வியாழன், 12 பிப்ரவரி, 2015



மென்மலர்  உள்  வைத்த வென் கா
விசும்பு வளி  அழியா    ஆழி இருத்திட 
ஆர்கலி   அசைவொன்று   வியப்புறு நோ
விசைந்து வளம் பாடி உவன்றிருக்க
வந்தோ  அருமழை  ஆழி  மேவ
மலர் மிசை  நின்று   காத்த மச்சு
 வென்  கா காவாகா காவலாகியதே


பொருள் விளக்கம்

மெல்லிய பூவில் இட்டு என் காதலை
காற்று அணைக்காதுஆழ்கடலில்  வைத்தேன்
அங்கு வந்த மீனொன்று அதிசயித்து
அதை பார்த்து மகிழ்ந்து சுற்றி நீந்தியது
அப்பொழுது  மழை கடல் மேல் பொழிந்தது
அந்த மீன்  பூமேல் நின்று என் காதலை
பாது காத்தது.

செங்கவி
ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக