செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

சின்னமணி

 ஈழத்தின் மூலை முடுக்கெல்லாம்  மும்மாரி போல்  வில்லிசை  பொழிந்தவர் 
சின்னமணி ஐயா. "வில்லுப்பாட்டாம் இண்டைக்கு ராவாவைக்கு"  என்று யாழ்ப்பாணத்தில்   நண்பர்கள்  மத்தியிலும் வீட்டிலும் பேச்சு அடிபடும்  போது,  பசித்தவனுக்கு   பசி   போய்  மகிழ்வு நிறையும். தமிழ், அருவிபோல்  கொட்டியது அவரால் , முன்னால்  அமர்ந்து  பார்க்கும் இரசிகர்களை
பார்த்து கண்சிமிட்டி  வில்லடிக்கும் பாங்கு , இனிய புன்னகை பூத்த முகம்  பார்க்கப் பார்க்க தெவிட்டாது .

காலச் சூழலுக்கு ஒப்ப   கதைபேசி  மயக்கும்  மந்திரக் கலைஞன்  - அவரின்  வில்லிசை  கேட்டு
சிரிக்காதவர்களை  ஈழநாட்டில் விரல் விட்டு எண்ணி விடலாம் . இனிய தமிழ்,  கணீரென்ற  குரல்,
காந்தம் போல் வசீகரிக்கும்  வதனம்,  மெல்லிய பட்டுப்போல் தென்றலில் அசையும் உடல் மொழி
இன்னும்  என்னென்ன இனிமைகள்  இருக்குமோ  அவற்றை  சின்னமணி  ஐயாவுக்கு உவமானமாக
சொல்லலாம் . வாழ்க அவர்  பெருமை, ஓங்கட்டும் அவர் புகழ்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக