செவ்வாய், 30 செப்டம்பர், 2014

கூலிக்குக்  கொலை  செய்வோர்  கூட்டம்  தமிழ்நாட்டில்  அதிகரிக்க   அளவுக்கு அதிகமாகப்  பணம்  வைத்திருக்கும்  ஆட்களே  காரணம்.  நாற்காலியில்   இருந்தபடி   கட்டுப்பாடுக்கருவியால் தொலைக்காட்சி நிகச்சியினை  மாற்றுவதுபோல்  வீட்டில் இருந்தபடி  தனக்கு   வேண்டப்படாரை
போட்டுத்தள்ளும்    இழிசெயலுக்கு  கோடிக்கணக்கில் பணம் இருப்பதே காரணம்.   வர்த்தகர்கள்
அரசியலாளர்கள்  உச்ச நடிகர்கள்  போன்றோரிடம்  அளவுக்கு மீறிய  பணக்கட்டுக்கள்   தேவையின்றிக் கிடக்கின்றது.   உறவுகளின் உயிர்காக்க   ஒரு  ஆயிரம்   பத்தாயிரத்துக்கு  மக்கள்  பெரும்  பாடுபடுகின்றார்கள்  ஆனால்  அவர்களை ஏமாற்றிப்   பிழைக்கும்  உச்சங்கள்   ஆயிரம் இரண்டாயிரம்  கோடிகளை   சர்வசாதாரணமாகச் சம்பாதித்து  வைத்திருக்கின்றார்கள்.   நாளெல்லாம்  வெயிலுக்குள் நின்று  கடின  உழைப்பை நல்கும்  தொழிலாளிக்கு,  கழிவறை  சுத்தம் செய்யும்  இன்றியமையாச்  சேவை புரிவோருக்கு  சம்பளம்   90  - 200 ரூபா  வரையே,   தாகத்துக்கு  ஒரு  குளிர்பானம்  வாங்கிக்குடிக்க   அவர்களுக்குப் போதிய   சம்பளம் இல்லை.  உழைத்து வாழுங்கள்  திருடக்கூடாது  என்று  மேடைகளில் அறிவுரை சொல்லும்   உச்சங்கள்   கொள்ளையடித்து  கையூட்டு வாங்கி  வளமுடன்  வாழ்கின்றார்கள்.   உழைப்பவன்  ஒழுக்கு  விழும் குடிலுக்குள்  அரைவயிற்றுடன்  வாடிப்  புரள்கின்றான்.


 ஊழல்  செய்த  முதலை  பிடிபட்டவுடன்   முதலைக்காய்  உயிரைத்துறக்கின்றாரே !
அப்படியென்றால்  கையூட்டு வாங்கி  ஊழல் செய்து  வாழ்வது  தர்மமா  அதை  ஏற்கின்றீர்களா?  அவர்கள்  உச்சம்  என்றால்  அதர்மம் செய்யலாம்  அப்படித்தானே ?  படிப்பறிவற்ற  மக்களின் 
மடைமையை   தங்களுக்குச்  சாதகமாகப்  பயன்படுத்தி  அவர்களைப்  பேச்சாலும் நடிப்பாலும்  மயக்கி
ஏய்த்துப் பழரசம்  பருகுவதைக்  கண்டும்  அறிவிலியாக  இருக்கின்றதே ஒரு கூட்டம்.  மிகுந்த  பரிதாபத்துக்குரியவர்கள்,  நாம் நல்லவர் உத்தமர்  என்று  நம்பியதற்கு  எம்மை   ஏமாற்றி விட்டாரே  என்று  கோபம் கொள்ள வேண்டியதை விடுத்து  அவருக்காக  மக்களின்   சொத்துக்களைத்   தீமூட்டி  வன்முறையில்  இறங்கும்  இழிநிலையில்  அறிவற்ற  கூட்டம் -  கர்மவீரர்  அறிஞர்  பெரியார்
போன்ற  மா  மனிதர்களுக்கு  அவர்களின்  பெயருக்குக்   களங்கம் பிறந்தால்  கொதிப்பதில் அர்த்தமுண்டுவிடுத்து,  சட்டம்  சகல  விசாரணைகளையும்  முடித்து    கொள்ளையிட்டார்  குற்றவாளி  என்று  தீர்ப்பளித்தவருக்காக  தீக்கிரையாவதும்   திணறிச்சாவதும்  தீதை  நன்றெனப்  போற்றும் அறியாமை.  
  
அக்கினித்தேவன்   கேள்வி 
கண்ணகி  பதில்


நீல  நிறத்துத்  திரிசெக்கர்  வார்சடைப் பால்புரை  வெள்ளெயிற்றுப்  பார்ப்பனக் கோலத்து
மாலை  எரியங்கி  வானவன்  தான்தோன்றி , மாபத்தினி நின்னை  மாணப்பிழைத்தநாள்
பாயெரி  இந்தப்  பதியூட்ட பண்டேயோர்  ஏவலுடையேனால்  யார்பிழைப்பார்  இங்கு ?

பார்ப்பார்  அறவோர்  பசு பத்தினிப்பெண்டிர்   மூத்தோர் குழவி யெனுவிவரைக் கைவிட்டு
தீத்திறத்தார்  பக்கம் சேர்கென்றே  காய்த்திய  பொற்றொடி  ஏவப்  புகையழல்  மண்டிற்றே .  
ஊழல்  செய்தவர்களை உள்ளே   தள்ளுவேன்  என்று   தேர்தலின்போது  மோடி  சொன்னார்,  முதலாம்படி  கட்டிவிட்டார்  இன்னும் பல படிகள்  கட்டுவார் -  அடுத்து  திமுக  தலைகள் வெகுசீக்கிரம்  தயாராகலாம்  ஆசைப்பட்டதுகளைச்   சாப்பிட்டுவிட்டு  அனுபவித்துவிட்டு , உள்ளே  சுயசரிதை எழுத  காகிதம்  எழுதுகருவியுடன்   தயாராகலாம் -  வாழ்க அண்ணா  நாமம். 
அன்பு மிக்க  முகநூல்  நண்பர்களே  !   இன்று  எனது முகநூல் நண்பரான   ஜெகா  கிளியுடன்  ஸ்கைப்பில்  கதைத்தேன்   போரினால் அவர்  கால்கள்  இழந்து  சக்கர  நாற்காலியில்  அமர்ந்தபடி  கதைத்தார்  தனது  துணைவியாரையும்  அறிமுகப்படுத்தினார்  சிரித்தபடி  இனிதாகப் பேசினார்
அவருக்கு என்னால்  முடிந்த  சிறிய  தொகையை  உதவுவதாகச்   சொல்லியுள்ளேன்   நீங்களும்
அவருடன்  பேசி  உதவி  செய்ய  விரும்பினால்   இந்த  ஸ்கைப்புக்கு  தொடர்பை  ஏற்படுத்துங்கள்

srisgantharasa.jegatheesan   -    அவரின்  வங்கி விபரம்    -
Name- J.Chithra ,Account Number, 206020012539 HNB, Bank, Vavuniya.
 
தொலைபேசி இல -
0773286074
 
முகவரி -srisgantharasa.jegatheesan  
சிவபுரம் நெளுக்குளம் வவுனியா
 
இந்தச் சேவையூடாக  இலகுவாக  குறைந்த கட்டணத்தில்  பணம்  அனுப்பலாம் 
 
அன்புடன்  - ம. இரமேசு .

திங்கள், 29 செப்டம்பர், 2014

கண்களின் சிறுகாம்பு  கண்களைக்காக்கும்
உந்தன்  எண்ணப்பெருநெருப்பு  உன்னையழிக்கும்

கண்களின்  சிறிய இமைகள் உன்னைக் காக்கும் 
உனக்குள் இருக்கும்  ஆணவம் திமிர்  துவேசம்
நான்  எங்கே  அவன்  எங்கே  என்ற  நினைப்பின்
வெறி,  யாவும் நெருப்பாகி  உன்னையே அழிக்கும்
ஆதலால்  எல்லோரிடத்தும்  அன்பு செய்  பவ்வியமாக
நடந்துகொள்  மாற்றாரை  குறைந்தவராகக் கருதி
எள்ளி  நகைத்து  ஏளனஞ் செய்யாதே,   செய்யின்
அடுத்த பகல்  நீ  இன்னொருவரால்  காயப்படுவாய் .

ம.இரமேசு 
அன்பு நண்பர்  பத்மநாதன்  -  அது  பிரம்மகத்தி  அது ஒரு தோசம்   அதாவது  அந்தணர் குலத்தவரை  கொலை செய்தவர்களுக்கு பிடிக்கும்  தோஷம்  - அதையே  பேச்சு வழக்கில்  பிரம்மசத்தி  என்று வீடுகளில்  சொல்லிப் பேசுவார்கள்  கூடாத தோஷம் பிடிச்சவனே பிடிச்சவளே  பிடிச்சதே
ஆடு மாடு   நாய்  பூனை போன்றவை க்கும்  சமயத்தில் அப்படிச்  சொல்லி  பேச்சு விழுவதுண்டு
காயப்போட்ட துணியை  ஆடோ மாடோ  கடித்து விட்டால்  அப்படிச்  சொல்லி பேசுவார்கள்
இனி  புராணச் செய்தி  அறியுங்கள்  -- 
குருசேத்திரத்தில்  கர்ணன்

அர்ஜுனனனுக்கு  நேராக  அம்பைவைத்து   குறிபார்க்கின்றான்  கர்ணன் 
மறுபக்கம்   அர்ஜுனன்  எனது  சொந்தங்களுடன்  எப்படிக் கண்ணா
யுத்தம் செய்வேன்   என்னை  ஆளாக்கிய  பெரியோர்கள்  முன்னால்
நிற்கின்றார்களே   இதென்ன  விளையாட்டு  என்னால்  முடியாது
என்கின்றான்  கண்ணனின்  உபதேசம் (அறிவுரை) தொடங்குகிறது
ஆனால்  கர்ணனுக்கு  நன்றாகத் தெரியும்  அர்ஜுனனும்  மற்றவர்களும்
தனது  சகோதரர்கள் என்று  ஆனால்  தனது  நன்றிக் கடனுக்காக
அவன்  யுத்தம் செய்ய  வீறுகொள்கின்றான்  சற்றும்  சிந்திக்கவில்லை
எனது சொந்தங்கள் என்று  ஆக  கண்ணனின்  உபதேசத்தை  சரியாகக்
கருத்தில்  கொண்டிருந்தான்  கர்ணன்  .

 
அன்றும் நிறையவே  பனி பொழிந்திருந்தது  புதிதாக வாங்கிய  வீட்டின் முன் அமைந்திருந்த  நடைபாதையை பனி முட்டியிருந்தது  சீனித்தம்பி  பனியள்ளியை எடுத்துக்கொண்டு  போய் பனியை  அள்ளி மறுகரையில் போட்டு நடைபாதையை  சரிசெய்து கொண்டிருக்கையில்  அந்தக் கார்  மெதுவாக ஊர்ந்துவந்து  சீனியிடம்  நெருங்கி நிறுத்தப்பட்டது  யன்னலை
தாழ்த்தி,  ஐயா  இந்த  அட்ரஸ்  எங்கே இருக்கின்றது  என்று  முன்பின் தெரியாத  அந்த மனிதர்  கேட்டார் 

சீனி சொன்னபடி  கார்  புறப்பட்டது  சிறிது நேரத்தில்  ஒரு பெரிய கடையின் 
நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு  கடைக்குள் நுழைந்த  குமாருக்கு  அதிர்ச்சி  
ஓராண்டுக்கு  முன்னர்  ஓடிய  தன்  மகள்  அங்கு  கடமையில் இருந்தார்
ஒன்றுமே செய்ய முடியவில்லை மனதில் ஆத்திரம்  பொங்கினாலும்  பல
ஆண்டுகள்  வெள்ளையர்களுடன் பழகியதால்  படித்துக்கொண்ட நாகரிகம்
பொறுமை காக்கச் செய்தது  திரும்பிப்போய்  காரில் உட்கார்ந்து  அழுதார்  குமார்  என்ற குமாரவேல்



மாலா  குமாரின் மகள்  பவிலிருந்து 150  கிலோ மீற்றர்  தள்ளியிருக்கும்
சிறிய நகரத்தில் தகப்பனுடன்  வசித்து வந்த பெண்  படிக்கும் காலத்தில்
அதே நகரில்  வாழ்ந்த  பையனுடன்  காதல் கொண்டு  பின்  அது தந்தைக்கு தெரியவர  அவர் கண்டிக்க  மனமுடைந்துவிட்டு  தற்கொலைக்கு முயன்று
தெய்வாதீனமாகக்  காப்பாற்றப்பட்டு  நலமடைந்து   வீடு திரும்பி
சிலகாலம் இருந்துவிட்டு  காதலனுடன்  சேர்ந்து ஓடிவிட்டாள்  

இதையறிந்த குமார்  மிகவும் வேதனையடைந்தார்  தனுசின்  தந்தை  மயில்வாகனம்   குமாரிடம்  சண்டைக்குப்போனார் எனது மகனை மயக்கி
உனது மகள்  கொண்டோடிவிட்டாள் என்று  இதையே குமாரும் மாற்றி 
மயிலுக்கு சொல்லி  சண்டை பிடித்தார்  இருவரும் வாய்த்தர்க்கம் முற்றி
அடிபட்டார்கள்  காயமடைந்த மயில்  வீடுசென்று தனக்குத் தெரிந்த ஆட்களை
தயார் செய்து ஒருநாள் இரவு  குமார் வீட்டுக்கு சென்று  குமாருக்கு  அடியும் போட்டு விட்டார்

புனிதாவும்  பிள்ளைகளும் கனடாவிலிருந்து   குமாரிடம்  உலாவந்தார்கள்
குமாரின் இரண்டாவது புதல்விக்கு  பூப்புனித நீராட்டு விழா   நடைபெறவிருந்தது   புனிதாவுக்கு  குமார்  சித்தப்பா முறை  புனிதாவின்
கணவர்  சற்று சுகயீனம்  காரணமாதலால்  வரமுடியவில்லை  அவர்  கனடாவிலேயே  இருந்தார்

மகளின்  செயல்  ஆத்திரம் தந்தாலும் குமாருக்கு  பாசம்  ஒருபக்கம்  இருந்தது
மன்னிக்கும் நிலையில் இருந்தார்  குமார்  வீட்டுக்கு  அழைத்துவந்து
மகளையும் மருமகனையும்  வாழவைக்கவேண்டுமென  உள்ளுக்குள் 
எண்ணமிருந்தது குமாருக்கு  தன்னுடன்  வேலை செய்யும் நண்பர் ஒருவர் 
ஒரு விழாவுக்காக  ப  சென்றபோது  அங்கு  மாலா இருப்பதாகக்  கொடுத்த தகவலின் பேரிலேயே  குமார்  அன்று  மகளைத்  தேடிச்சென்றிருந்தார்
மாலாவும் தனுசும்  பவில்  ஒரு  டேனிஷ்  குடும்பம்  வாடகைக்கு விட்ட
வீட்டில்  வாழ்ந்துவந்தார்கள  தனுஸ்  ஒரு உணவுவிடுதியில்  வேலைபார்த்துக்கொண்டிருந்தார்  

அந்த முகவரிக்கான  தொலைபேசி இலக்கத்தை  எடுத்து  தொடர்புகொண்டார்
அங்கே  அந்த டெனிஸ் குடும்பத்துப்பெண்  தொலைபேசியை  எடுத்து
உரையாடினார்  மாலாவுடன் பேசவேண்டும் என்று  குமார்  கேட்டார்
இது  மாலாவுக்கு சொல்லப்பட  குமார்  மகளிடம்  பேசினார் 
பிள்ளை அப்பா எல்லாத்தையும் மறந்திட்டன்  நீங்கள்  மீனாவின்ர  பூப்புனித நீராட்டு  விழாவுக்கு  வரவேணுமென்றார்  மிகவும்  மகிழ்ந்த மாலா  ஆகட்டுமென்றார்  குமார்  மிகவும் மகிழ்ந்தார் 

மாலா தனுசிடம்  ஒரு மாலைப்பொழுதில்  நடந்தவற்றைக்கூறினார்
தனுஸ்  - நீ போறதெண்டா போவிட்டு வா  நான்  வரேல்லை  என்றார் தனுஸ்
தர்க்கம்  அதிகரித்தது  தனுஷ்  ஜாக்கட்டை  மாட்டிக்கொண்டு வெளியில் 
வெளியேறி  ஒரு  மதுச்சாலைக்குள் சென்றார்  பின் வீடுதிரும்பி 
உறங்கினார்  அடுத்தநாளும் எழுந்து  மாலா  தர்கித்தார்   தனுஸ்  தீர்க்கமாகச்  சொல்லிவிட்டார் நான்  வரமாட்டேன்  என்று

மாலா தனியாச் சென்று  விழாவில்  கலந்து கொண்டார்  எல்லோரும்  குதூகலித்தனர்  விழா முடிந்து  2ஆம்  நாள்  ஒரு தொலைபேசி
கனடாவிலிருந்து  வந்தது  மிஸ்டர்  பரா  காலமாகிவிட்டார்  புனிதா
குளறினார்  கண்டா செல்வதற்கான  அலுவல்களை  குமார்  செய்தார்

மாலா  விழாவுக்கு வந்து சென்றதை  தனுசின்  தந்தையறிந்தார்
அவர்கள்   ப வில்  இருப்பதையும் அறிந்து தனது  அடியாட்களுடன்
சென்று தனுசின் வீட்டை  அடைந்தனர் அவர்களின்  ஆர்ப்பாட்டப்
பேச்சை  அறிந்த  டெனிஸ் வீட்டுக்காரப் பெண்  போலீசுக்கு
தகவல் கொடுக்க  போலீஸ் வந்து  அவர்களின்  விபரங்களை
பெற்றுவிட்டு  அவர்களை  விரட்டியது தப்பினோம்டா சாமியென்று
அவர்க்ள்
  ஓடினார்கள்


 

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

பெண்கள்   நாட்டின்  கண்கள்  என்று சொல்வது  மரபு  அதைப்   பெருமையுடன்  ஏற்பார்கள்  பெண்கள்   அதில்  அனைவருக்கும்  மகிழ்வே  -  நவநாகரிக  மோகம்  பிடித்து  பூவையும்  பொட்டையும்  சுருக்கும்  மாதரை  நினைக்கையில்  ஒரு  தமிழ் மகனுக்கு எழுந்த  வேதனையின்
குரல்  இக் கவிதை  அதற்காக  அவரை ஆணாதிக்கவாதி என்பது  பொருளாகாது, எங்கள்  வழக்கில்   ஆண்களைக்  காட்டிலும்  பெண்களே  நாட்டின்  கலாசார  பண்பாடு அடங்கிய மூல ஸ்திரத்தை  கட்டிக்காக்கின்றார்கள். தொழில் நிமித்தம் பல  இடங்களுக்கு  ஆண்  சென்றுவருவான்  நெடுங்கலாம்  தங்கியும் வருவான்  அந்நிலையில்  பெண்ணே  மண்ணிலிருந்து  அனைத்தையும்  கட்டிக்காத்து  ஒழுக்கமுடன்  வாழ்ந்து குடும்ப  மேன்மை கெடாது  கட்டிக்காக்கின்றாள்  அதன்வழி  ஆணைக்காட்டிலும்  பெண்ணே  கலாசார  விழுமியங்களை  சரியாது  காப்பதில் முன்நிற்கின்றாள்  ஆண்  சென்ற  இடத்தில்  தவறை  செய்துவிட்டு  தண்டனை  பெற்றுவிட்டு திரும்பலாம்  யாரும் அதுபற்றி  பெரிதாகக் குத்துவதில்லை .

அதுவே  பெண்  சறுக்கிவிட்டால்  குடும்பமானம்  முதலில்  சந்தி சிரிக்கும்  பிள்ளைகள்  நண்பர்களால்  ஒதுக்கப்படுவார்கள்   மனமுடைவார்கள் அவமானம் தாங்கமுடியாமல்  இருந்த  ஊரைவிட்டு  வேறு இடம் ஓடுவார்கள் - உறவினர்களின்   நல்லது கெட்டதுகளில்  அப்பெண்  கலந்துகொள்ள முடியாது  போகின்றது கலந்தாலும்  மற்றைய  குடும்பத்துப் பெண்கள்  பேசுவதற்கு  முன்வரார்கள்  அப்பெண்ணை  ஒதுக்குவார்கள்   இது நமது யாழ் மண்ணின்  புழுதியோடு  ஒட்டிய  வழக்கம்  இதையே  மேலோட்டமாகச்   சங்கூதிக் காட்டியிருக்கின்றார்  நாவு.  ஒரு  ஆண் அல்லது பெண்   நல்லவராக  வர  தாயின் அறிவூட்டலும் அன்புமே  அதிமுக்கியமாகின்றது இதைப் பல முன்னோடிகள்  சொல்லியிருப்பது அனைவரும் அறிந்ததே  - "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்  சான்றோன்  எனக்கேட்ட  தாய்  "  எனது  மகன்  பண்புள்ள  சான்றவன்  ஆகிவிட்டால்  அவனால் பெண்களுக்கோ  மற்று  எவருக்கோ   எதுவித இன்னலும்   வராது  என்பதே  அர்த்தம் . இங்கு சபலம் நிறைத்த சான்றோர்  விதிவிலக்கு அவர்களைச்   சான்றோர் என்ற  கணக்கில் அடக்குதலுமன்று . இது ஏன்  பெண்ணுக்கு  மட்டும்   என்றால்   பெண்ணே  ஆணைக்காட்டிலும்
புனிதமிக்கவள்  மென்மையானவள் கலவியால்  உயிரை  சுமக்கும்  தன்மை வாய்ந்தவள்  அதனால்  அவள்  ஆணைக்காட்டிலும்  மேன்மையாக    நடக்க வேண்டியவள் ஆகின்றாள்
நமது பண்பாட்டில்  கலாசாரத்தில். புருஷன்  எங்கு சென்றாலும்  ஒழுக்கம் கெடாது  வாழ்ந்துவரும்
பெண்கள்  நிறையவே  நாட்டிலுண்டு ஒரு சிலர்  நடை  மாறியதை  வைத்து  மொத்தமாகக்
குறிப்பிடமுடியாது - எத்தனையோ  நாடுகள்  கலாசாரங்கள்  இருப்பினும்  இந்தியப் பண்பாடும்
கலாசாரமுமே  பலராலும் பாராட்டப்பட்டு   முதன்மை பெறுகிறது  அப்படியிருக்கையில்
போற்றப்படும்  கலாசாரத்தை  பெண் விடுதலை என்று  பிதற்றி  அழிக்கலாமா ?
எனது  மகள்  அவள் விரும்பியபடி நடக்கட்டும்  சுதந்திரமுண்டு  அவள்  அந்தச்   சுதந்திரத்தை
தப்பான  விடயங்களுக்கு  பயன்படுத்தாமல்   நல்ல விடயங்களுக்கு  பயன் படுத்தலே 
நல்ல  விளைவினைத்தரும்  தறிகெட்டு  நெறிகெட்டு  கூத்தாடுவதற்கல்ல  சுதந்திரம்
பெண்விடுதலை  அடைந்துவிட்டதாகக்  கூறும்  ஐரோப்பிய  அமெரிக்க  நாடுகளில்
பெண்களுக்கு  நடக்கும்  கொடுமைகள்  என்னவென்று  அந்நாடுகளில்  வெளிவரும் 
பத்திரிகைகளை  வாசிப்பவர்களுக்கே  புரியும்.
சிந்திக்க சிந்திக்க  மனிதன்  பணிவும்  பக்குவவும்  பெறுகின்றான் 
அதனால்  சாதாரனமானவர்களிலிருந்து  சற்று  ஒதுங்குகின்றான் 
இது  சாதா  ஆட்களுக்கு   கர்வம்  பிடித்தவன்  என்னும்  நினைப்பை
விதைக்கிறது   சாதாக்களின்  சட்டங்களுடன்  பயணிக்க  முடியாத
சிந்தனையாளன்   சாதாக்களின்  பார்வையில் பயித்தியக்காரன்
காரணம் உண்மையின்  வீரியம் உணராத  குறுகலுக்குள்  அவர்கள்
ஓடுகின்றார்கள்,  தகடுகளே  அவர்களின்  வாழ்வு  அதை  மீறி
சிந்திக்க  அவர்களுக்கு நேரமுமில்லை  பொறுமையுமில்லை.
 
ஒரு படைப்பாளி  வரைந்த   (படைப்பு ) மயில்  < விமர்சகர்   பார்வையில்   அதன் தோகை  அழகாக இருக்கும்  இல்லை   கால்கள்  மட்டும்   விமர்சனம்  பெறலாம்   சிலருக்கு  கண்கள்  பெரிதாகத்தோன்றும்  படைத்தவனுக்கே  மொத்தமும்  புரியும்  இதை  யானைக்கு  ஒப்பிட்டே சொல்வதுண்டு   சற்று  மாறுதலுக்காக  மயிலென்கிறேன் -   உடன்பாடில்லாத  கருத்து  என்ற போதும் மறுப்பை  நாகரிகமாகப்   பணிவுடன் பண்புடன்  தெரிவிப்பவரே   கற்றவர் என்ற சொல்லுக்கு தகுதியானவர்  அநாகரிமாக  விமர்சிப்பவர்  அநாகரிகமானவரே - எழுதும்போது  நாகரிகமான  சொற்களை பயன்படுத்தல் வேண்டும் இல்லை  எழுதாமல்  இருப்பதே  நல்லது


அன்று பெரும்பான்மை  யாழ் வாசிகளை  ஆட்டிப்படைத்த நடிகன்  சிவாஜிகணேசன்,  தூங்கும்  நேரம் போக  மிகுதி  நேரத்தில்  அவரின்  அழகுமுகம்  காவித்திரின்தோரே  அதிகம்,  உடலுழைப்பை 
நல்கியோரே  எம்ஜிஆர்  இரசிகர்கள்  என  எழுதாத  கருத்து  நிலவியது   -   பெற்றோருடன்
 சென்று ஒரு  நாளும் எம் ஜி ஆர்  படம் பார்த்ததில்லை  ஒரு முறை சிறிய வயதில்  மாமாவும்
அவரின் நண்பரும்  லிடோவில்  ஓடிய சந்திரோதயம்  படத்துக்கு  அழைத்துச்  சென்றார்கள்  ஆனால்  அவர்கள்  சிவாஜியின்  தீவிர இரசிகர்கள்  முதல்நாள்  முதற்காட்சி  தரிசிக்கும்  இரசிகர்கள்   ஏன்தான்  என்னை  அப்படத்துக்கு  அழைத்துச்சென்றார்களோ அறியேன்   ஆனால்  முதல் முதல்  எம்ஜிஆரின் 
அழகு முகம்  கண்டு பரவசமானேன்  என்பது  உண்மை  பின்  16 வயதில்  பக்கத்தூரில்  தொலைக்காட்சியில்   காட்டப்பட்ட    பாசம்   படத்தைப்   பார்த்ததிலிருந்து   அவரின் கேள்விகளும் நியாயங்களும்  ஆழமாக  நெஞ்சிற் பதிய  தீவிர  எம் ஜி ஆர்  இரசிகனானேன்   ஆயினும்  சிவாஜியின்
நடிப்பையும் போற்றுபவன் .

இது சாதா  எழுத்தாளர்களுக்கு  மட்டுமில்லை , உலகம்  கொண்டாடும்  பாரதியாரே  எழுதியபடி  இருந்ததில்லை   பெண்விடுதலை சுதந்திரம்  பற்றி அவர்போல் யாராவது எழுதியிருப்பார்களா  என்று
தெரியவில்லை  ஆனால் அவர்வீட்டில்   மனைவி மகளை  எப்படி  நடத்தினார்  என்பதையறிந்தால்
வியப்புண்டாகும்.   ஆக   எழுதுபவர்கள்  எந்நேரமும்  சொல்லியபடி அனைத்து  விடயங்களிலும்
தங்களை  இட்டுநிரப்புவார்கள்  என்று  எதிர்பார்த்தல்   ஏமாற்றம்  தரும்.  கருத்தை  மட்டும் கொள்வோம்,   மூலம் நோக்காதே  என்கின்றார்கள்  மூதாதையர் (நதி மூலம்  ரிசி மூலம்)  நல்லாயிருக்கா  பருகு  போயிட்டேயிரு  எங்கு அவர்  அது  எப்படி  என்று  கேள்வி கேட்டால் குமட்டல்  வரும்.   உணவுவிடுதியில்   உண்டாயா சுவையாக  இருந்ததா  கையைக்  கழுவு  காசைக்கொடு வெளியேறு  நிம்மதி   விடுத்து  எப்படி  ஆக்கியவர்கள்  நிலை  என்று  குசினியை  எட்டிப்பார்த்தால் அவர்கள்  நிற்கும் கோலம்  அசைவுகள்  அருவருப்பை உண்டாக்கலாம்  உண்டது  மேலும் கீழும் சுழரலாம் - அடிநோக்கின் குடி கெடும் .

 

 ஆழியின்  பேரலையிலும்  நீண்டது   பேரழகியின்  காந்தக்கண்ணிலும்  கவர்ச்சியிலும்  ஈர்ப்புமிக்கது ,  உலக  இன்பத்தின் உச்சி  பூமியில் சூதாட்டம்.  இதற்கு மிஞ்சிய   ஒரு  களியாட்டம்  கிடையாது  இதற்கு மிஞ்சி  வாழ்வில்  துன்பமும்  கிடையாது.   சொத்துக்கள் யாவற்றையும்  இழக்க வைக்கும்  சொத்தில்லாதவனை  குபேரனுமாக்கும் ,   அவமானம்  உண்டாக்கும்   பொய் சொல்ல வைக்கும்  திருடவும் வழிவகுக்கும்  அத்தனை  இழிவுக்கும்   காரணமாக்கும்,  ஒரு  கொடிய  கூத்து அதை நாடினால்  அதிலிருந்து  மீள்வது  மிக மிக  கடினம் .

வேண்டற்க வென்றிடினும் சூதினை  வென்றதுவும் 
தூண்டிற்பொன்  மீன்விழுங்கி யற்று   ( 931 குறள் )

சிறுமைபல  செய்து சீரழிக்கும் சூதின் 
வறுமை தருவதொன்று இல்   ( 934 )

ம.இரமேசு
 

சனி, 27 செப்டம்பர், 2014

 தனது  உணர்வின்  எண்ணத்தை  மாற்றத்தெரியாதது   மிருகம் 
மாற்றிக்கொள்ள  முடியும்  என்ற  நிலை  மனிதர்களுக்குண்டு
ஆனாலும்  பலர்  மிருகத்தின் சாயலாகவே  இருக்கிறார்கள்
உணர்வுக்கு  பலியாகி  அடுத்தவரை  காயப்படுத்துகின்றார்கள்
அல்லது  காயம்படுகின்றார்கள்   சிந்திப்பதில்  சிறுமை  .

வியாழன், 25 செப்டம்பர், 2014

முருகன் பாமாலை


தமிழ்க்குமரன்  கரம்பிடித்தே  நடந்திட வேண்டும்
வாழ்வில்  அவனன்றி  நமக்கு யார்துணை  சொல்லு
சரவணபவனே உமையவள் திருமகனே  ஆ  ஆ ஆ 
வேலெடுத்துத்  தமிழ்க்குலம்  காத்த நம்  கனிமுருகா

மணிமுடி கொண்டோரும்  பணிந்த  எம்  அப்பன்
பாரினில்  ஒருவன்  அவனே  நம் தமிழ்த் தலைவன்
சேரிடும்  பொருள்யாவும்  செல்வன்  திருவருளே
கூறிடு எந்நாளும்  நம் குமரன்  திருப்பெயரை 

சிந்தையில்  நிறைந்த எம்  சிவ மைந்தா 
நம் சீவியம் உன்னாலே   சிறக்கும் கந்தா 
விந்தையெலாம்  செய்த வீர வடிவேலா 
கொடுங்கோலரை அழித்தே குறைதீர்ப்பாய்

ம.இரமேசு 
இதுதான்  எங்கள்  வாழ்க்கை


அந்தப்பனையிலும்  ஒரு  அழகான  குடும்பம் 
உணர்வுடன்  குதூகலித்து  வாழந்துவந்தது
மழைக்கும்  காற்றுக்கும்  வெப்பத்துக்கும்
இடிக்கும் மின்னலுக்கும்  அந்த  ஐந்தறிவான்
வீடு  அசையாமற் கம்பீரத்துடன்  நின்றது
இப்படியான  ஒரு தருணம்  அப்பனை
தறிக்கப்பட்டது  அந்தப்பறவை தன்
தத்தும்  குஞ்சுகளுடன்  பக்கத்து
வளவில்  நின்ற  மாமரத்துக்கு
அடைக்கலம்  தேடிப் பறந்தது
கூடற்ற அப் பறவை  கிளைகளில்
குஞ்சுகளை  இருத்திவிட்டு   புதிய வீடுகட்ட
பொறுக்கி வந்த   குச்சிகளினால்
புது வீடு  கட்டத் தொடங்கியது
சில  பறவைகள்  எதிர்த்தன
குஞ்சுகளை  கொத்தித் தாக்கின
ஆனாலும் அந்தத்  தாய்  போராடி
விரட்டி  வென்றது  கூடும் கட்டியது
அதிகாலையில்  எழுந்து  பக்கத்துக்
குளத்தில்  நீராடி  குஞ்சுகளுடன்
கூட்டுக்கு வந்தது - குஞ்சுகள்
வேலைக்குச்  செல்லும் அம்மாவிடம்
அதுவேண்டும் இதுவேண்டுமென
கோரிக்கை வைத்தன  தங்கள்
மழலைக்குரலால்  ஆகட்டும் 
என்று  சொல்லியது  தாய்
இந்த  உரையாடல்   கீழ் வீட்டில்
வசித்த  ரவிக்கு  இனிமையாகவிருந்தது
அவன் தம்பி  குமாருக்கோ   தூங்குவதற்கு
இடையூறாகவிருந்தது  அவன்  எழுந்து
தன்  கவணையெடுத்து  கூட்டுக்குத் 
தாக்கத்  தொடங்கினான்  கற்கள்
குண்டுமழையாகப் பொழிந்தது
குஞ்சுகள்  பயந்து நடுங்கின 
குமாருக்கோ  தன்  வீரம்  கண்டு  உள்ளத்தில்
கொண்டாட்டம்   குஞ்சுகளுக்கோ
திண்டாட்டமாயிருந்தது 
இரைதேடி மீண்ட தாய்ப்பறவை 
மீண்டும்  தன்  கூட்டுக்கு  வந்த
ஆபத்தைக்கண்டு  வருந்தியது
பெரும் சிரமப்பட்டு  அந்தக் 
கல்மாரிக்குள்ளிருந்து குஞ்சுகளைக்
காப்பாற்றியணைத்தபடி  மீண்டும்
ஒரு  புதிய கூட்டைக்   கட்ட  அடுத்த  வளவில்
நின்ற புளியமரத்துக்குப்   பறந்தது  

ம.இரமேசு

 

புதன், 24 செப்டம்பர், 2014


 இது  தற்பெருமைக்கோ   தம்பட்டத்துக்கோ  எழுதவில்லை  சரஸ்வதியை
நினைத்தால்  நினைவுக்கு  வரும்  நினைவு  அவ்வளவே .

  சரஸ்வதி  பூசைக்காலத்தே   நடந்த நிகழ்வு  -  எங்கள் வீட்டுக்கு  ஊடாகச்  சென்றே  எனது  மச்சான்  முறையானவர்  நடத்திய  டியூசன்  சென்டரில்  தெற்குப்பக்கம்  இருந்துவரும்  என்னுடன்
படித்த மாணவ மாணவிகள்  படிக்கச்   செல்ல வேண்டும்.   நான்  படிக்கச்   செல்வதில்லை  அந்த
நாலரை   ஐந்துமணிப்  பொழுதில்  குளிருங்காலத்தில்  என்னால்  அது  முடியவில்லை
அத்துடன்  டியூசன்  செல்லவும்  பிடிக்கவில்லை -  எனது தாயார்   அவர்கள்  படிக்கச்  செல்வதைப் 
பார்த்துவிட்டு   என்னை  மெலிதாகத்  திட்டுவார் -  பார்   இஞ்சையும்   ஒண்டு  படிக்கிறது
இருக்கு  எழும்பிப் போகுதே   நல்லா  போத்துக்கொண்டு படுக்குதென்று -  சோதனையும் 
வந்தது  பரீட்சை  முடிவுகளும்   வந்தது   டியூசன்  சென்ற  அந்த  8 பெரும்  பெயில்  நான்
பாஸ் பண்ணியிருந்தேன்   அவர்கள்  சரஸ்வதிக்கு  விரதமுமிருந்தார்கள்   நான்  அதையும்
செய்யவில்லை  அனால்  சரஸ்வதி  என்னை  சித்தியடைய  வைத்துவிட்டார்  அடியேன்
மிகுந்த  இறைநம்பிக்கை  உடையவன்  ஆனால்  விரதமிருப்பதில்லை   சடங்குகளில்
நாட்டமில்லாதவன்  இது  தற்பெருமைக்கோ   தம்பட்டத்துக்கோ  எழுதவில்லை  சரஸ்வதியை
நினைத்தால்  நினைவுக்கு  வரும்  நினைவு  அவ்வளவே .
நம்பினால்  நடராசா  இல்லை  எமராசா

ஒரு  ஊரிலே  ஒரு  வசதி படைத்த  சிவபக்தர்  இருந்தார்  அவருக்கு  நிதமும்  கீரை  சாப்பிடவேண்டும்
அதற்காகப்   பக்கத்தூரில்  இருக்கும்   கீரை விற்கும் பெண்ணிடம்  கீரை கொண்டுவந்து தருமாறு
கேட்டுக்கொண்டார்     அப்பெண்ணும்  அதற்கு  ஒப்புக்கொண்டார்   நிதமும்  ஒரு  வாய்க்காலைத் 
தாண்டியே  அப்பெண்  கீரை கொண்டு வந்து  கொடுப்பது வழமை    ஒரு நாள்  அப்பெண்  தாமதமாக
வந்தாள்   அதனால்   சிவபக்தர்  ஆத்திரமடைந்தார்   ஏன்  தாமதமெனக்   கடிந்துகொண்டார். 
சாமி  நான்  என்ன  செய்வேன்   வாய்க்காலில்  இன்று  நீரோட்டம்  பெருகிவிட்டது   அது  தாழ்ந்ததன்
பின்னரே  நடந்து வர முடிந்தது  அதனாலேயே  தாமதமாகிவிட்டது  என்றார்  அக்கீரைக்காரப்பெண்
அதை  நம்ப  மறுத்த  சாமி   வா   வந்து காட்டு  வாய்க்காலில்   வெள்ளம் பெருக்கெடுக்கின்றதாவென்றார் ,   சாமி   நான்  வருகையில்   வற்றிவிட்டது  தற்போது  நிலைமை  தெரியவில்லை  என்றார் அப்பெண்.
சாமியோ  நம்ப மறுத்து   அப்பெண்ணை  அழைத்துக்கொண்டு  வாய்க்காலுக்குச்  சென்றார்   சாமிக்கும்
வாய்க்காலைத்   தாண்டிச்  சென்று  கீரை விற்கும்  பெண்வாழும்  ஊரில்  சில  காரியங்கள்  ஆற்றவேண்டியிருப்பதைச்  சொன்னார்   இப்பொழுது  வாய்க்காலில்  வெள்ளப் பெருக்கம்  அதிகரித்துக் கொண்டிருந்தது  இருவரும் கரையில்  நின்றார்கள்   சாமி சொன்னார்   நாளை  இதுபோல்  அக்கரையில் 
வெள்ளமானால்  நீ  சிவ சிவ  என்று உச்சரித்தபடி  கண்களை   மூடிக்கொண்டு  நட  நீரோட்டம்  நின்று  உனக்கு  வழிவிடுமென்றார்   சாமி  சொன்னதுதான்  உடனே  அப்பெண்  கண்களை மூடி  சிவ சிவ
என்று  உச்சரித்தபடி  அக்கரைக்கு  சென்றுவிட்டார்  வெள்ளம்  ஓடிக்கொண்டேயிருந்தது  அப்பெண்ணை  அடித்துச் செல்லவில்லை அவர்  கரையேறிவிட்டார்  - அங்கிருந்து  கூவினார்  அப்பெண் <<<<   சாமி   நான்  கரையேறிவிட்டேன்   நீங்கள் ??  நல்லது  நான்  நாளைவருகின்றேன்  என்று  சமாளித்தபடி  சாமியார்  கீரைசாப்பிட வீடு திரும்பினார்  .
 

நீ போறியோ  இல்லை  நான்  போகட்டோ

நம்  உடலுக்குள்  இருந்து  நோய்கள்  கதைக்கலாம்
யார்  முதலில்    (எந்த நோய் ) தாக்குவதென்று .

எப்பொழுதும்  எதையும் தாங்க  மனதைப் பக்குவம்
செய்ய வேண்டும் .

உடல்  எடுத்தால்  அதற்கு நோய்கள் வரும் விபத்து உண்டாகும்
எதுவும்  நடக்கலாம் , கலங்கி  அழுவதால்  பயனில்லை
எதையும் ஏற்கப் பழகினால்  நிம்மதி  உண்டாகும் .

நல்வழியில் அனுபவித்து  வாழ்ந்தவர்களுக்கு  பக்குவம்  ஏற்படும்
நாலுபேருக்கு  உதவி வாழ்பவர்களுக்கு நெஞ்சில்  நோவு வராது
வந்தாலும் நிலைக்காது .

அதுவில்லை  இதுவில்லை  என்று  ஏங்கித் தவிப்பவர்களுக்கு
என்றும் நிம்மதியில்லை

நிறைந்த செல்வமிருந்தும்  அனுபவியாது  உதவி கேட்போருக்கு
கொடுத்து  வாழதவரும்   பிச்சையெடுக்கும்  ஏழைக்கு  சமமே 

கொடுப்பதுவும் துய்ப்பதுவும்  இல்லார்க்கு ;அடுக்கிய
கோடி  உண்டாயினும்  இல்.     (குறள் -1005)



  .
மண்ணிலே  மயக்கும் 
உயிரைப் படைத்தே 
அதன் கண்ணிலே 
காந்தம்  வைத்திட்டான் 

என்னிலும் உன்னிலும் 
இரும்பைச்   சொருகி 
அந்த  நெருப்பினில் 
உருகச் செய்தான்

விண்ணிலும்  மண்ணிலும் 
பற்றுக்குப்  பிரிவானோம் 
என்பவரும்,  கன்னிப் 
பெண்ணிலே  பற்றுவைத்தார் 
பாரின் பழிக்கும்  ஆளானார்

இந்திரனும்  கொஞ்சிநான் 
நித்தியும்  கொஞ்சினான் 
கேலியும்  பழியும் கொண்டார் 
கதைகள்  பல பல 





எவராலும்  தணிக்கமுடியா 
நெருப்பாறு  ஓடிக்கொண்டே 
இருக்கின்றது  அதை 
வாய்க்கால் வெட்டி 
நல்லபடி  நர்த்துவதே 
அறிவு  இல்லை 
எல்லாம்  பொசுங்கிவிடும்

ம.இரமேசு

 

நமக்குத் தமிழ் நல்ல மொழி

September 16, 2014
மக்களின் பேச்சுத் தமிழை, ‘நல்ல தமிழ்’ வாதத்தைக் கூறிப் புறக்கணித்துவிடக் கூடாது.
தமிழ் மொழிக்கு அடைமொழிகள் தந்து பாராட்டுவது புலவர்களின் மரபு. மொழிக்கு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் மற்றவற்றுக்கும் அடை கொடுப்பது தமிழ்க் கலாச்சாரத்தின் ஓர் அம்சம் என்றுகூடச் சொல்லலாம். நல்ல என்ற சொல் தமிழுக்கு உள்ள பழமையான அடைகளில் ஒன்று. ‘நற்றமிழ்’ என்னும் வழக்கைப் புறநானூற்றில் காண்கிறோம். தமிழ் நல்ல மொழி என்பது இதன் பொருள். இந்த வழக்கு மற்ற மொழிகள் கெட்ட மொழிகள் என்று சொல்ல வரவில்லை. நமக்கு நம் பிள்ளை நல்ல பிள்ளை என்பது போல, நமக்குத் தமிழ் நல்ல மொழி என்கிறது.
நல்ல என்ற சொல்லின் பொருள்
நல்ல என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உண்டு. அந்தப் பொருள்கள் தமிழரின் கலாச்சாரப் பார்வையிலிருந்து பிறப்பவை. ‘என் மகனுக்கு நல்ல பெண்ணாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்’ என்று ஒரு தாய் சொல்லும்போது சிவந்த நிறமுடைய, அடங்கிப் போகும் பெண்ணையே குறிக்கிறாள். ‘நல்ல வேலை’ வருமானம் அதிகமுள்ள வேலையைக் குறிக்கிறது; சேவை செய்யும் வேலையை அல்ல. நல்ல என்னும் பெயரடை ‘நன்மை தரும்’ என்னும் பொருளில் புறநானூற்றில் ( பாடல் 50) வருவதாகக் கொள்ளலாம். அரசின் முரசு கட்டிலில் களைப்பால் உறங்கிய மோசிகீரனார் என்னும் புலவர், தன்னை வாளால் வெட்டாமல் சாமரத்தால் விசிறிய அரசனின் செயலைத் தமிழால் தான் பெற்ற நன்மை என்று பொருள்படும்படி ‘நற்றமிழ்’ என்கிறார். நன்மை என்ற சொல்லின் வேர்ச்சொல் ‘நல்’தானே. ‘இதிலிருந்து ஒரு நல்ல பாடம் படித்துக்கொண்டேன்’ என்று சொல்லும் போது ‘நன்மை தரும் பாடம்’என்றுதானே பொருள்.
நல்ல தமிழின் புதிய பொருள்
‘தமிழால் என்ன நன்மை’ என்று பலர் கேட்கும் இக்காலத்தில், நல்ல தமிழ் என்ற சொல்லுக்கு இந்தப் பொருள் இல்லை! சுத்தானந்த பாரதியின் ‘நல்ல தமிழ் எழுதுவது எப்படி?’ (1964/1943), அ.கி. பரந்தாமனாரின் ‘நல்ல தமிழ் எழுத வேண்டுமா?’ (2012/1945),
அ.மு. பரமசிவானந்தத்தின் ‘நல்ல தமிழ்’(1961), ரம்போலா மாஸ்கரனேஸ், வை. தட்சிணாமூர்த்தியின் ‘நல்ல தமிழ் எழுதுங்கள்’(2005), சீனி நைனாமுகமதுவின் ‘நல்ல தமிழ் இலக்கணம்’(2013) என்ற நூல்களின் தலைப்பில் உள்ள ‘நல்ல தமிழு’க்கு மேற்சொன்ன பொருள் இல்லை. இங்கு இந்தச் சொல்லின் பொருள் ‘இலக்கண விதிப்படி எழுதும் தமிழ்’என்பது. பல வகைத் தமிழில் இதுவே நல்ல தமிழ்; மற்றவை குறைத் தமிழ் என்னும் கருத்தை உள்ளடக்கியது.
இலக்கணமின்றி எந்த மொழியும் இயங்க முடியாது. மொழிகளின் இலக்கணம் வேறுபடலாம்; ஆனால், இலக்கணம் இல்லாத மொழி இல்லை, இலக்கணமற்ற ராகம் இல்லாததைப் போல. பேச்சுத் தமிழுக்கும் இலக் கணம் உண்டு; வட்டாரத் தமிழுக்கும் இலக்கணம் உண்டு. நல்ல தமிழ் இலக்கண விதிப்படி எழுதும் தமிழ் எனும்போது அது தமிழின் பழைய இலக்கணத்தின்படி எழுதும் தமிழைக் குறிக்கிறது. பழைய இலக்கணம் தொல்காப்பியர், இல்லையென்றால் பவணந்தி எழுதிய இலக்கண நூல்களில் உள்ள விதிகளைக் குறிக்கிறது. மொழியில் புதியன புகுவதைக் கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதால், ஒரு சில புதிய விதிகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
நல்ல தமிழும் தூய தமிழும்
நல்ல தமிழும் தூய தமிழும் மொழிக் கருத்தாக்க அடிப்படையில் ஒன்றென்றாலும், மொழிக் கூறுகளில் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னது, சந்தி தொடங்கி தமிழின் இலக்கண அமைப்பையும் பின்னது, சொல்லின் மூலத்தையும் முன்னிலைப்படுத்தும். ஆனால், ஒன்று மற்றொன்றை விலக்காது. இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று சொல்லலாம். இரண்டும் தோன்றத் தூண்டுகோலான சமூகக் காரணி களிலும் வேறுபாடு உண்டு.
தூய தமிழ்வாதம் சுதந்திரம் பெறவிருந்த இந்தியாவில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி உட்படத் தனியிடம் தேடியும், தமிழகத்தில் பிராமணர் அல்லாத உயர் சாதியினரின் அரசியல் எழுச்சியை நிலைநாட்டியும் எழுந்தது. நல்ல தமிழ்வாதம் சுதந்திர இந்தியா தமிழின் பயன்பாட்டுக்குத் தந்த கல்வி மொழி, ஆட்சி மொழி போன்ற புதிய வாய்ப்புகளை எதிர்கொள்ளும் நோக்கிலும், எழுத்துத் தமிழில் (முக்கியமாக நவீன இலக்கியத்திலும் இதழ்களிலும்) பேச்சுத் தமிழ் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் எழுந்தது. எழுதும் தமிழ்ப் புலவர்கள் கையிலிருந்து நழுவித் தமிழை நவீனப் பள்ளிகளில் கற்றுப் புதிய துறைகளில் எழுதப் புகுந்தவர்களின் கைக்கு வந்ததன் எதிர்வினையாக நல்ல தமிழ் முன்னிறுத்தப்பட்டது. சாதாரண மனிதனின் தமிழில் புலவர்களுக்கு நம்பிக்கை இல்லை. மொழிப் பயன்பாட்டில் ஏற்பட்ட சமூக மாற்றத்தை அ.மு. பரமசிவானந்தம் தன் நூலின் முன்னுரையில் தெளிவாகவே சொல்கிறார். நல்ல தமிழ் வாதத்தின் சமூகப் பின்னணி, நவீன காலத் தமிழின் தேவை நிறைவுசெய்யும்போது பழமையிலிருந்து விலகாமல் இருந்தாலே தமிழுக்குப் பாதுகாப்பு என்று புலவர்களை எண்ணவைத்தது. இவர்கள் தமிழ்க் காவலே தமிழ்க் காதல் என்னும் கருத்தாக்கத்தைப் போற்றி வளர்த்தார்கள். காவல் என்றால் கால்கட்டு வரும்; ஓட்டம் தடைப்படும் என்பது ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படவில்லை.
கருத்துப் பரிமாற்றத் திறன்
இந்தப் பார்வையால் தமிழின் கருத்துப் பரிமாற்றத் திறன் பின்னுக்குத் தள்ளப்பட்டது. கட்டுரை எழுதும் போது அது மேலே சொன்ன பொருளில் நல்ல தமிழில் இருக்கிறதா என்பதே, அது சொல்ல வந்த கருத்தைச் சரியாக, துல்லியமாகச் சொல்கிறதா என்பதைவிட முக்கியமாகிறது, பிற துறை வல்லுநர்களை அவர்களுடைய புதிய அறிவைத் தமிழில் எழுதத் தயக்கம் காட்டவைக்கிறது. தமிழில் பல நடைகள் தோன்றுவதற்கு முட்டுக்கட்டை போடுகிறது.
நல்ல ஆங்கிலம் என்று சொல்லும்போது, அது இலக்கண விதிகளைப் பின்பற்றும் ஆங்கிலம்தான். ஆனால், இந்த விதிகள் பழைய ஆங்கிலத்தின் இலக்கண விதிகள் அல்ல. அவை தரப்படுத்தப்பட்ட, இன்றைய பேச்சில் வழங்கும் ஆங்கிலத்தின் விதிகள். அதற்கு மேலாக, கருத்தைச் சொல்லும் திறனும் அழகும் நல்ல ஆங்கிலம் என்ற சொல்லில் உள்ள நல்ல என்ற அடையில் அடங்கும். இந்தத் திறன் பழைய இலக்கண அறிவு அல்ல; இந்த அழகு ஒப்பனை செய்யும் அலங் காரம் அல்ல.
இக்காலத் தேவைக்கான தமிழ்
நல்ல தமிழுக்கு இன்று புதிய விளக்கம் தேவை. இது இலக்கணத்திலும் சொல்லிலும் புதிய தமிழ்; காலத்தின் புதிய தேவைகளை, அனுபவத்தை, அறிவை இயல்பாக வெளிப்படுத்தும் தமிழ். இது கருத்துப் பரிமாற்றத் திறனுக்கு முதன்மை தரும் தமிழ். புதுக் கவிதைக்குப் புதிய யாப்புடைய தமிழே பொருத்தம் என்றால், புது உரைநடைக்கும் பாட நூல்களுக்கும் புதிய இலக்கணத் தமிழே பொருத்தமானது ஆகும். வட்டத் துளைக்குள் சதுரக் கோலைச் சொருகுவது பொருந்தாத வேலை. துளைக்கேற்பக் கோலைச் செதுக்குவதைத் தவிர்க்க முடியாது. இன்றைய தேவைக்காக இப்படிச் செதுக்கிய தமிழே நல்ல தமிழ்.
 
 
 
வழுக்கையாறே  வழுக்கையாறே
வளைந்தோடும்  வடிவான வழுக்கையாறே
யாழ்மண்ணில்  யமுனையாக  ஓடுகின்ற ஓராறே
 யாழ்ப்பாணத்தின்  ஒரேயொரு தனியாறே
வண்ண வயல்கள்  ஊடே   ஊரு மாறே
வாடைக்காற்றை முகர்ந்தோடு மாறே
அராலி மண்ணை  அழகாக்கும்  அன்பாறே
மண்ணின்  அழகைக்  கட்டியணைக்கும் நல்லாறே
இல்லை  இனிப்பஞ்சம்  நீயே தஞ்சம்

ம.இரமேசு

 
அவன் அருள் தந்ததே  அறிவு  அதை  சரியாகப்   பயன்படுத்து  துன்பம்  வராது. விடுத்து  நீ  ஆத்திர  உணர்வுக்கு ஆளாகி  அதனால்  அழிவதற்கு  ஆண்டவன்  என்ன செய்வான் , அவனை  நொந்து  வெந்து  ஏது பயன்.  தா தா  என்றே  நாளும்  கேட்கின்றாய்  நீ  பிறருக்கு  கொடுக்கின்றாயா ? அறிவை மட்டுமே  இறைவன் தருவான்  தந்துமிருக்கின்றான்   அதை  நினை,  அதுவே பெருஞ் செல்வம்  இல்லையேல்  நீ  அகிறினை .  மரியாதைக்குரிய  கவி  புதுவையார்மிசை  அடியேன்  மிகுந்த  பசை  கொண்டவன்  அவர் இசை  மதிப்பவன்  - எப்பொருள்  யார்  யார்  வாய்  கேட்பினும்  அப்பொருள்  மெய்ப்பொருள்  காண்பதறிவு .
நவராத்திரிக்கான  முதல்  இதழ்நாளாமின்று
அன்று  பாடசாலையில்  10 ஆம்  நாள்
விஜயதசமி  விழா  ஒலிபெருக்கி  கட்டி
வெகு விமர்சையாகக்  கொண்டாடப்பட்ட
நினைவுகள்  வந்து  மகிழ்த்துது  என்றாலும்
நெஞ்சில் சில நோக்களும்   முகிழ்க்கின்றது  
வீட்டில்  நவ தானியங்கள்  வைத்து அம்மா
அவல் சுண்டல்  வடை  பாயாசம்  பொங்கல்
என்று  நாக்குக்கு  மகிழ்வூட்டினார்கள்
இன்று  எனது  அடி நெஞ்சில்  ஒரு சோகம்
ஆதவன்  குத்துக்கு  அஞ்சாது  முதுகு
வளைத்து  வேகி வேகி  உழைத்த
பொன்னுத்தாய்க்கும்  பெரியசாமிக்கும்
பொங்கவும் உண்ணவும்  வெள்ளைச் சாமிகள்
நல்ல  சன்மானம் வழங்கியிருக்கக்கூடாதா
நாளெல்லாம்  கறுத்து  தங்களை வெளுத்தவர்களுக்கு .
அங்கும்  கறுத்தச் சிறுவர்கள்  இருந்திருப்பர்
ஊரின்  சுற்று  மதில் வீட்டில்  கிளிச்சிறைக்
குழந்தைகள்  கொண்டாடி  மகிழ்வதைப் 
பார்த்து  நெஞ்சம்  வெடித்திருப்பர் ,
உள்ளுக்குள்  தேம்பியபடி அந்தக்
கிழிந்த பாய்களை  ஈரமாக்கியிருப்பர்
எவர் நினைத்தார் அந்தக் குடில்களுக்குள்ளும் 
இதயங்கள்  இருக்குமென
அணைக்க ஒரு அன்னை தெரேசா  இல்லாத
யாழ்ப்பாணம் - ஊரெங்கும் உயர்ந்த  சிரிப்பு
அது ஏழைக்குக்  கிட்டாத  கொப்பு .

ம.இரமேசு.
 

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

  உயிர்காப்பான் தோழன் .

அமுதகத்தில்  ஒரு வீட்டில்  -  அம்மா  நோயினால்  இறந்துவிட  தந்தையுடன்  5 வயதிலிருந்து  வளர்ந்தான்  அழகிய  தமிழன்  அவன்  வீட்டின்  ராஜமகன்  ஒரேஒரு  பிள்ளை
தந்தை  தன்னையே  அவன்மீது  வைத்தார்  பூக்கள்  மலர்வதை  அவர்  பார்த்ததில்லை  தன்
மகன்  விழி விழிக்கும்  நாளெல்லாம்  கண்டு  மகிழ்ந்தார்   கண்ணே  ராசா  கட்டிக்கரும்பே
என்று  நெஞ்சில்  வைத்து  பாராட்டி  போற்றி  மகிழ்ந்தார்  எல்லா  வசதிகளும்  கொண்ட
கோடீஸ்வர  வீட்டு  மகன்  ஒருநாள்  ஊரார்  பசிக்கின்றது  என்று  கதவைத் தட்ட  காளையவன்
கண்ணோடினான்  ஏழைகள்  பூவானார்கள்    - செல்லக் கிளி பள்ளியிலே  செவந்திப்பூ  தொட்டிலிலே
என்று  பாடி மகிழ்ந்தார்  திருவாளர் ராஜகுமாரன் ,  சொப்ஜியா   அந்த  வீட்டின்  சமையற்காரப்
பெண்   நண்பர்களுடன்   களித்துவிட்டு  நடுநிசி  தாண்டி வந்து  ராஜா  பாயாசம்  தா  என்றாலும்
25 நிமிடத்தில்   பாயாசம்  வைத்துக்கொடுக்கும்   இனிய  சமையலாளி   ராஜா   தன்  வீட்டில்
ஒவ்வொரு  உணவையும்   ஒவ்வொரு  தட்டில்  உண்பான்  சுத்தம்  அவன் உயிராகப் பேணும்
ஒன்று  ஒருநாள்   தன்  நண்பன்  பராவுடன்  உணவருந்திக்கொண்டிருக்கையில்  திடீரென 
பரா  பியைந்த  மா  அவன்  மடியில்  வீழ்ந்தது  அதை  சிரித்துக்கொண்டே  எடுத்துக்   கொடுக்க
 மிகுந்த அவமானமும் வெட்கமும்  அடைந்தபடி கையை  நீட்டினான்  பரா  
வாங்குவதற்கு   உடனே  ராஜா  பராவை  ஏமாற்றிவிட்டு   அவனது  எச்சில் மாவை  உண்டு மகிழ்ந்தான்
இதைப் பார்த்த  சொப்ஜி  திகைத்தாள் , நட்பில்  அசுத்தம்  பாராத  நெஞ்சம்  ராஜாவுக்கு
நாதன்  ராஜாவை  வைத்து  தான்  உயரக்   கங்கணம்  கட்டிய  நாகம்  ராஜாவை  தவறான
பாதைக்கு அழைத்துச் செல்ல  முயன்றான்   மதுவுக்கும் மாதுக்கும்  போதைக்கும்   அடிமையாக்கி
ராஜாவை  வளைத்து  பணம் கறப்பதே  நாதன்  நோக்கம்   இதை  பரா  கண்டுகொண்டு
ராஜாவிடம்  உண்மையை  எடுத்துக்கூறினான்   ராஜா  பாராவை  அடித்து  கலைத்துவிட்டு
நாதனின்  நஞ்சை மோகித்தான் -  செல்வபுரம்  சென்று  நாதனுடன்  ஒரு  பொதுமகள்
வீட்டுக்கு  சென்றான்  அவள்  விலைமகள்  குடும்பத்தில்  பிறந்த போதும்  இன்னும்
யாருடனும்  உடலைப்   பகிராத  பாவை  அவளின்  ஆட்டத்திலும்  பண்பிலும்
தன்னை  மறந்த  ராஜா  அவளை  மோகித்தான்,   இதையறிந்த  தந்தை 
ஆட்களை  வைத்து  ஆடகி சித்ராவையும்  குடும்பத்தையும்  கொலை செய்ய 
திட்டம்  போட்டார்  தன் மகனை  அழைத்துக்   கண்டித்தார்  ராஜாவோ  விடாப்பிடியாக
அவளையே மணப்பேன் என்று  இருந்தான்   மகன் மீதுள்ள பாசத்தால்   ராஜகுமாரன் 
சம்மதித்தார்   கல்யாணமான பின்  அவளை  மேலோகம்  அனுப்புதலே  அவரின்
திட்டம்  அதற்கான  வழிகள்  செய்து முடித்தார்  இங்கே  ஒரு  திரும்பல்
ராஜகுமாரன்  வீம ராஜாவின்  இளைய புதல்வன்  வீமாவுக்கு  7 பிள்ளைகள்
ஆனாலும்  தன்னை  இன்னும் இளமையானவன்  என்று  நிரூபிக்கப் பிறந்த கடைசிப் பிள்ளை
ராஜகுமாரன்  மீதே  அளவுகடந்த  பிரியமாகவிருந்தார் வீமா  ஒரு கட்டத்தில்  நாதனின்  தந்தையை
அவமதித்து  தண்டித்ததால்  வீமா  குடும்பத்தை  கருவறுக்கவேண்டும்  வேண்டும்  என்ற
எண்ணத்தில்  வளர்க்கப்பட்டவனே  நாதன்   சிலாவி  என்ற  இடத்துக்கு  வியாபார  நோக்கமாக
ராஜகுமாரன் சென்றிருந்த   வேளை   ஒரு  மாலையில்  மகிழ்வுக்கு  சென்ற  நடனவாலையில்
கிடைத்தவளே    மாதவி  அவளின்  அழகில் மயங்கி  உறங்கியவரே  ராஜகுமாரன் 
பின்  அவர்கள்  சேர்ந்து  வாழ்ந்து மகிழ்ந்து  அவள் நோயில் வெந்து  நொந்து  இறந்தது
சோகம்.  மாதவி  கோடீஸ்வரி  அவளின்  இறப்புக்கு  பின்  அவளின்  செல்வங்கள்  அனைத்தும்
ராஜகுமாரனுக்கே  சேர்ந்தது  காரணம்  அவள்  வீட்டின்  தனிப்புதல்வி

ராஜா  தந்தையின்  நரிவேடம்  கண்டுவிட்டான்  நாதன்  நாவாடி  நலமுரைத்தான் ராஜாவுக்கு  இதனால்
நாதனுக்கு  பெருஞ் செல்வம் கிட்டியது ராஜாவால் -  தந்தையிடம்  தன்  நெஞ்சம்  திறந்தான்
ராஜா  என்  மனைவிக்கு  ஒன்றென்றால்  நானும்  உயிர் திறப்பேன்  என்றான் ராஜா 
பிள்ளைமீது  உயிரையே  வைத்திருந்த  ராஜகுமாரன்  தன்  திட்டத்தைப்   பின் வாங்கினார் 
அவரின் மாறுதல்   அடியாட்களுக்கு  தெரியாததனால்  அவர்கள்  ஒருநாள் 
ராஜாவுடன்  காரில் சென்ற  அவன்  மனைவியை  சுட்டுவிட்டார்கள் 
அதில்  தப்பி சித்ரா  உயிர்பிழைத்தாள்   தந்தை  தன்னை  ஏமாற்றிவிட்டார்  என்ற ஆத்திரத்துடன்
அவரின்  இருப்பிடம்  சென்ற ராஜா  அவரிடம்  தற்கித்தான்  தனது  உண்மை  விடயங்களைச்
சொல்லித்   தவறுக்கு  வருந்தினார்  ராஜகுமாரன்  சமாதானம் அடைந்தான்  ராஜா 
எல்லோரும் சேர்ந்து  கோயிலுக்குபுறப்பட்டார்கள்  வழியில்  காரை  மடக்கி
நாதனின்  ஆட்கள்  கடத்துகின்றார்கள்     ஒரு தீவில்  வைத்து  ராஜகுமாரனின்  அனைத்துச்
சொத்துக்களையும்  எழுதித்தரவேண்டும்   என்று  கேட்கப்படுகின்றது  (நாதனின்  ஆட்களால் )
நாதன்  நல்லவன்  போலே நடித்துக்கொண்டே  இத்தனையும்  செய்கின்றான் 

நண்பன் ஜேம்ஸ்  மூலம்  பரா  இந்த அவலத்தை  அறிந்து  காவலர்கள்  உதவியை நாடி 
 தீவில்  வைக்கப்பட்ட அனைவரையும்  காப்பாற்றுகின்றான் - நாதன் கைதாகின்றான்
கொடியவனை  நம்பி  நல்லவனை  வெறுத்த  அறியாமை  நினைந்து
ராஜா  பாராவைப்  பார்த்து  தலைகுனிகின்றான்   பரா  கட்டிப்பிடித்து
உண்மை நட்புக்கு  சிகரம்  ஏற்றுகின்றான் , உயிர்காப்பான் தோழன் .

முற்றும் 

ம.இரமேசு
(கற்பனை )
உலகில் மனிதரால்  அடக்கமுடியாதவை  இரண்டு  ஒன்று  கோபம்  மற்றையது  காமம்   இதிலே  கோபத்தை ஒருவாறு  அடக்கலாம்  காமம்  எந்தப்  பயிற்சிக்கும்  அடங்க மறுக்கும்  சாமியார்  என்பவருக்கும்,  உறுப்பும் உணர்வுமுண்டு   அவர்  சொல்லும் நற்கருத்துக்களை  எடுக்கவேண்டுமே
தவிர  அவரின்  சொந்த விடயங்களை  கிளறக்கூடாது  நல்லதை  சொல்பவனுக்கு  காமம்  வரக்கூடாது
என்று  எதிர்பார்த்தல்  தவறு  அவர்  ஒரு பெண்ணை  வல்லுறவுக்கு  ஆட்படுத்தினால்  அவரை 
வெறுக்கலாம்  விரும்பி  வரும்  பெண்ணுடன்  மகிழ்வாக  இருந்தால்  அதில்  தப்பில்லை  என்பதே
எனது  நியாயம்  ஒழுக்கம்  என்பதும்  ஒரு எல்லைக்குள்ளேதான் அடங்கி நிற்கும்  மறைவான இடம்  கிடைக்கும்  போது எல்லைகளை  உடைக்கும்  எங்கள்  ஒழுக்கம்  எப்படி என்பது  எமக்கே  தெரியும்

அச்சமே கீழ்களது ஆசாரம் ; எச்சம்
அவாவுண்டேல்  உண்டாம்  சிறிது 

சுவர்களுக்குச்   சாவி நாக்கு  இருந்தால்  எல்லோர்  கள்ளப் பூட்டுக்களும்  திறக்கும்  உத்தம ரத்தினங்களும் ஒரு  நாடகக் கூட்டுக்குள்ளேயே - சமூக மரியாதைக்கு  வேண்டி  எல்லோரும்  நாடகம்  ஆடிக்கொண்டே  வாழ்கின்றோம் .


 

திங்கள், 22 செப்டம்பர், 2014

அவளைக் காண வந்தேன்
அவளோ  காற்றானாள்

தமிழைத் தேடிவந்தேன்
அது அமுதில் ஒளிந்ததுவே

பழமை  பேசிப்  பேசி
இளமை  கரைந்ததுவே

நிலைமை  இனி என்னாகும்
நிலைக்குமா  உயிர்

மீண்டும்  பிறப்பெடுப்பேன்
தமிழ் நதியில்  நீராட

அதுவன்றி  இன்பம் 
இங்கு ஏது

ம.இரமேசு

 

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

அன்பு  யோகண்ணா   உண்மைதான்   சிலவற்றை  நான் சொல்லாமல்  இருந்தால்  எனது  பக்கம் தெரியாமற் போய்விடும்  ஆதலினால்  மொழிகின்றேன்  -  காலம்  தரும்  சூழ்நிலைகள் ஆட்களின்  உண்மைச்  சொரூபத்தை  காட்டித்தருகிறது  ஒருவரை  17  ஆண்டுகள்   இறுக்கமாகப்  பழகியபின்  ஒரு  அற்ப  விடயத்தில்  கண்டேன்  நச்சு  அரவமென்று என்னுடன் பழகிய  காலத்தில்  அந்த உயிர்  வெளி நகரில் வாழ்ந்தது  பின்பு  நான் வசிக்கும் நகருக்கு வந்தபின்னர்  அவரின்  இல்லத்துக்கு சென்ற போது  ஒரு சில  வார்த்தைகளில்  நஞ்சைக்   கக்கியது  நான் எதுவித தர்க்கங்களுக்கும்  வன்முறைகளுக்கும் செல்வதில்லை  பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிவிடுவேன்  - பொது  இடங்களில் கண்டு  தலையசைத்தால்  நானும் மகிழ்வுடன் தலையசைப்பேன்  இன்று  அந்த  உயிர் தன்னை மாற்றியிருக்கலாம்  அதை வரவேற்கின்றேன் -  அன்புக்கும்  நட்புக்கும் உபசரிப்புக்கும் என்னை மறந்து  செலவு செய்யும் குணமுள்ளவன்  (இழிச்சவாயன்)  யாராவது சிரித்து இனிக்கப்  பேசிவிட்டால்  100 வீதம் உண்மை என்று நம்பி அந்நபரை  நெஞ்சில் வைத்துப்   பூசிப்பவன்  தலையில் தூக்கி வைப்பேன்  இப்படி  தலையில்  வைத்த சிலதுகள் காலில்  அணியவேண்டியவை என்று பின்னர் சந்தர்ப்ப சூழல்  காட்டிற்று சிந்தனை  சரியாக இருந்தாலே  உயர்திணை  இல்லை  அகிறினை  என்னை  நல்லபடி தங்கள்  களிப்புக்கு  பயன்படுத்தியுள்ளார்கள்  என்பதை இன்றே  உணர்கின்றேன்  இனியும்  என்னை ஏமாற்றல்  கடினம்  மரியாதைக்காகவே  அதீதமாக  நடந்தேன்   அதை  அவர்கள்  லூசு என்று  எடுத்துக்கொண்டார்கள்  நன்றி  மறந்தார்கள்  நஞ்சைக்   கக்கினார்கள்  வெளியார் மட்டுமில்லை உறவினர்களுக்குள்ளும்  நரிகளுண்டு  - இப்பொழுது  முகநூல் நட்பு  மட்டுமே பண்பானவர்களுடன்  வீட்டுக்கு  டெனிஸ்  நண்பர்கள் தவிர  வேறு  ஒருவரும்  வருவதில்லை  கண்ணதாசன்  தேடிய நிம்மதியுடன்  வாழ்கின்றேன்  ஒருவர் மீதும் பேதமில்லை  கோபமில்லை  நெஞ்சில்  அவ்வப்போது  நஞ்சுகள்  செய்த வஞ்சனை  சற்று  இடிக்கும்  அவ்வளவே எனக்கு  இரகசியம்  பிடிப்பதில்லை  எல்லாம் வெளிப்படை   இதை  இங்கு பல  நண்பர்கள் அறிய எழுதுவதில்  என்னிடம்  இருட்டு இல்லை  வெளிச்சமே - இதற்குமேல்  இந்த  ஏழை என்ன சொல்வது.
ஞாயிறு  அதிர்வு 



நாளை  என்ன  புதிதாக  நடக்கப்போகின்றது
என்று அறியாமல் அன்று தமிழகம்
 உறங்கிக்கொண்டிருந்தது
விடிந்ததும்  அந்த  அதிர்ச்சி  எல்லோருக்கும்
 பணக்காரர்கள்  பதறினார்கள் அழுதார்கள்
ஏழைகள்  சிரித்து மகிழ்ந்தார்கள்
 
நடு நிசி  12 மணி  சட்டம்  மாறியது
 இன்றுடன் காசில்லை
வங்கிகள்  எல்லாம் மூடப்படுகின்றது
காசுக்கு  0 பெறுமதி 
அவை  பொருட்காட்சியகத்துக்கு
இனிமேல்  அந்தக்கடுதாசிகள்
பார்வைப்பொருள்
தங்கம் மட்டும்  பெறுமதி
அதைக்  கொடுத்து
எதையும் வாங்கலாம்
கடை களில் ஆளுக்கு 15 கிலோ
அரிசி  இன்றிலிருந்து
மாதந்தோறும்  இலவசம்

ஒருவருக்கு ஒருவீடு மட்டுமே
வைத்திருக்க  உரிமையுண்டு
பல வீடுகள்  காணிகள்
இருப்பின்  அவை
  அரசுடமையாக்கப்பட்டு
மனை  இல்லாதவர்களுக்கு
வழங்கப்படும்

வேலை தேடுபவர்களுக்கு
கொட்டல்கள்  இலவசம் 


எரிபொருள்கள்  பாவிக்க முடியாது
அவசர சிகிச்சை வண்டி மட்டும்  ஓட்டலாம்
 மருந்துவமனைகளில் மட்டும் மின்சாரம்
பாவிக்கலாம்
திரையரங்குகள்  இனி  இல்லை 
அங்கே ஆடுகள்    மாடுகள்
கட்டலாம்  வீட்டுக்கு 
வேலையாள்  வைத்தல்  தடை

பெற்றோர் பேசி   கலியாணம் 
செய்யது வைக்க  முடியாது 
காதல் செய்தே
மணம் முடிக்கவேண்டும்
ஆணும் பெண்ணும் 
கண்டிப்பாக  திருமணத்துக்கு முன்பு
உடலை வைத்திய  பரிசோதனை செய்து
சான்றிதழ்  பெறவேண்டும்
அதை  அரசுக்கும் 
பெற்றோருக்கும்
காட்ட வேண்டும் 
பொய்யான  சான்றிதழ்
கொடுப்பவருக்கு 
சாட்டையடியும்
கடுந்தண்டனையுமுண்டு
கையூட்டு  வாங்குபவர்கள்
கொடுப்பவர்களுக்கும் அகிதே

மின்சாரம் தொழில்களுக்கு மட்டுமே
பாவிக்கலாம்
வீடுகளில்  எண்ணெய்  விளக்கே
மக்கள் போக்கு வரத்துக்கு
கால்நடைகளை மட்டுமே
 பயன்படுத்தலாம்
அநியாய விபத்து  மரணங்கள்
குறைவடையும்

கமல் ரஜனி  விஜய் அஜீத்
சிம்பு விக்ரம்  தனுஸ்  மற்ற
நடிகர்களெல்லாம்
மாட்டு வண்டிலில் சென்று
 கூத்து காட்டி
திருவிழாக்களில் நாடகமாடி
மக்கள்  கொடுக்கும்
அரிசி பருப்பு  உப்பு புளி
சக்கரையை சம்பளமாகப் பெறலாம்

நயன்தாரா திரிசா  சிரேயா
எல்லோரும் கரகம் ஆடி
உணவைப்   பெறலாம்  
முழங்காலுக்கு  மேலே
ஆடை   அணியும் பெண்களுக்கும்
ஆண்களை  சபலத்துக்கு 
உள்ளாக்கும் பெண்களுக்கும்
நடிகைகளுக்கும்
நடுச் சந்தியில்  வைத்து 10 கசையடி
தண்டனையாக்கப்பட்டுள்ளது
தமிழர்களுடன்  தமிழில்
பேசாதவர்களுக்கும்  அகிதே
எல்லா அந்நிய மொழிகளையும்
படிக்கலாம்

கற்பழிக்கும்  கொள்ளையடிக்கும்
கொலை செய்யும் குற்றவாளிகள்
  கொடிய மிருகங்கள் வாழும்
நடுக்காட்டில்  விடப்படுவர்

விவசாயிகள்  மீனவர்கள்  மற்றைய
தொழிலாளர்கள்  எல்லோருக்கும்
நாட்டில்  சிறந்த  மரியாதை 
செய்யப்படும்  அனைத்து
தொழிலாளர்களுக்கும் 
சீருடைகள்
பாதுகாப்பு  கவசங்கள்
கையுறைகள் சப்பாத்துக்கள்
  வழங்கப்படும்
அவற்றை அணிந்தே தொழிலில் ஈடுபடுதல் வேண்டும்
அணியாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள்
( சீருடைகளை  அணிந்து  சப்பாத்துக்களை
அணிந்து  தொழில் பார்க்கும் போதே
தொழிலாளிகளுக்கு  மதிப்பும் மரியாதையுமுண்டு )

டி வி  இல்லை  அதனால் தொடர்
நடிக நடிகையரும்  தேவயாணி  சீதா
ராதிகாவும் 
தெருக்கூத்தை  ஆடலாம்
உணவை உடையை  சம்பளமாகப்
பெறலாம்

தமிழைக்   கொலை செய்யும் ஊடகங்களுக்கு
கடுந்தண்டனை  விதிக்கப்படும்
வெளிநாடுகளுக்கு கப்பலிலேதான்
பயணம் செய்ய முடியும்
வானூர்திகள்  இல்லை 
ஆபத்துமில்லை

கடின  உழைப்பை 
மேற்கொள்பவர்களுக்கு
நாளும் 1 பானை கள்ளு
இலவசம் 
கள்  தவிர மற்று
அனைத்து மதுக்களுக்கும்  தடை

அரசியலாளர்கள்  4 மணி
அதிகாலையில்  எழுந்து
பொதுக்கழிவறைகளையும்
தெருக்களையும்  சுத்தம் செய்ய வேண்டும்
அவர்களுக்கும்  குடும்பத்தவர்களுக்கும்
உணவு  அரசால்  சமைத்து வழங்கப்படும்
அவர்கள் வீட்டில்  சமைக்கத் தடை விதிக்கப்படுகிறது
அரசு கட்டிக்கொடுக்கும்  இல்லத்திலேதான்
அரசியலாளர்கள்  வாழவேண்டும்
6 மாதங்களுக்கு ஒருமுறையே   கூட்டம்
நடத்தலாம்  அதுவும்  கடற்கரை வெளிகள் 
மைதானங்களில்  மட்டுமே  நடத்த அனுமதி 
போக்குவரத்துப்   பாதைகளில் மேடை போட
அனுமதியில்லை

மோரே  இன்றுமுதல்  குளிர்பானம்
அனைத்து  இனிப்பு சோடாக்களுக்கும்  தடை  
கமம்  செய்ய விரும்புவோருக்கு
நிலம்  இல்லாவிடில்  அரசே  நிலம் 
இலவசமாக வழங்கும்   அதில் வீடு
கட்ட முடியாது

மனிதத்தை  மதிக்காது 
கொடிய  செயல்கள் செய்வோர்
குழிக்குள்   இறக்கப்படுவார்கள்
 குற்றத்துக்கு அமைய 
காலம்  நீளும்

சந்திகள் தோறும் உணவைப்  பாதுகாக்கும்
சாதனம்  வைக்கப்படும்  அதற்குள்
வீட்டில் மிஞ்சிய  உணவை  கொண்டுசென்று
வைக்கலாம்  பசிப்பவர்கள்  எடுத்து  புசிக்கலாம்
சம்பளமாக  உணவும்  உடையும் மட்டுமே  வழங்கப்படும்

 
 

சனி, 20 செப்டம்பர், 2014


கிரோசீமா  நாகசாகிமீது  குண்டு பொழிந்தவர்கள்  கல்லாத  மடையர்களா ?? 


கூரிய நுண்ணறிவுமிக்க  பெருமகான்  வள்ளுவப்பெருந்தகை,   அவரின் 1330 குறள்களும் 
மாபெரும் செல்வம்  -  எல்லாக் குறள்களும்  நுணுக்கமாகப்   பொருள் கூறும். 
இங்கே அடியேன்  குறிப்பிடும் குறளில்  பாருங்கள்   பண்பு என்பது  நல்லவரிடமே இருக்கும்  கல்வி  கற்றவன் என்பதற்காக  அவனிடம்  பண்பை  எதிர்பார்க்க முடியாதென  மொழியும்.   வாழ்வில்
பெரும் படிப்புப்  படித்த  ஆட்களை  கண்டிருக்கின்றேன்  இவர்  படித்தவரா என  ஐயப்பட்டதுண்டு
அற்ப விடயத்துக்கெல்லாம்  ஆத்திரம் கொள்வார்கள்  அதை  பெரிய  பொருளாகச் சுமப்பார்கள் .
நற்பண்புடையோருக்கு வரும்   கோபம்   நீரில்  ஏற்பட்ட  பிளவு போன்றதாகும்  நிலைக்காது
ஆனால்  சிலர்  படித்தவர்களாக  இருந்தாலும்  கோபம்  காக்கும்  விடயத்தில்  பேதையைப்போல் 
இருப்பார்கள்  இருக்கிறார்கள் - கல்வியறிவு  இல்லாதவரிடம்  இருக்கும் பணம்  பெரும்  ஆபத்தைக்
கொண்டுவரும் என்பதை  சொல்ல வருகையில்  வள்ளுவப்பெருமான்  கற்றவர்களிடம் இருக்கும் வறுமை  என்று கூறாது நல்லவர்களுக்கு ஏற்படும் வறுமை எனக் கூறும்  குறள்  இது .

நல்லார்கண்  பட்ட  வறுமையின் இன்னாதே
 கல்லார்கண் பட்ட திரு .

அடியேன்  சிந்தித்ததுண்டு  வள்ளுவப்பெருந்தகை    ஏன்  கற்றார்கண்  பட்ட  என்று  புனையவில்லை என்று, படித்தவர்கள் எல்லோரும்  பணம் படைத்தவர்களாக  வாழ்வதில்லையே  - ஐயம் கேட்கையில்  பேராசிரியர்  பண்டிதர்  சு  சிகாமணி  விளக்கியது  படித்தவர்கள்  அனைவரும்  எப்பொழுதும்  நல்லவர்களாக  அறவழியில்  நடப்பதில்லை  நெஞ்சில்  ஈரத்துடனும்
இருப்பதில்லை , சிலர்  படித்திருந்தும்  அறவழி  நீங்கி  நாசம்  செய்பவர்களே  - கிரோசீமா  நாகசாகிமீது  குண்டு பொழிந்தவர்கள்  கல்லாத  மடையர்களா ??   - இங்கு  அடியேன் நடத்தும் அவசர உதவி  அமைப்புக்கு     படித்தவர்கள்  என்று சொல்லப்படுவோர்   சிறு தொகைகூட தந்து  உதவுவதில்லை . எவ்வளவு  ஆழமாக  வள்ளுவப்பிரான்  இயம்பியிருக்கின்றார்  பார்த்தீர்களா  அன்பு  உள்ளங்களே .

ம.இரமேசு 

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

அதை  நினைத்தால்  நிம்மதி

நெருப்பும்  ஏக்கமும் நீர்மையும்  உள்ளே  வைத்து  வளரவிட்டான்
குழவியாக இருக்கையிலே  வயிறு சம்பந்தமாகவே  அழுகை
வளர்ந்த பின்னோ  நிறைய விடயங்களுக்கு  அழுகை
நாலுபேர்  மதிக்க  வாழ்  என்பதும்  காசை  அத்திவாரமாகக்  கொண்டே
சொல்லும் சொல் - எத்தனை  அறிவாளியாகவிருந்தென்ன
காசு இல்லையென்றால்  மதிப்பு  மரியாதை இல்லை.
அறிவின் கரைகளை  அடைத்து  தம்மை  கோபுரமாக்கியவர்களே  காசைக்  கருதாது
அறிந்தவரின்  மேன்மையைப்   போற்றுவர்.
நம்மை நாம்  சமாதானம் செய்யச்  சொல்லும் வார்த்தைகளும்  கூத்தாட்டு  அவைக்குழாமே
நிஷாத  குணத்துக்கு மனிதன்  மறுமலர்ச்சி இன்னும்  கொடுக்கவில்லை
ஒரே ஒரு   மகிழ்வு  பாதகச்  செயல்களில் ஈடுபடாது  பண்புடன்  வாழும்  அறிவைக்கொண்டதும்
பாதகச்  சூழல்களில்  மாட்டி  நோவு பாடாததுமே  இப்போதைக்கு வாழ்நாளின் பெரும் பயன்
அதை  நினைத்தால்  நிம்மதி

ம.இரமேசு 
மண்ணோடு  காதல்  மழைக்கு
பயிரோடு  காதல்  வயலுக்கு
உணவோடு காதல் வயிறுக்கு
உடலோடு காதல்  சுடலைக்கு

ம.இரமேசு 

வியாழன், 18 செப்டம்பர், 2014

முன்பு  அலைகள்  பத்திரிகைக்கு  எழுதியது  புதிய  நண்பர்களுக்காக  இங்கு  இப்பொழுது  மீண்டும்

செந்தமிழ்க்காற்றில் சந்தண மணம்வீசும் குரலோன் டி எம் எஸ்.

March 23, 2013

எந்நிலையிலும் என்றும் தமிழர்களால் மறக்கமுடியாத, மறக்கக்கூடாத ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெருங் கலைஞன் டி.எம் . சௌந்தரராஜன் என்றால் மிகையில்லை.
1922 பங்குனி 24 இல் தமிழர்களின் காதுகளுக்கு தேன்வார்க்கப் பிறந்தவரே எங்கள் குரலரசர் பாடகர் திலகம் டி எம் எஸ் என்று தமிழர்கள் இனிமையாக அழைக்கும் ஒப்பாரும் மிக்காருமில்லா பாடகர்திலகம் டி . எம் . சௌந்தரராஜன்.
வானத்தினுள் இறைவன் மறைத்து வைத்து தமிழுலகுக்கு எடுத்து வழங்கிய பொக்கிசப் பரிசு டி எம் எஸ் என்னும் மகா இசைமேதை.
அவரின் இன் குரலால் ஆனந்தமடைந்து இன்சுகம் கண்டவர்கள் கோடி அவர் இன்று 91 வயதை எட்டியுள்ளார் அவரை தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம்.
புரட்சியும் எழுச்சியுங் கொண்ட ஈழத்தமிழர் வாழ்வில் புத்துணர்ச்சி பெற, புதுவேகமேடுக்க
ஐயா டி எம் எஸ் பாடிய புரட்சிப்பாடல்கள் எழுச்சியை தந்து உத்வேகத்தை அதிகரிக்கின்றது.
வெற்றிகளிலும் மாறுதல்களிலும் மனம் மகிழவும் நம்மை நாம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் எம்முடன் கூட வருவது டி எம் எஸ் பாடல்கள்.
“துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி..” என்று அவர் பாடும் பாட்டை கேட்டால் சுருங்கிக்கிடக்கும் இதயங்கள் வீறுகொள்ளும் வீராவேசப்படும்.
இப்படியாக பல டி எம் எஸ் பாடல்கள் எழுச்சியையும் தெம்பையும் தருவனவாகும்.
செங்கதிர் உதிக்கும் இளங்காலை பொழுதினிலே எழுச்சிதரும் குரலுக்கு டி எம் எஸ் தவிர வேறு
எவரையும் நினைத்தும் பார்க்கமுடியாது.
எல்லாவித மனித உணர்வின் பரிமாணங்களுக்கும் தன்குரலால் வளம் சேர்த்தவர் டி எம் எஸ் மட்டுமே, அதுமட்டுமின்றி உருகாத உள்ளங்களை இறையிசையால் உருகச் செய்பவரும் அவரே.
கணீரென்று பாடும் அவர் குரல் கரைந்துமுருகும் எழுச்சியுமூட்டும் நெகிழ்ச்சியுங்காட்டும் இறைவன் அளித்த பரிசு அது என்று அவரே தன்னடக்கத்துடன் கூறியிருக்கின்றார்.
முருகனே தனது தெய்வம் என்று வாழும் அதியுன்னத முருக பக்தர் , தனது திறமைகள் அத்தனையையும் முருகன் திருவடிகளுக்கே சமர்பித்து வாழும் மாபெரும் பாடகர்.
திரையிசைப்பாடல்களில் அவர் காட்டாத பாவங்கள் ஏற்ற இறக்கங்கள் வளைவுகள் சுழிவுகள் கெஞ்சல்கள் கொஞ்சல்கள் இல்லை, அவரின் திறமைகளில் மகத்தானது.
எந்த கதாநாயகனுக்கு பாடுகின்றாரோ அக்கதாநாயகனுக்கு இசைவாக அதே குரலில் பாடுவதே கேட்ட மாத்திரத்தில் இது இன்ன நடிகருக்கான பாடல் என்று அவரின் இரசிகர்கள் நுட்பமாக கண்டுபிடித்துவிடுவார்கள்.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத குரலினிமை அவருக்கே வாய்த்த கொடை , தொழில் கடுமையான கவனம் கதாபாத்திரத்தின் தன்மை பாடல் இடம்பெறும் சூழ்நிலை படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள் மற்றும் பல விடயங்களை உள்வாங்கி அதற்கு கற்பனை கொடுத்து தன்குரலால் நடித்தே கொடுத்தார்.
அதன் சிறப்பே இன்றும் எத்தனையோ பாடகர்களின் பாடல்கள் வந்தும் அவர்பாடல்களே முந்தியிருந்துகொண்டிருக்கின்றது.
சிறிய குழந்தைகளும் தொலைக்காட்சிகளில் இடம்பெறும் பாடல் போட்டிகளில் அவர்பாடிய பாடல்களையே பெரியபாணங்களாய் எடுத்து பாடியடிக்கின்றார்கள்.
முடிந்தால் இப்பாட்டுக்கு நிகராய் பாடு என்று சொல்லாமல் சொல்லுவதுபோலிருக்கின்றது அவர்கள் சிரத்தையெடுத்து பாடும்விதம், படிப்பறிவில்லா பாமரர்களுக்கு தனது பாடல்களால் தமிழைக்கற்றுக்கொடுத்த ஆசான் டி எம் எஸ் என்றால் மிகையில்லை.
இசையமைப்பாளர் நன்று என்று சொன்ன பின்பும் தனக்கு திருப்தி வரவில்லை என்றதால் மீண்டுமொருமுறை சந்தர்ப்பம் வேண்டி பாடிய பாடலே இன்று நாங்கள் கேட்டு மகிழும் எழுசிப்பாடலான ” நான் ஆணையிட்டால் ” என்ற பாடலாகும்.
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் தான் பாடி படமாக்கப்பட்ட பின்பு காட்சியை பார்த்துவிட்டு பொருந்தாது என்று மறுத்து அண்ணன் டி எம் எஸ் பாடவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து சிவாஜியின் வாயசைவுக்கு ஏற்ப திரையை பார்த்து பாடிய பாடல் ” பாலூட்டி வளர்த்தகிளி ” என்ற பாடல் என்று மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசைவிழாவொன்றில் டி எம் எஸ் ஐயாவை புகழ்ந்தார்.
அப்படி வாயசைப்பை உள்வாங்கி உணர்வை கூட்டி பாடுவது மிகவும் நுணுக்கமான வேலை அதை ஒரு போட்டியாக எடுத்து சாதித்திருக்கின்றார் டி எம் எஸ் என்றே நினைக்கின்றேன்.
கலையுலகில் பெரும் புகழுக்குரியவர்களாக இருந்த சிலரில் டி எம் எஸ் பெயரும் என்றும் நினைக்கத்தக்கது போற்றத்தக்கது, அவரை வாழுங்காலத்தில் சந்தித்து உரையாட விரும்பினேன் அது 2009 இல் நிறைவேறியது.

அவரை சந்தித்தமையை எனது மிகப்பெரிய பாக்கியமென எண்ணுகின்றேன், அவர் என்னுடன் அதிகமாக ஆன்மீகத்தையும் தியானத்தையும் பற்றியே பேசினார், ஆங்காங்கே யான் கேட்ட சிலகேள்விகளுக்கு இனிமையாக பதிலிறுத்தார்.
சில பாடல்களை சில வரிகள் பாடியும் காட்டினார், சிவாஜி படப்பாடல்களில் “பாட்டும் நானே பாவமும் நானே ” பாடலையும் எம் ஜி ஆர் பாடல்களில் “நான் ஆணையிட்டால் ” பாட்டையும் தனக்கு பிடித்தமான பாடல் என்றார்.
முத்துக்குவியலான தனது பாடல்களில் எதை எடுப்பது எதை விடுவது என்றார் உண்மைதான் அவரின் குரல் கொண்ட அத்தனை முத்தான பாடல்களில் எதை கழிக்க முடியும், ஒன்றையொன்று மிஞ்சுவதாகவே அவரின் பாடல்கள் இருந்துகொண்டிருக்கின்றது.
ஈழத்து மக்கள்மீது நல்ல அன்பும் அபிமானமும் கொண்டுள்ளார், நான் அவரின் வீட்டுக்குள் நுழைந்ததும் யாழ்ப்பாணத்தமிழில் வாங்கோ வாங்கோ என்று உரக்க கூவி வரவேற்றார்.
அவரின் வரவேற்பறை மிகவும் ஆன்மீகமயமானதாக நேர்த்தியாக அழகாக இருந்தது, அவரிடம் தான் பெரிய பாடகன் என்ற இறுமாப்போ கர்வமோ தலைக்கனமோ இம்மியளவும் இருப்பதாக என்னால் கண்டுகொள்ள முடியவில்லை.
இரு கைகளையும் நீட்டி என் தோள்களை அழுத்தி மிகவும் அன்பாக கதைத்தார், எல்லோரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்பதே அவரின் பேச்சில் அதிகமாக தெரிந்தது.
தியானம் செய்யும் முறைகளையும் சொல்லித்தந்தார், அவரிடம் ஆசீர்வாதம் பெற்றது பெரும் பாக்கியமே என எண்ணுகின்றேன்.
காரணம் அவரிடத்தில் ஒரு மகானுக்கான அத்தனை பக்குவமும் இருப்பதை நேரில் பார்த்து பேசிய பொழுது கண்டுகொள்ளக்கூடியதாகவிருந்தது.
இந்த வையகம் உள்ளவரை அவர் குரலும் நிலைக்கும் , வாழ்க பல்லாண்டு.
செந்தமிழ்க்காற்றில் சந்தண மணம்வீசும் குரலோன் டி எம் எஸ்.

ஆக்கம்
ம. இரமேசு
 

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

அனா  அந்தப்  பறவைகள்  பற்றி  ஆராய்ச்சி  செய்ய  அன்று  தமிழக  வானூர்தி  நிலையத்தில்  கால் பதித்தாள்   மோசமான  நச்சுக்  காற்றுப்   பரவி  பல  ஊர்களில்  மக்கள்  இறப்பதாக   வந்த  செய்தி
உலகம் பூராகப்   பரவியதையிட்டு  அதற்கான  காரணத்தைக்  கண்டு பிடித்து  மக்களைக் காப்பாற்ற வேண்டும்  என்ற பொறுப்பை  அமெரிக்காவில்  இருக்கும் அந்த  அறிவியல்  ஆராய்ச்சிக்  கழகம்  எடுக்கின்றது  அதன்  முதற் கட்டமாக  அனாவுடன்  அறுவர் அடங்கிய  குழு  இந்தியா  வந்துள்ளது
அனாவுக்கும்  மற்றவர்களுக்கும்  தமிழ் நாட்டில்  தமிழ்   படிக்கவேண்டும்  என்று  கட்டளை  இடப்படுகின்றது  காரணம் அவர்கள்  நேரடியாக  ஊர் மக்களுடன்  பேசி செய்திகளை  அறியவேண்டும்  என்பதனால் , ஆறுமாதங்கள்  மொழியை  படித்து  தேறுகின்றார்கள்
அந்த  ஆராய்ச்சிக் குழுவினர்.   அனா  ஒரு  கலப்பினத்தில் பிறந்தவள்  தந்தை ஆபிரிக்கர்
தாய்  அமெரிக்கர்  அவள்  கல்விகற்ற  நாட்களில்  நிறைய  இந்தியப் பிள்ளைகளுடன்  பழகியதால்
 இந்தியர்கள் மீது பெருமதிப்பு வைத்திருந்தாள் .

சிலோபியா   என்ற  பறவையினம்  ஒரு  அதிவிசேட  சக்தியினைக்   கொண்டிருந்தது  விச ஜந்துகளினை
வேட்டையாடி  அதன் நஞ்சினை  தனக்குள் இழுத்து  பின்னர்  காற்றில்  கக்கிவிடும்  மாயப்பறவை
ஒரே  முறையில் 100குஞ்சுகளைப் பெறும் பறவையினம்  இதனால்  இந்தியா  பெரும்
தொந்தரவில்  தத்தளித்தது  ஆய்வாளர்கள்  இரவு பகலாக  மக்களை  காக்கப்   போராடினார்கள் 
எல்லோருக்கும்  முகமூடியுடன்  சேர்த்து  ஒட்சிசன்  பைகளைக்   கொடுப்பது  சாத்தியமாகவில்லை
காரணம் சனத்தொகை அதிகம்  கொண்ட நாடாக  இருப்பதனால் ,  அந்த  முகமூடிகளும்  அதிக  விலை 
பெரும்  பணக்காரர்கள் மட்டுமே  வாங்கிப் பாவிக்கக் கூடியதாகவிருந்தது

அனாவுடன்  சேர்ந்து   ஆராய்ச்சிப் பணியில்  இந்தியர்களும்  ஈடுபட்டார்கள்  அதிலே  ஒருவன்  ஜெம்நாத்   அனாவுடன்  பழகியதில்  அவனுக்கு  அவள்மீது  காதல் உண்டானது ஆனால்
செம்மை தனது  மகளுக்கு  கட்டிவைக்கவேண்டும்  என்ற ஆசையில்  அவனை  எடுத்து
வளர்த்த  மாமனார்  குறியாகவிருந்தார்  தன்  மகளையே  ஜெம்  கலியாணம்  செய்வான் என்பது
மாமனார் பரமசாமியின்   திடமான  நம்பிக்கை.  ஒரு விபத்தில்  பெற்றோரை
இழந்தபின்  அவனது  மாமனாரே  அவனை  ஆளாக்கினார்   தனது  ஆளுமைக்குள்  வளர்ந்தவன்
தனது சொற்படியே  நடப்பவன்  திருமண  விடயத்திலும் அப்படியே  இருப்பான் என்று  நம்பிய
பரமசாமியின்   நம்பிக்கையில்  மெல்லிய  வெடிப்புகள்  ஏற்பட்டுக்கொண்டிருந்ததை  பரமசாமி
அறியவில்லை

ஜெம்மின்  நண்பன்  கந்தா  ஒரு  பெரிய  வியாபாரி  அவரின்  மகள் 
சிரிசா  அற்புதமாகப்  பாடும் குரல்கொண்டவள்  ஒரு நாள்  கச்சேரியொன்றை   முடித்து  வீட்டுக்கு வந்தவளுக்கு   ஒரு  தொலைபேசி  அழைப்பு வருகின்றது  உனது  அப்பாவை  கடத்தி வைத்திருக்கின்றோம்   5 கோடி  ரூபாவை  எடுத்துக்கொண்டு நாங்கள்  சொல்லும்  இடத்துக்கு
வா என்கின்றார்கள் குண்டர்கள் - தந்தையின்  பெட்டகத்தைத் திறந்து  பணத்தை  எடுத்துக்கொண்டு  புறப்படத் தயாரான  நிலையில் மறைந்திருந்து  கவனித்த  வேலைக்காரி  சினா  அந்தப் பணத்தை  சுருட்டத்   திட்டம்  போடுகின்றாள் தனது  காதலனிடம் (பக்சி) பக்கத்து  சந்திலிருந்த  நம்பிக்கையான ஒருவனிடம் சொல்லியனுப்பி விடயத்தைத்  தெரிவிக்க  அவன்  சிரிசாவைத்  தொடர்கின்றான் கந்தா  ஒருவாறு  தப்பித்து  ஓடிவந்து  ஒரு  கோட்டலில்  சென்று  ஒரு  தொலைபேசி  அழைப்பை மகளுக்கு  விடுக்கின்றார்  தான் தப்பிவிட்டதாகவும்  நீ  அந்த இடத்துக்குப்   போக வேண்டாம்  கொட்டல்  மதுரம்  வந்து சேர்  என்கின்றார்  கார்  கொட்டல்  மதுரம் வர  கந்தா  காரில் ஏறிப் புறப்படுகையில்  பக்சி  தனது  ஆட்களுடன்  கந்தாவின்  காரை மறித்துக்   கடத்துகின்றான்
உனக்கு என்ன வேண்டும் என  கந்தா  கேட்க  பணம்  வேண்டுமென்று பக்சி சொல்கின்றான்     பணத்தை  தருவதாக  ஒப்புக்கொண்டவர்  தன்னை  பணம்  கொடுத்ததும்   விடுவிக்க வேண்டுமென்கின்றார்உடன்பட்ட   கந்தா  பணத்தைக்  கொடுத்துவிட்டு மகளுடன்  வீட்டுக்கு வந்து சேருகின்றார்  உடனடியாக  தனது  அடியாட்களிடம்  விபரம் சொல்ல  அடியாட்கள்  சொன்ன குறிப்புகளை வைத்து  பக்சியை தேடிப்பிடிக்கின்றார்கள் ,  பக்சி  காசைக்கண்டவுடன்   கூட வந்தவர்களுக்கு  சில்லறைகளைக்கொடுத்துவிட்டு  தாசி வீடு  சென்று  கள்ளுக் களிப்பில்  இருக்க  அங்கே  வந்த  கந்தாவின் அடியாட்கள்பக்சியை  போட்டுத்தள்ளிவிட்டு  காசுப் பெட்டியை  எடுத்துக்கொண்டு  சென்று  கந்தாவிடம் கொடுக்கிறார்கள்  மகிழ்ந்த  கந்தா  அவர்களுக்கு  இறாலை  வீசிவிட்டு  மகிழ்கின்றார்
நிறைய குடித்துவிட்டு  தற்பெருமை பேசிக்கொண்டு  இருந்த  கந்தாவைத்   திடீரெனப்   பின்பக்கம் வந்து  அடித்துக்  கொல்கின்றான்  அடியாட்களில்  ஒருவனாக வந்தவன்  வீட்டிலிருந்த பணத்தை  எடுத்துக்கொண்டு  செல்கின்றான்  இந்த  நேரத்தில் நண்பன்  கந்தாவைத் தேடி  ஜெம் வருகின்றான்
உள்ளே நுழைந்தவனுக்கு  அதிர்ச்சி நண்பன்  கந்தா  இறந்து கிடப்பதைக்கண்டு  திடுக்கிட்டான் 
போலீசுக்கு  தகவல் கொடுத்தான்  கீழே  இறங்கி வந்த  சிரிசாவுக்கு  விபரம்  சொல்ல  வீடே
சோகம் கொள்கின்றது   வேலைக்காரி  ஒன்றுமே  அறியாதவளாய்  நின்றாள்
போலீஸ் வந்து  அனைத்தையும் விசாரித்துவிட்டு   வேலைக்காரியைக்  கூட்டிச்சென்று  தங்கள்
வழியில்  விசாரிக்க  வேலைக்காரி  சகலதும்  கக்கினாள்  உனது  காதலன்  இறந்துவிட்டான்  என்ற செய்தியை   போலீஸ்  சொன்னதும்  சினா  கதறினாள்  காவலர்கள்  அவளைச்   சிறையில்  தள்ளினார்கள் 

சிரிசாவின்  உறவினர்கள்  வந்து  நன்றாகத்  தின்று  குடித்து  அனுபவிப்பது  ஜெம்முக்கு 
பிடிக்கவில்லை  சிரிசாவிடம்  எடுத்துச்சொல்லியவனுக்கு  உள்ளே  ஒரு  புதிய  நரிச்சிந்தனை
ஓடியது  இவளைக் கலியாணம்  செய்தால்  சொத்துக்களை  அடையலாம்  என்று சிந்தித்தான்
ஆகவேண்டிய  காரியங்களைச்  செப்பமாகச்  செய்து  சிரிசாவை  மணந்தான்  அமெரிக்கக் காரியை
கைகழுவிவிட்டான்  விடயமறிந்த  பரமசாமி  கடுங் கோபத்துடன்  சென்றார்  அவரை  நல்லபடி
சமாதானம் செய்து  திருப்பியனுப்பிவிட்டான்  ஜெம் -  ஜெம்மின்  பொய்யுரைகளை  நம்பி
சொத்துக்கள் ஒவ்வொன்றையும் அவனின்  பேருக்கு  எழுதிவைத்தாள்   சிரிசா,  ஜெம்  ஆராயச்சியில்
இருந்து விலகி  சொதுக்களை மேலும் மேலும்  கூட்ட   வியாபாரத்தில்  அக்கறை காட்டினான்
பறவை  ஆய்வில்  புதிய  மருந்தை கண்டுபிடித்து  அந்த  பறவையினம்  இல்லாதுபோக  அனா
கெட்டித்தனத்துடன்  ஈடுபட்டு  அரசின்  பாராட்டை  பெற்று  நாடு திரும்பினாள்
ஜெம்முக்கு  வியாபார   எதிரிகள் நிறைந்தார்கள்  மற்றவர்களின்  வியாபாரங்களை  தானே 
செய்து அதிக  இலாபமீட்டுவது  மற்றவர்களுக்கு  தடையாக  இருந்தது  ஒருநாள்  ஜெம்
கடத்தப்பட்டு  கட்டிவைக்கப்படுகின்றான்  சிரிசா  விடயமறிந்து  போலீசுடன் வந்து காப்பாற்றுகின்றாள்  தனது  பணமோகத்தை  துறந்து   சொத்துக்களை மீண்டும் சிரிசா  பெயருக்கு  எழுதிவிட்டு  தல
யாத்திரைக்கு  புறப்படுகின்றான்  ஜெம்  பணவாசை  நீங்க  மனிதனின்  உள்ளம்  புனிதமாகின்றது
தப்புகள்  செய்வதிலிருந்து  நீங்கி  நல்லதை  செய்ய  உள்ளம்  பிரியப்படுகின்றது  என்பதை
உணர்ந்து  மனைவியுடன்  சேர்ந்து  இல்லாதவர்களுக்கு  உதவ  ஒரு  சங்கம்  உருவாக்கி 
உதவி  வாழ்கின்றான்  மனிதனாக  அவனது  நல்ல செயல்கள் கண்டு  மாமனாரும்  கோபம் நீங்கி
உறவுகொள்கின்றார்  அனைத்தும்  சுபமாகின்றது  .





 
இப்படியும்  ஒரு  பெண்

சியானியக்கா  மிகவும்  கண்டிப்பானவ ,   தமிழின்பால்  மிகுந்த  பற்றுடையவ
அதே நேரம் ஆங்கிலத்திலும் புலமை மிகுந்தவ -  ஆங்கிலத்தில்  கவிதைகள் எழுதி  அமெரிக்காவில்
பெரும் பரிசுகள்  பெற்றா  ஊரில்  இருந்த காலத்தில்  எங்களுக்குப்   பாடங்கள் சொல்லித்தந்து
எங்களை  நல்வழியில் நடத்திய சீமாட்டி .  நீச்சலடிப்பதில்  அவவுக்கு  மிகுந்த விருப்பம்  மாரிகாலத்தில்
ஊரிலிருக்கும்  பானாக்  கேணியில்  நீந்துவதற்கு  அழைத்துச் செல்வா  ஒல்லிகளை எங்களுக்குக்  கட்டி
நீச்சலடிக்கப்  பழக்கியவ  சியானியக்கா .

சினிமா  பற்றிக்  கதையெடுத்தால்  அவவுக்குப்   பிடிக்காது
படிப்பை  பற்றிக் கதையுங்கோ  தேவையில்லாத  குப்பையைப் பற்றிக்  கதைச்சு என்ன பிரயோசனம்
என்று  எங்களைக்  கண்டிப்பா,  சியானியக்காவைக்  கண்டால் ஊரில் எல்லோரும்  மரியாதை
செலுத்துவார்கள்  காரணம் அவவிடமிருந்த பண்பும் நேர்மையும் ஒழுக்கமும்  ஒருநாளும் கைதெரியக்   கால்தெரியஆடைகள்   அணியமாட்டா  உறவுக்காரப் பெண்கள்  கை தெரியக்   கால் தெரிய  ஆடைகள்  அணிந்திருப்பதைக் கண்டால்  மிகவும்  ஆத்திரமடைவா  உரிமையுடன்  கண்டிப்பா   நீ என்னவெள்ளைக்காரியே   உனக்கேன்  உந்த  அசிங்கம் பிடிச்ச  ஆசை  உங்களாலை  தான்  பெடியள்
உங்களை  அசிங்கமா  நோக்கிறாங்கள்  போய்  கழட்டிப்போட்டு பாவாடை  சட்டையை  போட்டா
இல்லை  கிணத்துக்குள்ளை  பிடிச்சு தள்ளிப்போடுவன்  என்று  மிரட்டுவா ;  அதுவும்  உண்மைதான்
மினிஸ்கேட் போட்டுக்கொண்டுவந்த  வேலுச்சித்தாபாவின்ர  மகளை (மதிரா)  ஒருநாள்  கிணத்தடியில
கண்டுவிட்டா  கிட்டப்போய்க்   கண்டிக்க  மதிரா  பெண்  சுதந்திரம் பேசி  அது என்ர  விருப்பம்
நீர் போய் உம்முடைய  வேலையைப் பாருமெண்டு   சொல்ல  மதுராவைப்   பிடிச்சு  கிணத்துக்குள்ளை  தள்ளிவிட்டா   செத்துப்போ  நீ இருந்து எங்களுக்கு  சொந்தக்காரியெண்டு சொல்றதைக்காட்டியும்  செத்துப்போ என்று  முரட்டுத்தனமாக நடந்து கொண்டா  நல்லகாலம்  ஒரு காயமும்  படாமல்  கிணத்துக்குள்ளை வைச்சிருந்து  இரும்பு  ஏணியாலை மதிரா  வெளியிலை வந்து  அழுதுகொண்டு  போவிட்டா  அதுக்குப் பிறகு  மதிராஅந்தப்பக்கம்  தலை காட்டறதில்லை, அப்படியே தலை   காட்டினாலும் உடம்பை மறைச்சு  ஒழுங்கான  உடுப்பிலைதான்  தலையைக் காட்டுவா .  இது  இப்பிடியெண்டாகல்லுண்டாய் வெளியில  பஸ்சுக்குள்ளை  நடந்த  விசயம்  இன்னும்  பெரிசு

 அழகியான  சியானியக்காவின்ர  காலை  ஒருத்தன்  தன்ரை  காலால  கொசு  ஓட்டியிருக்கிறான்  தெரியாமல்பட்டிருக்கும் எண்டு  பொறுத்துப் பார்த்தா ஆய்க்கினை  கூடிவிட்டுது  எழும்பிப்   பின்னாலை இருந்தவனைப்   பாத்து   எங்கை  போவம்   கொட்டலெடுக்க  காசு  வைச்சிருக்கிறியே 
எண்டதுதான்  பஸ்சுக்குள்ளையிருந்த சனமெல்லாம்  திகைச்சுப்  போச்சினை   கொண்டைக்டர்  வந்து 
பெடியனை  அடிக்காத  குறையா  திட்ட  சனங்களும்  முறைக்க  பொந்துக்குள்ளாலை  வாலை
வெளியில  விட்டு  சிங்கத்திட்டை  மாட்டின  நரிபோலை  பெடியன்ர  நிலை இருந்துச்சுது
நாளைக்கு உன்ர  அக்காவை  இல்லாட்டி  தங்கைச்சிய  கூட்டியா  நான்  என்ர  தம்பியைக்
கூட்டிக்கொண்டுவந்து  கால் போடச் சொல்லுறன்  ஆ ,  என்றதுதான்   பெடியன்  அழாக்குறையா
மணியடிச்சு  காக்கைதீவிலையே  இறங்கித் தப்பினான் - சியானியக்கா  பொங்கல்  வருசப்பிறப்பு
வந்தால்  சாப்பாடுகளைக்  கட்டிக்கொண்டு போய்க்  கஷ்டப்படுகிற  வீடுகளிலை  குடுத்து
பேதம் பாராமல்  வாழ்ந்தவ,  நல்லா  படிச்சு  உத்தியோகம் செய்த ,  சாதியில குறைஞ்ச
பெடியனை  நேரடியாப் போய்க்   கேட்டு  கலியாணஞ் செய்த  பெரிய துணிச்சல்க்காரி அவவின்ரை  பார்வையிலை  எல்லாரும்  மனிசர்  ஏற்றத்தாழ்வு  அறிவீனம்  என்பதே  ஒளியாத் தெரிஞ்சுது .

 இப்பிடி  ஒரு பெண்   அபூர்வம் - அவ  என்ன செய்தாலும்  நியாயம் இருக்கும்,  முறையாத்தான்  நடப்பாள் தன்ர  மகள்  என்பதிலை  சியானியக்கவின்ரை   தகப்பன்  மயில்வாகனத்தாரும்  தாய்  வள்ளியம்மாவும்உறுதியா  இருந்தவை.  உற்றார் உறவினர் ஊரார்  எல்லாரும்  சியானியக்காவை  போற்றி மகிழ்ந்தவை  அவ  எல்லா  சனங்களோடையும்  சமத்துவமா  பழகுறதாலை  சில  ஆக்களுக்கு
அவவை  பிடிக்கிறேல்லை - குழை   வெட்ட  வந்த மார்க்கண்டுவுக்கு  காலிலை  கத்திபட்டுவிட
துடியாத்  துடிச்சு  மருந்து கட்டி  தேத்தண்ணி  போட்டுக்கொடுத்து  காசும் குடுத்தவ.
ஏழைப்பிள்ளையள்  எல்லாருக்கும்  காசு  வாங்காமல் இலவசமா  பாடம்  சொல்லிக் கொடுத்தது
மட்டுமில்லாமல்  அவையளுக்கு  வீட்டிலை  சாப்பாடும் போட்டு பசியாற்றியவ அப்பப்பேக்கை  உடுப்பும் வாங்கிக்  கொடுக்கிறவ தமிழ்ப் பொம்பிளையெண்டா  இப்பிடித்தான்  ஒழுங்கா  வாழவேணுமெண்டு  எப்ப பாத்தாலும்  சொல்லிக்கொண்டிருப்பா   ஜிகினா  சட்டையள்  போடுற  பிள்ளையளின்ரை  பெற்றோரைப் பாத்து  எடுத்துச்சொல்லி  பிள்ளையள்  ஒழுக்கமாக  வளர  தகுந்த  பராமரிப்புச்  செய்தவ    அமெரிக்காவிலை  இருந்தவ   ஆஜெண்டீனாவில  ஒரு  பல்கலைக் கழகத்தில
படிப்பிக்கிறா  வயசு  போனாலும் கம்பீரம்  குறையாமல்  வாழ்ந்துவரும்  துணிச்சல்க்காரி .

  ம.இரமேசு
(பெயரும்  மற்றும்  கற்பனையே )
 

 நயினை  நாகம்மாள்     நம்மைக்   காப்பாளாக.

(புதிய  புணர்ச்சி  இலக்கணத்துக்கு  ஒப்ப  எழுதுப்பட்டிருக்கின்றது  அன்று  இதற்கு  என்று
எழுதியதை  இன்று  இதற்க்கு  என்று  எழுதுகின்றாகள்  முன்னைய படி  எழுதினால்
க்  வைக் காணவில்லை தவறு  என்கின்றார்கள்   எனக்குப்   பெருங் குழப்பம்  உண்டாகியிருக்கின்றது
நன்கு தமிழ் அறிந்த  பண்டிதப்  பெருமக்கள்  எனது  குழப்பத்தைத் தீர்த்தால்  மிகவும் மகிழ்வேன்.)


"உண்மையான இந்தியர்கள்   தமிழர்களே   அவர்களது  நாடே இந்தியா, தமிழே உலக மொழிகள் அனைத்துக்கும் மூத்த மொழி" இதனை    நம் தமிழ் அறிவாளிகள் சிலர்  ஒப்புக்கொள்ள மாட்டார்கள் 
தன்னையும்  தனது  மொழியையும்  பெருமையாக நினைத்து  வாழ  மறுக்கும்  பெருங் கூட்டம்
உலகில்  உண்டென்றால்  அது  நமது  தமிழ்க் கூட்டமாகத்தானிருக்கும்.

  மொழியாராய்ச்சி செய்யும்  ஐரோப்பியர்கள்  சில  ஆண்டுகள் முன்னர்  தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள்  எடுத்த  செம்மொழி மாகாநாட்டில் செப்பிய கூற்றே மேலே சொன்னது.

,  எல்லா மொழிகளிலும் தமிழின் சில  சொற்க்கள் இருக்கும் துருக்கியில் அன்னே என்பார்கள் அம்மாவை,   அது அன்னை என்பதின் இன்னோர் வடிவம்.    அம்மம்மா என்கின்றார்கள் பரோ ஐலண்ட் மொழி பேசும் மக்கள் அம்மம்மா  என்று தாயாரின் தாயை   தமிழில்ச் சொல்வதுபோல்.    ஜெர்மனியில்   விடுமுறையை  ஊருலாப் என்கின்றார்கள் அதாவது அந்தக்காலத்தில் சுற்றுலாச்  செல்வதனால்   ஊருலா என்று தமிழில் சொல்லுகின்றோம் சுற்றுலாவை, அவன் ஊருலாத்தப் போவிட்டான் என்று யாழ் வழக்கில் சொல்வதுண்டு . கிரேக்கியர்கள் கிறீசில் அழகு நலம் என்பதை கலா என்கின்றார்கள் தமிழில்க்  கலா என்றால் அழகு என்றும்   பொருளுண்டு   கலா இரசிகப்பெருமக்களே என்கின்றோமல்லவா, இப்படி ஆங்கிலத்தில் பிரெஞ்சில் இத்தாலியில் இன்னும் பல மொழிகளில் நிறைய ஒரே பொருள் கொண்ட தமிழ்ச் சொற்க்கள் இருப்பதை அவதானிக்கலாம். எங்கள் மொழியின் சிறப்பைக் கெடுக்கத் திட்டம் போட்டு  பார்ப்பனர்கள் அந்தக்காலத்தில் செய்த அசிங்கமே சமஸ்கிருதத்தைத்  தமிழுடன் கலந்தது அதனால்த்  தமிழர்கள் தெலுங்கர்கள், மலையாளிகள் , கன்னடர்களாகி இன்று பிரிந்து பேதங் கொள்ளும் வீண் நிலைமை  எங்களுக்குள் .  சொந்தச் சகோதரர்களுக்குள்ளே சண்டை மூட்டிவிட்டு அதில் இலாபங் கண்டு குளிர் காய்ந்தது   அன்றைய வெள்ளைத்தோல் மாந்தரின் சூழ்ச்சி அதற்குப் பலியாகிய   மடைமை நமது  முன்னோர்களின் அறியாமையே .   இந்திய நாட்டின் செல்வத்தைக் கண்டு  வெளிநாட்டினர்கள் பலமுறை  படையெடுத்தார்கள்  வெற்றிபெறும்  தருணங்களில்  பொருட்க்களை 
மட்டுமின்றி  அழகிய  இந்தியப் பெண்களையும் கவர்ந்துகொண்டு  தங்கள்  நாட்டுக்குச் சென்றார்கள் 
இதில்  அரேபியர்கள் முன்னிலை  வகித்தார்கள்  கஜனி முகமது  100  தடவைகள்  இந்தியாமேல் 
போர்தொடுத்தான்  இறுதியில்  வெற்றியடைந்தான் -  அரேபியாவிலிருந்து வந்து   இந்தியாவைப் பிடித்து மதுரையில்  வந்து  அட்டகாசம்  செய்த முகமதியர்கள்  சூரிய உதயத்துக்குள் அனைவரும்  இஸ்லாத்துக்கு  மாறிடவேண்டும் அன்றில் கழுத்தறுத்து  சாகடிக்கப்படுவீர்கள்  என்று  பறைதட்டினார்கள்  அதற்குப் பயந்து  முஸ்லீம்களாக மாறியவர்களே  இன்று  இலங்கை இந்தியா  போன்ற  நாடுகளில்  வாழும்  முஸ்லீம்கள். மதம்  மாறாததால்  மதம் பிடித்த  அரேபியர்களால்  பல தமிழர்கள்  அன்று  கழுத்தறுக்கப்பட்டு  கொல்லப்பட்டார்கள்  சிலர்  நாடுவிட்டு  நாடு  ஓடினார்கள் இப்படியாகத்  தமிழர்களைத் தொட்ட   துயரம்  இன்றுவரை  தொடர்கின்றது  துயரமெல்லாம் நீங்கி  தமிழர்கள்  நிம்மதி கொள்ள  நல்ல காலம்  பிறக்கவேண்டும்,  நான் வழிபடும்  நயினை  நாகம்மாள்     நம்மைக்   காப்பாளாக. 

ம.இரமேசு 
 
 

திங்கள், 15 செப்டம்பர், 2014

முருகேசுப்பாட்டா  வீட்டிலினிலே
பெருநெல்லியும்  கொய்யாவும்
பித்தேறிப்  பிணைந்து   பிரேமித்த
பிந்திய நேரத்துப் பந்தம்
பந்து பொறுக்க வந்த  பெடியன்களால்
நொந்து போனது - மாவில்லாக்  காற்றினிலும்
மகிழ்ந்தாடிக்   கிளைகள் மாறி மாறித்
  தழுவி மகிழும்  மாய   வேளைகள்
மாமாங்கம்  , சந்தையடி  வளவுக்குள்
விந்தையடிக்கும்  பந்து பொந்துக்குள்ளால்
மொந்தையடித்து   நந்தாகி  உந்திவிடும்
அதுகண்டு மனம்  நொந்துவிடும்
பந்தெடுக்கும்  சாட்டில்  சக்கரப்
படலை  தள்ளிப் பள்ளிகொள்ளும்
பாதங்கள்  பள்ளத்தில்,   பந்தைக்கண்டும்
காணாதது போல்  கள்ளப்பாவனை
செய்தே  கொய்யாவை  நாடும் 
குறியோர்  மனம் , பதிவாக  ஆடி
அசையும்  அலைபோன்ற அழகுக் 
கிளைதனில் நீந்தும்  கொய்யாவை
ஆய்ந்து    வெற்றிக்களிப்பில்
வெளியேறிப்   பாதி  பகிர்ந்து 
மீதியுண்டது  ஒரு காலம்
பெருநெல்லி  வாயில் போட்டு
உருட்டி  புரட்டி  சுருட்டி
உண்டுவிட்டுத்  தண்ணீர் குடிக்கையிலே
 உயிருக்குள் ஒளிர்ந்தது  ஒரு வெள்ளி
இனியோடி வருமோடி  அந்நாடி

ம.இரமேசு 
வாலி என்ற பெயரால் கண்ணதாசனின் பாதிப் பலத்தை பிடுங்கினார்
July 19, 2013
காலத்தால் மறக்கமுடியாத  கவிஞர் வாலி – சில பகிர்வுகள்
உலகத் திரைப்பட வரலாற்றில் இப்படியொரு கவிஞரை தமிழுலகே கண்டது -
1956 ல் எழுதத் தொடங்கியவர் ஏறத்தாழ 56 வருடங்கள் எழுதி
பெரும் புகழுடன் விண்ணேறியிருக்கின்றார்.
இனிய பாடல்கள் வலம் வந்த காலங்களில் கடும் போட்டிகளுக்கிடையில் சிக்கி சிகரம் தொட்டவர்
வாலி ஐயா , அவரின் பொறிபறக்கும் பாடல்கள் உள்ளங்களைத்  தட்டிக்
கிளப்பியது நம்பிக்கையை விளைத்தது அறிவைச்  சொன்னது எச்சரித்தது.
பின்னாலிருந்து மாபெரும் வலிமைமிகு வரிகளைக்  கடுமையாக சிந்தித்து இயல்
செய்தவருக்கும் அதை இசை செய்தவர்களுக்கும் கிடைக்காத பெருமைகளை
பொய்யாக வாயசைத்து நாடகம் செய்தவர்கள் தட்டிச்  சென்றனர் என்பது காலம்
காட்டி நிற்க்கும் உண்மை.
குரலரசு அமரர் டி எம் எஸ் மறைவை மறக்க முடியாது தவிக்கையில்
மணிவண்ணனும் மடிந்தார் இப்போ இரண்டாம் திரைக்கவியரசு வாலி யாரும்
விண்ணேறி விட்டார் .
2013 ஒப்பற்ற வித்தகர்களை தனுக்குள் இழுத்து
விட்டது, வாலியின் கவி வரிகளும் டி எம் எஸ் குரலின் எழுச்சியும்
இல்லை என்றால் எம் ஜி ஆர் புகழ் இந்தளவுக்கு உய்ர்ந்திருக்குமா என்பது
நியாயமான கேள்வியே?
திருச்சி வானொலி நிலையத்தில் வாலியின் “கற்பனை
என்றாலும் கற்சிலை என்றாலும்” பாடலைப்  பாடிவிட்டு, தம்பி நன்றாக
எழுதுகின்றீர்கள் சென்னை வந்து என்னைப் பாருங்கள் என்று வாலியின்
வாழ்வுக்கு முதலாவது படியை நிமிர்த்திக்  கட்டியவர் அமரர் டி எம் எஸ்.
பின்  பலரின்  ஆதரவுகள் கைகூடப்  பல படிகள் உயர்ந்து கவியரசருக்கு
இணையாக கோலோச்சியவர் வாலி ஐயா அவரின் எழுத்துக்களில் படிப்பறிவற்ற
பாமரர்களும் அறியும் படியான கருத்துக்கள் மின்னியது
“கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருவது யாரோ” என்று
எழுதிய அந்த வரிகளே என்னை முதல் முதலாக யார் இதை எழுதியவர் என்று
கேள்வி கேட்க்க வைத்தது ,
“வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான்
எங்கள் வீடு” என்ற வரிகளில் அழகும் மீனவர்கள் பெருமையும் துலங்கியது
“ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்” என்ற
வரிகளில் மீனவத்தொழிலின் அபாயம் எத்தகையது என்பதை  உணர்த்தினார்.
வாலி எந்த உணர்வுடன் எழுதினாரோ அதைப்  பிசகு படாது  உணர்வூட்டிக்  குரலால்
நடித்தே பாடிக்கொடுத்தார் டி எம் எஸ் , கலையில் அவர்கள் ஒன்றிணைவு
ஒற்றுமை கவனம் பக்தி பொறுமை சிரத்தை அளவிட முடியாதது அது ஒரு
பொற்காலம் .
வாலி ஐயா வரிகளால் கோலம் போட்டு கவியரசர் கண்ணதாசனுக்கு
பெரும் போட்டியாளராக விளங்கினார் இது
யார் எழுதிய பாடல் என்று இரசிகர்கள் தடுமாறினார்கள் இசை கூட்டிய
இசையமைப்பாளர்களும் தடுமாறினார்கழென்றால் அவரின் ஆளுமை எத்தகையது
என்று புரிந்து கொள்ளலாம்.
வாலி என்று பெயர் கொண்டதன் காரணமோ என்னவோ
கண்ணதாசனின் பலம் அரைவாசி அவரிடம் சென்றுவிட்டதோ என்று எண்ண
வைக்கின்றது.
“நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் ” என்று அவர் எழுதிய பாடலே இன்றளவும் பேரெழுச்சிப்
பாடலாக தமிழர்களின் அரசியல் விழாக்களில் ஒலிக்கிறது.
” மாதவிப் பெண் மயிலாள் ” பாடலில் அவரின் இலக்கியத்தரம் விண்ணைத்  தொடுகின்றது,
“உயர்ந்த மனிதன்” என்ற காலத்தால் மறக்க முடியாத படத்தில் அத்தனை பாடல்களையும்
எழுதி நட்சத்திரமாக மின்னியிருக்கின்றார்.
“அந்தநாள் ஞாபகம் ” பாடலை
கண்ணதாசனே எழுதியிருப்பார் என்று எல்லோரும்நினைப்பார்கள் ஆனால் அந்த
நினைப்பை தவிடு பொடியாக்கி விட்டவர் வாலி ஐயா.
பாட்டை கேட்டுவிட்டு நண்பர்கள் இது கண்ணதாசன் எழுதியது என்றும் இல்லை வாலி என்றும்
தம்முள் சர்ச்சைப்பட்டு  பின் படமாளிகை சென்று எழுத்தோட்டம் கண்ட
பின்னரே ஓ வாலிதான்எழுதியிருக்கின்றார் என்று வியந்து தோல்வியை
ஒப்புக்கொண்டதுண்டு.
அந்தளவுக்கு புலமை வெளிப்பாடு வாலி ஐயாவிடமும் இருந்தது,
முந்தநாள் குழந்தைகளும் துள்ளி குதிக்க அவர்கள்
இரசனைக்கும் இறங்கி எழுதியவர் வாலி ஐயா அவரின் இழப்பு
தமிழர்களுக்கு பேரிழப்பு – அவர்களின் உண்மை அமைதியடைய ஆண்டவன்
அருள் புரிவாராக .
பகிர்வு
ம.இரமேசு