நீ போறியோ இல்லை நான் போகட்டோ
நம் உடலுக்குள் இருந்து நோய்கள் கதைக்கலாம்
யார் முதலில் (எந்த நோய் ) தாக்குவதென்று .
எப்பொழுதும் எதையும் தாங்க மனதைப் பக்குவம்
செய்ய வேண்டும் .
உடல் எடுத்தால் அதற்கு நோய்கள் வரும் விபத்து உண்டாகும்
எதுவும் நடக்கலாம் , கலங்கி அழுவதால் பயனில்லை
எதையும் ஏற்கப் பழகினால் நிம்மதி உண்டாகும் .
நல்வழியில் அனுபவித்து வாழ்ந்தவர்களுக்கு பக்குவம் ஏற்படும்
நாலுபேருக்கு உதவி வாழ்பவர்களுக்கு நெஞ்சில் நோவு வராது
வந்தாலும் நிலைக்காது .
அதுவில்லை இதுவில்லை என்று ஏங்கித் தவிப்பவர்களுக்கு
என்றும் நிம்மதியில்லை
நிறைந்த செல்வமிருந்தும் அனுபவியாது உதவி கேட்போருக்கு
கொடுத்து வாழதவரும் பிச்சையெடுக்கும் ஏழைக்கு சமமே
கொடுப்பதுவும் துய்ப்பதுவும் இல்லார்க்கு ;அடுக்கிய
கோடி உண்டாயினும் இல். (குறள் -1005)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக