புதன், 29 அக்டோபர், 2014

அந்த  மேக வலி அவளுக்குமட்டுமில்லை 
அருகே நிற்கும்  டரோபியோ  மரத்துக்குமே 
வறண்ட நிலங்களும்  அழுகின்றன 
யாருக்கும்  கேட்பதில்லை 
மண்கள் மட்டும்  ஒப்பாரி வைக்கும் 
அந்தப்பாலையிலே  பரவி 
அங்கே  துன்பங்கள்  காண  யாரும்  வருவதில்லை 
வழிப்பறி செய்ய  இன்று  வர்த்தகர்கள்  வருவதுமில்லை 
ஐயோ  அந்தப்பாலையும்
அவள்போல்  துடிக்கின்றதே 
யார்  அணைப்பார் 
 
 
 
கல்வீடு  கட்டி  கண்ணாடி  யன்னல் போட்டு
விறாந்தையிலே  அவ்டிக்   காரை நிறுத்தி
ஆங்கிலத்தில் பேசி  அழகியை  மணந்து
கோடியில்  பணம் சேர்த்து  கொண்டாடிட
எல்லோர் மனமும் துடிக்கிதிங்கே

சோழனுக்கு வறுமை வந்தால்
சொத்தில்  சில பாதி கொடுத்து
நாட்டை காக்கும்  வல்லமை கொண்ட
பட்டினத்தார்  சட்டையை  கழட்டி
கோவணத்துடன்  சென்ற கதை
அறிந்தும்  மனம்  பணம்  நாடுதே

ம.இரமேசு 
தலைவிரி கோலம்

இன்று  எனது  நண்பருக்கும் அவரின்  ஒன்றுவிட்ட தங்கைக்கும் பிரச்சினை
என்ன வென்றால்  - தமா  தனது  புருசனுடன்  போட்டோ  எடுக்கத்   தயாரானா
தலை மயிரை  பரப்பி விரித்துப் போட்டிருந்தா  விரலால்  கோதியபடி
எடுப்பா இருந்தா 

 எனது நண்பனுக்கு அது  பிடிக்கவில்லை -    தமா ,  வடிவா தலையைப்  பின்னி
குங்குமப் பொட்டு  வைச்சு    குடுப்பப் பொம்பிளைபோல நில் ,  என்றதுதான்
வெடித்தது அங்கே  வியட்னாம்  ஈழம்  பாலஸ்தீனம்  சிரியா  ஆப்கான் 

தமா  - இப்ப இதுதான் பாஷியன்  (fashion )

குணா - அதெல்லாம் சினிமா  நடிகைக்கு , நீ  குடும்பப் பொம்பிளை
             உனக்கு அதெல்லாம்  தேவையில்லை  விட்டா   பிகினி யோடையும்
             நாளைக்கு வந்து  இதுதான்  பாஷன்  என்பாய்

தமா - என்ரை  விருப்பப்படி  நடக்க  முடியாதே 

குணா  -  இல்லை  உன்ரை   விருப்பப்படி  நடக்க முடியாது -  தமிழாக்களுக்கெண்டு
               தனியா ஒரு  சிறப்பிருக்கு  அதன்படி தான் நடக்க வேணும் குடும்பப் பொம்பிளையள் .
               இல்லையெண்டா  வீட்டை விட்டு வெளிய போய்  விபச்சாரம் செய்து கொண்டு
                தாரளாமா  உன்ரை விருப்பப்படி  வாழலாம்  ஆரும் தடுக்க மாட்டினை 

மாமி கனகமணி -  அவன்  சொல்றது சரிதான்  பிள்ளை  அண்ணை  சொல்றதைக்  கேள் - நாகரிகம்!
                    மற்ற  ஆம்பிளையளை  சபலத்துக்கு  உள்ளாக்கிறதில்லை - நான் 
                  அவருக்கு மட்டுந்தான்   கொலுசு   கட்டி  நடந்து காட்டுவன்  ஆராவது
                  வீட்டை  வந்திட்டா  உடனெ   கழட்டிப்போடுவன் - எல்லாம்  சிந்திக்கவும்
                  கேட்கவும்  பேசவும் தெரியிற  உங்களால  ஏன்  மற்றவையளுக்கு 
                  சபலமூட்டும்  செய்கையள்        செய்யக்கூடாது  எண்டு  சிந்திக்க முடியிறேல்லை 

இதுக்குமேலும்  அங்கை  நிண்டு  வேடிக்கை  பார்ப்பது  சரியல்ல  என நினைத்து  வெளியில்  வந்துவிட்டேன் . தலைவிரி  கோலம் சோகத்தின் அடையாளம்  - பாஞ்சாலி  ,  கண்ணகி  போன்றோர்
தங்களுக்கு இன்னல் ஏற்பட்ட போது  தலைவிரி கோலமாகவே  சோகத்துடன் அலைந்தார்கள்
என்பது இதிகாசங்கள் காட்டும் செய்தி .

குறிப்பு - டென்மார்க் பிரண்டா  அபிராமி அம்மன்  கோயிலிலே  ஒரு  அறிவித்தலுண்டு  பெண்களுக்கு
                அதாவது -  "தலையை விரித்துப் பரவ விட்டு  ஆலயத்துக்குள்  பிரவேசியாதீர்கள்
                                    பின்னலிட்டு  வரவும் "
                    
புதைக்கப்பட்ட  பிணங்களின் கீழே
அழகிய  ஆறுகள்  ஓடுகின்றன
அதன்  சல சலப்பை கேட்க முடிவதில்லை
அதில் நீந்தும்  மீன்களைப்பார்க்க  முடிவதில்லை
நீரும் மண்ணும்  செய்யும் காதல்  அமர  காவியம்
பூகம்பம்  அவற்றுக்கு வில்லன்  ஆனாலும்
நிரந்தரமாகப்   பிரிக்க முடியாது

ஈரமுள்ள  இடங்களிலே  நல்லவை  விளையும்
ஈரமுள்ள  இதயங்களிலே  நல்ல எண்ணங்கள் நிலையாகும்
மண்ணுக்குள் உவர் நீருமுண்டு 
மனிதரில்  கொடியவர்களுமுண்டு 
கூடாததைப்   படைத்ததன் நோக்கம்
நல்லதை  அறியவே

தேடுதலின் வெற்றி  மனிதனின்  முயற்சி
அறிவின் முதுமை ஞானம்
ஞானத்தின்  பக்குவம்  ஏற்பு சமதர்மம்
சமத்துவம்  பரந்த மனம் பெருந்தன்மை


 

செவ்வாய், 28 அக்டோபர், 2014

கசாக்கள்  - உரைச்சித்திரம்

கடையடியில்  சந்திப்பு

சுந்தரலிங்கம்  - யாழ்ப்பாணம்  போய் என்னத்தையோ  கட்டியாளப்போகினையாம்

மணியத்தார்  -  என்ன  லிங்கத்தார்  உம்மட பாட்டில  புறு  புறுக்கிறீர்

செல்வன்  -  அவர் ஏன்  புறுபுறுக்கிறார்  எண்டு  எனக்குத்   தெரியும்

மணி -  என்ரா   என்ன  நடந்தது

செல்வன் - அது !!  இப்ப கொஞ்ச நாளா   வீட்டில  ஒரே  விரதம்  மனிசனுக்கு  மரக்கறி  சாப்பிட்டு  நாக்கு  சீயெண்டு போச்சு  அதோட  அவையள்  பெரிசா  செலவழிச்சு  ஒண்டும்  வாங்காயினை  அதுதான் மனுசனுக்கு  ஆத்திரம் அவையளில  புறு  புறுக்குது

மணி -  ஓ  நானும் சாடைமாடையா  கேள்விப்பட்டனான்   ஊரில போய் பெரிய  எழுப்பங்  காட்ட
இஞ்ச  தின்னாமல் குடியாமல் சனமெல்லாம்  சேர் சேரெண்டு சேர்க்குதுகள்  - நாலு  பேருக்கு   பதிநைஞ்சு  பயித்தங்காயில ஒரு  குழம்பு வைச்சு காலத்தை ஓட்டுதுகள் -  சரி சரி  எங்களுக்கேன்   மற்றவையின்ர  கதை  நட நட - நான்  கூப்பிட்டது  கூட மனுஷனுக்கு கேக்கேல்லை


கந்தசாமி  -  வணக்கம் மணியண்ணை  

மணி -  எடை கந்தன் !     எப்படியடா   எங்கையடா  கனநாளாக்   காணேல்லை

கந்தசாமி -  நான்  ஊருக்கல்லே   போனனான் -  அங்கை அந்த மாதிரி  ஒரு பிரச்சினையுமில்லை

மணி  -  ஒரு பிரச்சினையும்  இல்லாட்டி பிறகேன்ரா  இஞ்சை வந்தனி ,  நீதான்  கோடிக்கணக்கில
வைச்சிருக்கிறாய்  இன்னும்  நாப்பது  அம்பது  வருசத்துக்கு  காலாட்டிக்கொண்டே  சாப்பிடலாம்
இந்தக் குளிருக்குள்ள  வந்து  ஏன்  கஸ்டப்படுறாய் - உங்களைபோல  ஆக்களாலதான்  புதிசா
வாற  எங்கண்டை   ஆக்களுக்கு  அக்சப் பண்றாங்களுமில்லை - காசைக்   கொண்டுபோய்  அங்கை இருக்கிற  ஏழைச்   சனத்துக்கு   ஆ ஊ  காட்டிப்போட்டு  வரத்தானே  அங்கை  போறனியள்
அதுசரி  அங்கை  போகேக்கை  ஆருக்கும்  ஏதாவது  குடுக்கிறனியளே

கந்தசாமி -  என்னண்னை  இப்பிடி  கதைக்கிறியள்  நான்  செத்தவீடண்டாப்போலையல்லோ
போன்னான் - அங்கை  நான்போக  தெரிஞ்ச  சனங்கள்  குவிஞ்சிட்டினம்  ஆளுக்கு   ஆயிரமெண்டு
அம்பதாயிரம்  குடுத்துப்போட்டு வந்திருக்கிறான் -  சரியண்ணை  கொமூனுக்கு  போகவேணும்
நான்  வாறன்

செல்வன் -  ஐயோ   அங்கிள்  எனக்கு  சிரிப்பு அடக்க முடியேல்லை   பச்சை   புளுகொண்டை
புளுகிப்போட்டு போறான்  கந்தன்

மணி -  என்னடா  என்ன சொல்றாய்

செல்வன் -   உவர்   இஞ்சை  பேசே  கொண்டு  திரியிறேல்லை  மனிசிதான்  சகல  நிர்வாகமும்
 நாலு பேணி சிகரெட் தூள்  மட்டும்  வாங்கி  போட்டுடும் மனுசி  மற்றப்படி  மருந்துக்கும்  காசை
கண்ணில காட்டுறேல்லை   ஓசியில  குடிக்கிறதுதான்  உவற்றை  வேலை அதாலை  பெடியள் இப்ப
உவரை சேர்க்கிறேல்லை  உவர் சொல்றார் தான்  அம்பதாயிரம் குடுத்தனாநெண்டு  ரெண்டாயிரம்
குறோணுக்கும் மேலை வரும் - இஞ்சை  பொக்கற்றில  ஒரு  குறோணே   கொண்டு திரியாதவர்  சொல்றார்  கதை

மணி  - சீ   உந்தக்கதை  எனக்கு இப்பதானே  தெரியுது  வா  வா  போவம்  உனக்கும்  ஊரா வீட்டு 
கதையெண்டா  காணும்  போலை

செல்வன் -  ம்  இதுதான்  நானா  வாய்  திறக்குறேல்லை  திறந்தா  உண்மையா  வரும் பிறகு எனக்குக்  கெட்ட பேர்

மணி  -    சரி சரி  கோவிக்காதை  வா  வா  ......

(யாவும்  கற்பனை )



 
அறிவு  கூடிக்கொண்டே செல்ல 
உணர்வு  குறைந்துகொண்டே  செல்லும்

உணர்வு  நிறைந்தவனுக்கு
அறிவு  ஒரு மட்டில்  நிற்கும்

அறிவு என்பது  அன்பு பாராட்ட
அணைக்க  உதவவே

அறிவின் பயன்  அறியாதாருக்கு
அறிந்தவன்  அறிவை இயம்பல்

அறிவின் நிலை  சமூகத்துக்கு  விழிப்புணர்வூட்டல்  
அறிந்தவன் அறிவை  தனக்குள் மூடி  செல்வதனால்
யாருக்கு ஏது பயன் கற்றதனால்

அறிவு நிரம்பல்   தம்பட்டம்  அடிக்க  வைக்காது
அரைக் குட  அறிவே  தன்னை  புகழ்ந்து ஆடும்


ம.இரமேசு 

திங்கள், 27 அக்டோபர், 2014

செக்ஸ்  ஒரு இனிமையான நல்ல விடயம்  அதைப்பற்றி  எழுதுவது  இன்றைய  காலத்தில் மிகவும் தேவை - அதன்  புரிதல் இல்லாமையே பலர்   பெண்களிடம்  தவறாக நடப்பதற்கு காரணமாகின்றது
விபசார விடுதிகளுக்கு சென்று  இன்பம் அனுபவித்தல் மிகவும் தவறு  கொடும் நோய்கள்  உண்டாக
வாய்ப்பு மிக மிக  அருகில்  இருக்கின்றது   அதற்குப் பதில்  ஒரு
அழகிய நடிகையை  கற்பனை  செய்து  சுய இன்பம்  காணலாம்  அது சுகாதாரமானது  வெளியே
பெண்களை  மரியாதையுடன்  நோக்கவும் வழிவகுக்கும்   என்கின்றார்கள்  பாலியல்
வைத்தியர்கள் மற்று  மனோவியல் நிபுணர்கள்  - நடிகை என்பவள்  ஆண்களை   காம  வசப்படுத்தவே   விரும்புகின்றாள்  அதுவே அவளின்  வருமானம் நிறைய புகழ் பெருகக் காரணமாகின்றது - அன்றிலிருந்து இந்நேரம் வரை  வந்த நடிகையருக்கு  அதிக  ஆண்களை  காம  வசப்படுத்தி  தன்  நினைவாக வைத்திருத்தலே  குறிக்கோள்  காரணம்  அதுவே முன்னணி  இடத்தைப் பிடித்துத்தரும் என்பதே  - போர்த்தி நடிக்கும் சிறந்த நடிகையை  காட்டிலும்  உடலை  மற்று  தனங்களை  காட்டி  நடிக்கும் நடிகையருக்கே  மவுசு அதிகம் - மருத்துவரிடம்  இந்திரியம் கொடுத்து  பின் அதை  பெண்ணுக்குள் செலுத்தி  குழந்தை  உண்டாக்கும் முறையை  இன்று  எல்லா நாடுகளிலும்  வைத்தியர்கள்  சிறப்பாகச் செய்கின்றார்கள்   அப்படி  இந்திரியம்  பெற  அழைக்கும் போது ஆணிடம்  ஒரு  அறையைக் காட்டி  சாவியை  கொடுப்பார்கள் அந்த  அறைக்குள்  கவர்ச்சி நடிகைகளின்  படங்கள்  கொண்ட   சஞ்சிகைகளே  நிறையவிருக்கும் காரணம்  அந்த நடிகையரை நினைத்து  சுய இன்பம் கண்டு  அதனால்  வெளிவரும் இந்திரியத்தை பேணியில்  பெறுவதற்கே - ஜப்பானில்  சுய இன்பம் காண்போர்  சங்கமே  அமைத்துள்ளார்கள்   அதுவே  பெண்  இல்லாதவர்களுக்கு  ஆரோக்கியம்  மற்று  அழகிய  பெண்களிடம்  வழியத்தேவையுமில்லை - கற்பனையில்  சுகம்  இதையே  கவியரசு  கண்ணதாசன்    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்ற  பாடலில்  அழகாகச்  சொல்லி இருக்கிறார் 
"கற்பனை சந்தோசத்தில்  அவனது கவனம்"  என்று   -  மனைவி  இருந்தும் ஆண்டுக்கணக்காக
உடலுறவு கொள்ளாது  வாழும்  கணவன்மார்கள் இன்று ஏராளம் பேர்  இருக்கிறார்கள்  அவர்கள்
உண்ணும்  உணவுக்கு  (ஆடு மாடு கோழி  மீன்  மரக்கறி) அவர்களின்  உடல் அம்பு  எப்பொழுதும்
சுகம் காணத் தயாராகவே  நிலை கொண்டு  நிற்கும்,  இன்று  இணையத்தளம்  வந்த பின்னர்  திருப்பும் திசையெல்லாம்  அழகிகள்  நீச்சல் உடைகளிலும்  அரைகுறைக்   கோலத்துடனும்  சேவை செய்ய  காத்துக்கிடக்கிறார்கள்  அவர்களின்  அங்கங்களின்  வாளிப்பை  பார்த்த பின்  ஒருவன் அப்பு சாமி
என்று கும்பிடுவனா   இல்லை  அந்தப் பெண்களை  நினைத்து  சுய இன்பங் காணத்   துடிப்பானா
மனைவியுடன்  இன்பம் களிப்பவர்களும்  நடிகைகளை  நினைக்காமல்  சுய இன்பம் காணமலில்லை
இதெல்லாம்  மனிதனுக்குள்  விளையும்  உடலுணர்வின்  தேவை  அது சமயம்  பலாத்காரம்  செய்து
இன்பம்  அனுபவிக்க நினைத்தால்   மகா  தப்பு  அப்படி நினைக்கவே கூடாது  - ஒரு  பெண்ணின்
வெளிப்பாடு  நடத்தை  அலங்காரம்  ஆணை  அவள்பால்  மதிக்கவும் சரிக்கவும் செய்யும் 
மரியாதை வேண்டும் என்று நினைக்கும் பெண்  சரியாகப்  போர்த்தி  கவர்ச்சி  காட்டாமல்  உடைகளை
அணிவாள்  கண்களையும் அடக்கி வைப்பாள்  பெண்ணின் பார்வையை வைத்தே ஆண்களின் மரியாதை   முன்னேறும்  அல்லது குன்றும்   இதை  கம்பரும் சொல்வார்   - ஆசலம்புரி  ஐம்பொறி வாழியும்
காசு அலம்பு முலையவர்  கண்ணெனும் பூசல்  அம்பும்  நெறியில்  புறம் செலா  கோசலம் ஆற்றின் புனை  கூறுவாம் என்று  -  சில  பெண்கள்  பார்ப்போரை  காம  வலைக்குள் வீழ்த்த  தமது  முகநூலின்
படத்தை  மாற்றி மாற்றி  இட்டுக்கொள்வார்கள்  ஒரு  ஆணை மயக்கும் பார்வை  அவளின் அசிங்கமான   நினைப்பு என்றே கொள்ள வேண்டும்  ஆனால்  பத்தினி  வேடம் அழகாகப் போடுவாள்
உள்ளுக்குள்  ஆசை  நிறைந்திருக்கும்   சமூகத்துக்காக  வேடம்  இதையே பல  தமிழர்கள்  (இருபாலரும்)  போடுகின்றார்கள்  - வெள்ளையர்கள்  ஆசையிருந்தால்  நேரடியாகக் கேட்டு
இயற்கையின் உணர்வுக்கு மதிப்பளித்து இன்பம் அனுபவித்து செல்கின்றார்கள்  இதில் ஏன்  கூச்சம் 
வேடம்  என்பது அவர்கள் கேள்வி  அதுவும்  ஒரு வகையில் சரியே -  ஆனால்  என்  தாயோ  சகோதரியோ  அப்படி இஸ்டப்படி வேறு ஒருவருடன் இன்பம்  துய்ப்பதை  தமிழனாகப் பிறந்தவரால் ஏற்றுக்கொள்ள முடியாது   ஆனால்  அவர்கள் அந்த எல்லையை மீறினால்  ஆத்திரம் கொள்வதில் அர்த்துமில்லை   அது அவர்கள் சுதந்திரம் என்று ஏற்க  அறிவுப்பக்குவம் வேண்டும் அது  இல்லாதவனே  அரிவாளைத்தூக்குவான் - தொடரும் .
 
வெம்மைகளில் வெந்து தினம் வாழ்கின்றோம்
உண்மைதனை  பலர்  திரைபோட்டு  மூடுகின்றார்
காற்றையும் விற்பான்  வியாபாரி
முடியவில்லை  என்பது அவன் கவலை 

ஒருபக்கக்  கதவுகள்  ஒருநாளும்  உருப்படியாகாது
மறு பக்கம்  அறியாமல் நீதி சொல்லக்கூடாது
புறக் கண்ணில்    உண்மை  புலப்படுவதில்லை
அதைப் புரிந்து கொண்டால்  உண்மை தெளிவாகும்

தூக்கணாங் குருவிகளை  சிகரத்தில்  வைப்பதில்லை
துயிலும்  கனவுகள் விழித்திட  நாள் பார்த்து காத்திருக்கும்
எண்ணத்தின்  விரிப்புக்கு  எல்லைகள்  ஏதுமில்லை
அதில் படுத்துறங்க எவராலும்  முடிவதில்லை

ம.இரமேசு

 

ஞாயிறு, 26 அக்டோபர், 2014


இது பூத்திருந்தும்  வாசமில்லா மலர்வாழ்வு



காரோடும் வீதியெல்லாம்  தமிழன்  தேரோட்டி 
கார்காலப்பொழுதினிலும் கண்ணயராது கையாட்டி
சேர்ந்து வந்த துன்பமெலாம் உழைப்பால்  பேயோட்டி
கரை சேராதா ஓடமாகி வாழ்கின்றான்

பூவோடு பொட்டிட்டு  புன்னகைத்த பூவையரும்
காரோடிக் காசுழைக்க  வீதியிலே  இறங்கிவிட்டார்
யாரோடும் பேதமில்லை  ஊரோடு  ஒத்துழைத்தே 
உன்னதமாய்  உயர்ந்து நின்றே உலைவின்றி  வாழ்கின்றார்   

தாயோடும்  தந்தை சேயோடும்  தம்பியர்  உறவினர்
என்றிருந்த  காலம்  போய்  தனியாக  வாழுமொரு
தீயாகச்  சுடும் வாழ்விங்கு   சிலருக்கு
இது பூத்திருந்தும்  வாசமில்லா மலர்வாழ்வு

காத்திருந்து காத்திருந்து  கலியாணங் கட்டியவன்
நேற்று வந்தவளால்  தாய் நேசம்  மறந்தானே
பூ வாசம்  சில  காலத்தில்  ஓய்ந்த பின்னே 
வணங்கிடுவான்   தாயென்னும் ஆலயத்தை

அழுக்காறு  நெஞ்சத்தில்  பொங்கிவர 
ஆகாசம்  பார்க்கின்றார்  போத்துடனே
பெருஞ் செல்வம்  பேதமையால்  தொலைத்திட்டே
பெருந் தொல்லை  கொண்டே தான் வாழ்கின்றார்

ஊழினை  மேதினியில் யார் தடுப்பார்  ஆனாலும் உஞற்றிவிடு
உனக்கும் ஒரு காலம்  வரும்  உள்ளத்து  அல் தன்னை 
ஓட்டிவிடு  நெஞ்சமெனும் நெய்தலிலே   நீந்தி  நீயும்
பஞ்சமெனும் ஆழத்தில் அமிழ்ந்திடாதே

ம.இரமேசு
 
என்னை மீட்ட ஆளில்லையோ 
ஏங்கியது  யாழ் 
என்னை முகர  யாருமில்லையோ 
ஏங்கியது பூ 
என்னைச் செலுத்த  யாருமில்லையோ 
ஏங்கியது  படகு 
என்னை  வாங்க  யாருமில்லையோ 
ஏங்கியது  அன்பு 
என்னை விரிக்க யாருமில்லையோ 
ஏங்கியது நூல் 
என்னை மதிக்க  யாருமில்லையோ 
ஏங்கினான் ஏழை 
என்னை  முதல்வராக்க  யாருமில்லையோ 
ஏங்கினான்  நடிகன் 
என்னைக் காக்க  யாருமில்லையோ 
ஏங்கியது  தமிழ் 
என்னைத் தொட  யாருமில்லையோ 
ஏங்கினாள்  முதிர்கன்னி 

ம.இரமேசு 

சனி, 25 அக்டோபர், 2014

மறக்கவொண்ணா  நினைவுகள்

கொழும்பில்  வாழ்ந்த  5முதல் 10  வயதுக்காலங்கள்  -  சித்தப்பா  அவரை  சீயா  என்றே  அழைப்பது  எனது  வழமை  கண்களில்  காந்தமும்  சாந்தமும்  புன்னகை பூரிக்கும் முகமும் அகமும்  கொண்ட  இனியவர்  அவரின் அரவணைப்பில் வாழ்ந்த காலங்கள்  இனித்திட்ட  தேன் நாட்கள்  - பொரளையில் வைத்தியம் படித்துக்கொண்டிருந்தார்  -  அவரின் அறையில்  கூஜாவொன்று  மேசையின்  மேல்  எப்போதும் நீருடன்  இருக்கும்  அதைத் தூக்கி  தண்ணீர்  குடித்து விட்டால்  உலக சாதனை  செய்த  மகிழ்ச்சி  எனக்குள்  ஓடிவரும்  - "கொல்லான்  புலாலை மறுத்தானைக்  கைகூப்பி  எல்லா  உயிரும்  தொழும் " ஆம்  அவர்  மாமிசம்  உண்ணாதவர்  சுத்தமான   மரக்கறி  உணவாளர்.

விடுமுறை நாட்கள்  வருமுன்  என்னை  அழைத்துச்   செல்ல எங்கள் வீட்டுக்கு  வந்துவிடுவார்   சீயா வந்தால் எனக்கு வரும் மகிழ்ச்சி  அளவிட முடியாதது  கேட்காமல் இருக்கவே  சகலதும் வாங்கித்தருவார்  அந்த வயதில் பெரிதாக என்ன கேட்டுவிடப்போகின்றேன்  ஆயினும் ஒன்றும் கேட்பதில்லை அது அம்மா  சொல்லித்தந்த  பண்பாடு  -  கொம்பனித் தெருவிலிருந்த மரக்கறிச்   சாப்பாட்டுக்  கடைக்கு அழைத்து  செல்வார்  அங்கிருந்து   வரும் வாசம்  மேலுலகையும்  வெல்லும்   அப்படியொரு  வாசம் - இட்லி   தோசை   வடை  போண்டா போளி  என்று  வெள்ளித்தட்டில் வரும்  ஆகாரங்கள்  பார்வைக்கும்  அழகு  வாயில்  போட்டால்  ஆகா ஓகோ   அந்த மாதிரிச் சுவை   இனிமேல் எங்கு   கிடைக்குமோ  தெரியவில்லை   பல தடவைகள்   பாரிசில்  ஏறி இறங்கியும்   ம்கூம் .
 

ஒருமுறை  மாலைவேளை  கோல்பேஸ் (தங்கமுகக் கடற்கரை) அழைத்துச்  சென்றார்  பின்னர்  சபையரில் ஓடிய  குமரிப்பெண்   படத்தை  பார்க்க   அழைத்துச் சென்றிருந்தார்  நாகேஷ்  வரும் இடங்களில்  மகிழ்ந்து  சிரித்தது திரையரங்கு நானும்  சேர்ந்து கொண்டேன்  ஒன்றும் புரியாத வயது  நாகேசின்  உடல்மொழியினைக் கண்டு  சிரித்தேன்  அவ்வளவே - ஒருநாள்  ஒரு  டாக்சி (கட்டண  மகிழுந்து) ஒன்று  வந்தது சீயாவின் மருந்தகத்துக்கு (dispensary)  1975ம் ஆண்டின்     காலப்பகுதி  - என்னை  உடனடியாக  வெளிக்கிட்டு வரும்படி  கூறினார்  மகிழ்வுடன்  முதலாம் மாடியில்  வாசம்  செய்த  சீனியப்பா  வீட்டுக்கு  ஓடினேன் விடயத்தை  அம்மாவிடம் சொல்ல கால் மேல் கழுவி  தலை சீவி,    சீராக்கி  மடித்து வைத்திருந்த  சட்டைகளை  அம்மா  அணிவித்து  விட்டார்கள்  கீழே  துள்ளிக்குதித்து  ஓடினேன்   இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த  தங்கை விஜயா  (சீனியப்பா மகள் )  கீழே  அழுது கொண்டு  (குளறி) வந்து சீனியம்மாவின் கைப்பிடியில்  இருந்தபடி  குளறி துடித்து குதித்தாள்  தன்னையும்  டாக்சியில்  கூட்டிச்செல்லுமாறு - நான்  சீயாவுக்கு  பக்கத்தில் இருந்து   அம்மாவுக்கும்  சீனியம்மாவுக்கும் டாட்டா  காட்டியபடி   விஜயா   கூக்குரலிட்டு  அழுவதை  நோக்கினேன்  எனக்குள்  அந்தவயதுப் பெருமிதம் நிறைந்தது,   இன்று நினைக்கையில்  சிரிப்பாக  வருகின்றது  அந்தக் காட்சி.


கெப்பிட்டலில்   ராமன் தேடிய சீதை   ஓடிக்கொண்டிருந்தது  அதன் முன்னால்  டாக்சி  சென்றது
மருதானை  தாண்டி  எங்கோ  தூர  ஓடியது  டாக்சி,   நீண்ட  தொலைவின் பின்  அழகான  மருதநிலம்
அந்த  எழில் சூழ்ந்த  வீதியின் ஓரத்தில்  டாக்சி  நின்றது  எனக்கு  அந்த இடத்தின் அழகைக்  கண்டு வியப்பு ஏற்பட்டது - உழவர்கள் எருமைகளைக் கொண்டு   உழவு செய்துகொண்டிருந்தார்கள்,  அந்த வயற்காட்டின்  நடுவிலே  அழகான கூரை வீடு  வரம்பினூடே   அழைத்துச்  சென்றார் எங்களை  அழைத்து  வந்தவர் - முற்றத்தில்  படுத்துக்கிடந்த நாய்  வழமையான  நாய்களைப்  போல்  குலைக்க வில்லை   என்ன நினைத்ததோ  அமைதியாக   எழுந்து  சென்றுவிட்டது  அதுவும்  வைத்தியருக்கு  அம்மக்கள் போல்  இராஜ  மரியாதையை  கொடுத்திருக்கலாம் - அந்த அழகிய வீட்டின்  திண்ணையில்  போடப்பட்டிருந்த  நாற்காலியில்  என்னை  அமரச்சொன்னார்கள்  அமர்ந்தேன்   மல்லி   தே வத்துறு  பொண்ட (தம்பி தேநீர் பருகுங்கள்) என்று  அழகிய  கிளாசில் (பேணி ) அந்த வீட்டுக்காரர்  உபசரித்தார்    சீயாவைப் பார்த்தேன்  அவர் உள்ளுக்குள் படுத்திருந்த  நோயான  அம்மையாருக்கு  வைத்தியம் பார்ப்பதில்  முழுக்கவனத்துடன் ஈடுபட்டிருந்தார் - வைத்தியம்  முடிந்து  மீண்டும்  அதே  டாக்சியில்    வீடு  வந்தோம் -  இன்று நினைக்கையில்  ஆச்சரியம்  எப்படி அவ்வளவு  தூரத்தில்  இருந்த  அவர்களுக்கு  கொட்டாஞ்சேனையில் இருந்த சீயாவின் மகத்துவம் தெரிந்ததுவென்று -  யாரோ  வைத்தியம்  பார்த்து  நிறைவு  கண்ட சிங்கள  உறவினர்கள் சொல்லியிருக்கலாம் என்றே  நினைக்கின்றேன்  -  அந்த சிங்கள மக்களின்  பண்பாட்டை  நினைத்தால்  மிகுந்த மகிழ்ச்சி  எப்படியொரு  இராஜ மரியாதை  உபசரிப்பு   பண்பாடு  இப்படி வாழ்ந்த மக்களை  எப்படி  அரசியலாளர்கள்  கீரியும் பாம்புமாக்கி விட்டார்கள் - சீயா  இன்றும்  சகல இன மக்களின்  ஆதரவுடனும் மரியாதையுடனும்  வெற்றி நடை போடுகின்றார் .


ஒருநாள்  இரவு  சீயா வீட்டில்  உறங்கிக்கொண்டிருந்தேன்  வேறு சில உறவினர்களும்  உறங்கிக்கொண்டிருந்தார்கள்,  திடீரென  ஒரு  ஈனக்குரல் ஒலித்தது  டாக்டரையா  டாக்டரையா  
முன்  தோட்டத்தையொட்டி  படலை  இருந்தது  சீயா  எழுந்து லைட்டைப்   போட்டார்  நாங்களும்  எழுந்தோம்  கிட்டச்  சென்று  பார்த்தால்  ஒருவர்  மேற்சட்டையை  கழட்டிக் கையில்  வைத்தபடி  உடலெல்லாம்  கீறற்  காயங்களுடன்நின்றிருந்தார்  தனக்கு மருந்து  போடும்படி  அழுது வேண்டினார் - நீங்கள்  சண்டைபிடித்ததனால் வந்த காயம்போல் தெரிகின்றது  போலீஸ் (காவற்றுறை)  சான்றிதழ்  இன்றி  வைத்தியம் செய்வது  சட்டப்படி தவறு  குற்றமென்றார்  சீயா - ஐயா  அதை நாளைக்கு வேண்டி வருகின்றேன்  தயவுசெய்து மருந்து போடுங்கள் என்று  உருகி வேண்டியதற்கிணங்க  மருத்துவம்  பார்க்கப்பட்டதுஅந்த மனிதர் ஒரு  தொழிலாளி  எங்கோ  எதற்கோ  சண்டை  செய்து  எதிரிகளால் 
பிளேட்டால்  கீறப்பட்டு  நொந்து  வந்தார் என்பது  கிடைத்த செய்தி.

 ( இன்னும் வரும்)

ம.இரமேசு 


      
உதிரும்  பூக்கள்   அழுவதில்லை
தழுவும் கைகள் பேதம் பார்ப்பதில்லை
உருகும் நெஞ்சு வஞ்சமில்லாதது
வடிக்கும் சிலை  பொறுமையின் சின்னம்
பனிக்கும் விழி இரக்கத்தின் அடையாளம்
இனிக்கும் மொழி  ஆக்கத்தின் திறமை 
குளிக்கும் குருவி தூய்மையின்  தேவை
அளிக்கும்  கரம் கருணையின் கடல்
தளிர்க்கும் மரம்  பிறப்பின்  அழகு
ஓடும் முகில்  முயற்சியின்  வலிமை
பாடும் மீன்  மொழியில்லா  கவிதை
கூடும் இனம் ஒற்றுமையின்  நிழல்
நாடும் மனம்  வேதனையின்  ஆரம்பம்
தேடும் சொந்தம்  உரிமையின்  பெருமை

ம.இரமேசு
 
இதைத்தான் காண   சித்தர்களும்  யோகிகளும்  ஞானிகளும்  புத்தரும்  விவேகானந்தரும்  இராமகிருஷ்ணரும்  தேடி தேடி  அலைந்தார்கள்  கண்டுகொண்டார்கள் - எங்களுக்கு அடுத்த வேளைக்கு சமைக்க  காசு வேண்டும்  இல்லை உயிர்  எம்மிடம்   இல்லை என்னும் நிலை - சாப்பிடும் போது தெருவில் சாப்பாடு இல்லாமல் இருக்கும் ஒருவருக்கு ஒரு சாப்பாட்டு பொதியை கட்டிக்கொண்டுபோய்  கொடுத்தால் உங்களுக்குள் நீங்கள்  தெரிவீர்கள் -  கதிரையில்  இருக்கும் போது காலுக்கு மேல்  கால்  போடாமல் இருந்தால் உங்களைக் காணலாம் - கை நீட்டுமொருவனுக்கு இரண்டு கடலைக்கொட்டையை  கொடுக்கும்  போது  நீங்கள்  உங்களுக்குள்  தென்படுவீர்கள்  இதை  உங்களுக்கு  நான் எழுதும்போது என்னை நான்  காண்கின்றேன்   பொய்யில்லை புளுகில்லை  உண்மை இதுதான்  உண்மை  மனத்தை பக்குவப்படுத்தி  ஆழமாக  சிந்தியுங்கள்  அகப்படும்  அம்புட்டுந்தான் .
தன்னைப்போல பிறரை எண்ணும்  தன்மை வேண்டும்  அந்த தன்மை வந்துவிட்டால்  நீங்கள்
உங்களை  காண்பீர்கள்  உங்களை  நினைத்து உள்ளுக்குள் நெக்குருகுவீர்கள். 
உயிர்கள் அனைத்தும்  பாவம் செய்தே  வாழவேண்டும் என்பது நியதி  மனிதன் பகுத்தறிவு  பெற்றவன்  என்கின்றார்கள்  அவனாவது  உயிர்களை  கொல்லாது  தாவர உணவை  கைக்கொண்டிருக்கலாம் 
ஆனாலும்  முப்பாட்டன்  வேட்டையாடி கொண்டுவந்து போட்ட  மிருக  மாமிசம் புசித்து  நாக்குக்கு
அடிமையாகி விட்டான்  உலகில்  அனைத்து  வித உயிரினங்களையும்  அடித்து  சட்டியில்  போட்டு
வறுத்து புசிப்பவன்  மனிதனே  இங்கு  வெள்ளையர்கள  சில  உணவுகளில்  வேகாத மாமிசத்தை
உண்டு  சிங்கம் போல் பலமுடன்  இருக்கின்றார்கள்  கேட்டால் மனைவிக்கு உச்ச இன்பம் அளிக்க
உடலில் சக்தி வேண்டுமாம்  ஐயோ  ஐயோ  எப்பிடி  போகின்றது அங்கும் இங்கும்  சிந்தனை
ஆனா  ஒண்ணு  சிங்கம் புலி  பசிக்கு மட்டுமே  அடுத்த விலங்கை அடிக்கும் மனிதன்  மனிதனையே
கொல்கிறான்  அதிகாரத்தை கைப்பற்ற  தக்க வைக்க   ஆறு  அறிவாம்   நம்புங்கோ  நெய்யரி  சரியான
நெய்யரி  மனிதன் 
 

வெள்ளி, 24 அக்டோபர், 2014


தென்னாட்டின்  முக்கிய நடிகர்  எஸ் எஸ் ஆர் 

 (1928 - தைமாதம்  பிறந்தார்    -   ஐப்பசி  24/ 2014      வானகம் )

திரையுலகின்  பொற்காலத்தில்  அதற்கு  உரமூட்டிய நடிகர்கள்  பலர்  அதில் முக்கிய இடம் வகிப்பவர்
இலட்சிய நடிகர்  எஸ் எஸ் ஆர்  அவரின் மறைவு கேட்டு  மிகுந்த வருத்தம், ரத்தக்கண்ணீர்  ஆலயமணி  சாந்தி பச்சைவிளக்கு பூம்புகார்   சாரதா  பூமாலை  தெய்வப்பிறவி  மனோகரா  போன்ற படங்களில்  அவரின்  நடிப்பு  முத்திரை ஆழமாகப் பதிந்தது  தமிழ் உச்சரிப்பில்  சிவாஜிக்கு பக்கமாக  நின்றவர்  எஸ் எஸ் ஆர்  என்பது தமிழுலகம்  போற்றும் பொதுவான  போற்றுதல் கருத்து.  அழுத்தமான  உச்சரிப்பு  நிமிர்ந்த  நடிப்பு கூனிக்  குறுகும்  பாத்திரங்கள்  ஏற்காதவர் - முத்துராமன்  மேஜர் சுந்தர்ராஜன்  போன்றோர் வருமுன்  சிவாஜிக்கு ஈடுகொடுத்து சிறப்பாக நடித்த   துணை நடிகர்  எஸ் எஸ் ஆர்  . 

எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் இராஜேந்திரன் தமிழகத் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டவர். 1950கள், 60களில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார். இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றன. 1962 ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த ராஜேந்திரன் 1947 ஆம் ஆண்டில் பைத்தியக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்[2]. எம். ஜி. ராமச்சந்திரன் ஒரு சில காட்சிகளில் தோன்றி நடித்த இத்திரைப்படத்தில் ராஜேந்திரன் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.

கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி (1952) திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் கருணாநிதியின் அம்மையப்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஏரிக்கரை மீது போறவளே பெண்மயிலே.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1958-இல் இவர் நடித்த “தை பிறந்தால் வழி பிறக்கும்“ வெற்றிகரமாக ஓடியது.
எம்.ஜி.ஆருடன் சிறந்த நட்பினைப் பேணி வந்தார். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
பார் மகளே பார், குங்குமம், பச்சைவிளக்கு, கைகொடுத்த தெய்வம் சாரதா போன்ற திரைப்படங்களில் இவருடன் இணைந்து நடித்த விஜயகுமாரியைத் திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில் விஜயகுமாரியை மறுமணம் செய்த எஸ். எஸ். ஆருக்கு அவர் மூலமாக ஆண் குழந்தையொன்று பிறந்த நிலையில் அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் இருவரும் தனித்தனியாக திரைப்படங்களில் தோன்றி நடித்தார்கள்.
சில காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கிய இவர் சின்னத்திரையில் தோன்றி நடித்தார். 1980களில் மோகன் பிரபலமாக இருந்த நேரத்தில் அன்பின் முகவரி என்ற படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றி நடித்தார்.
 இவர் தங்கரத்தினம் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி நடித்திருந்தார்
   ஆர்  பார்த்தசாரதியின்  இசையில்  பாடகர் திலகம்  பாடிய  கிழக்கு  வெளுத்ததம்மா  என்ற பாடல்  அவன் பித்தனா  திரைப்படத்தில்  ஓங்கி ஒலிக்கும்  விறு விறுப்பான  பாடல்  அப்பாடலுக்கு  எஸ் எஸ் ஆர்  நன்றாக  நடித்தது  அற்புதம் மறக்க முடியாதது   ஐயாவின்  உண்மை  அமைதிகாணட்டும்   ஓம்  அமைதி  அமைதி. 

ம.இரமேசு 
முருகன் அழகு

 (கந்தஷஸ்டி )

வானைப் பிளக்கும்  வடிவழகு
வடிவேலன் கந்தன்  எழிலழகு
மானைப் பழிக்கும் விழியழகு
தமிழ் மையின்  நிற உடலழகு
என்றும் கந்தன் வடிவேலழகு 
சிவமைந்தன் வழியே நடைபழகு
ஏழையின் சிரிப்பில்  அருளழகு
எம்மவன்  நல்கும்  கொடையழகு
தமிழ் முதல்வன்  மலரடியேயழகு  
முருகன்  பற்றை பற்றுவோரழகு

ம.இரமேசு 

புதன், 22 அக்டோபர், 2014

மரியாதை மிகு  தோழி மாலினி மாலா  அவர்களுக்கு  -  நான் உங்களுக்கு  தீபாவளி  வாழ்த்து அனுப்பவில்லை  காரணம்  நீங்கள் சோகங்களுடன்  நடை போடும்  ஒருவர்  எந்த மகிழ்வும்
உங்களை  திசை  திருப்பாது  என்பதானாலேயே -  ஒவ்வொரு  சிந்தனைகளிலும்  நான்  எண்ணிப்பார்க்கின்றேன்  உங்களின்  ஆக்கத்தில் இருந்த  ஆழமான  வலி மிகுந்த
வரிகளை  " பிள்ளை  ஆமியிடம்  பிடிபடுகிற  நிலைவந்தால்  கிணத்துக்குள்ளை  குதிச்சுடு "
இதை எழுதும்  போது  என்  கண்கள்  பனிக்கின்றன  என்னால்  உணர முடிகின்றது
அந்த வார்த்தையை   சொல்ல  பெற்றோர்  எவ்வளவு சிந்தித்திருப்பார்கள்  அதை  கேட்ட உங்கள்
மனம்  எப்படி  இருந்திருக்கும்  என்று 
இதற்குமேல்  என்னால் ஒன்றும்  சொல்ல முடியாது  தோழி  - அமைதி கொள்க 
தீபாவளிக்   கிடாயடிப்பும்   பாபமும்


மனிதன் பாபங்கள்  செய்தே வாழப்   படைக்கப்பட்டவன் அது அவனுக்கு படைத்தவனால் இடப்பட்ட  சாபம்.  அவனின்  வளர்வுக்கு  பாபம்  செய்ய வேண்டிய தேவை  தவிர்க்க முடியாதது,  பாபம்  என்றால்   புணர்வில்  ஒரு பெண்ணை  கசக்க  முடியாதே, அங்ஙனம்  நோக்கின்  புணர்வதும் பாபமே,    அந்த  கசங்கலிலேதான்   அனைவரும் மகிழும் ஓர்   உயிர்  உதயமாகின்றது  ஆழ ஆராய்ந்தால் அவன் செய்தது பாபம்  ஆனால்  அது இன்றியமையாதது அவனுக்கு - உடலின்  ஆரோக்கியம் குறைத்து  விரதமிருக்கின்றான்  பின் பழைய  ஆரோக்கியம் பெற  மிருகத்தை கொன்று அதை புசிக்க வேண்டிய பாபத்தை செய்கின்றான் - இது   இன்று நேற்று அல்ல  வேதகாலத்திலிருந்தே  நடைபெற்று  வருகின்றது  ஒரு  நலனுக்காக  நூறு  குதிரைகளை அக்கினியில்  தள்ளி  யாகம் செய்தது  ஏன்?  மனித குலம்  வாழவே  என்கின்றது புராண இதிகாசம் -  இன்று தீபாவளிக்கு  கிடாய்  அடித்து  உண்பது  மகிழ்வைத் தருகின்றது  மனிதர்களுக்கு  அது பாபம்  என்கின்ற போதிலும்  மனிதன்  மகிழ்கின்றான் அதுவே உலக இருப்புக்கு  அவசியமாகின்றது ஒவ்வொரு  மகிழ்விலும் உலகம் முன்னே நகர்கின்றது  என்பதை எவரும் மறுக்க முடியாது .  பெண்ணிடமிருக்கும் இன்பத்தை அனுபவி  அதை  குழந்தை பெற பயன்படுத்தாதே  அது பாபம்  என்றார் டாக்டர்  கோபூர்  அவர் சொன்னதை  மனிதர்கள்  ஒப்புக்கொண்டார்களா இல்லையே - பாபங்களை தங்கள் மகிழ்வுக்காக  மக்கள் செய்துகொண்டேயிருக்கின்றார்கள்  . அதற்காக  இன்னொருவரை  தாக்குவது கொல்வது
சரி என்று பொருள் கொள்ள வேண்டாம்.

 

செவ்வாய், 21 அக்டோபர், 2014

டி எம் எஸ்  பற்றி அறியாதவர்களுக்கு ஒரு செய்தி  - தூக்கு தூக்கியில்  முதலில் பாட  அமர்த்தியது  இசைச்சித்தர்  ஜெயராமனையே  அவர்
அதிக  தொகை  பணம் கேட்டதனால்  அன்று ஒரு பாடலுக்கு 1000 ரூபா
எட்டு பாடலுக்கும் 8000 இதுக்கு  தயாரிப்பாளர்  ஒத்துக்கொள்ளவில்லை
அதனால்  வளரும் நிலையில் இருந்த  ஐயா  அமரர்  டி எம் எஸ்சிடம்
பேசியிருக்கிறார்கள்  4000ரூபா  தருவதாக  அவர் விடுவாரா  ஆம்  என்று சொல்லிவிட்டார் -  ஜெயராமன்  இல்லை  டி எம் எஸ்  பாடுகின்றார் என்பதை அறிந்த சிவாஜி  கடுங்கோபம்  கொண்டு  எதற்கு  புதிய  ஆள்  ஜெயராமனே
பாடவேண்டும் என்று  டி எம் எஸ் சுக்கு  கடும் எதிர்ப்பை  தெரிவித்திருக்கின்றார்  விடாப்பிடியாக,  ஆன போதிலும்  தயாரிப்பாளரின்
அன்பான   அணுகுதல் கண்டு வேண்டா வெறுப்புடன்  சம்மதம்  சொல்லிவிட்டார்  சிவாஜி,  பாடல்கள் பாடி பதிவான  பின்   பாட்டை கேட்ட சிவாஜி வியப்புக்குள்ளானார்  அட  இந்த புதிய  பாடகர்  என்  குரலிலேயே அருமையாக   பாடியிருக்கின்றாரே  என்று மகிழ்ந்துவிட்டு   பின்  டி எம் எஸ்  ஐயாவுடன்  நல்லபடி கதைத்து இனிமேல்  எனது  படங்கள்  யாவற்றுக்கும் நீங்களே  பாடவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்,   இந்த  விடயங்களை  அறிந்த எம் ஜி ஆர்  மலைக்கள்ளனில்  ஐயா டி எம் எஸ் அவர்களை  பாடவைத்தார்  அந்தப்பாடலும்  உச்சம் தொட உலகு  பாராட்ட  எம் ஜி ஆர்  டி எம் எஸ் ஐயாவிடம் சென்று இனி  எனது படங்களுக்கு  நீங்களே  பாடவேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டார்  பிறகென்ன  டி எம் எஸ்  இல்லை என்றால் இருவரின் படங்களும்  உப்பில்லா  உணவுபோலாகும்   என்ற நிலையை தனது  திறமையால் உருவாக்கி  வைத்தார் -  இரசிகர்களும்  டி எம் எஸ் குரலில்  குளித்து மகிழ்ந்தார்கள்  ஐயாவுக்கு  வயதாக  புறக்கணிக்கப்பட பின் வந்து  அழுதார்கள்  பாட்டு என்னும் பெயரில்  பாடகர்கள்.

திங்கள், 20 அக்டோபர், 2014

இப்படித்தான்  இன்று

அங்குமிங்கும்  மேய்ந்துவிட்டு
அறிவாளிபோல் எல்லாம்  எழுதுவான்
அன்பை நட்பை அற்பத்துக்காக  ஒதுக்குவான்
ஆயிரம்  நூல்படிப்பான்  அறிவாளி  என
உள்ளுக்குள்  நதியோடுவான் 
நல்ல  குணம் கொள்ளான்
இவன்    மனவேர் அறிந்தால் 
மக்கள் எண்ணுவரோ

நண்டுக்கும்  சேர்த்தே  ஆதவன் ஒளி
குளிர்காய வெளியில் வந்தது நண்டு
வீச்சு வலைக்காரன்  கண்ணில்  பட
நண்டு காலால்  மிதிக்கப்பட்டு 
கையிற்றால் கட்டப்பட்டு 
சந்தையிலே  விலைபோனது

வண்டிற்  பாலா  வடிவாய் பார்த்து
விலை கேட்டார்,  வாங்கினார்
வீட்டில் கொடுத்தார்  கம கம
வாசத்துடன் வெந்தது  நண்டு
அன்னலட்சுமி   கையால்

பாலா  கவிதை எழுதினார்
தலையங்கம்   கொல்லாதே
ஆகா அற்புதம் என்று
பரிசும் வந்தது  அதை  வாங்க
கொழும்புக்கு  வண்டியேறினார்
மனிதாபிமானி  பாலசுந்தரங்கவடிவேல்
என்ற  அந்த  பாலா 

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஒழுங்கு 

இங்கே  ஒன்றை  பெறுவதென்றால்  டேனிஷ்  மக்கள்  வரிசையில் ஒழுங்காக நின்று  பெறுகின்றார்கள் 
இடையில் புகுந்து  ஒழுங்கை எவரும்  குலைப்பதில்லை அப்படியே  ஒருவர்  இடையில் புகுந்தால் பின்னால் நிற்பவர்கள்  அந்நபரை  கண்டித்து  வெளியேற்றி  விடுவார்கள்  அப்படி நடந்ததை இங்கு  கண்டதேயில்லை  ஆனால்  எங்கள்  நாடுகளில்  (இலங்கை,  தமிழகம்)  பேருந்துக்கு  சீட்டு வாங்க  (டிக்கெட்) திரைப்படத்துக்கு சீட்டு வாங்க  தொடருந்துக்கு சீட்டு வாங்க  கோயிலில்  புற்கை வாங்க  சாமி  கும்பிட  தேரில் இருக்கும் சாமிக்கு  அருச்சனை தட்டை  கொடுத்து  அருச்சனை செய்ய  வேறு எதுவெதுக்கெல்லாமோ  நெருக்குவதும் தள்ளுவதும்  மோதுப்படுவதுவும்  அசிங்கம் அசிங்கம் ,  அந்தப்பழக்கம்  இங்கு  வந்தும்  விடப்படவில்லை - சில ஆண்டுகள் முன்பு  பாரிசில்  இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு சென்று தரிசித்துவிட்டு  அவர்கள்  வழங்கிய  அன்னதானத்தை  வாங்க சென்றேன்  எங்கள்  மக்கள்  அதை வாங்க  நெருக்குப்பட்டு பல வழிகளில்  கையை கோப்பைகளுடன் நீட்டினார்கள்  வரிசையில் நின்று ஒழுங்காக  வரத்தெரியவில்லை மிகவும் வெட்கத்துடன்  ஓரத்தில் நின்று  நடக்கும்  கூத்தை  அவதானித்தேன்  எனது  அமைதியையும்  நெருக்குப்படாமல்  ஒதுங்கி பொறுமையுடன்  நிற்பதையும்  அவதானித்த  வழங்குனர்  என்னை  மகிழ்வுடன் பார்த்து  எனது கையிலிருந்த  கோப்பையை  தானாகவே  வாங்கி   அன்னக் குழையலை  கோப்பையில்  இட்டு  வழங்கினார்  எனக்கு மிகவும்  உள்ளுக்குள் பெருமிதமுண்டானது அவரின்  பண்புகண்டு நன்றியை கண்களால்  சொன்னேன்  அவரும் கனிவுடன்  ஏற்றுக்கொண்டார் ,   நமது மக்கள் சிந்தித்து ஒழுங்காக நிற்கவேண்டும் அல்லது நிர்வாகம்  சொல்லியாவது  வழிநடத்தல்  வேண்டும் எமது  ஒழுங்கின்மையைக்  காணும்  ஒரு  அந்நியர் (வெள்ளையர் ) எம்மைப்பற்றி  எவ்வளவு அசிங்கமாக  உள்ளோடுவார் என்று நினைக்க வேண்டும் - எதற்கிந்த தள்ளு முள்ளு,    கலாசாரம் பண்பாட்டில் மிக மிக பெரியவர்கள் சிறந்தவர்கள்  தமிழர்கள்  என்று மார்தட்டிக்கொள்ள முடியாமல் இருக்கின்றது - மகனை   மகளை  சொந்த சாதிக்குள் மணமுடித்து கொடுப்பது ஒன்றே  கலாசாரம் ,  பண்பாடா ?

டிஸ்கோதீக்கில்  மதுபோதையிலானாலும்  வெள்ளை  இளம்  பிள்ளைகள்  வரிசையில் நின்று
அனுமதி சீட்டை  பெறுகிறார்கள்  உள்ளே  ஜாக்கெட்டை  கொடுப்பதும்   எடுப்பதும்  அமைதியாக நின்றே  கோலா பியர் வாங்கவும்  ஒழுங்காக  அமைதியாக  நின்று கொள்வார்கள்  இதையெல்லாம்  நமது  மக்கள்   போய்  பார்த்திருந்தால்  அநாகரிகமாக  நடந்துகொள்வார்களா - உழைப்பதும்  சீட்டு கட்டுவதும் ஊராவீட்டு  கதை பேசுவதும் எழுப்பங்காட்ட  சீட்டு காசையெடுத்து  விழா நடத்துவதுமே
எம்மவர்களின்  மாயக்களிப்பு - வெளியில்  வந்து உணவு அருந்துவதில்லை  நாலு  வெளியாருடன் 
பழகுவதில்லை   தொடரை பார்த்துக்கொண்டு  வீட்டுக்குள்ளேயே  இருப்பது  சங்க விழா  பிறந்தநாள்
விழா  திருமணம்  என்றாலே வெளியில் கிளம்புவார்கள் -  வெயில் கொளுத்தி  அடித்தாலும்  வெளியில்
கடற்கரைக்கு  செல்வதில்லை  பல ஆண்டுகள் முன்பு  ஒருவரை கேட்டேன்  ஏனண்ணை  வெளியில
வராமல்  அறையை  பூட்டிக்கொண்டு  கிடக்கிறியள் என்று ,  வெளியில  போனா  ஐஸ்கிறீம்  செலவு  வரும் என்றார்  அந்த  இன்றைய  மில்லியனர்  இவர்கள்  எப்படி  மில்லியனர்கள்  ஆனார்கள்  என்று  ஊகிக்க முடிகிறது.  காசு சேர்க்கும்  இயந்திரங்களாக  வாழ்க்கை  ஓடுகிறது.

 "கொடுப்பதுவும் துய்ப்பதுவும்  இல்லார்க்கு  அடுக்கிய
 கோடி  உண்டாயினும் இல்" (குறள் 1005)





இதயத்தின்  நரம்புகள்  வாசிக்கும் முகாரி
அதில்  எரியும்  விறகுக்  கட்டைகள்
அந்த வசந்தத்தின்  வடிவை  இரசிக்க முடியாத 
நெஞ்சின் கீறல்கள்  அதில்  கொட்டும் குருதி 
படக்கென  முறிக்கலாம்  தடியை
சிறையில்  நல்லவர்கள்  வேண்டாம்
அது கொடியோரின் கூடாரம்

சக்கரங்கள்  நிற்பதனால்  அவை  ஓட
மறுக்கின்றன  என  அர்த்தமில்லை
தேவைகள்  ஏற்படின்  அவைகள்  ஓடும்
தூண்டிலில்  எந்நேரமும் அகப்படுவதில்லை  மீன்
நேரம்  அதற்கு துரதிஸ்டம் என்றால் அதிஸ்டம்  நமக்கு

முகில்கள் ஓடி  இளைக்கும்  வியர்வை மழையாகும்
காட்டின்  காற்று  ஆற்றின்  வேகம்  முகிலுக்கு திகில்
முதுகு தெறிக்க ஓடும்  அழகு  எமக்கு  களிப்பு
ஒருவர்  நோவில்  ஒருவர்  கொண்டாட்டம் 
ஏனிந்த  களிப்பு  எப்போ  வரும் விழிப்பு

ம.இரமேசு 

சனி, 18 அக்டோபர், 2014

அஞ்சனாதேவியின்  மகன்  சொன்னது 

ஐயனே  நீ  ரகுவின் வம்சத்தில் வந்தவன்   புலியும்  மானும் ஒரே துறையில் நீர் அருந்தி  பக்கம் பக்கமாக  நின்றன  அந்தப் பெருமை  உன்  முன்னோரான  மாந்தாதாவுக்குண்டு அந்த நல்லாட்சியை நல்கியவர்  அவர்,   ஒரு  புறாவுக்காக  தனது தொடையை  அறுத்து  கொடுத்தார் உனது  தாத்தாக்களில் ஒருவரான சிபி   அவர்கள் வழியில் வந்தவனே  இத்தனை  பெருமைகளையும் விட  மிகப்பெரிய பெருமை  உங்கள்  குடும்பத்துக்குள்   அன்னை  சீதாதேவி  வந்த பொழுதே  வந்தது.  ஒரு  சிறந்த  பெண்ணே   குடும்ப உயர்வை  பெருமையினை நிலை நிறுத்துவாள்   என்ற உண்மையினை   இதனால் அறியலாம் .
சிந்தனைக்குரிய நல்லதோர்  விடையம் தொட்டீர்கள் நன்று நன்று
மனக்கருத்தின் உருவம் (இமேஜ்) தன்னை  பெரிய ஆள்  தானே  எல்லோரையும் விட  சிறந்தவர்  என்று தனக்குள் உருவாக்கி வைத்திருக்கும் ஓர்  உருவம்  அந்த உருவத்தை  இழக்காது  வளர்க்க  சில மனிதர்கள் படும் பாடு   இறுதியில் அதற்கு  அவர்களே  பலியாகிவிடுகிறார்கள்.   நான் இதைத்தான்  அணிவேன்  இதைத்தான் குடிப்பேன்  இந்தக்கார்தான்  எனக்கு வேண்டும்  இப்படி  பல  பல,  அதி செல்வத்தில் இருக்கையில்  பின்பறலாம்  செல்வம் குறைய குறைய  மனம்  மரண வாசலின் பக்கம் வந்துவிடும்.  தனது நிலை  குலைய (இயலாமை) மனம்  மரணத்தையே  விரும்பும்  அந்தளவுக்கு  மனக்கருத்தின் உருவம் மீது  பக்தி  மோகம்,   இந்த  இமேஜுக்கு  பலியான  ஆள்  எம்ஜிஆர்  அவர்போல் இமேஜை  மோகித்தவரில்லை   இறுதியில் தன்னால்  இயங்க முடியாத  நிலை வருகையில் தூக்க மாத்திரைகளை உண்டு  மரணமாதா  காலடியில் விழுந்தார்  ஆனாலும் அவர்  காப்பாற்றிவந்த  இமேஜ்  நிலைத்துவிட்டது.  செல்வ  அதிகரிப்பில் இருப்பவர்களே  அதிகம்  இமேஜுக்கு  பலியாகின்றார்கள் காரணம் பணத்தால் மனநினைப்பை   கட்டி காப்பாற்றலாம்  என்ற  எண்ணம்  இங்கே ஒரு அழகிய டேனிஷ்  பெண்  எண்ணெய்  விட மறந்த சைக்கிலில்  கீச்சு  கீச்சு  ஒலியெழும்ப அதை  ஓட்டி செல்வாள்  அவள் இமேஜ் பற்றி கவலைப்படுவதில்லை  யாரும் அதை  பெரிது பண்ணி பார்ப்பதுமில்லை  எங்கள் நாட்டில்  சற்று சத்தம் வந்தால்  நக்கல் சிரிப்பு ஏளனம்  இந்த  பழக்க வழக்கம்  அறியாமையே அநாகரிகமே,  இயல்பாக வெளிப்படையாக இருக்க  வேண்டும்  அப்படி யாராவது  இருந்துவிட்டால்  அந்நபரை  குறைசொல்லி  பேசுபவர்களே நம்மில் அதிகம்.   பிறரின்  நக்கலுக்கும்   கிண்டலுக்கும்   ஆளாகிவிடக்கூடாது என்பதற்கே  எங்கள்  வாழ்வை  அங்கே துலைத்தோம்  இங்கு  வந்தும்  பழைய சிந்தனையுடனேயே   வாழும் நம்மவர்கள்  பேருக்குத்தான் வெளிநாட்டில்  இருக்கின்றார்களே  தவிர  மனப்பக்குவம் அறிவு வளர்ச்சியில் இன்னும்  தூரவே  நிற்கின்றார்கள் - எனக்கு எல்லா நிறங்களும் பிடிக்கும்  ஆதலால்  நான்  எல்லா நிறங்களிலும் ஆடை அணிவேன் அதுபற்றி எனது டேனிஷ் நண்பர்கள்    ஒன்றுமே  சொல்வதில்லை  அவர்கள்  எனது   பழக்க வழக்கம் பார்த்தே  சிநேகிப்பவர்கள் நம்ம  ஆட்கள் மட்டுமே  காசு கார் வீடு  உடை  போன்றவற்றை  நோக்கி  சிநேகிப்பார்கள்  இதுவே  நான் 28  ஆண்டுகளில் இங்கு கற்றுக்கொண்டது .சிந்தனைக்குரிய நல்லதோர்  விடையம் தொட்டீர்கள் நன்று நன்று 

வெள்ளி, 17 அக்டோபர், 2014

மூங்கில் இலைபறித்து
முத்தம்மா  நடக்கையிலே
அவள் சுமந்த   மூங்கில்
இலையினில்  ஓர்  பனித்துளி
ஏங்குவோர் துயர் துடைத்து
செம்பியனும்  திரும்புகையில்
முத்தம்மா  தலையினிலே
வாடும்  பனிநீர் கண்டனனே
தூங்கும் பனி  நீரே
என்ன துயர் கொண்டாய்
கொண்டதுயர்  சொன்னால்
குறைதீர்க்கப்பார்ப்பேன்
தூங்கும்  பனி நீரில்
மூன்றுவகை  இன்பம்
மூன்றுவகை  இன்பம்
அது முத்தமிழேயாகும்
தூங்கும் பனி நீரை
வாங்கும் கதிரோனே 
வாங்கும் கதிர் வாழ்க
வண்டமிழ்  வாழ்க
வண்டமிழால் வையகமே வாழ்க
வாழ்க வாழ்க  அனைவரும்  வாழ்கவே


மாற்றங்கள்  பூசும் வர்ணங்கள்
அழகாக  இருக்கின்ற  போதிலும்
சில  சமயம்  சகிக்க முடியாத
வர்ணங்களையும்  பூசி  செல்கின்றது   
நல்ல  பூச்சுகள்  பெய்த மழையில்
நனைந்து கரைவதுபோல்
நல்ல மாற்றங்கள்  அழிந்து போகின்றனவே
அரசியலிலும்  கலையுலகிலும்
நல்ல  வர்ணங்கள்  பூசப்பட்டது
மாறுதல்  வர்ணங்கள்  மாறி
அனைத்தும்  நசிகின்றனவே
மனதை  கொள்ளையிட மறுக்கின்றது
அநியாயம்  செய்தோரை தலையில் சுமப்பதும்
நாச சக்திகள் கோலோச்சுவதும்
பனையின் உயரத்தில்  இருக்கின்றது 
மாற்றமே வா  நல்ல  வர்ணங்களைப்  பூசு

 
அன்பான சபா தம்பி -  பெண்ணின் கண்ணடக்கத்தை  வைத்தே  அவளுக்கு  சிறப்பு பெண்ணின்  ஒழுக்கம் கண்ணில் இருந்தால்  அவளை  ஆண் மதிப்பான்
காம  நோக்குடன் நோக்கான்  என்பது அடிப்படை  அதை வைத்தே கம்பர்
எழுதியிருக்கின்றார்  இன்றைய வாழ்வியலுடன்  கம்பராமாயணத்தின் அனைத்து கூறுகளையும் ஒப்புநோக்குதல் நன்றன்று  அது அன்றைய  வாழ்வியல்  சூழலுக்கு ஏற்ப  வடிக்கப்பட்டது ஆயினும் அதற்குள்  நிறைய
இன்றைக்கும்  ஏற்ற விடயங்கள் உண்டு  ஆழமாக  படித்து உணராமல்  பொழுதுபோக்குக்கு அவர் இவர் சொன்னதை வைத்து  வீண் வம்பிழுத்தல்  பண்பல்ல  இதிகாசத்தை  அதன் வழியில்  நோக்க வேண்டும்  பொய் புளுகு
என்று கிண்டலடித்து  உங்களை காட்டிலும்  ஆயிரம் மடங்கு  தாக்கியவர்கள்  எல்லோரும் இறுதி நாட்களில்  சாயி பாபாவை  வீட்டுக்கு அழைத்து களவாக கும்பிட்ட கதைகள்  அறியவில்லையா  பெரியார் தாசன்  கண்ணதாசன்  போன்றோர்  மகா சிந்தனாவாதிகள்  அவர்களைப்போல்  கடவுளை  திட்டி தீர்த்தவர்கள்  இதுவரை யாரும்  இரார்  அப்படியானவர்களே  கடைசியில் 
பெரும் பக்தர்களானார்கள்  பெரியார் தாசன்  இஸ்லாத்துக்கு மாறியது அறியவில்லையா  நன்றாக  படித்துவிட்டு  இதுபற்றி பேசவேண்டும்  கம்பராமாயணத்தை  நக்கலடிக்கவே  கண்ணதாசன் அதை  படித்தார்  கடைசியில்  அதன் வீரியத்தில்  தன்னை ஒப்படைத்தார்  என்றால்  அதை  கேலி செய்யும்  மற்றவர்கள்  எம்மாத்திரம்,   அதை நம்ப வேண்டும் என்றில்லை  நமக்கு தேவையான
நல்லதை  மட்டும் எடுக்க வேண்டும்  உங்களுக்கு  எப்படி விளக்கினாலும்
புரிந்து கொள்ளாது வீண்  வாதம் செய்கின்றீர்கள்   -  கோயிலுக்கு  நேர்ந்த கிடாய் ஆகக்கூடாது தம்பி , வாழ்வில் அடக்கம்  பணிவு  பண்பு  வேண்டும்
இன்றைய  தொழில் நுட்ப வளச்சியை  200 ஆண்டுகளுக்கு முன்னர்  இருந்தவர்கள்  நம்பியிருப்பார்களா  புளுகு  உதெல்லாம்  சாத்தியமில்லை
என்று எள்ளி நகைத்திருப்பார்கள்  ஆனால்  இன்று...   அப்படித்தான்  எங்களுக்கு
இன்று பொய் புளுகு  என்று  தெரிவது  திரேத யுகத்தில்  உண்மையாக  இருந்திருக்கலாம்  இந்த கழிசறை  உலகே  என்னவெல்லாமோ  கண்டு
பிடிக்குதென்றால்  அன்றைய   உலகு  ஏன்  கண்டு பிடித்திராது
இன்று நாம்  நம்ப  மறுக்கும்  விளைவுகளை - வில்லின்  நவீனமே  துப்பாக்கி
மறுக்க முடியுமா  ஏவுகணைகள்  அஸ்த்திரங்கள்  புஷ்பக விமானம்  உலங்குவானூர்தி (கெலிகப்டர்) இன்னும்  நிறைய இருக்கின்றது  ஆழமாக
வாசித்து நல்வழியில்  சிந்தியுங்கள்  குறுக்கு வழியில்  சிந்தித்தால் 
வீணாக  பகைமையே  வளரும்  உங்களை விட  பல  பல  பெரிய  சிந்தனையாளர்கள்  கடவுளை அதன் கதைகளை  எதிர்த்து கிண்டல் செய்தவர்கள்  கடைசியில்  தங்களின் அறியாமையிட்டு  உள்ளுக்குள் நொந்து கொண்டார்கள்  என்பது வெளிச்சமாக  இருக்கும்  வெளிச்சம் - வாழ்க நலம்


 

வியாழன், 16 அக்டோபர், 2014

அன்பான சபா, நல்லதொரு  விடயம் தொட்டீர்கள்  உங்கள்  சிந்தனை கண்டு சிரித்தேன்  நன்று  நன்று -  தசரதனுக்கு  அறுபதினாயிரம்  மனைவியர்  வரக் காரணமுண்டு  அதை பலரும்  பேசுவதில்லை  ஒரு  சந்தர்ப்பத்தில் முனிவர் ஒருவர் கொடுத்த சாபத்தின் விளைவே  தசரதனுக்கு  60 000 மனைவியர்  அந்த  சாபம்  என்னவெனில்  நீ மணக்கோலத்தில் இல்லாத  நாள்  நீ இறப்பாய்  என்பதே  ஆனாலும்  தசரதன்
விரும்பி எந்தப்பெண்ணையும்  துன்புறுத்தி மணக்கவில்லை   தசரதனின் நல்லாட்சியும்  நல்ல குணமும் அறிந்து  மக்கள்  தங்கள்  அரசர்  பலகாலம் வாழவேண்டும்  என்பதற்காக  தங்கள்  பெண்ணின்  சம்மதத்துடன்  நாளும்  ஒரு பெண்ணை மணமுடிக்க  செய்து மன்னனை  காப்பாற்றினார்கள்  குறிப்பிட்ட கால  வரையறைக்கு அப்பால்   சாபத்திலிருந்து  விமோசனம் பெற்றார்  தசரதன் 
தசரதன்  இறந்திருக்கும் பொழுது  கம்பர்  அதற்குள்ளும்  தனது  நகைச்சுவை ஒன்றை  பின்னுவார்
தையல்  கடலில் குளித்தவனை  இன்று தைலக்கடலில்  குளிப்பாட்டுகின்றார்களென்று
மற்று  அங்கிருந்த பெண்களின்  கண்கள் ஒழுக்கமுடையது  5 பொறிகளுக்கு  சஞ்சலம்
ஏற்படுத்தாது  இருந்தது அதனால்  உங்கள்  மொழியில்  சைட்  அடிக்க  எந்த  ஆடவனும்  விழைவதில்லை  - பாட்டை  கேளுங்கள்  -

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்
 
பொருள் -  ஆசலம்: சஞ்சலம். காசு வைர மணிகள் (வைரமணிகளால் கோக்கப்பட்ட ஆரங்கள்) பூசல் போர்.
சஞ்சலத்துக்கு மனிதனை உள்ளாக்கக்கூடிய ஐந்து புலன்களாகிய அம்புகளும்; எப்போதும் ஒன்றோடு ஒன்று மோதுவதால் ஒலியை எழுப்புகின்ற வைரமணிகள் பதிக்கப்பட்ட ஆரங்களை அணிந்த பெண்களுடைய கண்களாகிய போர் அம்புகளும், ஒருபோதும் ஒழுக்க நெறியைவிட்டு விலகி அப்பால் செல்லாத இயல்பை உடையதாகிய கோசல நாட்டை அணி செய்யும் சரயு நதியின் பெருமையைக் கூறுவோம்.
மனிதனை ஒழுக்க நெறியைவிட்டு அப்பால் செல்ல எப்போதும் தூண்டுகோல்களாக விளங்குபவை என்ற காரணத்தால் ஐம்புலன்களை அம்புகளாகச் சொன்னார். ஆடவர்களுடைய புலன்களாகிய அந்த அம்புகளுக்கு எதிர் அம்புகளாக விளங்குவன என்று (விலையுயர்ந்த மணிகள் பதித்த பல ஆரங்கள்ஒன்றோடு ஒன்று மோதி ஒலியெழுப்பும் தன்மையை உடையவைஎன்பதனால் செல்வச் செழுமை நிறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் என்பது குறிப்பு. அத்தகைய பெண்களின் (போருக்கு அழைக்கும் தன்மையைக் கொண்ட கூரான) கண்களும் ஒழுக்க நெறியைவிட்டு நீங்காத தன்மையை உடைய நாடு கோசலம். ஆடவர், புலன்களை நெறிப்படுத்தியவர் - வாழ்க  நலம்.
 
 
நிம்மதி  நிம்மதி

அன்றொரு காலம்
வாங்கிய போத்தில்களும்  நிறைய
அதன்  வகைகளும் நிறைய
ஊற்றிக்குடித்த  கிளாசுகளும் நிறைய
பற்றவைத்த  சிகரெட்டுகளும்  நிறைய
செலவு செய்த காசுகளும் நிறைய
ஆடிய ஆட்டங்களும் நிறைய
பேசிய பேச்சுக்களும் நிறைய
சேர்ந்திருந்த  சிநேகிதர்களும் நிறைய
கொண்ட மன நோக்களும் நிறைய
உண்ட  வகையறாக்களும் நிறைய
எல்லாம் நிறைய நிறைய
கண்ட மிச்சம் என்ன
குடிக்க  வந்தவர்கள்  எங்கே
அவர்கள் சீட்டு போட்டு
வீடும்  காரும் வாங்கிவிட்டார்கள்
வெறுங்கையுடன்  சிரித்தபடி வந்தார்கள்
வாங்கோ  இருங்கோ  என்றுவிட்டு
கடைக்குபோய்  போத்திலும்  கோலாவும்
டீ பிறிச்சிலிருந்து ஆட்டுத்தொடை
கொஞ்சம்  டேஸ்ட்டுக்கு பொரியல்
மிச்சம்  குழம்பு
நாலாவது பெக்கில்
இஞ்சைவாரும்  ஐசே
என்று  தொடங்குவார்கள் 
அது எங்கோ எங்கோ போய் முடியும் 
அடுத்த சில நாட்களில் , அண்ணே
ஐநூறு குறோண் மாறித்தாறியளே
வியாழக்கிழமை திருப்புறன் என்றால்
விசர்க் கதை  கதைக்கிறீர்
நானே  மினுசில்  காட்டை
வைச்சிருக்கிறன்  நீர்  ஒருபக்கம் என்பார்
நா  கூசாது  பொய்  சொல்லுவார் 
நன்றி மறப்பார்  நல்லா  யூஸ்  பண்ணுவார்கள்
கூடுமிடங்களில்  அறிவாளியாக  கதைப்பார்கள்
நல்லவனை  கண்டால்  நாலு பக்கமும்  நக்குவார்கள்
நெஞ்சில்  என்னதான்  நினைத்து  வைத்திருப்பார்களோ 
தமிழ் பெண்ணாக  இருந்திருந்தால்  குடிக்க வேண்டி  வந்திராது
மன  அழுத்தம்  வரும்போது  கொஞ்சம்  பாவித்தால் 
மகிழ்வு  வந்து  நல்லபடி  தூக்கமும்  வருவது  உண்மையே
நம்ம  ஆட்களுடன்  கூடி களிப்பது  வீண்  மனத்தாங்கலை உருவாக்கும்
நல்ல கொம்பனி  டி எம் எஸ்  , சிவாஜி , எம்ஜிஆர் , கவுண்டமணி ,செந்தில்
ஒரு பிரச்சினையுமில்லை   நிம்மதி  நிம்மதி .

ம.இரமேசு   

 
எனது ஆசான்  மதிப்புமிகு   ஆசிரியர்  கே  எஸ்  துரை  ஐயாவின்   உரையிலிருந்து

.

கர்ணனும் கும்பகர்ணனும் ஓர் ஒப்பீடு பரதசங்கம உரை..

October 12, 2014
ps
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க தெய்வத்தையும் நிராகரித்த இரு நன்றியுள்ள மனிதர் கதை..
டென்மார்க் கலாக்கேந்திரா ஆடற்கலையகம் நடத்திய பரத சங்கமம் நிகழ்வில் பேசிய ஆசிரியர் கி. செல்லத்துரை கர்ணனும் கும்பகர்ணனும் என்ற விடயம் பற்றி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் இசை வேளையின்போது வயலின் வித்துவான் நெய்வேலி இராதாகிருஷ்ணன் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது என்ற கர்ணன் திரைப்பட பாடலை இசைத்து அரங்கத்தை கட்டிப்போட்டார்.
அடுத்து வந்த உரையின்போது கர்ணனின் சிறப்பையும் – கும்பகர்ணனின் சிறப்பையும் ஒப்பிட்டுக்காட்டி அவையின் சுவைத்தலுக்கு மெருகூட்டினார் ஆசிரியர்.
கவலையைத் தீர்க்கும் நாட்டியத்தை காணும் இந்த மேடையில் துன்பமான இந்தப் பாடலை நெய்வேலியார் ஏன் இசைத்தார் என்று பலதவைகள் யோசித்துப் பார்த்தேன்.
கர்ணன் குருவிடம் பொய் உரைத்த காரணத்தினால் அவரிடமிருந்து உற்ற போரில் கற்றது மறப்பாய் என்று சாபம் பெற்று வித்தைகளை மறந்து மரணத்தில் கிடந்தபோது இந்தப்பாடல் வருகிறது.
ஆகவே இந்த அரங்கில் உள்ள மாணவர்களும், பெற்றோரும் குரு பக்தி குறித்து சிந்திக்க வேண்டும் என்பதையே அவர் சொல்லாமல் சொல்கிறார் என்று உணர்கிறது.
இராமாயணப் போரிலும் – பாரதப்போரிலும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க உயிர் கொடுத்த பாத்திரங்கள் இருவர் வருகிறார்கள் இராமாயணத்தில் இராவணனின் தம்பி கும்பகர்ணன், பாரதத்தில் துரியோதனனின் நண்பன் கர்ணன்.
இந்த இருவருமே கர்ணன் என்ற பெயரால் ஒற்றுமைப்படுகிறார்கள், தோல்வியடந்தாலும் கடவுளே போருக்கு வந்திருப்பது தெரிந்;தாலும் விலை போவதைவிட இறப்பதே மேல் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியவர்கள்.
மண்ணில் உயர்வுடன் வாழ்ந்து தெய்வங்களையே சதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளிய ஆற்றலாளர்.
சாகாவரம் கேட்டு கும்பகர்ணன் தவமிருக்க அவனுக்கு என்ன வரவேண்டும் என்று இறைவன் கேட்கிறார்.
அவன் சாகாவரமாகிய நித்திய வரம் தாருங்கள் என்று கேட்க சரஸ்வதி அவன் நாக்கில் இருந்து ஒரு புறம் அழுத்தித் தடுமாற வைக்க நித்திய வரம் என்பதற்கு பதிலாக நித்திரை வரம் என்று கேடடான் என்று கூறுவார்கள்.
அதுபோல தான் பிராமணன் அல்ல என்பதை கர்ணன் பரசுராமரிடம் சொல்லாத காரணத்தால் வண்டாக வந்து அவன் தொடையை துளைப்பான் கண்ணன்.
குருவின் உறக்கம் கலையக்கூடாது என்பதற்காக இரத்தம் ஓட ஓட பொறுமை காப்பான் கர்ணன்.. கண் விழித்ததும் குருவான பரசுராமர் இரத்தத்திற்கு பயப்படாத கர்ணன் பிராமணன் அல்ல என்று முடிவு செய்து அவனுக்கு உற்ற போரில் கற்றது மறப்பாய் என்று சாபமிட்டார் என்பது கதை.
இதுபோல பாரதத்தில் பல கிளைக்கதைகள் உண்டு :
பாவம் செய்த துரியோதனன் பதினாறு இலைகளில் பதினாறு கறிகளை போட்டு சாப்பிடுவானாம், அவன் ஒரு பிடி அள்ளி சாப்பிட்டதும் மிகுதி உணவு புழுவாக மாறிவிடும், இதனால் பதினாறு இலைகளில் பதினாறு கறிகளையும் குழைத்து பதினாறு பிடிகள் பிடித்து ஒவ்வொரு இலையாகச் சாப்பிடுவானாம்.
இதுதான் பதினாறு கறி சோறு கதை.. ஒரு நாள் இந்த இலை ஒன்றில் கர்ணன் கை பட்டதும் உணவு புழுவாக மாறுவது அடியோடு நின்றுவிட்டதாம்…
அதனால் மகிழ்ந்த துரியோதனன் காலமெல்லாம் கர்ணனுக்கு போட்ட சோறே செஞ்சோற்று கடனானது.
கும்பகர்ணன் தூக்கத்தையே வரமாகப் பெற்றதால் உழைப்பின்றி உறங்கிக் கிடந்தான்.
அவனால் வருமானம் இல்லாவிட்டாலும் தம்பி என்ற பாசத்தினால் உறக்கத்தில் உணவூட்டி அவன் உயிர் காத்தவன் இராவணன் இதனால் அவனுக்காக உயிர் கொடுத்தான் கும்பகர்ணன்.
இந்த இருவருமே தின்ற சோத்துக்காக உயிர் கொடுத்தார்கள் உயர்வு பெற்றார்கள்..
அன்னமிட்டவனையும், கல்வியிட்டவனையும் ஒரு காலமும் மறக்கக்கூடாது என்பது இவர்கள் இருவரதும் கதையாகும்.
ஆகவே நன்றி மறவாத மனிதராக வாழ்ந்தால் தோற்றாலும் இருவரும் வென்றார்கள் என்றார்.

புதன், 15 அக்டோபர், 2014

வண்டுகளின் இரைச்சலில்
மலர்கள்  வாடுவதில்லை
அறிவில்  ஞானத்தில்
அம்  மலர்கள்  மலர்கையில்
சில்  வண்டுகள் வஞ்சகப் பார்வை
அவை  சிந்திக்க  தலைப்படா 
சிறு  கோழிகள்  போல்  கொத்தும்
இருள் கவ்வும் நெஞ்சுகள்
வெளிச்சங்  காணா   வெளியே வரா
பேதங்  கொண்ட  நாகங்கள்
வண்டுகளின் இரைச்சலில்
மலர்கள்  வாடுவதில்லை
பித்தளைக்கு  தங்க  முலாம்
காசு கட்டுகளே  கோழிகளின்  தீனி
அறிவில் ஏற  ஏணி  இல்லாத  கோணிகள்
வண்டுகளின் இரைச்சலில்
மலர்கள்  வாடுவதில்லை
மழைக்கும்  வெயிலுக்கும்  காற்றுக்கும்
இடிக்கும் மின்னலுக்கும்  எதற்கும்
ஓடுகள்  இளகுவதில்லை
ஒளிவீசும் சூரியனை 
எந்த மாசும்  அசுத்தம்  செய்யா

ம.இரமேசு
 

திங்கள், 13 அக்டோபர், 2014

அன்று  இனிய பொழுது
காதலன்  வந்தான்
கன்னி பறந்தாள்
ஊரெல்லாம்  தேடி
அலுத்து  அழுதாள்
அம்மா,   நீயும்  உன்ரை
வளர்ப்பும்  என்று
புருஷன்  கடிந்தான்

வாடி போய் 
காட்டுப்பக்கம்
தேடுவம் 
நானும் வாறன் மாமா 
மூவரும்  தேடியதில்
ஓரிடத்தில்  இருவர்
சென்ற  தடம்  தெரிந்தது

ஓகோ  இந்த வழியில் தான்
போயிருக்கினை  என்ன துணிவு
அவனுக்கு  என்று  உள்ளே
பொங்கியபடி  கால் தடங்களை
நோக்கி பின்தொடர்ந்தார்கள்

பாதை  முடியுமிடத்தில்
முட்கள்  நிரம்பியிருந்து
ஒரு ஓரமாக  சற்று  கால்
பதிக்க  இடமிருந்தது

அங்கே  ஒருவர்  சென்ற
தடமே  தெரிந்தது
ஆகா  என்  பிரச்சினை
தீர்ந்தது  அவன்  என்னைவிட
நல்லா  வைச்சு  காப்பான்
என்ரை  மகளை  வாங்கோ
வீட்டை போவம்
 
இது ஒரு  சிந்தனைக்கான 
இயம்பல்  எவரையும்   நிந்தனைக்கு  உள்ளாக்குவது நோக்கன்று

விரதம்  இருந்தால் சமைக்க ஒரு சட்டி   மச்சம்  சமைக்க  ஒரு சட்டி  என்று  வைத்து  நம்மை  நாமே  ஏமாற்றுகின்றோம்  என்றே  எனக்கு  தோன்றுகின்றது.  வயிறு ஒன்றே அதற்குள்  எல்லாம்  போகின்றது
அதை  மாற்ற முடியவில்லையே . தண்ணீர்  எல்லாவற்றையும்  சுத்தமாக்கும் தன்மை கொண்டது  மச்சச் சட்டியை  சரியாக  கழுவினால்  சட்டி  துப்புரவடைகின்றது  நாம்  நீரில் குளித்து  சுத்தமாகுவதுபோல்  - குசேலர்  கிருஷ்ணரை  பார்க்க  அவலுடன் வந்த போது  கிருஷ்ணர்
ஆமைவடையை  இரசித்து  சுவைத்தாராம்  என்று  சுலோகத்தில்  இருக்கின்றதாக  பிரசங்கம் செய்யும்
 பெண்  சொல்ல  கேள்வியுற்றேன்  - கண்ணப்பர்  பன்றியின்  மாமிசத்தை இறைவனுக்கு  படைத்து   தனது பக்தியை  காட்டினார் என்பது சிறுவயதில் படித்தது  -  அர்ஜுனனை  கொல்லும்வரை 
மாமிசம்  புசியேன்  அரக்க நோன்பு கொள்வேன்  என்னால் இயன்றதை  கொடுப்பேன் என்று  கர்ணன்
மகாபாரதத்தில்  சபதமிடுகின்றான்  அங்ஙனமாயின்   கண்ணன்  வரும்  கதையில்  முக்கிய  பாத்திரங்களில்  ஒன்றான   கர்ணன்  மாமிசம்  உண்டிருக்கின்றான் என்பது புலனாகின்றதே .
கோயிலுக்கு  செல்கையில்  வெறுவயிற்றுடன்  சென்றால் வாய்வுத்  தொல்லை  ஏற்படாது  மற்றவர்களுக்கு  தொந்தரவு இருக்காது  என்பதே விரதமிருக்க  உண்டான  காரணங்களில் ஒன்று  உடல் நலத்துக்கும் விரதம் நன்று  மற்று  மரக்கறி சாப்பாட்டில் கடவுள் இருக்கிறார் என்று  நம்பமுடியவில்லை   வெள்ளியில்  மரக்கறி  கடவுள் நாள் என்று  அப்படியானால்  சனியில் ஞாயிறில்  மற்ற நாட்களில்  கடவுள் இல்லையா  அந்நாட்களில்  மட்டும்  மாமிசம்  புசிப்பதுவேன் என்று  சிந்திக்கவேண்டும்.   உணவுக்கும்  ஆன்மீகத்துக்கும்  தொடர்பு இருப்பதாக தெரியவில்லை  இஸ்லாமியர்கள்  நோன்பு  முடிந்ததும்   மே மே ,  இம்பா , கொக்கொரோக்கோ  என்று  போட்டு தாக்குகின்றார்களே -  இது ஒரு  சிந்தனைக்கான 
இயம்பல்  எவரையும்   நிந்தனைக்கு  உள்ளாக்குவது நோக்கன்று அடியேன்  மிகுந்த இறைநம்பிக்கையுடையவன்  -  எல்லோரும் இனிதே  வாழ்க நலம் 

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன்வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்

மின்சாரம் பற்றி அகத்தியர் கண்டுபிடிப்பு
தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.
"சன்ஸ்தப்ய ம்...ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"
புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,
"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"
மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?
Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.
ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.
அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.
இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.
என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.
இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..
அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள்  தங்களுக்குள்
 ஒரு  முடிவை  முடிச்சு 
 வாழ்கின்றார்கள்
 போகுமிடமெல்லாம்
 அதை  காவிச்செல்கின்றார்கள்
 தங்கள்  முடிச்சில்
முடியப்பட்டவரை
 கண்டதும் முடிச்சு
 அவிழ்கின்றது
ஏனோ தெரியவில்லை
சில இதயங்களுக்கு
இன்னும்  ஆதவன்  அருள்
கிட்டவில்லை  அவை
இன்னும் இருட்டிலேதான்
கிடக்கின்றன
 சூரியன் வரும்வரை 
அங்கு ஞாயிறு உதிக்குமா
அவர்கள்  சிந்தனையில்
முடிவுகள்  மாற்றப்பட்டால்
வெளிச்சம்  வரலாம்
 

சனி, 11 அக்டோபர், 2014

நடிக வினோதன்

ஈழநாடு  கண்ட  ஒப்பாரும் மிக்காருமில்லா  கலைஞர்  பெருமக்கள்  பலர்,  அதில்  விரல்விட்டு
எண்ணும்  சிலரில்  அடங்கக்கூடியவர்  அன்பின்  வினோத நடிகன்  மரியாதைக்குரிய  பெரியவர்
யோகராசா ,  புத்தூரின்  எழிலைக்   கூட்டப்  பிறந்து பத்தூர் கண்ட  நடிப்புக்குன்று,  எல்லோருக்கும்  நாடி  நரம்புகளில் இரத்தமே  ஓடும்  இவருக்கு  இரத்தத்துடன்  நடிப்பும்  பாட்டும்   எழுத்தும் கலையும்  சேர்ந்து ஓடுகின்றது.  வெளிநாடுகளிலிருந்து  டென்மார்க்  வரும்  தமிழர்கள்  அவசியம்  சந்தித்து  மனம்  மகிழ வேண்டிய உன்னத  மனிதர்  ஐயா  யோகராசா -  இது கபட சிந்தனையின்றி எழுதும் எழுத்து  இதில் புளுகோ வேறு எதுவோ ஒன்றுமில்லை,  ஐயாவின்  திறமையை கண்டவர்கள்  அடியேன்  சொல்வதை ஏற்பார்கள்.  பேசும் போது  பணிவடக்கம் மேடையேறினால்  புலி  ஒன்று கூடினால்  இனிக்கும்  தத்துவமென அம்பின் வேகம் போல்  இருக்கும் அவரின் ஆளுமை,  அவரின்  பெயரை  உயர்த்த  கலையில்  கொடிகட்ட  அவரின் பிள்ளைகளும்  சாதிக்கின்றார்கள்  வள்ளுவன்  நடிப்பிலும்  இசை  கூட்டுவதிலும் சாதிக்க  இளங்கோ  பாடுவதில்  வளரும்   வானமாகின்றார்  இவர்கள்  எல்லோரும் தமிழுக்கு  கிடைத்த  பொக்கிசங்கள்   இவர்களை  இரசிக்க  எனக்குள்  இரசனை  தந்த தாயே உன்பாதம் போற்றி நன்றி சொல்கின்றேன் - அனைவரும் வாழ்க நலம்.  

வெள்ளி, 10 அக்டோபர், 2014

சினிமா  பார்க்கின்றோம் அதிலே புளுகும் பொய்யும் காட்டப்படுகின்றது
அதை இரசிக்கின்றோம் மகிழ்கின்றோம்  அதில் நடித்தவர்களை  பெரிய
ஆட்கள்  என்று  போற்றுகின்றோம்  கொண்டாடுகின்றோம் இரசிகர்  மன்றங்கள் வைத்து  அவர்களை முதலமைச்சர் ஆக்கும்  கனவுடன்  உழைக்கின்றோம்  அந்தப் பொய்யை கொண்டாடுகின்றோம்
நாம்  அல்ல  தமிழ் நாட்டு  இரசிகர்கள்  என  கொள்க . நாமும் நமது வாழ்வும் உண்மைபோல்
தெரிந்தாலும் அதுவும்  பொய்யே  ஒருநாள்  சாம்பல்தான்  மிஞ்சும்
அறிவில்  உச்சம் கண்ட காலம் என்கின்றோம்  ஆனால்  கொடுங் கொலைகள் கற்பழிப்புகள்
கொடிய  கழுத்தறுப்புக்  கொலைகள் நின்ற பாடில்லை   இன்றே  மனிதன்  சகல  வசதி
வாய்ப்புகள் இருந்தும்  சிந்தியாது  காட்டு மிராண்டியாக  நடக்கின்றான் என்றால் அன்று
சாதாரண  மனிதர்கள்  எப்படி  கொடுமைகள் செய்திருப்பார்கள்  அவர்களை  நல்வழிக்கு
கொண்டுவர  சொல்லப்பட்ட   கதைகளே  புராணங்கள்  இதிகாசங்கள்  அதிலே  இருக்கும்
படிப்பினையைத்தான்  எடுக்கவேண்டுமே தவிர  இராவணனுக்கு  பத்து தலையா  என்று கேட்கக்கூடாது  பத்து தலை என்றால்  பத்து மனிதர்களுக்கு  இருக்கும்  பலம்  உள்ளவன் என்றே
பொருள்   பூமியை சுருட்டினான் என்றால்  பூமியில் மனிதர்கள் வாழ முடியாது  செய்தான் 
என்றே  பொருள்  அதை  பாதளத்தில்  மறைத்தான் என்றால்  தான்  கெடுதல்களை  செய்ய
பணித்துவிட்டு  பாதாளத்தில்  மறைந்துகொண்டான்  (பங்கர்) என்று  எடுக்க வேண்டும்
அறிவுடையோர் ,  பன்றிவடிவில் மாறுவேடம் போட்டு சென்றார்  என்று  கொள்தல் வேண்டும்
படங்களில்  மாறுவேடத்தில் போய்  எம்ஜிஆர்  கள்ளர்களை  பிடிப்பதுபோல்  அடிமைப்பெண்ணில் 
மயில் போல்   நாய் போல்  மாறுவேடம்  போட்டு ஆடுவார்களே  அப்படி .     

  அதுபோல  சினிமா  இல்லாத  அந்த நாட்களில்  பொழுதுபோக்க  கட்டிய
ஒரு கதைப் பின்னலே  தீபாவளிக்கான  பொய்க்கதையும் - கொடியவன்  அழிந்து  மக்கள்
நிம்மதி  அடைந்தார்கள் என்ற  மகிழ்வுத்திருநாள்  - தமிழர்கள்
அசுரர்கள்  என்பது  உண்மையோ பொய்யோ  சரியாகத்தெரியாது
இராவணன்  பிராமணன்  அவன்  இந்தியாவின் நௌடா  நிலத்தை சேர்ந்தவன்
பிறகு இலங்கை வந்து குடியேறினான்  - கள்ளை  குடிக்கிறது  ஆட்டை மாட்டை
அடிச்சு  அதன் தலையை   மூளையை  குடலை தின்பது  இரத்தத்தை  சுண்டி  சாப்பிடுவது
நம்மவனை  எதிரிக்கு  காட்டிக்கொடுப்பது , உடலை  அழகாக பேணாது  பரட்டை தலையுடன்
அலைவது  பெரிய பற்களுடன்  சுத்துவது ஒழுங்காக சவரம் செய்வது கிடையாது  வாயால் இனிய வார்த்தை பேசுவதில்லை   தூசிப்பது  கோள்  மூட்டுவது   களவாக  மாற்றான்  மனைவியை  கவர நினைப்பது  களவும் பொய்யுமா  பேசுவது  பொறாமைப் படுவது  மாற்றான்  பொருள்களுக்கு 
ஆசைப்படுவது  நான்தான்  பெரியாள்  எனக்குத்தான்  எல்லாம் தெரியுமென்று  இறுமாப்புக் கொள்வது
காசிருந்தா மற்றவரை  அடிமையாக்குவது  அதிகாரம் செய்வது காசு கொடுத்து  கொலை செய்விப்பது 
பெரிய தொந்தியுடன்  அரக்கி அரக்கி  நடப்பது   குழுவாக  சேர்ந்து  சொந்த இனத்தவனை  அடிப்பது வெட்டுவது குத்துவது சுடுவது   என்று  கழிசறை  வேலை செய்பவர்கள்  அதிகமாக  இருப்பது  தமிழர்களுக்குள்  இப்படி  நடப்பவர்களை  மற்றவன் அரக்கன் என்று சொல்வதில் தவறென்ன  எங்கள்  ஆளாக  மகுடா சூரன்  இருந்தாலும் பிழை விட்டால் பிழையே , தமிழ்க் கடவுள் முருகனே  சூரனை  வதைத்தார்  காரணம் தவறு செய்ததால் என்பது  கந்த புராணக் கதை  அதன்வழி  பார்த்தால்  தமிழன்  பிழை செய்தால் தமிழனே  தண்டிப்பான் -  பிராமணர்கள்  தமிழர்களுக்கு  தலையில்  மிளகாய்  தடவி ஏமாற்றி சடங்குகள் செய்வது தப்பு  அதை  வரவேற்கவில்லை  ஆனால்  எனக்கு மீறிய ஒரு  தாங்கும்  சக்தியுண்டு என்பதை  உணர்கின்றேன்  அதை   கடவுள் என்கின்றார்கள்  அந்த சொல் பிடிக்கவில்லை என்றால்   பூ என்று  சொல்லுங்கள் இல்லை  வேறு ஏதாவது  சொல்லுங்கள் - கடவுள் இல்லை என்று
பெரிய  கதை பேசி கிண்டல் செய்தவர்கள்  பெரிய பெரிய  சிந்தனையாளர்கள் எல்லோரும் இறுதியில்
வாழ்வில்  தாழ்வு வர  போக்கிடமின்றி  கடவுளை  வணங்கினார்கள்  காவியம்  படைத்தார்கள்
கண்ணதாசன்  ,  பெரியார்தாசன்  ,  சிலர்  களவாக  சாமி கும்பிட்டுவிட்டு மேடையில் கடவுள் இல்லை
என்று  பேசினார்கள், கடவுளை சாட்டி  வியாபாரம்  செய்பவர்களை  வெறுக்கின்றேன்  - அன்பு வாழ்க 
காற்றுப்படாத  பக்கங்களில் 
எழும் உணர்வுகள்  சில சமயம் 
தீட்டுப்படுகின்றன  தீட்டாததால் 
வந்த தீட்டு  என  திட்டும் விழும் 


நாள் ஞாயிறு  கண்ட  பொழுதில் 
மலரும் மலர்கள்  நாள்  திங்கள் 
காண்பதற்குள்  ஞொள்கல் ஆவோம் 
என வாடாது  மகிழ்கின்றனவே


ஒரு மாலைக்குள்  மடிவது  அறியாதவை 
ஒரு மாலையில்  மணக்கின்றனவே 
அவற்றிலும் வண்ணமும்  வர்ணமுமுண்டு
ஆனாலும்  பக்கத்தில்  உரசியபடி  சிரிக்கின்றன

ரோஜா மல்லிகை  கனகாம்பரம்  செவ்வந்தி என 
சாதிகள்  பல ஆனால்  யாரும்  எதையும் 
ஒதுக்காது விருப்புடன்   முகர்கின்றார்கள் 
வசம் செய்யும் வாசம்  எல்லோர்க்குமுண்டு

யாருமேலே  கீறினாலும்  இரத்தம்  ஒன்றுதான் 
ஆக மொத்தம் நீயும் நானும்  பத்து மாசந்தான் 
தேசமெல்லாம்  நேசத்தோடு சேர்ந்து வாழுது 
தமிழ்த் தேசம் மட்டும் ஒன்று கூட மாட்டேனெங்குது  
ம.இரமேசு