செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

அடி- தொடர்   2

மகிழ்வுடன் மதி  பஸ்சுக்காக  நிற்க  பகிதர்,  நேசன்,  திரு, சச்சி  ஆகியோரும் வந்து   இணைந்து கொண்டார்கள்  -  சண்முகத்தாருக்கு  கடிதம்  வந்திருந்தது,  எங்கள்  ஊர்பிள்ளைகளுடன்  மதி
வருகிறான்.  பத்துநாட்கள்  உங்கள் வீட்டில் தங்க  வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென  
கேட்டுக்கொள்கின்றேன், என்று   ஒன்றுவிட்ட பெரிய தகப்பன்  முத்தரிடமிருந்து  அந்த கடிதம்  வந்திருந்தது - சண்முகத்தார்  எதற்காக வருகின்றார்கள் என்ற விடயத்தை  சிந்தித்து அறிந்து கொண்டார் . சச்சியைத்தவிர  மற்ற நால்வருக்கும்  ரயிலில் பயணிப்பது  இதுவே  முதல்த்தடவை
அதனால் அவர்கள்  பெரும்  மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் - 784 ஐ  பிடித்து  யாழ்ப்பாணம் 
நகருக்குள்  இறங்கினார்கள் ,  பஸ்டாண்டுக்கு  முன்னால்  இருந்த  ராணி  தியேட்டரில் 
நாளை நமதே  படம்  ஓடிக்கொண்டிருந்தது.  அப்படத்துக்கான  விளம்பரப்பதாகைகள்
வருவோர் போவோரை  அண்ணார்ந்து பார்க்க வைத்துக் கொண்டேயிருந்தது.  காரணம்  பெரிய  உயரத்தில் இரண்டு  எம்ஜிஆர்கள்  நிற்கும்  உயர்ந்த பதாகைகள்  அசத்தியது மக்களை .

வெலிங்டனடியில்  இறங்கியிருந்தால்  இந்நேரம் ஸ்டேசனுக்கு  போயிருப்பம்  வீணா  டவுனுக்குள்ள
இறங்கினது என்று  திரு  அலுத்துக்கொண்டான்  ஐவரும்  ஸ்டேசனை நோக்கி  நடந்தார்கள்  தங்கள்
பொதிகளுடன் --- தொடரும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக