வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

போரென்றால்  மக்கள் சாவார்கள் தானே  என்று தமிழர்கள் சாவை ஆமோதித்தவளை   தலைமேல் தூக்கிக்  கொண்டாடி, அவள்  கொள்ளையடித்தாள் , என்று  குற்றம் சாட்டப்பட்டு  சிறைக்குப்  போனதற்கு  193 தமிழர்கள்  அவளுக்காக  சோகம் தாழாது  தற்கொலை செய்ததும் இந்த  பிரபஞ்சத்துக்குள்ளே  நடந்த வெட்கம்  மிகு துயரம் வேடிக்கை ,  அது மட்டுமா   மோடி அவளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லுகின்றார்,   யாரின் பிறந்தநாள்!! மக்கள்  சொத்தை கொள்ளையடித்து கொட நாட்டில்  அரண்மனை கட்டி வைத்திருக்கும்  முன்னாள் ஆட்டக்காரிக்கு  இந்நாள் குற்றவாளிக்கு
நாட்டின் பிரதமர் வாழ்த்து சொல்லும் பக்குவத்தில்  அரசியலும்   தலைகளும்  நகர்கின்றன . மானஹ்த்துக்கும் மரியாதைக்கும் பண்புக்கும் அறத்துக்கும்   உயிர்வாழ அனுமதி கேட்க வேண்டிய நிலையில் உலக நடப்புகள் ,  கடவுள் பெயரால்  மனித  கழுத்துக்களை  அங்காலே  வெட்டுகிறான்
கைதி என்று பிடித்த  வெள்ளையர்களின்  கழுத்தை ஒரு கும்பல் தண்டனை என்று  அறுக்கின்றது .
வன்னியிலே மக்கள் சோற்றுக்கு அவதிப்படுகின்றார்கள் அனுப்ப கொஞ்சம்   காசு தாங்கோ என்றால் என் தமிழன்   குண்டியை காட்டுகின்றான் ,  முந்தநாள்  எனது நகரில் உள்ள  செல்வங்களிடம்   உதவி செய்யுங்கள் என்று கோரியிருந்தேன்  இந்நேரம் வரை  ஒருவர் கூட  அழைக்க வில்லை  உதவி செய்ய.
ஏறத்தாழ 250 பேர்கள்  வாழும் நகரம் ,  இதுவே  வருகிற சனிக்கிழமை  பிறந்தநாள் விழா   அல்லது திரைப்படம்  என்றால்   கேள்விகள் கேட்டு ஆடைகள் வாங்க ஆயிரங்களில் செலவு  நடந்துகொண்டிருக்கும் ,  ஆதரவில்லார்க்கு ஆதரவளிக்க  ஒரு பிட்சா  வாங்கும்  60 குறோண்  தர
எண்ணார்   நம் தமிழ் உறவுகள்.  இவர்களுக்குள்   சிரித்துப் பேசி  வாழ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக