திங்கள், 23 பிப்ரவரி, 2015

அடி-   6 தொடர்

ஸ்டேசனுக்கு வந்த மதியையும்  மற்ற பெடியங்களையும்  சண்முகத்தார்  மகிழ்வு முகங் காட்டி  வீட்டுக்கு  அழைத்துச்  சென்றார் . மல்லிகா  சின்னம்மா , புட்டும்  சம்பலும்  முட்டைப்பொரியலும்
செத்தல்மிளகாயும் வெங்காயமும்  பொரித்து  மீன் பால்ச்சொதியும்  வைத்து  சாப்பாட்டு மேசையை
அழகாக்கினா .  நெல்லுப்பானைக்குள்ளே  பழுக்க வைத்த  தங்கள்  தோட்டத்து வாழைப்பழச்   சீப்பை சண்முகத்தார்  சாப்பாட்டு மேசையில்  கொண்டு வந்து  வைத்து  விட்டு,  தானும் குளிக்க  துவாயை எடுத்துக்கொண்டு  வாவிக்கு  சென்றார் .

என்னடாப்பா  எப்படியிருக்கு  வாவிக்குளியல்  என்று  சண்முகத்தார்  அன்பாகக் கேட்டார்  -  நேசன்--   அருமை  மாமா  நல்லா  இருக்குது  இப்பிடி குளிக்கிறது இதுதான்  முதல்த்தடவை  , நானும்  தான்  என்று  மதியும்  மற்று எல்லோரும் சொல்லி மகிழ்ந்து  தண்ணீரில் முங்கி எழுந்தார்கள்,  நான் இதைப்போல  முன்னம்  மலைநாட்டில் குளிச்சனான்  அங்கை  கொஞ்சம்  ஒடுக்கமா  வாய்க்கால் போல  இருக்கும்,  இது கொஞ்சம் அகண்டு இருக்குது என்றான் சச்சி   - சரி சரி கன நேரம்  குளிச்சால்  குளிறேறிவிடும்   காணும் போங்கோ,  போய்ச்  சாப்பிடுங்கோ  என்றார்  சண்முகத்தார்,  தானும் வாவியில் குளிக்க  தயாரான படியே .
தொடரும் ---

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக