செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

சினிமா தியேட்டர்களை அழகாக  கட்டி வைத்திருக்கின்றார்கள் - கல்விக் கூடங்களை ?

தமிழ் நாட்டில் பல  ஊர்களில்   பள்ளிகளில் கல்வி பயிலும்  பிள்ளைகளுக்கு  உட்கார்வதற்கு  கதிரைகள் இல்லை, புத்தகங்கள்  வைக்க மேசைகள் இல்லை ,  குடிக்க  நீர் வசதி இல்லை,   விளையாட மைதானம் இல்லை   இதே நிலையே  மற்றைய  மாநிலக் கிராமங்களிலும் -  நடிகையின்  செருப்பின் விலையிலும், நடிகன்  தலை மயிர் வெட்டும் பணத்திலும்  கிராமப்புற  மாணவர்களின் ஒரு மாத தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். எந்த அறிவாளியும் கண்டு கொண்டு தக்க நடவடிக்கை  எடுப்பதாக செய்திகள் இல்லை . பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் வகுப்பறைகள்  குளிரூட்டப்பட்டிருக்கின்றது .
இந்தியப்  பண்பாடு  இம்மாதிரி  விடயங்களில்  குத்துக்கரணம்  அடிக்கின்றது. ஏழைகளின்  நிலைமைகளைக் கண்டு கொண்டு  நடவடிக்கை எடுக்கவேண்டியவர்களின்   அலட்சியத்தால் இந்த வசதிகள் அற்ற நிலை  கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு . மும்பை  படவுலக  விழாக்களைப்   பார்த்தால் யாராவது இந்தியாவை  பிச்சைக்கார நாடென்பார்களா ?  புரட்சிப்பெண்கள்  (நடிகைகள்)  அரை நிர்வாணத்தில் அமெரிக்க ஐரோப்பிய  நடிகைகளை விஞ்சி விட்டார்கள் . நடிக நடிகையர்கள்  சம்பளம்  கோடிகளில்,  முடிவெட்ட  அமேரிக்கா , சிங்கப்பூர்,  லண்டன்  என்று  பறக்கும்  நடிகர்கள்  உண்டாம் . அரசியலாளர்களின்  இரவுக்கும்மாளங்கள்   அதற்கான  செலவுகள்   பல  கோடிகளாம் .
ஆனால் கிராமத்து  மாணவர்கள்  நிலைதான்  கவலைக்கிடம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக