வெள்ளி, 27 பிப்ரவரி, 2015


வீதி  விடுப்பு




நான்  நூல் நிலையத்திலிருந்து கண்ணாடியினூடாக  வீதியில் அமைந்திருக்கும்  அந்த  கொசோவோ நாட்டு மனிதரின்  கடையை பார்க்கின்றேன் . அதிகமாக முஸ்லீம்களே  அங்கு வந்து வட்ட வட்ட  ரொட்டிகளை  (சப்பாத்திபோன்றது )  அள்ளிக்கொண்டு போகின்றார்கள் ,  பழங்களையும் தாராளமாக  வாங்கிக்கொண்டு செல்வது அவர்களின் பைகளுக்குள்  தெரிகின்றது.   இது நாளும் நான்  நூல்நிலையத்திலிருந்து காணும் காட்சி.  தெருவின்  நடை பாதையில்  மரக்கறிகள் , பழங்கள்  அழகாக பெட்டிகளில் வைத்திருக்கின்றார் அந்த இனிய மனிதர் .  உள்ளே முஸ்லீம்களின் மார்க்கப்படியான  பாவம்  நீக்கப்பட்ட   இறைச்சிகள் (கலால் )  விற்பனையில் இருக்கின்றது.  அந்த கொசவோ மனிதரும் மனைவியும் பிள்ளைகளும்  ஓடியோடி உள்ளே உழைக்கும் காட்சி  பார்க்க அழகாக இருக்கும் .
ஆனால்  எங்கள்  செல்வங்கள் (தமிழர்கள்)  யாரும் வந்து போவதாக இதுவரை காண வில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக