ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

ஞாயிறு  அதிர்வு 



நாளை  என்ன  புதிதாக  நடக்கப்போகின்றது
என்று அறியாமல் அன்று தமிழகம்
 உறங்கிக்கொண்டிருந்தது
விடிந்ததும்  அந்த  அதிர்ச்சி  எல்லோருக்கும்
 பணக்காரர்கள்  பதறினார்கள் அழுதார்கள்
ஏழைகள்  சிரித்து மகிழ்ந்தார்கள்
 
நடு நிசி  12 மணி  சட்டம்  மாறியது
 இன்றுடன் காசில்லை
வங்கிகள்  எல்லாம் மூடப்படுகின்றது
காசுக்கு  0 பெறுமதி 
அவை  பொருட்காட்சியகத்துக்கு
இனிமேல்  அந்தக்கடுதாசிகள்
பார்வைப்பொருள்
தங்கம் மட்டும்  பெறுமதி
அதைக்  கொடுத்து
எதையும் வாங்கலாம்
கடை களில் ஆளுக்கு 15 கிலோ
அரிசி  இன்றிலிருந்து
மாதந்தோறும்  இலவசம்

ஒருவருக்கு ஒருவீடு மட்டுமே
வைத்திருக்க  உரிமையுண்டு
பல வீடுகள்  காணிகள்
இருப்பின்  அவை
  அரசுடமையாக்கப்பட்டு
மனை  இல்லாதவர்களுக்கு
வழங்கப்படும்

வேலை தேடுபவர்களுக்கு
கொட்டல்கள்  இலவசம் 


எரிபொருள்கள்  பாவிக்க முடியாது
அவசர சிகிச்சை வண்டி மட்டும்  ஓட்டலாம்
 மருந்துவமனைகளில் மட்டும் மின்சாரம்
பாவிக்கலாம்
திரையரங்குகள்  இனி  இல்லை 
அங்கே ஆடுகள்    மாடுகள்
கட்டலாம்  வீட்டுக்கு 
வேலையாள்  வைத்தல்  தடை

பெற்றோர் பேசி   கலியாணம் 
செய்யது வைக்க  முடியாது 
காதல் செய்தே
மணம் முடிக்கவேண்டும்
ஆணும் பெண்ணும் 
கண்டிப்பாக  திருமணத்துக்கு முன்பு
உடலை வைத்திய  பரிசோதனை செய்து
சான்றிதழ்  பெறவேண்டும்
அதை  அரசுக்கும் 
பெற்றோருக்கும்
காட்ட வேண்டும் 
பொய்யான  சான்றிதழ்
கொடுப்பவருக்கு 
சாட்டையடியும்
கடுந்தண்டனையுமுண்டு
கையூட்டு  வாங்குபவர்கள்
கொடுப்பவர்களுக்கும் அகிதே

மின்சாரம் தொழில்களுக்கு மட்டுமே
பாவிக்கலாம்
வீடுகளில்  எண்ணெய்  விளக்கே
மக்கள் போக்கு வரத்துக்கு
கால்நடைகளை மட்டுமே
 பயன்படுத்தலாம்
அநியாய விபத்து  மரணங்கள்
குறைவடையும்

கமல் ரஜனி  விஜய் அஜீத்
சிம்பு விக்ரம்  தனுஸ்  மற்ற
நடிகர்களெல்லாம்
மாட்டு வண்டிலில் சென்று
 கூத்து காட்டி
திருவிழாக்களில் நாடகமாடி
மக்கள்  கொடுக்கும்
அரிசி பருப்பு  உப்பு புளி
சக்கரையை சம்பளமாகப் பெறலாம்

நயன்தாரா திரிசா  சிரேயா
எல்லோரும் கரகம் ஆடி
உணவைப்   பெறலாம்  
முழங்காலுக்கு  மேலே
ஆடை   அணியும் பெண்களுக்கும்
ஆண்களை  சபலத்துக்கு 
உள்ளாக்கும் பெண்களுக்கும்
நடிகைகளுக்கும்
நடுச் சந்தியில்  வைத்து 10 கசையடி
தண்டனையாக்கப்பட்டுள்ளது
தமிழர்களுடன்  தமிழில்
பேசாதவர்களுக்கும்  அகிதே
எல்லா அந்நிய மொழிகளையும்
படிக்கலாம்

கற்பழிக்கும்  கொள்ளையடிக்கும்
கொலை செய்யும் குற்றவாளிகள்
  கொடிய மிருகங்கள் வாழும்
நடுக்காட்டில்  விடப்படுவர்

விவசாயிகள்  மீனவர்கள்  மற்றைய
தொழிலாளர்கள்  எல்லோருக்கும்
நாட்டில்  சிறந்த  மரியாதை 
செய்யப்படும்  அனைத்து
தொழிலாளர்களுக்கும் 
சீருடைகள்
பாதுகாப்பு  கவசங்கள்
கையுறைகள் சப்பாத்துக்கள்
  வழங்கப்படும்
அவற்றை அணிந்தே தொழிலில் ஈடுபடுதல் வேண்டும்
அணியாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள்
( சீருடைகளை  அணிந்து  சப்பாத்துக்களை
அணிந்து  தொழில் பார்க்கும் போதே
தொழிலாளிகளுக்கு  மதிப்பும் மரியாதையுமுண்டு )

டி வி  இல்லை  அதனால் தொடர்
நடிக நடிகையரும்  தேவயாணி  சீதா
ராதிகாவும் 
தெருக்கூத்தை  ஆடலாம்
உணவை உடையை  சம்பளமாகப்
பெறலாம்

தமிழைக்   கொலை செய்யும் ஊடகங்களுக்கு
கடுந்தண்டனை  விதிக்கப்படும்
வெளிநாடுகளுக்கு கப்பலிலேதான்
பயணம் செய்ய முடியும்
வானூர்திகள்  இல்லை 
ஆபத்துமில்லை

கடின  உழைப்பை 
மேற்கொள்பவர்களுக்கு
நாளும் 1 பானை கள்ளு
இலவசம் 
கள்  தவிர மற்று
அனைத்து மதுக்களுக்கும்  தடை

அரசியலாளர்கள்  4 மணி
அதிகாலையில்  எழுந்து
பொதுக்கழிவறைகளையும்
தெருக்களையும்  சுத்தம் செய்ய வேண்டும்
அவர்களுக்கும்  குடும்பத்தவர்களுக்கும்
உணவு  அரசால்  சமைத்து வழங்கப்படும்
அவர்கள் வீட்டில்  சமைக்கத் தடை விதிக்கப்படுகிறது
அரசு கட்டிக்கொடுக்கும்  இல்லத்திலேதான்
அரசியலாளர்கள்  வாழவேண்டும்
6 மாதங்களுக்கு ஒருமுறையே   கூட்டம்
நடத்தலாம்  அதுவும்  கடற்கரை வெளிகள் 
மைதானங்களில்  மட்டுமே  நடத்த அனுமதி 
போக்குவரத்துப்   பாதைகளில் மேடை போட
அனுமதியில்லை

மோரே  இன்றுமுதல்  குளிர்பானம்
அனைத்து  இனிப்பு சோடாக்களுக்கும்  தடை  
கமம்  செய்ய விரும்புவோருக்கு
நிலம்  இல்லாவிடில்  அரசே  நிலம் 
இலவசமாக வழங்கும்   அதில் வீடு
கட்ட முடியாது

மனிதத்தை  மதிக்காது 
கொடிய  செயல்கள் செய்வோர்
குழிக்குள்   இறக்கப்படுவார்கள்
 குற்றத்துக்கு அமைய 
காலம்  நீளும்

சந்திகள் தோறும் உணவைப்  பாதுகாக்கும்
சாதனம்  வைக்கப்படும்  அதற்குள்
வீட்டில் மிஞ்சிய  உணவை  கொண்டுசென்று
வைக்கலாம்  பசிப்பவர்கள்  எடுத்து  புசிக்கலாம்
சம்பளமாக  உணவும்  உடையும் மட்டுமே  வழங்கப்படும்

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக