீகன்பால்க் பத்து வருட மிஷனெரிப் பணிசெய்யத பின்னர், தான் பிறந்த நாடான ஜெர்மனிக்குச் சென்றார். இவர் தன்னோடு மலையப்பன் என்ற இளைஞனையும் அழைத்துச் சென்றார். கடல் பயணத்தில் மலையப்பன் உதவியோடு பழைய ஏற்பாட்டில் யோசுவா புத்தகம் வரை மொழி பெயர்த்தார். 1715ஆம் ஆண்டு ஹாலேயில் வைத்து சீகன்பால்க் எழுதிய தமிழ் இலக்கணப் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.இவர் மரியா டாரதியை திருமணம் செய்தார்.1716ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்தியா வந்தனர். இவர்கள் 1716 ல் தரங்கம்பாடியில் இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவினார்.
மொழிபெயர்ப்புப் பணியோடு சீகன்பால்க் சில புத்தகங்களையும் எழுதினார். தென்னிந்தியாவின் மதக் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், ஆசாரங்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவற்றைப் பற்றி ஜெர்மன் மொழியில் 44 அதிகாரங்கள், 332 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமும், தமிழ் நாட்டு தெய்வங்களின் பரம்பரையைப் பற்றிய ஒரு புத்தகமும் எழுதினார்.
நீதி வெண்பா, கொன்றை வேந்தன், உலக நீதி என்ற புத்தகங்களை ஒன்று சேர்த்து ‘நானாவித நூல்கள்’ என்ற புத்தகத்தையும் ஆக்கினார். லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம் எழுதினார். தமிழ் - ஜெர்மன் அகராதியையும் சீகன் எழுதினார். சபையார் பாடுவதற்காகப் பல பாடல்களை மொழிபெயர்த்தார். ஐரோப்பிய ராகங்களுக்கு இசைந்த ஞானப்பாட்டுகளும், தமிழ் ராகங்களுக்கு ஏற்ற கீர்த்தனைகளையும் இயற்றினார். கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிச் சிறிய வினா - விடை புத்தகமும் இவரால் எழுதப்பட்டது.
1719ஆம் ஆண்டு, பிப்ரவரி 23ஆம் தேதி தரங்கம்பாடியில் தமதி 37ஆம் அகவையில் காலமானார்.முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளருமான பர்த்தலோமேயு சீகன்பால்க் 37 வயது வரை மட்டுமே உயிர் வாழ்ந்தார்.
அடி-   6 தொடர்

ஸ்டேசனுக்கு வந்த மதியையும்  மற்ற பெடியங்களையும்  சண்முகத்தார்  மகிழ்வு முகங் காட்டி  வீட்டுக்கு  அழைத்துச்  சென்றார் . மல்லிகா  சின்னம்மா , புட்டும்  சம்பலும்  முட்டைப்பொரியலும்
செத்தல்மிளகாயும் வெங்காயமும்  பொரித்து  மீன் பால்ச்சொதியும்  வைத்து  சாப்பாட்டு மேசையை
அழகாக்கினா .  நெல்லுப்பானைக்குள்ளே  பழுக்க வைத்த  தங்கள்  தோட்டத்து வாழைப்பழச்   சீப்பை சண்முகத்தார்  சாப்பாட்டு மேசையில்  கொண்டு வந்து  வைத்து  விட்டு,  தானும் குளிக்க  துவாயை எடுத்துக்கொண்டு  வாவிக்கு  சென்றார் .

என்னடாப்பா  எப்படியிருக்கு  வாவிக்குளியல்  என்று  சண்முகத்தார்  அன்பாகக் கேட்டார்  -  நேசன்--   அருமை  மாமா  நல்லா  இருக்குது  இப்பிடி குளிக்கிறது இதுதான்  முதல்த்தடவை  , நானும்  தான்  என்று  மதியும்  மற்று எல்லோரும் சொல்லி மகிழ்ந்து  தண்ணீரில் முங்கி எழுந்தார்கள்,  நான் இதைப்போல  முன்னம்  மலைநாட்டில் குளிச்சனான்  அங்கை  கொஞ்சம்  ஒடுக்கமா  வாய்க்கால் போல  இருக்கும்,  இது கொஞ்சம் அகண்டு இருக்குது என்றான் சச்சி   - சரி சரி கன நேரம்  குளிச்சால்  குளிறேறிவிடும்   காணும் போங்கோ,  போய்ச்  சாப்பிடுங்கோ  என்றார்  சண்முகத்தார்,  தானும் வாவியில் குளிக்க  தயாரான படியே .
தொடரும் ---

  

வியாழன், 12 பிப்ரவரி, 2015



மென்மலர்  உள்  வைத்த வென் கா
விசும்பு வளி  அழியா    ஆழி இருத்திட 
ஆர்கலி   அசைவொன்று   வியப்புறு நோ
விசைந்து வளம் பாடி உவன்றிருக்க
வந்தோ  அருமழை  ஆழி  மேவ
மலர் மிசை  நின்று   காத்த மச்சு
 வென்  கா காவாகா காவலாகியதே


பொருள் விளக்கம்

மெல்லிய பூவில் இட்டு என் காதலை
காற்று அணைக்காதுஆழ்கடலில்  வைத்தேன்
அங்கு வந்த மீனொன்று அதிசயித்து
அதை பார்த்து மகிழ்ந்து சுற்றி நீந்தியது
அப்பொழுது  மழை கடல் மேல் பொழிந்தது
அந்த மீன்  பூமேல் நின்று என் காதலை
பாது காத்தது.

செங்கவி
ம.இரமேசு 
பூந்தென்றல்  முத்தமிட்டு  புறப்பட்ட  தமிழே
பாரைந்து பாசைக்கும்  தாயகத் திகழ்பவளே
தாயைப்பழித்தாலும்  தண்ணீரை  பழிக்காதே
என்று பூமிக்கு புத்தி சொன்ன  பொன்னேரழகே
கண்ணன்றோ நீ நமக்கு  காலமெல்லாம் துதிப்போமே 
அடி - தொடர் 3

யாழ் புகையிரத நிலையம்  அடைந்த  மதியும் நண்பர்களும் , அன்றுதான் புகையிரத நிலைய  பரபரப்பைக்  கண்டார்கள். சச்சி  பயணச் சீட்டை ஐவருக்கும் எடுத்துவர  எல்லோரும் மேடைக்கு சென்றார்கள் ,  நேசன் கேட்டான்--  என்ன சனமாடா,  உவ்வளவும் எங்கையடா போகுதுகள் ?
சச்சி - சிரித்தபடி,  எங்கையாவது  கொம்பனிகளில  இங்கிலீசு படிச்ச தொழிலாளியளா  வேலை செய்வினம் , என்னது இங்கிலீசு படிச்சும் தொழிலாளியோ  என்று  நேசன்  ஆச்சரியமாகக்  கேட்டான்.
பின்ன  கொம்பனியை  தூக்கி  இந்தாபிடி  எண்டு  கொடுப்பாங்களே , அங்கை   கணக்கு பார்க்கும்
தொழிலாளிகள் ,  மேற்பார்வை செய்யும்  தொழிலாளிகள்தான்  படிச்ச  யாழ்ப்பாணத்தாரும் என்று சச்சி 
சொல்லி  முடித்தான் .  அப்ப உத்தியோகம்  என்றாங்களே  என்றான்  பகி,  அதுவும் ஒரு  தொழில்தான்
கொஞ்சம்  மரியாதைக்காக  அப்படி சொல்லுவினம்  என்றான் மதி.

இப்படி  ஐவரும்  தம்முள்  கதைத்துக்கொண்டிருக்க  ஏழுமணி   மெயில்  எறும்புபோல்  ஊர்ந்துகொண்டு வந்து நின்றது . சித்திரா  அழுதபடி  லேஞ்சியால் (கைக்குட்டை ) தனது  கண்ணீரை
துடைத்துக்கொண்டிருந்தாள்   அவள் கணவன் மனோ  சவுதிக்கு  போகின்றான்  பிரிவுத்துயர்
குறுந்தொகையை வென்று  கண்ணீரானது . இனி  ஒன்பது மாதத்தால்த்தான்  ஊருக்கு வருவார்  மனோ.
ஏற்றிய  மீன், கருவாடு , புகையிலை  ஏனைய  பொருட்களின் காசு வாங்கப்  பயணிக்கும் முதலாளிகளையும்  ஏற்றிக்கொண்டு  மெயில் மெல்ல  கோண்  எழுப்பியபடி  முன்னோக்கி நகர்ந்தது
டாட்டா காட்டும் கைகளால்  ஸ்டேசன்  நிறைந்தது  மெயில்  பிரியாவிடையுடன்  கிளம்பியது கொழும்பு நோக்கி ----

தொடரும்.
 

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

எல்லிஸ் ஆர் டங்கன், காதல் செய்வதை சொல்லிக்கொடுக்கின்றார் , தியாகராஜா பாகவதருக்கும் எம் ஆர் சந்தானலட்சுமிக்கும்   அம்பிகாபதி படத்துக்காக (பாகவதரின் அம்பிகாபதி)
மேலதிகத் தகவல் - பின்னாளில் பாகவதர் பொருளாதார கஸ்டம் அனுபவிக்கையில் சிவாசிகணேசன் தான் நடிக்கும் அம்பிகாவதியில் ஒரு பாத்திரம் ஏற்க அழைத்தும், புலி புல்லை தின்ன சம்மதிக்க வில்லை.

...
இந்த டங்கன் இயக்கியதே எம் ஜி ஆர் நடித்த மந்திரி குமாரி அதில் ஒரு வாழ்ச்சண்டைக் காட்சியில் பெரிய பாரங் கல்லில் முதுகுப்பக்கத்தை சாய்த்தபடி எம்ஜிஆர் சண்டை போடவேண்டிய காட்சி எடுக்கப்பட்டது, காட்சி திருப்தி அளிக்கவில்லை என்று திரும்பத்திரும்ப படமாக்கப்பட்டது .
பாறாங் கல்லின் வெப்பத்தால் எம்ஜிஆர் அணிந்திருந்த பட்டு சட்டை பொசுங்கி எரிந்து விட்டது .
எம்ஜிஆருக்கு டங்கன் மேல் கடுங் கோபம், டங்கன் அருகில் சென்று வாழை எறிந்துவிட்டு
எம்ஜிஆர் சொன்னது > ஐ நோ ஐ, யு நோ யு .
சின்னமணி

 ஈழத்தின் மூலை முடுக்கெல்லாம்  மும்மாரி போல்  வில்லிசை  பொழிந்தவர் 
சின்னமணி ஐயா. "வில்லுப்பாட்டாம் இண்டைக்கு ராவாவைக்கு"  என்று யாழ்ப்பாணத்தில்   நண்பர்கள்  மத்தியிலும் வீட்டிலும் பேச்சு அடிபடும்  போது,  பசித்தவனுக்கு   பசி   போய்  மகிழ்வு நிறையும். தமிழ், அருவிபோல்  கொட்டியது அவரால் , முன்னால்  அமர்ந்து  பார்க்கும் இரசிகர்களை
பார்த்து கண்சிமிட்டி  வில்லடிக்கும் பாங்கு , இனிய புன்னகை பூத்த முகம்  பார்க்கப் பார்க்க தெவிட்டாது .

காலச் சூழலுக்கு ஒப்ப   கதைபேசி  மயக்கும்  மந்திரக் கலைஞன்  - அவரின்  வில்லிசை  கேட்டு
சிரிக்காதவர்களை  ஈழநாட்டில் விரல் விட்டு எண்ணி விடலாம் . இனிய தமிழ்,  கணீரென்ற  குரல்,
காந்தம் போல் வசீகரிக்கும்  வதனம்,  மெல்லிய பட்டுப்போல் தென்றலில் அசையும் உடல் மொழி
இன்னும்  என்னென்ன இனிமைகள்  இருக்குமோ  அவற்றை  சின்னமணி  ஐயாவுக்கு உவமானமாக
சொல்லலாம் . வாழ்க அவர்  பெருமை, ஓங்கட்டும் அவர் புகழ்.  
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா -  கவிஞர்  வாலி

வெள்ளத்தனைய   மலர்   நீட்டம்   மாந்தர்தம்;   உள்ளத் தனையது    உயர்வு

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் 
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
                             (குறள் 622: இடுக்கண் அழியாமை அதிகாரம்)
வெள்ளத்தனைய – பெருகி வரும் வெள்ளம்போல
இடும்பை – மிகுதியான துன்பமும்
அறிவுடையான் – அறிவுமிக்கோர்
உள்ளத்தின் – தங்கள் மனத்திலே கொண்டுள்ள
உள்ளக் – ஊக்கமிகு எண்ணத்தினால்
கெடும் – இல்லாது ஒழியும்
பெருகிவரும் வெள்ளம்போல் பேரழிவை ஒத்த துன்பம் வரினும், அறிவுடையோர், தங்கள் மனத்திலே கொண்ட ஊக்கத்தினாலேயே அதைத் துன்பமாகக் கருதாது வினையாற்றும். “வெள்ளத்தனைய மலர் நீட்டம்” என்ற குறளில் நீரின் அளவு என்பதற்கு பயன்படுத்தப்பட்ட சொல், இங்கு பேரழிவை தரக்கூடிய என்னும் பொருளில் வருவது கவனிக்கத்தக்கது. இரண்டு குறள்களிலும் “உள்ளம்” என்பதற்கு “ஊக்கம்” என்ற பொருளிலேயே செய்யப்பட்டிருக்கிறது.

இரு வேறு கூறுகளில் இங்கே  உள்ளம் எனும் மனம்  வேறு படுகின்றது என்பதைக்  காணலாம்
மனமே  வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணம்  என்று  முடிவு  கொள்ளலாம்.
அடி  (1)
(முகநூல் கதை)
{ யாழவர் மொழிவழக்கும் தொனிக்கும் }
இறால் போட்டு வைத்த வெந்தையக் குழம்பை நறுக்கரிசிப் பதமான சோற்றுடன் வாட்டின வாழையிலையில்
மாணிக்காச்சி கட்டிக் கொடுக்க, மதி அதனை பவுத்திரமாக
வாங்கி சூட்கேசில் வைத்துக் கொண்டு
செட்டியாமட சந்திக்கு பஸ் பிடிக்க கிளம்பினான். தம்பி இந்தா என்றபடி
வேகமாய் வந்து இருபது ரூபாய்களை
பொக்கற்றில் வைத்தா சிறிய தாய் காமாட்சி - தொடரும்
அடி- தொடர்   2

மகிழ்வுடன் மதி  பஸ்சுக்காக  நிற்க  பகிதர்,  நேசன்,  திரு, சச்சி  ஆகியோரும் வந்து   இணைந்து கொண்டார்கள்  -  சண்முகத்தாருக்கு  கடிதம்  வந்திருந்தது,  எங்கள்  ஊர்பிள்ளைகளுடன்  மதி
வருகிறான்.  பத்துநாட்கள்  உங்கள் வீட்டில் தங்க  வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென  
கேட்டுக்கொள்கின்றேன், என்று   ஒன்றுவிட்ட பெரிய தகப்பன்  முத்தரிடமிருந்து  அந்த கடிதம்  வந்திருந்தது - சண்முகத்தார்  எதற்காக வருகின்றார்கள் என்ற விடயத்தை  சிந்தித்து அறிந்து கொண்டார் . சச்சியைத்தவிர  மற்ற நால்வருக்கும்  ரயிலில் பயணிப்பது  இதுவே  முதல்த்தடவை
அதனால் அவர்கள்  பெரும்  மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் - 784 ஐ  பிடித்து  யாழ்ப்பாணம் 
நகருக்குள்  இறங்கினார்கள் ,  பஸ்டாண்டுக்கு  முன்னால்  இருந்த  ராணி  தியேட்டரில் 
நாளை நமதே  படம்  ஓடிக்கொண்டிருந்தது.  அப்படத்துக்கான  விளம்பரப்பதாகைகள்
வருவோர் போவோரை  அண்ணார்ந்து பார்க்க வைத்துக் கொண்டேயிருந்தது.  காரணம்  பெரிய  உயரத்தில் இரண்டு  எம்ஜிஆர்கள்  நிற்கும்  உயர்ந்த பதாகைகள்  அசத்தியது மக்களை .

வெலிங்டனடியில்  இறங்கியிருந்தால்  இந்நேரம் ஸ்டேசனுக்கு  போயிருப்பம்  வீணா  டவுனுக்குள்ள
இறங்கினது என்று  திரு  அலுத்துக்கொண்டான்  ஐவரும்  ஸ்டேசனை நோக்கி  நடந்தார்கள்  தங்கள்
பொதிகளுடன் --- தொடரும். 

திங்கள், 9 பிப்ரவரி, 2015

நீலவான்  நோக்கி  நீண்ட பரப்பில்  ஒரு பறப்பு


கடுங் குளிரும்  காற்றும் வந்தால்
நெடுந்தூரம் எம்மால் பறக்க முடியாது
எல்லோரும் நாளை மாலை பறக்கின்றோம்
என்ற தலைவரின் ஆணைக்கு கட்டுப்பட்டு
ஆமா  சொல்லி விட்டு தத்தம் கூடுகளுக்கு அவை பறந்தன .
எல்லோருக்கும் ஒரே அறிவே,  அவைகளில்
எவரும் பட்டப்படிப்பு  படிக்கவில்லை .
எதிர்க் கேள்வி கேட்கவில்லை. 
அளவான அறிவு அவைகளுக்கு  மனிதன் கணிப்பில் ஐந்து அறிவாம்.
  தமக்குத்   தலைவர்
நல்லதே சொல்லுவார் என்ற
 அசைக்க முடியாத நம்பிக்கை  அவைகளுக்கு .
தென்றலும்  புயலும் வரும் வேளை
தலைவரே முன் சென்று  அனுபவித்து வழிகாட்டுபவர் .
தென்றலைச்   சுகித்து  புயலைக் கண்டு ஒதுங்குபவரில்லை.
நரிக்குணம் நச்சுக்குணம் அறிய அவர் பல்கலைக்கூடம்  சென்றவரில்லை .
நல்லது எதுவோ அதை தெரிந்து கொண்டு வாழ்பவர்.
நெஞ்சினில் நஞ்சு இல்லாதவர்  எங்கள்  பறவை ராசா .


கண்டம் விட்டு கண்டம் பறப்பு 
பசித்தால் என்னம்மா  செய்வது என்றது  ஒரு  குஞ்சு
அதற்கெல்லாம்  தலைவர்  வழிகாட்டுவார்  என்றது தாய்ப்பறவை
இப்போது நீ இந்த  பழத்தை  கொத்தியுண்  என்றுவிட்டு
செட்டைகளை  ஆரோக்கியமாக்கியது தந்தைப்பறவை .
எந்த வித  திசையறி கருவிகளுமின்றி  இருபத்தாறு பறவைகளும்
நீலவானை  நோக்கி  நீண்டு  பறந்தன,  எத்தனை  எத்தனை
அவலங்கள்  இந்தப்பறப்பில்  வல்லூறுகள்  கோட்டான்கள்
என  தம்மை  நோக்கி  வரும்  தாக்குதல்களை  முறியடித்து
பறக்க வேண்டும்,  எந்த சாமிக்கும் தேங்காய் அடிக்கவில்லை 
தீபம் காட்டவில்லை  பறவைகள்  ஆரம்பித்தன பயணத்தை.


மலைகளில்  தங்க  முடியும் ஆனாலும் தவிர்த்தார்  தலைவர்
காரணம் அங்கு இராட்சதப்   பறவைகளின்  வசிப்பிருக்கும் என்ற
சரியான கணிப்பு -  கடலில்  தாழ்ந்து  சில மீன்கள்  கொத்தி 
கரைகளில்  உண்டான.   எங்கெங்கே  எந்த மாதிரி  ஆட்கள் (பறவைகள்)
என்று நன்றாக அறிந்து வைத்திருந்தார்  தலைவர் .
சில கொக்குகள்   புறாக்கள் நட்புடன்  பழகின
உதவின  காகங்கள்  மினுக்குப்  பார்வையுடன் பறந்தன.
ம்  கிளம்புங்கள்   தொடர்ந்தன  பறப்பை.
அதோ  கீரிமலை  தெரிகிறது  அங்கிருந்து  கல்லுண்டாய்
அதிக  தொலைவிலில்லை   ம்  மகிழ்வுடன் பறவுங்கள்
என்றார்  தலைவர்.  இளம்பறவைகள்  இசைபாடிப் பறந்தன.
கல்லுண்டாய்  வெளியில் எங்களுக்கு நாலா  பக்கமும்
நல்ல  உணவுகள் இருக்கும்,  இனிய  மனிதர்கள்  அங்கே .
யாரும்  நம்மை  நோக்கி கல்லைக்கூட  எறிவதில்லை.
ஆசையுடன்  சைபீரியன்  என்று சொல்லி மகிழ்ந்து  பார்ப்பார்கள் .
என்று  அனுபவத்தை  விளக்கியது   தலைமை புதியவர்களுக்கு.


இதோ  வந்துவிட்டோம்  கல்லுண்டாய்  காலாறுங்கள்
வீதியின்  அக்கரை  கடற்கரை  குளிப்பவர்கள்  சென்று 
குளிக்கலாம் என  தலைவர்  அன்பாகச் சொன்னார்  .
அம்மா  அது என்ன  உயரமான  மரங்கள்
என்றது  குஞ்சொன்று,   தலைவர்  குறுக்கிட்டு அவைதான் பனைகள்
அங்குதான் நாம்  உறங்கப்போகின்றோம்  என்றார்.
ஆகா  என்ன  அழகிய  வெளி  என்று  மகிழ்ந்தன  புதிய வரவுகள்.


ம. இரமேசு
தொன்மார்க் 

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

சினிமா தியேட்டர்களை அழகாக  கட்டி வைத்திருக்கின்றார்கள் - கல்விக் கூடங்களை ?

தமிழ் நாட்டில் பல  ஊர்களில்   பள்ளிகளில் கல்வி பயிலும்  பிள்ளைகளுக்கு  உட்கார்வதற்கு  கதிரைகள் இல்லை, புத்தகங்கள்  வைக்க மேசைகள் இல்லை ,  குடிக்க  நீர் வசதி இல்லை,   விளையாட மைதானம் இல்லை   இதே நிலையே  மற்றைய  மாநிலக் கிராமங்களிலும் -  நடிகையின்  செருப்பின் விலையிலும், நடிகன்  தலை மயிர் வெட்டும் பணத்திலும்  கிராமப்புற  மாணவர்களின் ஒரு மாத தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். எந்த அறிவாளியும் கண்டு கொண்டு தக்க நடவடிக்கை  எடுப்பதாக செய்திகள் இல்லை . பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் வகுப்பறைகள்  குளிரூட்டப்பட்டிருக்கின்றது .
இந்தியப்  பண்பாடு  இம்மாதிரி  விடயங்களில்  குத்துக்கரணம்  அடிக்கின்றது. ஏழைகளின்  நிலைமைகளைக் கண்டு கொண்டு  நடவடிக்கை எடுக்கவேண்டியவர்களின்   அலட்சியத்தால் இந்த வசதிகள் அற்ற நிலை  கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு . மும்பை  படவுலக  விழாக்களைப்   பார்த்தால் யாராவது இந்தியாவை  பிச்சைக்கார நாடென்பார்களா ?  புரட்சிப்பெண்கள்  (நடிகைகள்)  அரை நிர்வாணத்தில் அமெரிக்க ஐரோப்பிய  நடிகைகளை விஞ்சி விட்டார்கள் . நடிக நடிகையர்கள்  சம்பளம்  கோடிகளில்,  முடிவெட்ட  அமேரிக்கா , சிங்கப்பூர்,  லண்டன்  என்று  பறக்கும்  நடிகர்கள்  உண்டாம் . அரசியலாளர்களின்  இரவுக்கும்மாளங்கள்   அதற்கான  செலவுகள்   பல  கோடிகளாம் .
ஆனால் கிராமத்து  மாணவர்கள்  நிலைதான்  கவலைக்கிடம் .
அண்ணாவின் காஞ்சி


காஞ்சி  தந்த  அறிவின் சிகரம்  தமிழர்களின்  அறிவு நாயகன்  அறிஞர்  அண்ணா.  அவர் காஞ்சியிலே
பிறந்து  வளர்ந்து  பெரிய அறிவாளியாகினார்.  குளிப்பதற்கு மட்டும் அண்ணா  அஞ்சினார்  சிறுவயதில்.
மூவேந்தர்கள் தங்களுக்குள் பகைத்து  நாட்டை பறிகொடுத்தவர்கள்,  பல்லவர்கள்  அவர்களை அடக்கி ஒடுக்கி  தெள்ளாற்றில்  வெற்றிகொண்டு  500 ஆண்டுகளுக்குமேல் காஞ்சியை  தலையாகக்  கொண்டு ஆண்டார்கள் - பிரபாகரன்  பெரிய இடம் பெற, ஊர்  மக்களின்  ஆதரவு  பெருந்துணையானது.   அவர்கள்  தமிழ்நாட்டின் கரையோரங்களில்  தொழில் செய்ததனால்  அவர்களுக்கு  ஆதரவுகள் பலமாக  இருந்தது.  எந்த ஆதரவும் இன்றி  தனி ஒருவனாக  நின்று முதல் தாக்குதல் செய்த மாவீரன்   உரும்பிராய் பெற்ற  செல்வம் பொன் சிவகுமாரன்.  போலீஸ் பிடிக்க வருகையில் மாறுவேடம் பூண்டார் பிறகு ஒரு தோட்டக்காரன் காட்டிக்கொடுக்க தற்கொலை செய்தார்  பிடிபடாமல் . நெஞ்சின்  துணிவு  ஒருவனை  மா வீரனாக்குகின்றது  அவன் பொய் உடலுக்கான வாழ் நாள் குறுகிய போதும் உயிரின் மெய்  புகழ் நீண்டு நிலைக்கின்றது . கல்வியிலும் கேள்வியிலும் சிறந்து  விளங்கிய  அறிஞர் அண்ணா தனது  அறிவால்  ஆற்றலால்  மக்கள் நெஞ்சில்  நீடித்து  வாழ்கின்றார் . இன்று அண்ணாவின் பிறந்த நாள் .  வாழ்க  அண்ணா  புகழ். வணங்குவோம்  அண்ணாவை  மனதில்.

திங்கள், 2 பிப்ரவரி, 2015

மாறும் நாள்  வருமா  வருமா

காதல்  என்னும் உயிர்வாழ்வில்
 கலந்து வாழத்துடிக்கும்  உள்ளங்களை
 சாதியென்னும்  பிசாசைக்  காட்டி
 பிரித்து எறியாதே,  பாவமென்னும்
 பெரு மூட்டை  உன்  பிறவிமுழுதும்
  தொடரும்  இது  வாழ்வென்னும்
பாதையில் நான்  கண்ட  அனுபவம்.

சீதையவள்  சித்திரை  நிலவு
பாவையவள்  பருவம்  தீண்டியவன்
பாவ மூட்டை சுமக்காத   பசுந்தளிர்
மாலையவள்  சூடி வாழ்ந்திட
துடிக்கையிலே, கோதையவள் நிறம்
 மாசு என்று   சொல்லி
மகனை மனம் மாற்றச் செய்தாயே
சிந்தனையில்லா  சிறிய மதி மானிடரே
நீர்  மாறும் நாள்  வருமா  வருமா .

செங்கவி
ம.இரமேசு