அடி- தொடர் 2
மகிழ்வுடன் மதி பஸ்சுக்காக நிற்க பகிதர், நேசன், திரு, சச்சி ஆகியோரும் வந்து இணைந்து கொண்டார்கள் - சண்முகத்தாருக்கு கடிதம் வந்திருந்தது, எங்கள் ஊர்பிள்ளைகளுடன் மதி
வருகிறான். பத்துநாட்கள் உங்கள் வீட்டில் தங்க வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென
கேட்டுக்கொள்கின்றேன், என்று ஒன்றுவிட்ட பெரிய தகப்பன் முத்தரிடமிருந்து அந்த கடிதம் வந்திருந்தது - சண்முகத்தார் எதற்காக வருகின்றார்கள் என்ற விடயத்தை சிந்தித்து அறிந்து கொண்டார் . சச்சியைத்தவிர மற்ற நால்வருக்கும் ரயிலில் பயணிப்பது இதுவே முதல்த்தடவை
அதனால் அவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் - 784 ஐ பிடித்து யாழ்ப்பாணம்
நகருக்குள் இறங்கினார்கள் , பஸ்டாண்டுக்கு முன்னால் இருந்த ராணி தியேட்டரில்
நாளை நமதே படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்படத்துக்கான விளம்பரப்பதாகைகள்
வருவோர் போவோரை அண்ணார்ந்து பார்க்க வைத்துக் கொண்டேயிருந்தது. காரணம் பெரிய உயரத்தில் இரண்டு எம்ஜிஆர்கள் நிற்கும் உயர்ந்த பதாகைகள் அசத்தியது மக்களை .
வெலிங்டனடியில் இறங்கியிருந்தால் இந்நேரம் ஸ்டேசனுக்கு போயிருப்பம் வீணா டவுனுக்குள்ள
இறங்கினது என்று திரு அலுத்துக்கொண்டான் ஐவரும் ஸ்டேசனை நோக்கி நடந்தார்கள் தங்கள்
பொதிகளுடன் --- தொடரும்.
மகிழ்வுடன் மதி பஸ்சுக்காக நிற்க பகிதர், நேசன், திரு, சச்சி ஆகியோரும் வந்து இணைந்து கொண்டார்கள் - சண்முகத்தாருக்கு கடிதம் வந்திருந்தது, எங்கள் ஊர்பிள்ளைகளுடன் மதி
வருகிறான். பத்துநாட்கள் உங்கள் வீட்டில் தங்க வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென
கேட்டுக்கொள்கின்றேன், என்று ஒன்றுவிட்ட பெரிய தகப்பன் முத்தரிடமிருந்து அந்த கடிதம் வந்திருந்தது - சண்முகத்தார் எதற்காக வருகின்றார்கள் என்ற விடயத்தை சிந்தித்து அறிந்து கொண்டார் . சச்சியைத்தவிர மற்ற நால்வருக்கும் ரயிலில் பயணிப்பது இதுவே முதல்த்தடவை
அதனால் அவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் - 784 ஐ பிடித்து யாழ்ப்பாணம்
நகருக்குள் இறங்கினார்கள் , பஸ்டாண்டுக்கு முன்னால் இருந்த ராணி தியேட்டரில்
நாளை நமதே படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்படத்துக்கான விளம்பரப்பதாகைகள்
வருவோர் போவோரை அண்ணார்ந்து பார்க்க வைத்துக் கொண்டேயிருந்தது. காரணம் பெரிய உயரத்தில் இரண்டு எம்ஜிஆர்கள் நிற்கும் உயர்ந்த பதாகைகள் அசத்தியது மக்களை .
வெலிங்டனடியில் இறங்கியிருந்தால் இந்நேரம் ஸ்டேசனுக்கு போயிருப்பம் வீணா டவுனுக்குள்ள
இறங்கினது என்று திரு அலுத்துக்கொண்டான் ஐவரும் ஸ்டேசனை நோக்கி நடந்தார்கள் தங்கள்
பொதிகளுடன் --- தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக