ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

எங்கள் எல்லோர் முதுகிலும்  அழுக்கு  இருக்கின்றது
அதை சற்று  கழுவ  உதவி  புரியும்  சவர்க்காரமாக
எழுத்தாளனின்  எழுத்து இருக்க வேண்டும்
ஒரு  வட்டம் போட்டு அதற்குள்  மட்டும்  நின்று எழுதாது
சகலதையும்  தொடவேண்டும் என்பதுவே  ஒரு நல்ல
எழுத்தாளனுக்கு அடையாளம் .

சமூக  அவலங்களை , அறத்தை சிந்திக்க மறுப்போரை
சிந்திக்க செய்ய   எழுத்து  அமையவேண்டும்
வெறுமனே  காதல்  கவிதை
எழுதி  யாருக்கும் பயனில்லை

படிப்பவர்களுக்கு ஒரு நியாயத்தை  சொல்லும் எழுத்தே  எழுத்து
பேசுவார்களோ  பிரச்சினை  வருமோ  என்று
பயப்படுபவர்களால்  சமூக  விழிப்புக்கு  ஒன்றுமே
சொல்ல முடியாது உண்மைகள்  உரைக்கின்
போலிகளுக்கு  உறைக்கவே  செய்யும்  அதனால் 
அவர்கள்  ஆத்திரங் கொள்ளலாம் ,
 ஆத்திரம்  கொள்வதை காட்டிலும் கருத்தை  சிந்தித்து
தம்மை மறுபரிசீலனைக்கு  உட்படுத்துதலே அறிவானவர்கள்
செயல்  - தனிநபர் அன்றில் குறிப்பிட்ட  சமூகத்தை 
இழிவு செய்வதாக  எழுதக்கூடாது  பொருந்தா  விடயங்கள்
மடைமையை  பண்பான ரீதியில்  சுட்டி காட்டலாம்
தவறான  விடயங்களை சுட்டி  காட்டுகையில்  அது 
தம்மை  இழிவு  படுத்துகின்றது  என்று  எடுத்தல்  அறிவீனம்
எழுதுவோரின்  சுதந்திரம்  மதிக்கப்பட வேண்டும் .
தமிழ்நாட்டில்  ஒருவர்  திரைக்கு பாட வருவது மிகுந்த சிரமம் அந்நாட்களில்  அப்படியான  சூழ்நிலையில் வந்து சில நெஞ்சு மறக்க முடியாத  பாடல்களை  தந்தவர்கள்  ஜென்சி , டி கே கலா
அன்புமலர்களே பாடிய  அஞ்சலி  இவர்களெல்லாம்  சிறந்த  குரல்வளம்  இருந்தும்  அதிகமாக 
பாட  முடியாது போனதேன் - இசையமைப்பாளர்களுக்கு  தைய  தக்க போட்டால்  வாய்ப்பு
நிரந்தரமாகும் இல்லை  தயாரிப்பாளர்கள்  இவர்தான் பாடவேண்டும் என்று  சொல்லவேண்டும்

இசையமைப்பாளர்கள் தங்களின்  திறமையை  சர்வாதிகாரமாக்கி  தங்களுக்கு  நன்றாக சலாம்  போடும்  பாடகர்களை  பாடவைக்க  தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் உச்ச  நடிகர்களையும் மருட்டி   அன்றில்  அடம் பிடித்து பாட வைத்தவர்களே  எம் எஸ் வியும்   இளையராஜாவும் .

 இந்த கூத்துக்கு நானறிந்து முதல் தாளம் போட்டவர்  எம் எஸ்  வியே  தெலுங்கில்  கண்டசாலாவே
என் டி ஆருக்கும்  ஏ என்  ஆருக்கும்  பாடி வந்தார்  அதையே அங்கு  எல்லோரும் வரவேற்றார்கள் 
தமிழில்  டி எம் எஸ்  எப்படியோ  அப்படி  தெலுங்கில்  கண்டசாலா  .  அவரை  தவிர்த்து  பி பி  சீனிவாசை  பாடவைத்தவர்  எம் எஸ் வி ,   இரசிகர்கள்  நொந்து கொண்டனர் .  சீனிவாஸ்  நல்ல பாடகரே    ஆயினும்  தெலுங்கில் தலைமை  நடிகர்களுக்கு  அவர்  குரல்  கண்டசாலாவுடன் ஒப்பிட்டால் பொருத்தம்  சற்று குறைவே  அது  தெலுங்கு  இரசிகர்களின்  இரசனை கணிப்பு .

தமிழில்  ஏ எம்  ராஜாவை  ஒதுக்கி
பி பி எஸ்ஸை  முன்னுக்கு உயர்த்தியவர்  எம் எஸ்வி  ,  கன்னடத்தில்  பி பி எஸ்ஸே
தலைமைப் பாடகர் - பின்பு  டி எம் எஸ்ஸை  ஒதுக்கி  பாலுவுக்கு  வாய்ப்பு  கொடுத்தார்  எம் எஸ் வி,
அப்படி  வந்த பாடலே   "வெற்றி மீது வெற்றி வந்து" பாடல்   நல்லாயிருந்தாலும்   டி எம் எஸ்  பாடும்
நிறைவைத்  தரவில்லை, எம் ஜியாரும்  டி எம் எஸ்ஸையே
பாட வேண்டியும்  எம் எஸ் வி  தன்  பிடிவாதத்தை  அன்பால் தன்  விருப்புக்கு மாற்றி  நடந்து கொண்டார் - இளையராஜா  கூத்துகள்  உலகே  அறியும்  இங்கு விபரிக்கத்   தேவையில்லை
இவர்கள் இருவரும்  பெரும் திறமை சாலிகள்  அதில் மாற்று கருத்தில்லை  அவர்களின் 
தனிப்பட்ட  திணிப்பையும்  திறமை மிகுந்த  கலைஞர்களை  ஒதுக்கியமையுமே   அவர்களின்பால்
பிடிப்பின்மையை  உண்டாக்குகின்றது

 

saathi

இந்த  பிள்ளைகளில்  எவர்  என்ன  சா - அறியமுடிகின்றதா  இவர்களில்
தேவர்  யாரு  கவுண்டர் யாரு  பிராமணன் யாரு  வன்னியன் யாரு
வண்ணார் யாரு அம்பட்டர் யாரு  வெள்ளாடன் யாரு  கரையான் யாரு
கள்ளர் யாரு  நளவர் யாரு பள்ளர் யாரு  பறையன் யாரு 
யாரு யாரு  எல்லோரும் மனிதர்களாகவே  எனக்கு  தெரிகின்றது
இவர்கள்  வளர இவர்களின்  உறவினரே நீ இன்ன --- என்று  புகட்டி
கெடுக்கின்றார்கள்   இவர்களுக்குள்  நஞ்சை
ஊட்டி  பிரிவினைக்கு  வழி வகுக்கின்றார்கள் அவனோடு  நீ
சேராதே இவனை வீட்டுக்கு  கூட்டி வராதே  அவன் தந்தால்
வாங்கிச்  சாப்பிடாதே  அவன்  அது  இவன் இது  நாங்கள்
வானத்திலிருந்து  குதித்தவர்கள்   கடவுளுக்கும் மேல் என்பார்கள்

தமிழரின் இத்தனை  அழிவுகளுக்கும்   இழப்புகளுக்கும்  அடி ஆழம்
நமக்குள்  தூங்கும்  வர்ணப் பற்றே - எல்லோர் கவடுகளும்
கழுவாது விட்டால்  அசுத்தமே - மனதை  கழுவினால்
எல்லோரும்  மனிதர்களே .

  நீ பிறந்த  சில  மணிநேரங்களிலேயே
ஒரு  வெள்ளைக்கார  தம்பதிகளால்  தத்தெடுக்கப்பட்டு  ஐரோப்பாவிலோ
அமெரிக்காவிலோ  வளர்ந்து வாழ்வாயானால் உனக்கு நீ  என்ன  சாதி  என்று
தெரியுமா  - வெள்ளையர்கள்  எந்த தொழிலும் செய்யத் தயார்  எல்லோரையும்
மதிக்கின்றார்கள்  குறிப்பாக  தொழிலாளர்களை  உயர்பதவிகளில்  இருப்போர்
மகிழ்வித்து மதிக்கின்றார்கள்  ஒரு  கூட்டத்தை  கூட்டினால் தொழிளார்களுக்கு 
உணவு  குடி  எல்லாம் வழங்கியே  தங்கள்  திட்டங்களை  அறிவிப்பார்கள் 
நாலடி  தள்ளி நின்று  சின்னவன்  நாளைக்கு  அதைச்  செய்  இதைச்  செய் என்பதில்லை

இத்தனை  அறிவியல்  சாதனைகளை  நிறுவிய வெள்ளையர்கள்  சாதியை  ஏன்
நிறுவ வில்லை  அவர்களுக்குள்ளும்  பல்வேறு  தொழில்  செய்பவர்கள்
இருக்கின்றார்களே  ஒரு மகன்  இஞ்சினியர்  ஒரு மகள்  துப்புரவுத் தொழிலாளி
மற்றவள்  பெயிண்டர்  இன்னொருவன் வெல்டர்  இன்னொருவன்  வைத்தியர்
அம்மா  சட்டத்தரணி  அப்பா  பேருந்துச் சாரதி  எல்லோரும்  மாலையில்  ஒன்றாகக்
கூடி மகிழ்ந்து  உணவு உண்பார்கள்  இப்படியாக வெள்ளை மக்களின்   ஒவ்வொரு குடும்பங்களுக்குள்ளும் இருப்போர் பலவிதமான பணியினை ஆற்றுபவர்களாகவிருப்பார்கள்.

நம் தமிழ் குடும்பங்களுக்குள் மட்டுமே அப்பா  இஞ்சினியர்  என்றால்  பிள்ளையும்
அதே  படிப்பு  அல்லது   சட்டம்  மருத்துவம்  என்று  வரவேண்டும்  என்று  எதிர்பார்ப்பு
ஒரு  வெல்டர் ஆனாலோ  வேறு  உடல்வருத்தி செய்யும் தொழில்  செய்தாலோ
கேவலம் எனக்கருதும்  அறிவற்ற மனப்பாங்கு ஆனால்  வெளிநாட்டில் நன்றாக் கூட்டுகின்றார்கள்
காரணம்  காசு   இங்கு கூட்டினாலும்  உள்ளுக்குள்   அங்கே  பற்றிய  மாயை மீளவில்லை.

இதில்  சம்பள ஏற்றத்தாழ்வே  பிரிவினைக்கு  வித்திடுகிறது  மற்று  சீதனம்
என்ற நடைமுறை  போலி மதிப்பு மரியாதை  பார்த்தல் போன்ற எண்ணங்கள்
பிரிவினையை  ஏற்றத் தாழ்வை  தூபமிட்டு வளர்க்கின்றது அதிலே பழகிப் பழகி
அதை உண்மையென்று  நம்பி  அறிவை  முடமாக்கி வாழ்கின்றோம்  எத்தனை
படிப்பு படித்தென்ன  நம்மவர்கள்  அகம்  சாதி  நஞ்சு  கொண்ட  நாகம் என்றே
ஊர்கின்றது  நஞ்சு  நீங்கி  மனம் சமத்துவத்துக்கு மாறுமா  ? உண்மையை
சிந்திக்க  எத்தனை  அறிவாளிகள்  தயார்.

எனது  பாட்டன்  பேராசிரியர்  க .சோமலிங்கம்  சமத்துவம்  வேண்டுமென்று  சாதிக்கு எதிராக
போராடி  தனது  சாதியினரால்  வெறுக்கப்பட்டு  ஒதுக்கப்பட்டு  மனமுடைந்து
இறந்த  போராளி  என்பது எனது தாயாரால் நான்  அறிந்த  செய்தி, அதை  நான் என்றும்
மறப்பதில்லை  -  வாழ்க நலம் .

ம.இரமேசு
 

சனி, 30 ஆகஸ்ட், 2014


எகிப்திய  நாட்டின் கடற்கரையோரம் 
இளந்தமிழ்  வீரர்   பவனி வந்தார் 
கவியரசர் 

எப்படியிருந்த  நாம்  இப்படி  ஆயிட்டமே

மாதம்  மும்மாரி  பொழிகின்றதா  அமைச்சரே 
என்று தமிழரசன் கேட்டான் என்றால்
அவன்  அந்தப்புரத்தில்  இன்பம் துய்ப்பதிலேயே
ஆண்டு  தேயுமளவுக்கு காலமோட்டியிருக்கின்றான்
வெளியில்   மழை  பெய்வதே தெரியாது ,  அப்படி
இருந்ததால்   நாட்டை  இழந்து அந்நியர்க்கு  அடிமைகளாகி  
தமிழர்கள்  அகதிகளாகி  எங்கெல்லாமோ  வாழ்கின்றார்கள்

"நாள் தொறும் நாடி முறைசெய்யா  மன்னவன்
 நாள்தொறும் நாடு கெடும்"

சொந்த நாட்டில்  உழைத்து  பிழைக்க  முடியவில்லை
ஆழமாக  சிந்தித்தால்  வெட்கம் வெட்கம் வெட்கம்

ம.இரமேசு 
பூராசாத்தியின்  ஆசை

மாம்பழத்தி  அங்கம்  பார்ப்போர்  மனசை பங்கம் பண்ணும் , ஒரு நாள்  காலை  யாழ்ப்பாணம்  போக
பஸ்சுக்காக (பேருந்து)  நின்றிருந்தேன்  அழகாக  நடந்து வந்து  என் பக்கம் நின்றவ  தன்  தோளை
பார்க்க  சொல்லி காட்டினா  எனக்கு கூச்சமோ   கூச்சம்  தனக்கு  ஒப்பரேசன்  செய்ததாம்  அந்த  அடையாளம்  தெரியுதோ என்று கேட்டா   நான் இல்லை என்றேன்  அவவுக்கு பெரும் சந்தோசம்
முகத்திலை   நடனமாடிச்சு .

அடுத்தவேளை  என்ன  சமைக்கிறது  என்ற  மனவோட்டத்திலை   சங்கக்கடைக்கு  போகும்
ஆச்சிகளை வயசு போய்விட்டுதே  ஆரோக்கியமும்  குன்றிவிட்டுதே என்ற நினைப்புடன்  தள்ளாடி நடக்கும்  அப்புகளை  நிற்பாட்டி  நான் வடிவா இருக்கிறனே  என்று கேட்டு  தன் அழகை  பிறர்வாயால்  பரிசீலிப்பது பூராசாத்தியின்  வேலை ,  அதுவே     அவவின்    நடைபாதை  உரையாடல் .

நாய்க்கு  பயந்து பொட்டுக்குள்ளாலை  ஓடிவந்து  மூச்சுவிடும்  கோழிபோலவே  பூராசாத்தியின்
தோற்றம்  அவவுக்கு தான் பெரிய  அழகியென்று  தனக்குள்ளை  நினைப்பு  மற்ற  பொம்பிளையள்  தன்னை விட  அழகா  இருந்தால்  நெருப்புக்  கோபம் வரும், வலியப்  போய்   பஸ்சுக்கு  நிற்கும்  அழகான  பெண்களுக்கு பக்கத்தில் நின்று வம்பிழுப்பது  பூராசாத்திக்கு  நன்றாகப்   பிடிக்கும்  அதனால்த்தானோ என்னவோ பூவை  கண்டால்  பாவைகள்   தூரச்   சென்று  நிற்பார்கள் - மாம்பழத்தை   கண்டால்   பூவுக்கு  பிடியாது,  மாம்பழம்  ஜெயலலிதாவின் தங்கையோ  என  பார்ப்போர்  கேட்கும் முகச்சாயல்  கொண்ட  இளங்கொடி ,  நிறம் எலுமிச்சை   உதடு செவ்விளனி  பேச்சு  பழனி பஞ்சாமிர்தம் .
 
கடைக்கு  குடையை  பிடித்துக்கொண்டு  போன  ராமப்புவின்ர  குடையுக்குள்ளை  போய்
நான் வடிவா  இருக்கிறனே  என்று  பூராசாத்தி  கேட்க மனிசன்  திடுக்கிட்டு  முழிச  பூ
உறுக்கி  கேட்க  மனிசன்  சிரிச்சுக்கொண்டு  ஓமெண்டு  தலையாட்ட  திருப்தி அடையாத
பூராசாத்தி  வாயை  திறந்து  சொல்லணை  என்று  ஆய்க்கினை  குடுக்க  மனிசன்  நல்ல்லா
இருக்கிறாய்  பிள்ளை  எண்டதுக்கு  பிறகே  பூவுக்கு  திருப்தியானது  தன்னை  வாயாலை
பாராட்டவேணும்  என்பதே  அவவின்ர   எதிர்பார்ப்பு, ஆசை.   ஆசை  எந்தெந்த  வடிவிலையெல்லாம்  சுத்துது ஆட்களிடம் பார்த்தீர்களா  நண்பர்களே   -  பொன்மனங் கொண்ட  மக்கள் எல்லோரும்  புவியில் அழகே,  யாரும் யாருக்கும்  குறைவில்லை  நெஞ்சத்து அழகே  உண்மையான  அழகு  - வாழ்க வாழ்க

உண்மையையும் கற்பனையையும்  கூட்டியவர்
ம.இரமேசு 

அறிவோம் புரிவோம் அமர்வோம்

 அறிவோம்  புரிவோம்  அமர்வோம்

நாங்கள்  பார்த்தவைகளும்  இரசித்தவைகளும்  எங்களுடன் அழியப்போகின்றது  ஒருநாள்  அதை
அழகாக  பதிவுசெய்துவிட்டு  சென்றால் பின் வருவோர் படிப்பார்கள்  அதுவே இலக்கியமாகும் 
கம்பர் தான்  படித்ததை வடித்தார்  என்றும் வாழும்  மனிதராகிவிட்டார்  அதுபோலவே  வில்லியும்
இளங்கோவும்,   நல்லறம்  சொன்ன வள்ளுவ மகானும் ஔவையும்   என்றும் வாழும்  மனிதர்களே
மனிதாபிமானத்தாலும்  சேவையாலும்  மக்கள் மனதில்  இருப்பவர்கள்  அன்னை தெரேசாவும் 
மக்கள் திலகமும்   அறிவோம்  புரிவோம்  அமர்வோம் - வாழ்க வாழ்க

ம.இரமேசு 
நேற்றொரு  தெரிந்தவன்

நேற்றொரு  தெரிந்தவன்  தொலைபேசியில்  வந்தான்   நான்  நிறைய காசு சேர்த்து  வைத்திருக்கின்றேன்
வெளிநாட்டில்  3 வீடுகள்  கார்   வான் ,  இந்தியாவில் ஒரு  பண்ணைவீடு,  இலங்கையில்  2 பெரியவீடுகளும்   தோட்டங்களும்  எனக்கு  இருக்கிறது,  வைத்தியர்  சொல்லிவிட்டார்  உனக்கு
சர்க்கரை நோய்  இனி நீ கண்டதும் சாப்பிடக்கூடாது  என்று  எனக்கு  என் வாழ்வை நினைத்தால்
கவலையாக  இருக்கிறது  பணம் இருந்தும் அதை அனுபவிக்கத்   தெரியாமல் இருக்கிறேன்  10 காசு
செலவளிப்பதற்கு  10 நிமிடம்  சிந்திப்பேன் அதனால் ஒன்றையும்  அனுபவிக்க முடியவில்லை
ஆசையிருக்கு  அனுபவிக்க  அங்கு இங்கு செல்ல , ஆனால் காசு கரைந்துவிடும் என்று  கட்டுப்படுத்தி
வைத்துள்ளேன் என்னை,  இளமையிலும்  ஆசைக்கு ஒரு இடமும் சென்றதில்லை   அனுபவித்ததில்லை 
வீட்டுக்குள்ளே இருந்து டிவி  பார்த்தே  25 ஆண்டுகளையும்  போக்கிவிட்டேன் இப்போ  வயது 50,   25
ஆண்டு இளமையை  அநியாயமாக்கி விட்டேன்  இன்னும்  சில  ஆண்டுகளில்  சாவேன்  என்  சொத்துக்கள் எனக்கு  பிரயோசனமின்றி  போகப்போகுது  என்பதே  என் கவலை என  ஒப்பாரி வைத்து
அழுதான்  அந்த  -------.

ம.இரமேசு 

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

இவர்களுக்குள்த்தான் இறைவன்  இருக்கின்றான் என்று  ஒப்புக்கொள்ளும் அறிவு   உங்களுக்கு  இருக்கின்றதா ?



* ஜெட் விமானத்தை கண்டறிந்தவர் -
ஃபிராங்க்விட்டில்
* பார்வையற்றவருக்கான
எழுத்துமுறையை கண்டறிந்தர் - லூயி பிரெய்லி
*
தொலைக்காட்சி பெட்டியை கண்டு பிடித்தவர்
- J.L பெயர்டு
* அம்மை தடுப்பூசியை கண்டறிந்தவர் -
எட்வர்டு ஜென்னர்...
* போலியோ தடுப்பு மருந்தை கண்டறிந்தவர் -
டாக்டர். ஜோன்ஸ் சால்க்
* டைனமைட்யை கண்டு பிடித்தவர் - ஆல்பர்ட் நோபல்
* இதயமாற்று அறுவை சிகிச்சையை முதன் முதலில்
செய்தவர் - டாக்டர் கிறிஸ்டியன்
பெர்னார்ட்
* குளோரோஃபார்ம் கண்டறிந்தவர் - ஹாரிஸன்
* இன்சுலின் கண்டறிந்தவர் - பேண்டிங்
* வெறிநாய்க்கடி மருந்தை கண்டறிந்தவர் -
லூயி பாயஸ்டியர்
* எலக்ட்ரோ கார்டியோகிராமை கண்டறிந்தவர் -
எயின் தோவன்
* பாக்டீரியாவை கண்டறிந்தவர் -
லீவன் ஹூக்
* புரோட்டினை கண்டறிந்தவர் - ரூதர் போர்டு
* எக்ஸ்-ரே முறையை கண்டு பிடித்தவர் -
ராண்ட்ஜன
 
மனிதனுக்கு  மனிதன்  சொன்னால்  நம்ப மாட்டான்
கடவுள் சொன்னது  என்றாலே  நம்புவான்
கொடுங்  கோர கொடிய செயல்கள்  புரிந்தவர்களுக்கு
ஆதிகாலத்தில்  உலகெங்கும்  கடுமையான  தண்டனைகள்
மனிதாபிமானம் கடந்து வழங்கப்பட்டது நம்  அரசர்கள்
அன்று கழுவில்  ஏற்றி கொன்றார்கள்  அதுவும்  கடவுள்
சொன்னதே என்றார்கள்  பின்  விதவைகளை  தீ குண்டத்துக்குள்
தள்ளி  கொன்றுவிட்டு  அதை  உடன்கட்டை ஏறுதல்  என்று
பெருமையாக  பேசினார்கள்  இந்த  கொடுமையை  எதிர்த்து
போராடி வெற்றி கண்டவர்  ராஜாராம் மோகன்ராய் .
மறுமலர்ச்சியை  புதிய  சிந்தனையை  ஆராய்ந்து  வரவேற்க வேண்டும்
என்றோ  எவரோ  அன்றைய  சூழலுக்கு சொன்னதை  அறிவியல் 
வளர்வுகண்ட  நாட்களிலும்  கடவுள்  சொன்னது என்று  கொண்டாடுவது
கற்றோருக்கு  இழுக்கு

 நெஞ்சில்  ஈரம்  இன்றி  தப்பு செய்தான் 
என்ற காரணத்துக்காக  கழுத்தை  அறுப்பதை  எக்காரணத்தை கொண்டும்
ஈவு  இரக்கம்  கொண்டோரால்  ஏற்க  முடியாது  சிறையில் அடைத்து
சிந்திக்க செய்தலே  கொடியவனுக்கு  கொடுக்கும்  தண்டனை
எத்தனை  கழுத்துக்களை  அறுத்தும் என்ன பயன்  தப்பு  செய்பவன்
பயமின்றி  செய்துகொண்டே இருக்கின்றான்  வெட்டும் நாட்டில் இவ்வாண்டு
 மட்டும் 54 பேர்  பலி தம்மை புனிதர்கள் என்று சொல்வோர்
விடுமுறை கிடைத்தவுடன் அண்டை நாடுகளுக்கு சென்று  சகல  அசுத்த  களிப்புகளும்
கொண்டாடிவிட்டு  பின்  தனது  நாட்டுக்குள்  நுழையும் போது
தூய்மை  கொண்டாடுவார்கள் - ஏழை நாடுகளிலிருந்து  வேலைக்கு
அழைத்துவிட்டு  பெண்களை  கற்பழிப்பது  கொடுமைப்  படுத்துவது
எதையும் முறைப்படி ஆழமாக  ஆராயாது  வெட்டியபின்  சுற்றவாளி
என கண்டவுடன்  போன  உயிரை  மீட்டு கொடுப்பார்களா
 
இசையால்  உருகாத  உள்ளமெது


 வரம்பினில் சாயும் கதிர்போல

நரம்பினில் சாயும் கை விரல்


கரும்பினில் ஊறிய சாறாக

உயிரினில் ஊறும்  இன்னிசை

வானுடன் நிலவு மயங்கி முயங்க

மாநிலம் மலரும் ஒளிபோலே 

தேனுடன்  மயங்கும் வண்டாக 

என் மனம் மயங்கும்  இசையாலே


ம,இரமேசு 
 
 
 
 
 
பாம்பின்  தலையை  நக்குவதற்கு  சமம்
பிறன் மனைவியை  கொள்தல் 

பாம்பின்  தலையை  நாக்கினால்  நக்கியவன்  கெதி  என்னாகும்  என்று  அனைவரும் அறிவார்கள்
அது போன்ற  ஒரு  செயலே  அயலவன் அன்றில் நண்பன்  மனைவியை  தன்  மகிழ்வுக்கு கவர்வது .

அம்பல்  அயலெடுப்ப,  அஞ்சித் தமர்பரீ இ,
வம்பலன் பெண்மரீஇ  மைந்துற்ற - நம்பும்
நிலைமையில்  நெஞ்சத்தான்  துப்புரவு,  பாம்பின்
தலைநக்கி  யன்னது  உடைத்து .

அம்பல் - இழிசொல்
அயலெடுப்ப - அயலவர் பேச
அஞ்சி - பயந்து
தமர்  பரீஇ- சுற்றத்தார்  வருந்தியிருக்க
வம்பலன் - அயலான்
பெண் மரீ இ -   மனைவியை  தழுவி
மைந்துற்ற  - மகிழ்ந்து 
நம்பும்  - அதை நிலையான  இன்பமென நம்பும்
நிலைமை இல் - உறுதியற்ற  நிலை
நெஞ்சத்தான் துப்புரவு  -  நெஞ்சமுடையவன்  துணிவு
பாம்பின் தலை நக்கி - விஷம் நிறைந்த  பாம்பின்  தலையை நக்குவது
ய (அ ) ன்னது -  போன்ற
உடைத்து - பயனற்ற  ஆபத்தான  செயலாகும் .

நாலடியாரிலிருந்து  -  ம.இரமேசு                                                                                                            
 
துன்பங்களை  கண்டு பழகியவன்
புதிதாக துன்பத்தில்  அழுபவனின் 
கண்ணீரை துடைத்து  ஆற்றுவான்
அநுபவம்  பக்குவத்தை  கொடுக்கும்
அதிர்ந்துவிடாத  தைரியத்தையும்  கொடுக்கும்.

ம.இரமேசு 
மரியாதைக்குரிய  நியாஸ் அவர்கட்கு  இதனால்  அறியத்தருவது  -  கல்வியின் பயன்  அறிவு   அறிவின் பயன்  பண்பு,  கருத்தில்  முரண்பட்டு  மறுதலிப்பு  உண்டென்றால் அதை நாகரிகமாக  மொழிதலே  பண்பு  நாரிகம்.  உங்கள் நண்பரானவர்  என்னை "லூசுப்பயலே"  என்று அநாகரிகமாக  எழுதியிருந்தார் 
  அவ்வாறு அல்லது  அதற்கு    மேலும்  அசிங்கமாக  எழுத  என்னாலும்  இயலும்  அவ்வாறு  செய்தல்  எனக்கே  நான் தேடிக்கொள்ளும்  அசிங்கம்  என்பதை  அறிவேன் அப்படி பழிவாங்கும்  இழி செயலை செய்யமாட்டேன்  என்னையும்  என்னை  அசிங்கப்படுத்துவோரையும் இறைவன்  கண்காணித்தபடியே  இருக்கிறான்  ஆதலால்  இறைவனிடம்  தீர்ப்பை  விட்டுவிட்டேன்   -  தங்களை  எனது  நட்பு வட்டத்தில் இருந்து  நீக்கவேண்டியவனாகின்றேன்  காரணம்  உங்கள்  நண்பருக்கு  பண்பாட்டின் பக்குவம்  இல்லை  அவரை  நட்பாக  கொண்டிருக்கும்  உங்களை  என்னால்  இணைத்துக் கொள்ள மனம் இடந் தரவில்லை -  நேற்று முழுவதும்  மிகுந்த மன நோவில் வாடினேன்  ஏனிப்படி  மனிதர்கள்  இருக்கின்றார்களே  என  எண்ணி , நான் அன்பையும் அகிம்சையையுமே  நேசிப்பவன்  வன்முறைகளை  ஆதரிப்பவன் இல்லை  என்  குடும்பத்தவர்க்கு  அன்றில் எனக்கே  ஒருவன் தீமை செய்யினும்  அவனை  கொல்ல மாட்டேன் அவனை  தண்டிக்க  எனக்கு  அதிகாரமில்லை  அவன் மீது ஆத்திரம் இருந்தாலும்  அதை  அடக்குதலே மிருகத்துக்கும்  மனிதனுக்குமுரிய  சிந்தனை வேறுபாடு  அதுவே  கற்றதன்  அடையாளம்,  அறிவு பண்பாடு --   நீங்கள்  என்றும்  இனிதே வாழ  இறைவனை  வேண்டிக் கொள்கின்றேன்  - வணக்கம் 

வியாழன், 28 ஆகஸ்ட், 2014


                         அறிவின் அறைகளை  விசாலமாக்கிய  மாமனிதர் 

வானிலிருந்து சோவென்று  மண்ணில்  வந்து  விழுவது  மழையொன்றே  காலநிலைகளுக்கு ஏற்ப  பனியும் அது சார்ந்த வையும்  கொட்டுகின்றன  சில சமயங்களில்  வான் கற்களும்  விழுவதுண்டு அவை எப்போதாவது  சில தடவையே  இப்போதெல்லாம்  மீன்களும்  விழுகின்றன  என்கின்றது  பத்திரிகை 
செய்திகள்
 வரலாறுகள்  கோட்பாடுகள் 
கொள்கைகள் சட்டங்கள் திட்டங்கள்  வானிலிருந்து  கொட்டப்படுவதில்லை  அவை 
மனிதர்களால்  உருவாக்கப்படுபவையே -  அனைத்து  உயிர்களும்  மண்ணில்  வாழ்வதற்கு 
ஐம்பூதங்களே  துணைசெய்கின்றன  அவற்றில் ஒன்று  இல்லை என்றாலும் இல்லை  மண்ணில் உயிர்
இதை உணர்ந்தே  தமிழர்கள்  ஐம்பூதங்களை வழிபட்டார்கள்  என்ற உண்மை  யாவரும்
அறியத்தகுந்தவொன்றே 

உப்புநீரை  குடித்து  பழகியவன்  நந்நீரை  குடிக்க 
நினைக்கமாட்டான்  தான் குடிப்பதும் கொண்டதுமே உயர்வானது என்ற  எண்ணம் 
அவனுக்கு  அவன்  பார்வையில்  மறுமலர்ச்சிக்கு 
புதிய சிந்தனைக்கு  இடமில்லை  சிந்திக்க  வைப்பவர்களை  எளிதாக  முட்டாள் பயலே 
என்று சொல்லிவிட்டு  கச்சல்  தண்ணீரையே  குடிக்கும்  அறிவாளி  அவன்.

இப்படியான  ஒரு காலத்தில்  தோன்றி  அவலங்களை அறிவீனங்களை  ஒழித்து கட்டிய 
மாமனிதரே  ராஜாராம்  மோகன்ராய்  வங்கத்திலே 
ஒரு பெரிய  செல்வந்தர்வீட்டில் பிறந்து  ஆங்கில 
நாடுசென்று படித்து பட்டம்பெற்று  அறிவின் அறைகளை  விசாலமாக்கிய  மாமனிதர்
உடன்கட்டையேறுதல்  என்ற  கொடிய  வழக்கத்தை எதிர்த்து  போராடி வென்றவர் 
கைம்பெண்களை  காப்பாற்றிய  மகான் - இது எங்கள்  மதச்சடங்கு  கொள்கை 
கடவுள் அருளியது இதில்  நீ தலையிடாதே  என்ற அறிவிலிகளின்  கருத்துக்களை தனது  அறிவம்பால் 
தாக்கி  வென்றவர்  ராஜாராம்  மோகன்ராய்  - நீயொரு  முட்டாள்  (லூசுப்பயலே ) என்று  மொழிந்த  லூசுகளை லூசாக்கியவர் (இளக்கியவர் ) கொடுமையை  ஒழித்துக்கட்டியவர்  சிந்தி என்று சொல்பவனை இளக்காரம்  செய்வது  மனித குலத்தில்  என்றும் இருந்துவரும் குறைபாடுகளிலொன்றே 
அன்றைய  காலத்தில்  ஒரு  புரட்சி கருத்தை சொல்லி  சிந்திக்க வைப்பது  மிகவும்  கடினமான 
காரியம்  அதற்கு துணிவும் வேண்டும்  திறமையும்  வேண்டும்,  சகல  வளமும்  அவரிடம் இருந்ததனால்   வென்றார்.  இன்று  சிந்திக்க சொல்பவர்களை கொலைவெறியுடன்  பார்க்கும் 
உயிர்கள்  நிறைந்த காலம், கொலையே  செய்துவிடுவார்கள்,  மனிதாபிமானமற்ற  வழக்கங்களை  கையில் கொண்டிருப்போர் . படுபாதக தீர்ப்புகள்  சிலவமயம் நிரபராதிகளையும்  எமலோகம்  அனுப்புகின்றது என்பதை  காண்கையில்  இளகிய மனங்கள் மிகவும்  வேதனையடைகின்றது 
                                         இன்பமே  சூழ்க எல்லோரும் வாழ்க.
ம.இரமேசு







 

புதன், 27 ஆகஸ்ட், 2014


அல்லாவை  மட்டும் மதிப்பவர்க்கு

அல்லாவை  மட்டும் மதிப்பவர்க்கு  ஆபிரகாமும்  அப்துல்லும் ஆறுமுகமும்  ஒன்று
அகிம்சை  அல்லா  தவரின்  கோட்பாடுகளை  மதிப்போர்க்கே மாற்றார்  அமரார்
கொள்கையெனக்  கொண்டோர்  கொலைவெறிச்  சட்டம்  அல்லாவின்  பெயரால்
சரியா  என்று கொண்டு  வெட்டி  பலியிடுதல் வீரமோ  வேண்டுதலோ  அன்போ ?
மனிதரில்  மாற்றுக்   களைகளுமுண்டு அவர்க்கு   அன்பே  சிறை  அடித்து  வெட்டி
அறுப்பதன்று -  என்  அன்புச்  சகோதரா,  உன்னை  படைத்தவனே   என்னையும்
படைத்தான்  துரோகியையும்  படைத்தான்,  தண்டனை  கொடுக்க  நமக்கு 
ஏது  தகுதி , படைத்தவனே   பார்ப்பான் தண்டனையை , அவனை 
நம்பாதவனே  வகுப்பான்  ஹரியா  சட்டத்தினை - உண்மை  அன்பு  நேர்மை
பாசம்  மென்மை  இதுவே  அல்லா  சொன்ன  வேதம்
                                       வாழ்க  வாழ்க 

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

அம்மா தாயே  நயினையாளே நாகம்மாளே போற்றி போற்றி 

கங்கை சூடியான்  பாதியங்கம்  கொண்டவளே 
நம்பியை ஏந்தி   நயினை  வந்தமர்ந்தவளே 
அமுதசுரபியால்  அன்னமிடும்  நயினையாளே 
உன்  நாமம்  சொன்னால்  நம் கேடு கெடுமே 

நமையாதரிக்க  யாருமிலை யென்றுவந்தாயோ  தேவி 
வேலை ஈன்ற நாகம்மா எம்மை நாளும் காரம்மா 
தோணியேறி  செல்கையிலே துணை நமக்கு  நீயே 
வானாய்  மண்ணாய்  கடலாய் காற்றாய்  எல்லாம் தாயே 

மனமுள்ளோர்  கரங்களுக்கு  பண  வசதி  கொடுதாயே 
நல்ல  வழிக்கு  மாறி விட்டோரை  ஆதரி அம்மா தேவி 
உதவும்  கைகளுக்கு துணையளிக்க மனங்  கொடுப்பாய்  
அன்னையே நீயன்றில்  எனக்கு வேறு  யாருமில்லையம்மா 

அம்மா தாயே  நயினையாளே நாகம்மாளே போற்றி போற்றி 
அம்மா தாயே  நயினையாளே நாகம்மாளே போற்றி போற்றி 

தமிழன் ஞானத்துக்கு அன்புக்கு ஈடு இணையேது .

தமிழன் ஞானத்துக்கு  அன்புக்கு ஈடு இணையேது .

யாதும் ஊரே  யாவருங் கேளிர் தீதும் நன்றும்  பிறர் தர வாரா ,  நோதலும் தணிதலும் அவற்றோரன்ன , சாவதும் புதுவதுவன்று முனிவின் இல்லாததொன்றுமிலவே , வாழ்தல் இனிதென மகிழ்ந்தொன்றுமிலவே, விண்ணொடுவானம்  தண்துளி தலியியானது , கல்பொருது இரங்கும் மல்லற்  பேராற்று நீர் வழிப்படும் புனைபோல்  ஆருயிர் முறையே வழிப்படும் என்பது  திறவோர் காட்சியின் தெளிந்தனம்  ஆதலின்  மாட்சியில் பெரியோரை  வியப்பதுமிலவே  சிறியோரை இகழ்வது
அதனிலுமிலவே . 

நம்மை  நாமே  அறிவோம்  எமக்குள் ஓடுவது  பன்னீரா  சாக்கடையா  அதிகமென்று   நமக்கே  நன்றாகத்  தெரியும்  முழுவதும் பன்னீருமல்ல   சகலமும்  சாக்கடையுமல்ல  நல்லவர்களாக
காட்ட சிறு நாடகம்  நமக்குள்ளே  நடக்கின்றது  அதனால்  பெரும்பாலும் நல்ல எண்ணங்கள்
அறம், தர்மம்  உள்ளுக்குள்ளேஉருளுது  சாக்கடையெண்ணமெலாம்   சந்தனமாக நாளும்
சுத்தீகரிக்கப்படுகின்றது  இது நல்ல அறிகுறி.

நானே ராஜா  ராணி  என்ற போதையழிகின்றது  எல்லோரும்  இனிதாக வாழவேண்டும்
எல்லோரையும் மதிக்க வேண்டும்  என்றே  அறிவும் மனமும்  இந்த விடயத்தில்  காதலர்போல்
ஒன்றாகின்றது  எனக்காக  அன்பு செய்ய  நட்புகொண்டாட  இனிய இதயங்கள்  பூமிப்பந்தில்
நிறைய  இருக்கின்றன  என எண்ணுகையில்  பெரும் மகிழ்வும் தெம்பும்  உண்டாகின்றது
எத்தனை  வசதிகள் ஆடம்பரங்கள்  குவித்து  பெரும் செல்வத்துடன் வாழ்ந்தாலும்  அதனால்
காண்பது  இறுதியில் என்ன என்று ஆழமாக  சிந்தித்தால்  எந்தவித  இனிமையுமல்ல
என்ன இது  ஒரு  ஆசைக்கு  அடிமையாகும் வாழ்வே  ஆலமரத்தடியில்  ஒரு  துண்டை
கட்டிக்கொண்டு  இருப்பவனும்  வாழ்கின்றான்  கோடீஸ்வரனும்  வாழ்கின்றான் 
நாளும்  ப்ரியாணி  உண்பவன்  ஒரு பக்கம்  நாளும்  பிச்சை எடுத்து  உண்பவன்  மறுபக்கம்
இருவருக்கும் பொது வேண்டுதல்   உயிருடன் இருப்பது  மட்டுமே அதுவே  உண்மை உண்மை
"வாழ்தல் இனிதென  மகிழ்ந்தொன்றுமிலவே"   என்ற கணியனின்   வரிகளின்  உண்மை
எளிமையை நிலையாமையை  உணர்த்துகின்றது    "சாவதும் புதிதல்ல"  என்ற  அவரின்  வரி  மரண பயத்தை விரட்டிவிடுகின்றது. உனக்கு முன்னால் இறந்தவர்கள் எத்தனையோ கோடி
அதை நினைத்துப்பார்த்து  நிம்மதியாக  வாழ்  சாவை எண்ணி நிதம்  பயப்படாதே என்று  கூறுகின்றார்.

மாட்சியில் பெரியோரை  வியப்பதுமிலவே  சிறியோரை  இகழ்வது அதனிலுமிலவே  என்றார்  கணியன் - 30 வெள்ளிக்காசை கண்டவுடன்  காட்டிக்கொடுத்தான்  அதுநாள் வரை  இயேசுவை போற்றிய யூதாஸ் -  அரசியலில் இகழப்பட்ட  தலைகளை  தஞ்சம்  என்று  கூடியபின் பாராட்டி மகிழ்பவர்களுமுண்டு. அரிய பெரும்  உண்மையை  எளிதாக சொல்லிய கணியன் பூங்குன்றன்  தான்  வாழ்ந்த  ஊரைவிட்டு  ஒரு  நூறு கல்லுக்கு  மேல் சென்றிருப்பாரோ  தெரியவில்லை  ஆனால்  உணர்வும் மனமும்  புரிந்து கூறுகின்றார் " யாதும் ஊரே யாவருங் கேளிர் " என்று. எல்லா இடமும் ஒன்றே நமது  இடமே   எல்லோரும் நமது   உறவே - 5 கண்டங்களிலும்  வாழும்  மக்களை  அன்பால்  இணைத்து பார்த்த  மகா ஞானி   அமெரிக்க  அரசியலாளர்கள்  தங்கள் நஞ்சுகளை  விற்பதற்கு  கீழை நாடுகளுக்கு கூறும்  தந்திர  வார்த்தை  குளோபல் நட்பு  உலகமயமாக்கல் இணைவு இதை  2000 ஆண்டுகளுக்கு முன்  அன்பை  காட்ட  கருணையுடன்  சொன்னவர்  கணியன்  ஒரே  ஒரு  பாட்டை  மட்டும் கூறி  2000 ஆண்டுகள்  கழிந்தும் மக்கள் மனதில்  குடியிருக்கும் பெருமைமிகு  மனிதர்  கணியன்  பூங்குன்றனார்   அவரின்  வார்த்தையை ஐநா  சபையில்  சொல்லி  கைதட்டு வாங்கியவர்  இந்திய விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள்   வெள்ளையர்கள்   எழுந்துநின்று அந்த வார்த்தைக்கு  மரியாதை  கொடுத்தார்கள் என்றால்  இதைவிட  தமிழன் ஞானத்துக்கு  அன்புக்கு ஈடு இணையேது .

ம.இரமேசு 

திங்கள், 25 ஆகஸ்ட், 2014


அடுப்படி வேதம்

அழகிய  வடிவு  நெற்றியில்  குங்குமம் சிரிக்கும்
வார்த்தையில்  கனிவுமிருக்கும்  கண்டிப்புமிருக்கும்
நெஞ்சில் கருணையிருக்கும் கைகள்  பாதுகாக்கும்
அவள் பெயர்  அம்மா    அவள் அதிகம் இருப்பது
உயிரைக்காக்கும்  சேவையில் ஆம்  அடுப்படியில்
 அதுவொன்றும்  பழுதான இடமல்ல புனிதவிடம்
அவ்விடம் இன்றில்  அரசனுமில்லை  புலவனுமில்லை
நாடுகாக்கும் வீரர்களுமில்லை  ஒன்றுமேயில்லை
அப்பு  இஞ்சவா  அம்மாவுக்கு  தேங்காய் திருவித்தா
வெங்காயம்  உரிச்சுத்தா என்று அன்புக் கட்டளையிடுவாள்
வார்த்தையை  தட்டினால்  அவளும்  தட்டுவாள் தடியால்
சொல்வதை செய்தால் கேட்பதெல்லாம்  தருவாள்
பாடுவாள்  பண்பெல்லாம்  சொல்லுவாள் 
செய்ய வேண்டியது  கூடாதது  எல்லாம்  அமைதியாக
சொல்லித்தரும் பட்டம் பெறாத  விரிவுரையாளி அம்மா
ஒலைக்குடிசைக்குள்ளும்  இருந்து  நல்லது  சொல்வாள்
ஓடுபோட்ட  உயர்ந்த  வீட்டிலிருந்தும்  உபதேசிப்பாள்
பொய் சொல்லக் கூடாது  என்பதே  அவள்  கற்றுத்தரும்
முதற்பாடம்  பெரியோரை  பணி  இரண்டாம்  பாடம்
திருடக்கூடாது  மூன்றாம்  பாடம்   மேலும் மேலும்
 புகையை  ஊதி  ஊதி புத்திக்கும்  ஊதுவாள் நன்மையை
உன்னை  தேடி வருபவர்  யாராக  இருந்தாலும்  உபசரி
கோள் மூட்டக்கூடாது   என்று  உரக்கச்  சொல்வாள் 
பிறர்  பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பதை அழுத்தமாக
நெஞ்சில் பதிப்பாள்    ஏழைகள்  இல்லாதவர்கள்  கேட்டால்
கொடுத்து  உதவவேண்டும்  என்பாள்  மது அருந்தாதே
புகைக்காதே  என்று முதலில்  சொல்லுபவள்  அம்மாவே
அவள்  ஒரு  அடுப்படி  பல்கலைக்கழகம்  என்றால்
மறுப்பவர்கள்  எவரோ  எவரோ .

ம.இரமேசு   
 

உயர்ந்தாள்

 
 உயர்ந்தாள்   
இருப்பது சில நாள் இறப்பது ஒரு நாள் 
கடப்பது இடை நாள் அதில் படைப்பது  திருநாள் 
நினைப்பது  நெடுநாள்  அவள்  கிடைப்பது  நந்நாள்  
மணப்பது  பெருநாள்  மக்கள்  பிறப்பது மகிழ்நாள்  
வாழ்நாள்  இந்நாள்  என்றாள்  இனித்தாள் பனித்தாள் 
பலநாள் சிரித்தாள் பண்பாடினாள் ஆடினாள் பாடினாள்
அயர்ந்தாள் உறைந்தாள் எழுநாள் எழுந்தாள்  உழைத்தாள் 
கொண்டான்  மகிழ   கொடுத்தாள் குளிர்ந்தாள்  உயர்ந்தாள்   
 
ம.இரமேசு 

குடும்பச் சுமை

குடும்பச்  சுமை
குடும்பச் சுமை மனம் விரும்பி ஏற்கும் இனிய சுமை அதை இனிமையாக எடுப்போம்

அன்னையரும் தந்தையரும் இணைந்ததே பிள்ளைகளுக்கு மகிழ்வான இனிய வாழ்வு
பொறுப்புகளை வான்மழை போல் சரியாக செய்வோம் - வீணான சுமைகளை ஆடம்பரங்களை கூட்டி நொந்துபோகாது எளிமையாக இனிமையாக இல்லாதவர்களுக்கு கொடுத்து வாழ்வதே மேலான சிறந்த வாழ்வு - பாரம் கூடிவிட்டதே என்று தந்தையர் மனம் நொடியாது தெம்புடன்
வாழவேண்டில் வருமானத்துக்கு அமைய பிள்ளைகளை பெற்று கட்டுப்பாட்டுடன் வாழவேண்டும்

அப்படியானாலே நாளும் சிரித்து வாழலாம்  -  வாழ்க இனிதே.


ம.இரமேசு 
உனக்கு  என்னடா  தெரியும்


  தமிழ்ப்  பாடத்தில் கெட்டிக்காரன் என்று எனது மதிப்புக்குரிய  ஆசரியர் அமரர்  நடராசா  கோயில் கேணியில்  கால்  கழுவும் போது என்  அன்னையிடம் சொல்லியிருக்கின்றார் அதை  என்னிடம் சொல்லி  என்னை  உச்சி முகர்ந்தாள்  என்  தாய் மரியாதைக்குரிய ஆசிரியர்  செல்வராசா  அவர்களிடம் ரமேசுக்கு  டியூசன்  சொல்லிக்கொடுங்கள்  கணித்தத்தில்  அவன்  மக்காக  இருக்கிறான் என்று கேட்ட  என் தந்தைக்கு  அவர்  சொன்ன பதில் அவனுக்கு  அடிப்படையே தெரியாது  என்னால்  முடியாது அவன்  முட்டாள்  - என்வீட்டு கண்ணாடிக்கு முன்  நின்று  என்னை  நான்  கேள்விகேட்டேன்  டேய் ரமேஸ்  உனக்கு என்னடா  தெரியுமென்று,  என்  உள் மனம்  சொன்னது  உனக்குத்தான்  நல்லா  தமிழ்  எழுத வருமே அதையே  உன்  வெளிப்புக்கு  பயன்படுத்தென்று  அதன்வழி  நான்  சென்றதன்  விளைவே  இன்று என்னை  பல முகநூல்  நண்பர்களும்  அவர்கள்  வாயாடியதால்  வெளியில்  இருப்போரும்  என்னை மதிப்பதும்  புகழ்வதும் போற்றுவதும்  - உன்னை  அறிந்தால்  நீ  தலை  நிமிரலாம்  என்ற  தத்துவம்  பொய்யல்ல. 


(இதை மேடை போட்டு  பேசும் அளவுக்கு  வளரவில்லை  அப்படி  பேசினால்  அடுத்த  மேடைக்கு  இலட்சம்  ரூபா  கொடுப்பார்கள்  என  எண்ணுகின்றேன்   நாட்டில் நடக்கும் நடப்பு அதுதானே  இல்லையா  அன்பர்களே )

ம.இரமேசு 

நாலு எழுத்தை படி

நாலு  எழுத்தைப்   படி

நாலு  எழுத்தை  படி என்பதன்  பொருள்  மனிதன்  என்ற
நாலு  எழுத்தை  உணர்  (ம  னி   த   ன்  ) என்பதே. இரக்கம் , கல்வி
தொண்டு,  பண்பு  ஆகிய  நாலும்  உள்ளவரே  மனிதன்
என்றழைக்கத்   தகுதியுடையவர்  என்பது அதன் பொருளாகும்.
கல்வியறிவு  இருந்தும்  இரக்கம்  பண்பு  சேவை மனப்பாங்கு
இல்லாத பலரை  வாழ்வில் காண்கின்றோம்  அவர்களால்
சமுதாயத்துக்கு  எதுவித  பயனுமில்லை  தங்களின்  பசியை
ஆற்றி  தாங்கள் மட்டும்  செழிப்பாக  வாழ்வார்கள் - வீண் தர்க்கம்
புரியும்  ஆற்றல்  கொண்ட  அந்த சீவன்கள்  இன்னல் படுவோரின்
துன்பம் நீக்க எள்ளளவும் சிந்திப்பதில்லை .   அவர்களை
அறிவாசானும்  அறிவாட்டியும்  மனிதன்  என்று  மொழியவில்லை
"ஆற்றுவார்  ஆற்றல்  பசியாற்றல்  அப்பசியை
மாற்றுவார்   ஆற்றலின் பின் "  என்பது  அறிவாசானின்  கூற்று
எடுத்த காரியத்தை  முடிக்கவல்ல  சான்றோரும்  பசியடக்கி தவம்  செய்யும்
தவத்தில்  சிறந்த முனிவர்களும் கூட  பசித்தவர்களின்  பசியை  ஆற்றும்
சாதாரண மனிதனுக்கு  பின்னே என்று   வள்ளுவப்பெருமான்  கூறுகின்றார்
என்பதை  அனைவரும் நினைவில் இருத்தக்கடவது.

 அறிவாட்டி  கூறுவாள்
"ஈயார்  தேட்டைத்   தீயார்  கொள்வர்" என்று  அழுத்திக்கூறுகின்றார்
துன்பம் கொள்வோரின்  துயர்  போக்க  உதவாது  சேர்த்து வைக்கும்
செல்வம் ஒருநாள்  திருடர்களால்  திருடப்பட்டு  ஒழியும்  என்பது
ஆச்சி கூறும் எச்சரிக்கை  அதையே  ஐயனும்  சற்று  நீட்டிச்  சொல்வார்
"ஈத்துவக்கும் இன்பம்  அறியார்  கொல்தாமுடைமை
வைத்திழக்கும்  வன் கணவர் " என்று - வள்ளுவரும்
ஔவை பாட்டியும்   சும்மா  சொல்லுவார்கள்   என்று  தட்டிக்கழித்து
வாழ்பவர்களே  ஏராளம்பேர்  அவர்கள்  கல்விகொண்டோராகவும் இருப்பதே  வேதனை
 நிறைவான  பொருள்  வளம்  கண்டும் உதவ  எண்ணம்  கொள்ளாமல் இருக்கின்றார்கள்
என்பதே  ஆச்சரியம்.

லங்காசிறியில்  நோய் ஆற்றவும்   பசிபோக்கவும் நொந்தோர்  ஆதாரங்களுடன்
  உதவி கேட்டு கோரிக்கை வைக்கையில்   எளியவர்களின்  இன்னலை  போக்க
எண்ணம்  கொள்ளாத  உயிர்களே  இங்கு நடமாடுகின்றார்கள்  ஒரு  100  குரோண்
 கொடுத்து  உதவ மனம் கொள்வதில்லை .

இங்கு  அடியேன்  அமரர்களான  அன்னை தந்தை  பெயரால்  ஒரு மனிதாபிமான
உதவிச் சேவையை  நடத்துகின்றேன்  இதுவரை  6 குடும்பங்களுக்கு 
ஒரு சில  நல்லவர்களின்  உதவியுடன்  சிறு  பொருளுதவி  அனுப்பி
அவர்களின்  இன்னல்  துடைத்திருக்கின்றேன்,  200 பேர்கள்  வாழும்
நான் வசிக்கும் நகரில்  ஒரு சிலர்  தவிர  பெரும்பாலானோர் 
உதவிசெய்ய  முன்வருவதில்லை  புறமிருந்து  கற்பனைக்கதை பேசி
என்னை  இழிவுரை   செய்பவர்களாகவே  இருக்கின்றார்கள்  அவர்களையும்
அன்புடன் மதிக்கின்றேன்  நாளை  மனம்  மாறி  அவர்களும்  என்னுடன்
தொண்டாற்ற  வருவார்கள்  கை கொடுப்பார்கள்  என்ற  நம்பிக்கையில்.

ஒரு  நல்ல காரியம்  நாம் செய்ய  முயலுகையில்  மாற்று  கருத்தும்
வீண் பழி  உரைக்கும்  சீவன்களும்  தமிழர்களுக்குள்  எழுவதொன்றும்
புதியதன்றே - மாறுவது மனம்   சேருவது  இனம்  - எல்லோரும்  வாழ்வோம்
இன்னலுறுவோரையும்  வாழவைப்போம்  அன்றே  நாம் மனிதர் .

ம.இரமேசு






 

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014



 இராமனுக்குப்  பிடித்த பிரம்மஹத்தி தோஷம்

விசுவரத முனிவரின் மகன்  இராவணன்  பிறப்பால்  பிராமண  குலத்தை சார்ந்தவன்  இராவணன்
அவனை  கொன்றதனால்  இராமனுக்கு  பிரம்மகத்தி தோஷம்  பிடித்தது காரணம்  பிராமணனை  கொலை செய்தால்  பிரம்மகத்தி தோஷம் பிடிக்கும்  இராமன்  சத்திரியன் ஆதலால்  அவனுக்கு  அத்தோசம்  பிடித்துக் கொண்டது  அதையிட்டு  மனம் வாடிய இராமன்  மானாவாரியில்  சிவனை நோக்கி  வேண்ட  சிவனின்  தரிசனம்  கிட்டியது  மூன்று  இடங்களில்  சிவலிங்கத்தை வைத்து பிரதிஸ்டை  செய்து  உனது தோஷத்தை  போக்குவாயாக  என சிவன்  கூறவும்  அதன்படி  முன்னேஸ்வரத்தில்  முதலாவதாக  சிவலிங்கத்தை வைத்து  பிரதிஸ்டை செய்து  அடுத்து திருமலை  செல்ல  மனைவி  சீதையுடன்  புஷ்பக வானூர்தி ஏறினார்  இராமன்  அப்படி  அவர்  பிரதிஸ்டை
செய்ய  உண்டானதே  திருக்கோணேஸ்வரம்  அதன் பின்  ராமேஸ்வரம்  பறந்து அங்கும்  சிவலிங்கத்தை வைத்து  பிரதிஸ்டை  செய்து  தனக்கு  பிடித்த தோஷத்தை  ஓட்டினார்  என்பது அறியக்கிடக்கும்புராணச்  செய்தி.


ம.இரமேசு 

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

அடியேன்  சிந்திப்பில்  மலர்ந்த பாடல்



புது மலர்கள்  மலர்வதுந்தன் கையாலே
புது உலகும்   விரிவதுந்தன்   கையாலே
நீ அழுதால் உலகம் அழவேண்டும் தோழா
நீ அழுதால்  உலகம் அழவேண்டும்

நாளெல்லாம்  அலையாக  ஓயாது வந்து உழைக்கின்றாய்
 ஒரு நாழிகையேனும் நீ நிலையாக நெஞ்சம் மகிழவில்லை
உன்குருதி குடித்தே ஊர்மெச்ச  வாழுகின்றார்  ஆளுகின்றார்
உன்னையுண்ணும் முதலையென முதலாளி பேர்கொண்டோர் 

காடு சூழ்ந்த  நிறமாக  உன் வீடு கிடக்குதங்கே கிடக்குதங்கே
ஆதவனின் விழிப்பாக  ஆளுபவர்  மாளிகையிங்கே  இங்கே
பொங்கியெழு  புது உலகம்  உன்னை கண்டு விழிக்கட்டுமே
உன் வேர்வைக்குத்   தகுந்தபடி  நியாயப் படி அளக்கட்டுமே

செந்தமிழர்  நிலத்தினிலே  உழைப்பாரை  நிந்திப்பதா நிந்திப்பதா
செந்தோழர் கண்ணீரில் மிதப்பதுவும் நீதியாகுமா  நியாயமாகுமா
ஆள்வோரே  பெரியோரே  அணைத்து  காக்க  வாருங்கள் வாருங்கள்
அகிலம் வாழ உழைப்பவர்கள்  நல்லபடி வாழட்டுமே  வாழட்டுமே

செங்கவி
ம.இரமேசு 
அடியேன்  சிந்திப்பில்  மலர்ந்த பாடல்

தொகையாறு

புது மலர்கள்  மலர்வதுந்தன் கையாலே
புது உலகும்   விரிவதுந்தன்   கையாலே
நீ அழுதால் உலகம் அழவேண்டும் தோழா
நீ அழுதால்  உலகம் அழவேண்டும்

நாளெல்லாம்  அலையாக  ஓயாது வந்து உழைக்கின்றாய்
 ஒரு நாழிகையேனும் நீ நிலையாக நெஞ்சம் மகிழவில்லை
உன்குருதி குடித்தே ஊர்மெச்ச  வாழுகின்றார்  ஆளுகின்றார்
உன்னையுண்ணும் முதலையென முதலாளி பேர்கொண்டோர் 

காடு சூழ்ந்த  நிறமாக  உன் வீடு கிடக்குதங்கே கிடக்குதங்கே
ஆதவனின் விழிப்பாக  ஆளுபவர்  மாளிகையிங்கே  இங்கே
பொங்கியெழு  புது உலகம்  உன்னை கண்டு விழிக்கட்டுமே
உன் வேர்வைக்குத்   தகுந்தபடி  நியாயப் படி அளக்கட்டுமே

செந்தமிழர்  நிலத்தினிலே  உழைப்பாரை  நிந்திப்பதா நிந்திப்பதா
செந்தோழர் கண்ணீரில் மிதப்பதுவும் நீதியாகுமா  நியாயமாகுமா
ஆள்வோரே  பெரியோரே  அணைத்து  காக்க  வாருங்கள் வாருங்கள்
அகிலம் வாழ உழைப்பவர்கள்  நல்லபடி வாழட்டுமே  வாழட்டுமே

செங்கவி
ம.இரமேசு 

புனல் கண் பூமி



புனல்  கண் பூமி 
மாடு நிறை  மண்
அனல் ஒளி தெறியாழி
வானுயர் சேல் 
கரு நீள்  கருகல்
உயிரூர்  புவனம்
குகையுள்  மகிழ்
காடுயர்  பள்
களநிறை  உயிர்
களங்கார்  காலார்
உள்ளினி  யாழ்
வெல்லினி அமுதார்
விசும்புயர்  ஞான்
மெல்லினி மேனியர்
கள்ளிலா  குழவியர்
களி மகிழ் குமரர்
கலை நளின் கோதையர்
இலை என்றுரையார்  ஈகை
சேந்தன் கார்  நிலம்
வாழியவே  வாழியவே

ம.இரமேசு


 

வியாழன், 21 ஆகஸ்ட், 2014






வணக்கம்  அன்பு  நண்பர்களே - நெஞ்சில்  நிற்கும்   வரிகள்

சினிமா  என்பது  ஐயோ குய்யோ  என்று மட்டும்  அழுது  வழியும்  ஒன்றல்ல / காதல் வீரம்  புரட்சி  உண்மை  நேர்மை தாய்மை  பாசம்  எழுச்சி  என்று  மக்கள்  மேன்மைக்கு  பயன்  செய்யும்  சாதனம்,  அதனை  சரியாக  பயன்படுத்திய  ஒரே  உலக  நடிகர்  அமரர்  எம்ஜிஆர்  அவர்கள் மட்டுமே,    அவர்  திரை வாயிலாக இரண்டடியில்  கூறிய  பெரிய  சிந்தனைகள்  பாடங்கள்  காண்க .

இஞ்சினியருக்கும்  டாக்டருக்கும்  அட்வகேட்டுக்கும்    ஏன்  இந்த உலகத்துக்கே  சோறு போடுபவன் யாரு ?   விவசாயி  விவசாயி  -   (விவசாயி )

அழுபவர்கள்  சிரிக்க வேண்டும்,  சிரிப்பவர்கள்  சிந்திக்க வேண்டும்  - (நான்  ஏன்  பிறந்தேன் )

நாய்க்கு  வீசியெறியும்  எச்சில்  இலையின்   மிச்ச  சோறுகூட   என்  உடன்பிறப்புகளுக்கு  கிடைக்கவில்லை  என்றால்  நான் வாழ்வது  மனிதர்கள்  மத்தியில்  அல்ல  அரக்கர்கள்  நடுவில்  -  (மீனவ நண்பன் )

நாம்  நாக்குக்கு  அடிமையாக  இருக்கக் கூடாது   நாக்குத்தான்  நமக்கு  அடிமையாக இருக்க வேண்டும் - (பல்லாண்டு வாழ்க )

தனக்கு தனக்கு  என்று சேர்த்து வைத்துக்கொள்ளும் ஆசையை வளர்த்தால்  நம்மால்  பிறருக்கு  எதுவுமே
செய்ய முடியாது (ஆயிரத்தில் ஒருவன்)

பத்துக்கோடி  டாலர்  உங்களுக்கு  பெரிசு  அதைவிட இந்த உலகில்  உள்ள  தனி ஜீவன்  எனக்குப்  பெரிசு - (உலகம் சுற்றும் வாலிபன்)

பலம்  உள்ளவனால்த்தான்  சமாதானத்தைப்பற்றிப் பேச  முடியும் - (படகோட்டி)

வலிமை உள்ளவன் வைத்ததெல்லாம்  சட்டமாகாது  பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டமாக்க வேண்டும். - (நல்ல நேரம்)

உதவி என்று  வருபவர்களை   பணம்  பதவி  என்ற பெயரால்  உயிருடன்  விழுங்கும்
திமிங்கிலம் நீ  ( படகோட்டி)

கோடி  செல்வம்  இருந்தும்,  தாயன்பில்லாத  மாளிகை  வாசியை விட,  குடிசையில்  இருந்தாலும் 
தாயின் கையால் உண்ணும் நான்  பாக்கியசாலி  - (தொழிலாளி )

இப்படி அவரின்  பல  படங்களில்  சிந்தையை  தொடும்  வரிகள் வசனங்களாக  பாடல்களாக   நிறையவுண்டு,  5 எம் ஜி ஆர்  படங்கள்  பார்த்தால் ஒரு  குட்டிப்   பல்கலைக்கழகம்  சென்று  படித்த  அறிவைப்   பெறலாம் .

அன்புடன்
ம.இரமேசு 
செங்கவியின்   சிந்திப்பில்

உள்ளவர்களுக்கு  கொடுத்து  புகழை  வாங்க முடியாது
இல்லாதவர்களுக்கு  கொடுப்பதனால் மட்டுமே நிலையான
புகழை  வாங்க முடியும் .

நீ  இந்தப் பூமியில்  பிறந்தது  சிரித்து வாழவே
நடந்ததை நினைத்து  அழுது வாழ்வதற்கில்லை.

ஒரு தடியால்  கூரையை தாங்கிப்பிடிக்கவும் முடியும்
ஒருவரை  அடித்தும் கொல்ல முடியும்
நீ  எதற்கு தடியை  பயன்படுத்தப் போகின்றாய்.

அன்பும்  இரக்கமும்  எளியவரை  அணைக்கும்  குணமும்
இருந்தால்  மட்டுமே  மனிதன்  என்று  பெயர் எடுக்கலாம்
வெறும்  வித்தகத்தால், பல நூல் மேய்வதால்  மட்டும்  நல்ல
மனிதன்  என்று  பெயர்  எடுக்க முடியாது.

மலரோ  மங்கையோ  அழகை  இரசிக்கப்பார்
பறிக்க நினையாதே. 

ஒருவரை  மடக்கி பேசிவிட்டாய்  எழுதிவிட்டாய்  என்று
புளகாங்கிதம்  கொள்ளாதே விரைவில்  எங்கோ இடறப்போகின்றாய் .

வாழ்வின் நிம்மதிக்கு  பணிவும் பண்பாடும்  வேண்டும்  இல்லை
இல்லை  நிம்மதி .

இரசனை  உள்ளவர்களால்  மனதை  கட்டுப்படுத்துதல் இலகன்று
அவர்கள்  செல்வந்தர்களாவது  மிக மிக  கடினம்

பொறுமையும்  மனக்கட்டுப்பாடும்  உடையவர்களாலேயே  பொருளாதாரத்தில்
உயர்நிலை  அடைய முடியும். 

நாக்கை  பேச்சுக்கு  மட்டுமன்று   ஆரோக்கியத்துக்கும்  அடக்க வேண்டும் .

அடிமையானவர்களால் எதையும்  அடக்க முடியாது 
அடக்க முடிந்தவர்களால்  எதற்கும் அடிமையாக முடியாது .

ம.இரமேசு
 

புதன், 20 ஆகஸ்ட், 2014

பொது மகள்

பிறந்தாள்  புழுதியிலே
வளர்ந்தாள்  புழுதியிலே
வாழ்ந்தாள்  புழுதியிலே
தேய்ந்தாள்  புழுதியிலே
மாய்ந்தாள்  புழுதியிலே
எரிந்தாள்  புழுதியிலே
ஏதும்  இல்லை  அவள்
வாழ்வினிலே வாழ்வினிலே
நாளும் தன்னை  உருக்கினாள்
நாலுபேர் உண்டனர் வாழ்ந்தனர் .




 சிந்திக்காப் பொழுதுகளில்  .

கார்கள்  வந்தன 
கதவுகள் திறந்தன
காசுகள் பறந்தன
சொற்கள் கருகின
நேசங்கள்  சுருங்கின
வாசங்கள் மறைந்தன
வண்ணங்கள் தேய்ந்தன
வடிவுகள் போயின
ஓலங்கள்  நிறைந்தன
துன்பங்கள்  சிரித்தன



வாழ வேண்டும்

நிலமும்  வானும்
கடலும்  காற்றும்
மறையும் வரை
நான் வாழவேண்டும்
ஏனென்றால்  அவளை
நிதமும் பார்க்க வேண்டும்
அவளோர் அழியா அழகி
அவள் பெயர்  தமிழ்
அவளை படிக்க 
ஒரு பிறவி போதாது

ஆக்கங்கள்
ம.இரமேசு



 
புகழ்

வாழத்தெரிந்த  அன்பு மனிதன்   வாழ்வு   குதூகலிக்கும்,
ஒருவர்   நல்லாயிருக்கின்றேன்  என்றால்  அதன்  அர்த்தம்
இல்லாதவர்கள் கேட்குமிடத்து  உதவுவதற்கு
 உள்ளம் கொண்டுள்ளேன்  என்பதே
பொருள் இருந்தாலும்  கொடுக்கும்  உள்ளம்  வேண்டும்
 இரக்கம்  வேண்டும்.
 நம்மை  பெரிய விற்பன்னர்களாகக்  காட்டி
தேடும் புகழை  காட்டிலும்  இல்லாதவர்களுக்கு
  கொடுத்து  எளியவர்களுக்கு சேவை செய்வதனால்
 ஏற்படும்  புகழே என்றும்  நிலைக்கும்  வருங்காலத்தில்
  பிள்ளைகளுக்கும்  மரியாதையுண்டாகும்
 பணிவுடன்  என் தமிழ்  நேசங்களுக்கு 

 வாழ்க  நலம்  
ம.இரமேசு
 
பிட்சாரியாக்களும்  துப்புரவும்

நான்  சந்தித்த  பிட்சாரியாக்காரர்கள் இதிலே  வருகின்றார்கள் 
சில ஆண்டுகள் முன்பு  இரவுக்  கேளிக்கைக்கு  சென்றிருந்தேன் சமூகத்துடன் கலக்க வேண்டி,  வீடுதிரும்பும் முன்னர் சிறிய பசியெழ ஒரு  பிட்சாரியாவில்  ஏதாவது  வாங்கி சாப்பிடுவோம் என்று சென்றிருந்தேன் அதன் உரிமையாளர்   டென்மார்க்கிலிருந்து  3500 கிலோ மீற்றர்  தள்ளியிருக்கும் நாட்டினன்
உள்ளே டெனிஸ் குமரர்களும்  குமரிகளும் நிறைந்திருந்து  வாயசைத்தார்கள்
சிலர்  வரிசையில்  வேண்டுவதை  விண்ணப்பிக்க  நின்றிருக்க  நானும் 
அவர்கள் பின்னே  நின்றிருந்தேன்  திடீரென  வெளியில்  சென்ற கடையின்
உணவு தயாரிப்பாளர்    வெளியே  வீசப்பட்டுக்கிடந்த உணவு வைக்கும்  காகிதக்கோப்பைகளை  தனது வெறுங்கையால்  பொறுக்கினார்  பின்பு அவற்றை குப்பைத்தொட்டிக்குள் போட்டார் பின்பு  கடைக்குள் வந்து
கைகளை கழுவாது  அதே அசுத்தக்  கரங்களால் மாவை பிசைந்து தட்டினார் 
இதை பார்த்து பொறுக்கமுடியாது  நான்  அவனிடம் வாய்திறந்தேன் நண்பா  குப்பைகளை அள்ளிய பின்னர் உங்கள்  கைகளை கழுவ வேண்டாமா இப்படி
நீங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் கருதாது உணவு தயாரிப்பில்
ஈடுபடலாமா  என்றேன்  அவர்  தகுந்த பதில் தரமுடியாது  சினப்பட்டு
தனது நண்பனுக்கு ஏதோ சொன்னார்   அவர்   என்னிடம்  பிரச்சினை வேண்டாம்  என்றார்   நான் பிரச்சினைக்கு  வரவில்லை நியாயத்தை கேட்க்கின்றேன் என்றேன்  துப்புரவு முக்கியமல்லவா  இவர் கரங்களில்  நிச்சயம்  தெருவின்  புழுதி உறைந்திருக்கும் தானே  என்றேன்  அவரும்  பதிலின்றி  ஓய மேலே பேசி பயனில்லை என்று  நினைத்துவிட்டு  நான் வீட்டுக்கு  சென்றுவிட்டேன்

பிட்சாரியாக்கள்  உணவு சுற்றும்  காதங்கள்  சிறு தட்டுக்களை நுகர்வோர் வீதியில்   எறிந்தால்  அவற்றை பிட்சாரியாக்காரர்களே  பொறுக்கி எடுத்து குப்பைத்தொட்டிக்குள்  போடவேண்டும் என்ற  வெங்காய சட்டம்  இருக்குமிடம்,  சுத்தம் செய்யாத பிட்சாக்காரரின்   அனுமதி பறிக்கப்படும்  தொடர்ந்து குறிப்பிட்ட  பிட்சாரியாக்காரர் தொழிலை செய்ய முடியாது.

 அடுத்து  பக்கத்து நகரில் பேருந்து  ஓட்டுவதற்கான  அனுமதிப்பத்திரம்  பெற  படித்துக்கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள்  மதிய இடைவேளைக்கு  கபாப் வாங்க ஒரு  எண்ணைவள நாட்டுக்காரரின்   பிட்சாக்கடைக்கு  சென்றேன்  வெளியில்  இருந்து  சிகரெட் புகைத்தார்  அந்தக் கடைக்காரர்  நான்  உள்ளே சென்றதும்  சிகரெட்டை  எறிந்துவிட்டு  வந்து  என்ன வேண்டும்  என்றார் ஒரு கபாப்  என்றேன்  கையை   கழுவ வேண்டுமென்ற  பொறுப்போ  சிந்தையோவின்றி  மாவில்  கை வைக்க தயாரானார் சுத்தம்பற்றி  கதைத்தால்    வீண் தர்க்கம்  செய்வார்  போலிருந்தது அவரின்  முகபாவம்  ஒரு பொய்யை வேறு வழியின்றி  வள்ளுவரின்  அனுமதியுடன்  புகன்றேன்,  மன்னிக்கவும்  சஞ்சியை (பேர்ஸ் ) மறந்து  விட்டேன்  எனது  விண்ணப்பத்தை (ஓடர்தவிர்க்கவுமென்றுவிட்டு சென்றுவிட்டேன் .

உணவை  பிறருக்கு தயாரிக்கையில்  ஏனோ தானோ
என்று  வாடிக்கையாளர்களின்  ஆரோக்கியம் பற்றி  அக்கறையில்லாது
அசுத்தமான  முறையில் தயாரிப்பது  மிகவும்  தவறு  அது  தர்மமுமில்லை
காசு வந்தால்  போதும்  என்ற  நினைப்பே  முக்கியம்  என்று கருதி  வாடிக்கையாளரின்  ஆரோக்கியம் கருதாது  நடந்துகொள்வது  பெரும் பாவம்
பண்பற்ற  அநாகரிக  செயல், சிந்தனை  அற்ற  மனவூனர்களே அப்படி செய்வோர்  பிறகு  எத்தனை சாமி  கும்பிட்டும்  தொழுதும் மன்றாடியும்  பயனில்லை  இறைவன் கருணை  கிடையவே  கிடையாது - லண்டனில்  ஒரு
கோழிப்பொரியல்  விற்கும்  தமிழரின்  கடையில்  வேலை செய்தவர்  மூக்கில்
கைவிடுவதை  பார்த்து  வாடிக்கையாளர்கள் அருவருத்து  வெளியில் சென்றார்கள்  அந்த தொழிலாளிக்கு அன்றுடன் அக்கடையில் வேலையும் போயிற்று சங்க விழாக்கள் நடக்கையில்  அவதானித்திருக்கின்றேன்  இடது கையால்  உணவை  எடுத்து  வழங்குவது  போன்ற  அருவருக்கும் செயல்களை,   அதன் பின்னர் கூடியவரையில்  நம்மவர்  விழாக்களுக்கு  செல்வதையும்  தவிர்த்துவிட்டேன்  வலது கையால் அகப்பையை  பிடித்து
இடது உள்ளங்கையில்  ஊற்றி  சுவை பார்ப்பது  என்று நம் தமிழர்கள்  பலர்
இருக்கின்றார்கள்  அவ்விடத்திலே  சொல்லி  கெ ட்ட பெயர்  எடுப்பது  என்
வாடிக்கை  இம்மாதிரி  செயல்களை  கண்டால்  பொறுக்க முடிவதில்லை
அகப்பையை  இடது கையால்  பிடித்து  வலது கையில் ஊற்றி சுவை பாருங்கள்   என்று  அக்கணமே  சொல்லிவிடுவேன்  ஓ  ரமேஸ்  சொல்லுறது
சரிதான்  என்று  மாற்றிக்கொண்டவர்களும்  இருக்கிறார்கள்  எங்கும் எதிலும்
துப்புரவு  முக்கியம்  முக்கியம் .

ம.இரமேசு 

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

முகநூல்  நட்பு  எப்படி  இருக்க வேண்டும்

அன்பர்களே  !  அடியேன்  அன்புடன்  பணிவுடன்  புகலும்  முகநூல்  நண்பர்கள்  பற்றிய  கருத்து  யாதெனில்  -  நண்பர்கள் சிலர்   சில  நண்பர்களால் தொல்லை தொல்லை என்று
 நொந்துகொள்கின்றார்கள் - பண்பும்  பணிவும்  உண்மையும்  மனிதர்களுக்கு  உயிருக்கு  சமம்  என்று
நினைத்து  வாழும் மனிதர்களில்  ஒருவன்  யான்  - பண்பும்  பணிவும்  பக்குவமும்  இல்லாதவர்களை  நட்பு  வட்டத்திலிருந்து  அன்புடன்  விடுவித்தல்  நம்  மனதுக்கு  நிம்மதி ஆறுதல் - நிறையப்பேர்  என் கருத்துக்கு  விளக்கு   கொளுத்த வேண்டும்  என்று எதிர்பார்த்து  தெரியாதவர்களையெல்லாம்  நட்புக்  கூடையில்  சேர்ப்பது  நட்புக்  கூடைக்கு  நாமே தீ வைப்பதாகிவிடும் - நாலுபேர்  நல்ல  பண்பாளர்கள்
சிநேகமாக  இருந்து  பாராட்டினாலே  போதும்,  மற்று,  ஒருவர்  சிநேகத்துக்கு  வாளி  இறக்குகின்றார்  என்றால்  அவர்  துலாவிலிருந்தா  கப்பியிலிருந்தா  இல்லை கைவாளியா  என்று  அவர் யார் யாருக்கு
நண்பர் என்பதை  கண்டுகொண்டு  இறக்குங்கள்  இறக்கியபின்  வாளியில்   ஓட்டை  இருந்தால் கிணத்து  கட்டிலே அடிபடாது வெளியே  எடுத்து விடுங்கள் -  பண்பாளர்களுக்கு  கருத்தை பணிவாக  இயம்புபவர்களே  நேசமாக  இருப்பார்கள்  இருக்க முடியும்,  கருத்துக்கு விமர்சனம்  எழுதுகையில்
இயம்பியவர்  மனம் நோகாதபடி  பாணில்  ஜாம்  தடவுவது போல் எழுதவேண்டும்  எடுத்தேன்  கவிழ்த்தேன்  என்றால்  பின்  தேன்  பாழாகிவிடும்  என்பதை  பணிவன்புடன்  பகிர்கின்றேன் .

ஒருவரின்  எழுத்தின் பாங்கும்  நடையும்  அவர்  எம்மாதிரி  உயிர் என்பதை  காட்டிவிடும்
  அதை  கவனத்திற் கொண்டால்  பின்  அவரை  அணைப்பதா  விடுவதா  என்று முடிவெடுக்க முடியும்  சிலர்  சினிமா செய்திகளையும்  பாடல்களையுமே  நிரப்புவார்கள்  வேறு சிலர்  நகைச்சுவை  மட்டுமே  கலப்பார்கள்  இன்னும் சிலர்  எப்பொழுதும் சோகமும்  தத்துவமும்  உரைப்பார்கள் 
சகலதையும்  குழைத்து  வழங்குபவர்களே  சிறந்த  ஆக்குனர்கள் (படைப்பாளிகள்)  ஆவர்  என்பது  பணிவான  எண்ணம் .

வாழ்க நலம் 

அன்புடன்
ம.இரமேசு 

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

துப்புரவுப்பணி  மேலான  சேவைகளில் ஒன்றே

துப்புரவுப்பணியின்  இன்றியமையாமையை  சரியாக புரியாதவர்களே அதை  கேவலமாகக்   கருதுபவர்கள். ஒருவர் நோயில்  வீழ்ந்திருக்கையில்,  கழிவுகளை  அள்ளி சுத்தப்படுத்த ஆளில்லாவிடில் 
 துப்புரவுப்பணியின் மகத்துவம் எவ்வளவு  அவசியம் என்பதை உணர்வார். துப்புரவுப்பணி  செய்வோர்
அப்பணியை  செய்ய மறுத்தால் உலகே  நோய்வந்து மடியும்.  கல்வியறிவு உடைய அரச அதிகாரங்களில் இருப்போர்  அப்பணியினை  செய்வோருக்கு  சீருடைகள்  காலணிகள்  கையுறைகளை
கொடுத்து புதிய  கருவிகளையும்  வழங்கி வழிமுறைகளை சொல்லி கொடுத்தால் மிகவும் நல்லதாகும்.  தகுந்த  ஊதியமும்   வழங்கினால்  அவர்கள்  மேலான  வாழ்வை  வாழலாம்.

இங்கு (டென்மார்க்) 20 ஆண்டுகள் முன்பு  ஒரு  மீனுணவுகள் தயாரிக்கும்  நிறுவனமொன்றில்  பணிபுரிந்தேன்  அவ்வமயம்  துப்புரவுப் பணிக்கு  வரும்  ஒரு அழகியை  பார்த்து  ஆடவர்கள்  வாய்
வழிந்தார்கள்  இங்கே  அப்பணியை  செய்பவரை  ஒதுக்குவதுமில்லை  ஒதுங்குவதுமில்லை  நம்  நாட்டிலேயே துப்புரவுப் பணியாளர்களை  அருவருப்புக்குரிய  சீவன்களாக  நினைக்கும்  அறிவற்ற  நினைப்பு   மனிதர்கள  நெஞ்சுக்குள் அட்டையாய்  ஊர்கின்றது.

  எவர் எவர்  அங்கு  துப்புரவுத் தொழில் செய்த மக்களை எள்ளி  நகைத்தார்களோ  அவர்கள்  இங்கு வந்து  அதே பணியை  செய்கின்றார்கள்  கேட்டால் ரெண்குயரிங் (சுத்தப்படுத்தல்) என்று டெனிஸில்  பெருமையாக சொல்லிக்கொள்கின்றார்கள்  பிறகு  எதற்கு  அங்கே  சுத்தம்  செய்பவர்களை  தீண்டத்தகாதவர்கள் என்று நடத்தினார்களோ???  இங்கே பணம்  அதிகம் தருவாதால்  அத்தொழிலை  மகிழ்வுடன்  செய்கின்றார்கள்   அங்கே  துப்புரவுப்பணி செய்வோருக்கு  ஊதியம்  மிக மிக
குறைவாகக் கொடுக்கப்படுகின்றது  அவர்கள் அன்றாட  தேவைகளை  நேர்த்தியாக நிவர்த்தி செய்ய முடியாது  இன்னல் பட்டார்கள், இன்றும்  படுகிறார்கள்,   அவர்கள்  இன்னல் படுவது   மாடி வீட்டு  மாப்பிள்ளைகளுக்கு  நகைப்பாக  இருந்தது அந்த மாப்பிள்ளைகளின்  பிள்ளைகளும் பேரன்களும்  இன்று வெளிநாடுகளில்   சுத்தம் செய்யும் தொழிலை   செய்கின்றார்கள்.  இப்போதாவது புரிந்து கொள்ளவேண்டும்   தொழிலில்  உயர்வு  தாழ்வு இல்லை என்று.  அங்கு  துப்புரவுத் தொழில் செய்தவர்களும்   காய்ச்சி மூட்டி  உண்டார்கள் அவர்கள்  கிருமி தொற்றி  இறந்தா போனார்கள் 
 இல்லையே நெடுங்காலம்  உயிருடன்  நல்லபடி வாழ்கின்றார்கள்  உட்கார்ந்து  உழைத்தவர்களே  சர்க்கரை நோய்கண்டும் பாரிசவாதம்கண்டும் ஆரோக்கியமிழந்து  அழுந்தினார்கள்   அழுந்துகின்றார்கள்  என்ற உண்மை  வெளிப்படை.

ஊதியத்தை போதியபடி  ஒரு மனிதன்  சிறப்பாக வாழ கொடுக்க வேண்டும்  அதை அரசு சட்டமாக்க வேண்டும் . தகுந்த   ஊதியம்  கொடுக்காது விட்டால்  எந்தத்  தொழில் செய்பவரும்  வறுமையில்  சிக்கி வாடுவார்.   அது  பொறியாளரோ  மருத்துவரோ   சட்டத்தரணியோ  துப்புரவாளரோ,  எவராயினும்
 நிறைவான  வருவாய் இன்றில் வறுமையில்  நாறுவரே  - நம்  நாடுகளில் நம்மவர்கள  படிப்பது  அதிக  ஊதியத்தை  எதிர்பார்த்தே தவிர  கற்ற கல்வியால்  ஊருக்கும்  நாட்டுக்கும் உலகுக்கும்  சேவை செய்ய வேண்டும் என்பதற்காக  அல்ல  என்பதை நடைமுறை வாழ்வியலில்   காணலாம்  எங்காவது ஒன்று இரண்டு பேர்  நியாப்படி நடக்கலாம் அது முழுமையாகாது. இனிவருங் காலங்களில்  அனைத்து  தொழில் செய்வோரையும் மதிக்கப்பழகுவோம்  தகுந்த ஊதியம்  கொடுக்க மனம் கொள்வோம்.
தொழிலாளர்களும் சுத்தம்பேணி  பண்புடன்  நடந்து கொள்ள வேண்டும்  அப்பொழுதே  மற்றவர்களினால்    மரியாதை  கிட்டும் என்ற  உண்மையையும்  நினைவுகொள்ளல் வேண்டும்.

ம.இரமேசு 

எண்ணத்தில் மலர்ந்தவை




நல்ல  உணர்வுகளை கெட்டுப்போகாது சிந்தையென்னும் பிரிட்ஜில் (குளிரி ) அடையுங்கள்
கெட்ட  நினைவுகளை  குப்பை தொட்டிக்குள்  போட்டு விடுங்கள்
மலரின் வாசம்போல்  மனம்  இருந்தால் எல்லோரும்  மகிழ்வர்
எறும்பின் மேலாடையை எடுத்து உலகின் ஓட்டையை மூடமுடியாது
யார் சொன்னாலும்  கேட்காதவன் அடிவாங்கினால் தானாக மாறுவான்
ஒருவருக்கு ஒரு விடயம் தெரியவில்லை என்றபோது தெரிந்தவன் திமிர்கொள்வான்
பிறரை அடக்கியாளுமுன் உன்னை வலியவர்  முன் நினைத்துப்பார்
பிறருக்கு விருந்து கொடுக்க தெரியாதவர்கள் நெஞ்சில்  இரக்கம் பண்பாடு இராது
குழையும் வண்டில் ஏறும்  வண்டிலும்  குழைமேலேறும்  எவரும் குறைந்தவரில்லை
இன்மையிலும் இருக்கின்றது என்பவன்  உள்ளம் நிறைந்தவன் இருந்தும்  இல்லை என்பவன் மோசமானவன்
வெட்கப்படு  இழிவான காரியங்கள் செய்ய -   நன்மை செய்ய  நாணாதே
ஒருவரை  ஏமாற்றி  உல்லாசம்  கொள்ள  நினையாதே  நாளை உன்னை ஒருவர் ஏய்ப்பார்




ம.இரமேசு 
அன்பாக வந்தாய்
ஆதரவு தந்தாய்
இல்லையென்று  சொல்லாய்
ஈர்ந்து அளிப்பாய்
உன்னையே நம்பி
ஊரே இருக்கிறது
எங்கும் நிறைந்தாய்
ஏற்றம் கண்டாய்
ஐயம் தீர்ப்பாய்
ஒற்றுமை காப்பாய்
ஓங்கி வளர்ந்தாய்
ஔடதம் போலானாய்
ஃ  முமானாய்




இது எப்படியிருக்கு?




ம.இரமேசு 

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014


அராலியிலிருந்து  யாழ்ப்பாணம்  நகர்வரை - நான்  பார்த்த பார்வைகள் 

(இது ஒரு  காலத்தின்  நினைவு  -  1970 -1985 )




அராலி மயிலியப்புல கந்தன்,  அவன் முற்றத்தின் இருமருங்கிலும்  பரவி விரிந்து  கருணை காட்டும்
அரச மரங்கள் அதனிடையே  நெஞ்சை நிமிர்த்தி  நிற்கும்  நாடக மேடை  அருகே  காளையர்
களம்  (விளையாட்டு மைதானம் ) அதனருகில்  பாழடைந்த  கேணி  அதன்  கட்டில்  இருந்து 
கதைபேசும்  வாலிபர்கள்  - கடவுள் இல்லை என்று  பெரியாரின் தத்துவம்  பேசுவோருக்கும்
குந்தியிருக்க அடைக்கலம் கொடுத்தது  கோயிலின் கேணிக்கட்டே ,  இரண்டு  பிள்ளைகளை
பெற்று வாழ்வில் அடிவாங்கியதும் அப்பனே முருகா என்று  பக்தியில்  உருகிய பெரியார்
நேசர்கள்,   விரிந்து  வேடிக்கை  காட்டும் அழகிய  வயல்கள்  அவைநடுவேஅமைந்திருக்கும்  பெரிய குளம்  சற்று தள்ளி  வளைந்தோடும்  வழுக்கையாறு அங்கிருந்து  நோக்க  நிமிர்ந்து நிற்கும் முருகமூர்த்தி  கோயிலின் தேர்க்கூடு,  சகடையில் அமர்ந்து சகலதும் அலசும் சண்டிகள்  கச்சான் விற்கும்  பாலாச்சி  மாடு விற்கும் கனகன்   மதவடியில்  குந்தி முந்தி முந்தி  அரசியல் பேசும்  முதியோர்  நேவி றக்கை (கடற்படை வண்டி) கண்டு ஓடி ஒளியும் பெடியள் செட்டியாரப்புவின்  சைக்கில் கடை  அங்கே  உரிச்ச  கிடாய் போல  ஒப்பிறேசனுக்கு (திருத்த) தொங்கும் பழைய றலி  சைக்கில்  யாழ்  போகும்  பேருந்தும்   காரைநகர்  போகும்  பேருந்தும் மதவடியில் சந்திக்க பக்கமாக   யன்னலால் அருகருகே றைவர்மார் (ஓட்டுனர்கள் )ஏதோ  குசுகுசுப்பர் , செம்பாட்டான் (செம்பாட்டு நிலத்தில் இருந்து வந்தவர்) மாடுகள்  கொண்டுபோக வந்து  பேருந்துக்கு பின்னால் மாடுகளுடன்  நின்று  புறுபுறுக்க (எரிச்சலில்  தனக்குள் பேசிக்கொள்வது) நகரிலிருந்து  லவுஸ்பீக்கர் (ஒலிபெருக்கி) கட்டிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து விளம்பரம் செய்யும் தியேட்டர் வான் (திரையரங்கு வண்டி) அதன்  பின் ஓடும்  சிறுவர்கள்  வழுக்கையாறு சங்கமிக்கும் அராலிக் கடல்  அதன் கொள்ளையழகு  சற்று  தொலைவில் அமைதியாக படுத்திருக்கும்  உப்பளம்  அதன் பக்கம்  கல்லுண்டாய் வைரவர்  அங்காலே  இரவில்  நகை பறிப்பார்கள் திருடர்கள் என்று பேரெடுத்த  மாட்டொழுங்கை  பிறகு  காக்கை தீவு அதன்  மிடுக்கான கடற்கரை சந்தை  அழகாக கடலில் வரிசையாக  மிதக்கும் நாவாய்கள்  தொலைவில் கடற்கரையை அண்மித்து கொட்டப்பட்டிருக்கும் குப்பைகள்  அவை   எரிந்தபடி புகைகிளப்பும்  அசுத்த நாற்றம்  வலது கைபக்கம்  நாவந்துறை  நேரே  ஓட்டுமடம்  இடையில் பொம்மைவெளி  அங்கு  நிறைந்திருக்கும்  முஸ்லீம்  மக்களின் குடியிருப்புகள்


 ஓட்டுமடத்தை அடையாளம்  காட்டும் பச்சை பாசி படர்ந்த  சிறிய நீர்ப்பரப்பு  ஓட்டுமட
சந்தி  மதில்களை நிறைத்திருக்கும்  திரைப்பட  விளம்பர சுவரொட்டிகள்  தேநீர்க்கடை,  மேலே
ஐந்து சந்தி -  யாழ்ப்பாணநகரின்    திரையரங்குகளே  பெரிதான  கட்டிடங்களுடன் மைய நகரையாளும்  வின்சர்  லிடோ  ராஜா  மூன்றும்  கூப்பிடும்  தூரத்தில் அமைந்த  திரையரங்குகள்  சற்று  தொலைவில்  வெலிங்கடனும்  ராணியும்  ராணிக்கு முன்னால்   யாழ் மத்திய  பேருந்து நிலையம்
அதை  அணைக்கும் வரிசையில்  தேநீர்க்கடைகளும் உணவு விடுதிகளும்  அழகிய  பட்டணம்  யாழ்ப்பாணம் - நல்லூர்  கந்தன் கோயில்  அதன்  அழகு, தூய்மை  நல்லூர்  செல்லும் வழியில்  வரும்  ஆனைப்பந்தி  அதை  காக்கும்  வீரகாளியம்மன் கோயில்  நல்லூர்  திருவிழாக் காலத்தில்  அங்கே போடப்பட்டிருக்கும்  உயர்ந்த  தாகசாந்திப்பந்தல்கள் நல்லூர் வாசிகளின் நெஞ்சம் போல்  உயர்ந்திருக்கும் அழகைக் காணலாம் - எல்லா ஊர்களிலுமிருந்தும்   கூடும்  தமிழர்கள் யாழை  நிறைக்கும் காட்சி ஆனந்தம்  ஆனந்தம் -   இது ஒரு  காலத்தின்  நினைவு - இன்று பல  மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும் .


ம.இரமேசு
 
அப்பாவிப் போலிகள்

அவன் + பிரவுன் - இவர்களை  உண்மையான நண்பர்கள்  என்று நம்பியல்லவா  தன்னை  முழுமையாக
இனிமையாக  வெளிப்படையாக  காட்டினான்  இந்த நாதாரிகள்  வெளியில் சென்று  சொல்லி சிரிப்பார்கள்  என்று அவன்  நினைத்திருந்தால் பேசாது  இருந்திருப்பானே  ஏன்  இவர்கள்  இப்படி ?
அறிவற்ற  இந்த பட்டிக்காடுகளுடன்   சேர்ந்ததும்  பேசியதும் பிரவுனின் குற்றமே .

பொழுதுபோக்க  அங்கும் இங்கும் சென்று  அவர்கள்  கொடுப்பதை  உண்டுவிட்டு   நல்லவன்  ஒருவனை    வேண்டுமென்றே  மற்ற  குடும்பங்களுக்கு  தூற்றி  சொல்வது இல்லாதது  பொல்லாததை
சொல்லி மற்றவர்கள்  மனங்களில் பிரவுன்  கெட்டவன்  என்னும்  நினைப்பை  விதைத்து அறுவடை கண்ட  நாதாரிகள்  நாதாரிகளே - வேற்று  நாட்டாருடன்  நாலு வார்த்தை  பேசி உறவாடத் தெரியாது
ம்மாண்டி  போல இருந்துவிட்டு   பணத்தை மட்டும்  சேர்த்து  காரும்  வீடும் வாங்கி  கட்டிய  தொழுவத்து மாடுகள் போல  வாழுகின்றார்கள்  குடிகேடர்கள் - வறியவர்கள் ஏழைகள்  கேட்கும் உதவிகளுக்கும்  உதவார்கள்  இரங்கார்கள்  பேச்சு மட்டும்  பெரிய  விண்ணர்கள் போல்  இந்த  மனிதர்களை  பார்த்தே  கனலானான்  எட்டயபுரத்தான்  

சொந்த சகோதர்கள்  துன்பத்தில்  சாதல்  கண்டும் சிந்தை இரங்காரடி  எத்தனை  வருத்தம்  இருந்திருக்கும்  பாரதிக்கு  இல்லாவிட்டால்  இப்படி  கொதித்து  எழுதியிருப்பாரா  அனைத்தும்
படித்து  கிழித்தவர்கள் என்போரும்  தங்களுக்கு  மரியாதை கிட்டும் பேர் வரும்  என்ற எதிர்பார்ப்புடன்
சில  காரியங்கள்  செய்கின்றார்களே   தவிர  அவர்களும்  பொதுவில் இரக்கம்  இன்றியே  வாழ்கின்றார்கள்  மேடைகள்  அதில்  அலங்கார வாய் மின்னல்கள்  என்று  போலிகளாக  வாழ்கின்றார்கள்-  நல்ல நெஞ்சங்கள்   இதுகளை  கண்டு வேகின்றது  துடிக்கின்றது.

ம.இரமேசு   
மழையில் நனைந்த  மரம்



பழம்  கொத்த  வந்த  பறவை
மரத்திடம்  கேட்டது  ஏன்  உனக்கு
வியர்வை ஆறாய் ஓடுகின்றது
அதுவா  நான்  காற்றால் மகிழ்ந்து
ஆடியதை கண்ட  கார்முகிலும்
நீல வானும் ஐயோ  ஏதோ  விபரீதம்
வருமோ என  பயந்து ஓடின
ஓடிய ஓட்டத்தில்  அவர்களுக்கு
வியர்த்து கொட்டிய  வியர்வை
என்மீது  விழுந்து  என்னை
 நனைத்து விட்டது

ம.இரமேசு 
பூ

வண்டு வந்து  பூவிடம்   சொன்னது
நீ நேற்று  மலர்ந்தாய்  நான் தேன் உண்டேன்
இன்றும்  மலர்ந்திருக்கின்றாய்  தேனுண்கின்றேன்
நாளையும்  மலர்வாய்  தானே
மலர்வேன் ஆனால்  நீ வரு முன்னே
என்னை  பறித்துவிடுவார்கள்  மனிதர்கள்
சாமிக்கு  மாலையாக்கவோ  இல்லை
சாமியானவர்க்கு  மாலை  சூட்டவோ அறியேன்

ம.இரமேசு 

சிதறிய சிந்தனை முத்துக்கள்

சிதறிய சிந்தனை  முத்துக்கள்

எல்லா உயிர்களும் சாய்ந்து கொள்ள ஒரு தோளை எதிர்பார்க்கின்றன
சாய்த்துக்கொள்  உன் தோளை

எது பருப்பு  எது  பாயாசம்  என்று  தெரியாது தடுமாறும்  அளவுக்கு 
இருட்டில்  நடக்கிறது ஐந்து  நட்சத்திர விடுதி

சீசரை  அறுத்து  எடுத்ததனால்  சிசேரியன் எனப்பெயர்  வந்தது

பொது நீதியில் புதுப் பாதையில் வரும் நல்லவர்கள் அடியொற்றி  நடவுங்கள்

பொய்மை எப்போதும் நிலைத்து ஒங்குவதில்லை  உண்மை  எப்போதும்
நிலையாக  தூங்குவதும் இல்லை

நன்றி  மறவாது  இருப்பாயானால்  அதுவே  நீ  கீழே  சென்றாலும்
 மீண்டும் மேலே  எழுவதற்கு மூலதனமாக அமையும்

நல்ல  போதனைகள்  உன் வானத்தை  அழகாக்கும்  செயல்களை  இனிதாக்கும்

 நீங்கள்  தொழிலாளியாகி  விட்டீர்கள்  என்று  வேதனை கொள்ளாதீர்கள்
இறைவன்  போடும் பந்தியில்  தொழிலாளிக்கே  முதல்  இடம்

ஆயிரம்  பேர்  குளிரூட்டிய  அறைகளில்  இருந்து  வரையும்  திட்டங்களை
ஐநூறு   தொழிலாளர்களே  முடித்துக்கொடுக்கின்றார்கள்

உழைப்பவர்கள்  வளைவதனால்  உலகம்  நேராக  உருள்கின்றது
அதுகண்டு  மகிழ்ந்து  மழையும்  பூமிக்கு  இறங்குகின்றது

ம.இரமேசு

 

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

வானின்  வியர்வை



வெள்ளி நிலவும் 
வெண்பனியும்
சில்லெனும் சாரலும்
கண்டு களிக்க
துள்ளி விளையாடும்
கடலலைகள்

நீல  ஆடையில்
உடல் மறைப்பாள்  ஆழி
 அவள் கார் கூந்தலில்
 வளையும்  பூவாய்
 குடியிருக்கும்
வெள்ளி  அலைகள்
கரை வந்து ஏதோ  சேதி 
சொல்லி சொல்லி
 மீண்டும் ஓடும் அலை
அவள்  தலை  சூட

வானம்இதனை பார்த்து
மகிழ்ந்து கூத்தாடும்
அது ஆடியிளைத்த  
வியர்வை மண்ணில்
பொன்னாகும் முத்தாகும்
பூமிக்கும்   உணவாகும்
மண்ணும்  மகிழும்
மற்று மனதும்  மகிழும்



ம .இரமேசு  
தமிழே பேரழகு 

இன்ப  வெள்ளி  பூத்திருக்க
நெய்தல் கரையின் பால் மண்ணில்
பருவ வாசல் திறந்திருக்க உள்ளே
இனிய காதலர்  சேர்ந்திருந்தார்
அந்தோ  காதலன்  வாய் மலர்ந்தான்
கண்ணே உன்  அழகு அழகா
இல்லை  இந்த  நிலவு அழகா
கடலின் அலைகள் அழகா
அலைகள் அணையும்  கரையழகா
அத்தான்  இவையெல்லாம்  அழகுதான்
அதனிலும் அழகு உங்கள்  சொல்லன்றோ
அன்பே  அது  தமிழ்  தந்த  வசந்தம்
உன்வழி  முறையின்  தமிழே பேரழகு 

ம.இரமேசு