வண்டுகளின் இரைச்சலில்
மலர்கள் வாடுவதில்லை
அறிவில் ஞானத்தில்
அம் மலர்கள் மலர்கையில்
சில் வண்டுகள் வஞ்சகப் பார்வை
அவை சிந்திக்க தலைப்படா
சிறு கோழிகள் போல் கொத்தும்
இருள் கவ்வும் நெஞ்சுகள்
வெளிச்சங் காணா வெளியே வரா
பேதங் கொண்ட நாகங்கள்
வண்டுகளின் இரைச்சலில்
மலர்கள் வாடுவதில்லை
பித்தளைக்கு தங்க முலாம்
காசு கட்டுகளே கோழிகளின் தீனி
அறிவில் ஏற ஏணி இல்லாத கோணிகள்
வண்டுகளின் இரைச்சலில்
மலர்கள் வாடுவதில்லை
மழைக்கும் வெயிலுக்கும் காற்றுக்கும்
இடிக்கும் மின்னலுக்கும் எதற்கும்
ஓடுகள் இளகுவதில்லை
ஒளிவீசும் சூரியனை
எந்த மாசும் அசுத்தம் செய்யா
ம.இரமேசு
மலர்கள் வாடுவதில்லை
அறிவில் ஞானத்தில்
அம் மலர்கள் மலர்கையில்
சில் வண்டுகள் வஞ்சகப் பார்வை
அவை சிந்திக்க தலைப்படா
சிறு கோழிகள் போல் கொத்தும்
இருள் கவ்வும் நெஞ்சுகள்
வெளிச்சங் காணா வெளியே வரா
பேதங் கொண்ட நாகங்கள்
வண்டுகளின் இரைச்சலில்
மலர்கள் வாடுவதில்லை
பித்தளைக்கு தங்க முலாம்
காசு கட்டுகளே கோழிகளின் தீனி
அறிவில் ஏற ஏணி இல்லாத கோணிகள்
வண்டுகளின் இரைச்சலில்
மலர்கள் வாடுவதில்லை
மழைக்கும் வெயிலுக்கும் காற்றுக்கும்
இடிக்கும் மின்னலுக்கும் எதற்கும்
ஓடுகள் இளகுவதில்லை
ஒளிவீசும் சூரியனை
எந்த மாசும் அசுத்தம் செய்யா
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக