புதன், 10 செப்டம்பர், 2014

நுய் ஹாவ்ன் - புதிய துறைமுகம்  .

1671 இலிருந்து 1673  காலப்பகுதியில்   சுவீடன் நாட்டு சிறைக் கைதிகளால்  கட்டியெழுப்பப்பட்டதே  நுய் ஹாவென் என்றழைக்கப்படும்  கடலிலிருந்து  செயற்கையாக வெட்டப்பட்ட கால்வாய்  இது ஆரம்ப காலத்தில் பொருட்களை  நகருக்கு கொண்டுவர அமைக்கப்பட்ட சிறிய  துறைமுகம்  1658 - 1660 இல் நடந்த  டெனிஸ்  சுவீடன்  போரில் அகப்பட்ட  போர்க்கைதிகளைக்கொண்டு   5ஆம் கிறிஸ்டியன்  இந்த  சிறிய துறைமுகத்தை  அமைப்பதற்கான  திட்டத்தை நிறுவினார்,   5ஆம்  கிறிஸ்டியன் தமிழை  நன்றாக  கற்று  மிகவும்  தமிழின்  செழுமையை  உணர்ந்தவர்  அன்றைய  கூட்டங்களில்  தமிழின்  பெருமையை  தனது நாட்டு மக்களுக்கு  எடுத்து  சொல்லி தமிழை படியுங்கள் இனிய மொழி  என்று  சிபாரிசு செய்தவர் .

நுய் ஹாவென்  1980 களில்  புதுப்பிக்கப்பட்டது  முன்னர்  மாலுமிகளின்  களியாட்ட  கூத்து
தளமாகவே இருந்த  இடம் பின்னர்  சுற்றுலா  மையமாக  மாற்றப்பட்டது.  விதம் விதமான  உணவுகளும் மதுக்களும்  உண்டு குடித்து  களிக்க ஏற்ற இடமாக  இன்று  நுய் காவென்  திகழ்கிறது
படகுச்  சவாரியுமுண்டு   வசந்தகாலங்களில்  நன்றாக  வெய்யில் அடிக்கும்  நேரங்களில்  உல்லாசப்
பயணிகளால்  நிரம்பி  வழியுமிடம்,  உலகின் பல்வேறு  நாடுகளிலுமிருந்து  சுற்றுலாப்   பயணிகள் 
இந்த  இடத்துக்கு வந்து  களித்து மகிழ்வார்கள்  அழகிய  நிறங்கள் பூசப்பட்ட  தொடர் வீடுகள்
அதை ஒட்டியிருக்கும்  விடுதிகள்  மறுபுறம் கால்வாய் அதில்  சிறிய  பெரிய  படகுகள்  கட்டுகளில்
குந்தியிருந்து கதைபேசி   மகிழும்  மக்கள்  ஐஸ்கிரீம் கடைகள்  மதுச்சாலைகள் வேடிக்கை காட்டுவோர்   இசைமீட்டும்  கலைஞர்கள் என்று நுய் காவென்  களைகட்டும்  அழகிய இடம்.   கோப்பென்ஹாஹன்  நகருக்கான  நுழைவாயில்  இங்கிருந்தே  ஆரம்பிக்கின்றது  இப்பொழுது மெட்ரோ வும்   இங்கிருந்து  அனைத்து  உள் நகரங்களுக்கும்  ஓடுகின்றது  டென்மார்க்கின்  வரலாற்று புகழ் பெற்ற  எழுத்தாளர்
புலவர்  ஹோ  சி  அனர்சன்  இங்கு  20 ஆண்டுகள்  வாழ்ந்தார் என்பது  ஒரு  முக்கிய  குறிப்பு.

எங்கள்  தமிழ் மக்கள்  இங்கு வருவதில்லை  அடியேன்  1996,97,98 காலப் பகுதியில்  கோப்பென் காகன்   நரை  அண்மித்து  வாழ்ந்த போது  நுய்காவன்  சென்று   மகிழ்ந்ததுண்டு மிகவும்  அழகான
இடம்  பல்வேறு நாட்டினரை  காணலாம்  மனம் மகிழும்  இனிய  இடம்  டென்மார்க்  வரும் 
சந்தர்ப்பம்  கிட்டினால்  கோப்பேன்காகன்  வந்து  நுய்காவனை  பாருங்கள்  மகிழுங்கள்  .

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக