மென்மலர் உள் வைத்த வென் கா
விசும்பு வளி அழியா ஆழி இருத்திட
ஆர்கலி அசைவொன்று வியப்புறு நோ
விசைந்து வளம் பாடி உவன்றிருக்க
வந்தோ அருமழை ஆழி மேவ
மலர் மிசை நின்று காத்த மச்சு
வென் கா காவாகா காவலாகியதே
பொருள் விளக்கம்
மெல்லிய பூவில் இட்டு என் காதலை
காற்று அணைக்காதுஆழ்கடலில் வைத்தேன்
அங்கு வந்த மீனொன்று அதிசயித்து
அதை பார்த்து மகிழ்ந்து சுற்றி நீந்தியது
அப்பொழுது மழை கடல் மேல் பொழிந்தது
அந்த மீன் பூமேல் நின்று என் காதலை
பாது காத்தது.
செங்கவி
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக