வெள்ளி, 5 செப்டம்பர், 2014

இருக்கின்றது என்பது  அறிவுக்கு  தெரிகின்றது
ஒன்று  என்னை  காக்கின்றதென புரிகின்றது
அதை  கண்களால்  பார்க்க முடிவதில்லை 
கண்களின்  மேல் இருந்தும்   கண்களை
காக்கும் இமைகளையே  எம்மால் 
பார்க்க  முடிவதில்லை  அப்படியிருக்க
எல்லாவற்றுக்கும்  மேலான கடவுளை
 எப்படிக்   காண முடியும்
இமைகள்  இருக்கின்றது  என்பதை 
உணர்கின்றோம்  அதுபோலவே
கடவுளை  உணரலாமே  தவிர
உருவத்துடன்  பார்க்க முடியாது
உருவுடன்  பார்க்க  முடிந்த  கடவுள்கள்
அன்னையும்  தந்தையுமே   அவர்கள் 
கைகளையும்  கால்களையும் 
போன்றவர்கள்  இந்த  உயிரை
உருவாக்க  உதவியவர்கள் .
மனக்கண்ணாடியில்  இறைவனைக்
காணலாம்   புறக்கண்ணாடியில்
இமைகளைக்  காணலாம்.

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக