புதன், 3 டிசம்பர், 2014

சைக்கிளே  சைக்கிளே  உனக்கு நன்றி 
எத்தனை எத்தனை  இடங்களுக்கு 
பயணப்பட  உதவினாய் 
காற்றை மட்டுமே உனக்கு  கொடுத்தேன்
வேறு என்ன செய்தேன்  சில  வேளைகளில் 
எண்ணை  விடக்கூட மறந்ததுண்டு  நீ  அழுது 
காட்டிய பிறகே  ஒயில்  விட்டதுண்டு  
சக்கரங்களே  உங்களின் தொண்டே  தொண்டு 
நடுத்தர  மக்களுக்கு இருக்கும் மலிவு விலை 
போக்கு வரத்து  நீதானே   சைக்கிளே 
மிகவும் தொலைவிலுள்ள இடங்களுக்கும் 
செல்ல சலியாது உதவும்  நண்பன்  நீயன்றோ 
அன்று  மாமாக்கள் சித்தப்பாக்கள் 
 திருக்கேதீஸ்வரம்  கிளிநொச்சி 
வவுனியா  தொண்டமனாறு  வல்லிபுரம்
 நாகர்கோயில் சாவகச்சேரி என்று 
அராலியிலிருந்து  நீண்ட தொலைவில்  இருக்கும்
 இடங்களுக்கு உன்மீது அமர்ந்து
உழக்கி சவாரி செய்தார்களே  
உன்னை  நினைக்கையில்  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 
நன்றி  சைக்கிளே  நன்றி  .
 
ஓரு எழுத்து வார்த்தைகள் !!!
அ – எட்டு, அழகு, சிவன்
ஆ – பசு, ஆன்மா, எருது
இ – ½-யின் தமிழ் வடிவம்...
ஈ – ஈதல், கொடுத்தல், பறக்கும் பூச்சி
உ – சிவன், ஆச்சர்யம், இரண்டு
ஊ – ஊன், இறைச்சி, உணவு
எ – வினா எழுத்து, ஏழு
ஏ – அம்பு, வினாப் பெருக்கம்,இறுமாப்பு
ஐ – தலைவன், அரசன், வியப்பு, ஆசான்
ஓ – மகிழ்ச்சி, வியப்பு, மதகுப்பலகை
ஒள – உலகம், ஆனந்தம்
க – கடவுள், பிரம்மன், அக்னி, ஒன்று
கா – சோலை, காத்தல், காவல்
கி – இரைச்சல் ஒலி
கு – பூமி, உலகம், குற்றம்
கூ – பூமி, உலகம், கூகை
கை – உறுப்பு, ஒழுக்கம், சிறகு,ஒப்பனை
கோ – அரசன், தலைவன், பசு, இறைவன்
கெள – கொள்ளு, தீங்கு, பற்று
சா – சாதல், இறத்தல், சோர்தல்
சி/சீ – இகழ்ச்சி, இலக்குமி,வெறுப்பு
சு – விரட்டுதல், சுகம், மங்களம்
சே – எருது, சிகப்பு, மரம்
சை – கைப்பொருள், அருவெருப்பு, ஒலி
தா – தருதல், கொடுத்தல், கேடு
தீ – நெருப்பு, சினம், தீமை, நரகம்
து – உண், அசைதல், உணவு
தூ – வெண்மை, தூய்மை, பகைமை
தே – தெய்வம், கடவுள், அருள்
தை – மாதம், தைத்தல், அலங்காரம்
நா – நாக்கு, நடு, அயலர்
நீ – முன்னிலை
நே – அன்பு, அருள், நேயம்
நை – நைதல், வருந்துதல்
நொ/நோ – துன்பம், நோய்
ப – நூறு
பா – பாட்டு, அழகு, பாதுகாப்பு
பி – அழகு, பிறவினை விகுதி
பீ – பெருமரம், மலம்பூ – மலர், பூமி, பிறப்பு
பே – நுரை, மேகம், அச்சம்
பை – பசுமை, கைப்பை, இளமை (பையன்)
போ – போதல், செல்லுதல்
ம – சந்திரன், சிவன்
மா – பெரிய, விலங்கு, மேன்மை,மாமரம்
மீ – மேலே, உச்சி, ஆகாயம்
மூ – மூப்பு, முதுமை, மூன்று
மே – அன்பு, மேன்மை, மாதம், மேலே
மை – அஞ்சனம், கண்மை, இருள், மலடு
மோ – மோத்தல், முகர்தல்
ய – 10 தமிழ் எழுத்து என்பதன் வடிவம்
யா – யாத்தல், யாக்கை, ஒரு வகை மரம்
வ – கால் பாகம்
வா – வருதல், தாவுதல், உண்டாக்குதல்
வி – அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ – மலர், விரும்புதல், பறவை
வை – கூர்மை, வைத்தல், வைக்கோல்
வௌ -கைப்பற்று, ஒலிக்குறிப்பு,திருகு

திங்கள், 1 டிசம்பர், 2014

பாலகத்து  மூச்சை  பனிக்கக்  கண்டாய் 
நான் பாதையில்  ஓடிய  அழகுகண்டாய்
நாலரை மணி விடியலிலே மெலிதாய் 
குளிர்ந்து பேருந்துக்காய்  காத்தது கண்டாய் 
 
 
படு பாதகத்து   பாரதப் பட்டாளம் 
சிங்கத்து செறுநர் வந்திருந்து
வதைகள் பல செய்த போதிலும் 
வணங்காமுடியாய்  வானம் நோக்கி
 உயர்ந்து  நிற்கும்  வடிவான  மரமே
 நீ  மானமுள்ளவன் .


எத்தனை ஆண்டுகள்  சென்ற போதிலும்
உன்னை கண்டவரெல்லாம்  மாண்ட போதிலும்
சுந்தர வடிவாய்  சுழலும்  சுடரே 
நின் வாழ்நாள்  நீண்டு  வளரட்டும்.


 
எண்ணிலடங்கா  உணர்வுகளுக்குள்
நின்   இன்ப துன்ப வேளைகளும்   அடக்கம்
கண்ணில்லா  மனிதர்கள் கொண்ட
கோலங்களுக்கு நீயே சாட்சி
உனக்கு மட்டும் வாயிருந்தால்
உலகத்து   ஊடகங்கள்
உன் பக்கம் வந்திருக்கும்.


பேயோ  இல்லை பிசாசோ
என்று நீ எண்ணியிருப்பாய்
இந்தியத்தின்  ஈனப்பட்டாளம் கண்டு
உன்னருகில்த்தானாமே  அந்த
நாகங்கள்  குடியிருந்தன  கொஞ்சக்காலம்
கொடுமைகளின்  சீற்றம்  உன்னை
அசைக்கவில்லை - நீ வாழ்க வாழ்க .

ம,இரமேசு

 
அன்றைய கால மக்கள்  எந்தத் துறையில் இருந்தாலும் மிளிர்ந்தார்கள் காரணம் செய்யும் தொழிலில்  பயம் பக்தி  மரியாதை கொண்டிருந்தார்கள்.   இன்று கதை நன்றாக  இருந்தால் எந்த  ஆளும் நடிக்கலாம் படம்  வெற்றி பெறும் - இப்பொழுது  இருக்கும் நடிகர்களில் எவருக்கு முகபாவத்தை மாற்றி மாற்றி காட்டத்தெரியும்,   சிவாஜி  எம்ஜிஆர்  எம் ஆர் ராதா நாகேஷ்  நம்பியார் எஸ் வி சுப்பையா  பாலையா  முத்தையா   ரங்கராவ்  வீரப்பா அசோகன்  மனோகர்  ராமதாஸ்  போல் .  ஆனால் கோடிக்கணக்கில் 
சம்பளம்   வாங்கி பெரிய  பெரிய  வீடுகள் கட்டி  சொத்துக்கள் சேர்த்து  வைத்திருக்கின்றார்கள், இதில் முதல்வர்  ஆசை வேறு -  உலகநடப்பு,   உள்  வெளி  அரசியல் விவகாரம் , தமிழ்நாட்டு  கிராமங்களின் நிலை,  மனிதர்களின்  வாழ்வுநிலை,  நதிகள், குளங்கள்  பற்றிய  கணக்கு புள்ளிவிபரங்கள்  என்ன என்று தெரியுமா ,  பதவிக்கு வந்தால் அவற்றைப் பற்றி  அறிய ஆளை வைப்பார்கள்  அவ்வளவே -  ஐயா டி எம் எஸ்  மரணச் சடங்கில் சிவாஜி  பிள்ளைகள் ஊரில் இருந்தும்  கலந்து கொள்ளவில்லை.  இது  சிவாஜி குடும்பத்துக்கே இழுக்கு.   நன்றி மறந்த செயல்,  சிவாஜியின்  பாடல் நடிப்புக்கு குரலால்  உயிர்கொடுத்த  ஒப்பாரும்  மிக்காருமில்லா பாடகனுக்கு அவர்கள்   செலுத்திய  நன்றிக்கடன்  இதுதான்.

  தமிழ் நாட்டின் கலைத்துறையில் சிவாஜி எம் ஜி ஆருக்கு  ஈடு இணையான கலைஞன்  பாடகர் திலகம் டி எம் எஸ் . நடிகர்களுக்கு மட்டுமின்றி  இரசிகர்களுக்கும்  பாலமாக  இருந்து பாடிக்கொடுத்தவர்  டி எம் எஸ்  ஐயா என்றால் மிகையில்லை.    கச்சேரிகள் ஈட்டிய பொருளை    ஏழை மக்களுக்கு கொடுத்து உதவிய மாமனிதர். அவர் கோடிகளை  கொண்ட  கலைஞனாக  இல்லாததனால்  எல்லோரும் மறந்துவிட்டார்கள், அந்த மகா  மனிதனை கலைஞனை  என்பது தமிழ் நாட்டுக்கே வெட்ககேடு, இழுக்கு. அவர் மட்டும் வேறு நாட்டிலோ பக்கத்து மாநிலங்களிலோ  பிறந்திருந்து   பாடியிருந்தால்  அவரை  மிகவும் போற்றிக்  கொண்டாடியிருப்பார்கள்.  தமிழ் நாட்டில்  விளம்பரம் செய்பவர்களுக்கும்,  இனிப்பாய் பேசி  நாடகமாடுபவர்களுக்குமே  காலம். அவர்மட்டும் கோடீஸ்வரனாக  இருந்து நயமாக  நடித்துப்பேசியிருந்தால்  எல்லோரும் சொந்தம் கொண்டாடிக் கொண்டு  சென்றிருப்பார்கள், தங்கத்தேரில் வைத்து  இழுத்திருப்பார்கள். குறிப்பாக  ஒருவர்  சொல்லுவார்  பெரிய கலைஞர்களைப் பார்த்து "அவரின் பிள்ளை நான்" என்று.  எங்கே தொலைந்தார் அந்த ஆள்,  மரணச் சடங்குக்கே சமுகமளியாது?  ஒரு  மாபெரும்  தமிழ்நாட்டின்  குரல் வித்தகன் 50 ஆண்டுக்கும் மேலாக   பாடி  மக்களை மகிழ்வித்தவர் மரணித்தார் ,  அதற்கு  அஞ்சலி  அன்றில் இரங்கல்  தெரிவிக்கக்கூட   எண்ணாது தாமும் கலைஞர்கள்  என்ற பெயரில்  வாழ்கின்றார்கள் தமிழ் நாட்டில்.  இந்த  அலட்சியத்தை கண்டிக்க எந்தப்  பத்திரிகையும் இல்லை தமிழ்நாட்டில்  என்பது மாபெரும்  வேதனை.

டி எம் எஸ்,  பக்தன்
ம.இரமேசு 

ஞாயிறு, 30 நவம்பர், 2014

இதனால்  ஒன்று

"அச்சமே கீழ்களது  ஆசாரம் : எச்சம்
அவாவுண்டேல்   உண்டாம்  சிறிது "


ஐரோப்பியர்கள் என்றால் மது அருந்துபவர்கள்  மாமிசப்பிரியர்கள்   நிறைய பெண்களுடன் ஆண்களுடன் உறவாடுபவர்கள்  என்றே  நாம் நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றோம்  அதில் முழு உண்மையில்லை -  இங்கும்  ஒழுக்கத்துடன் நல்வழியில் வாழும் வெள்ளைக்கார  மக்கள் நிறைய  இருக்கின்றார்கள்   முழங்காலுக்கு  கீழே பாவாடை அணியும்  வழக்கமுமுண்டு  மது மாமிசம் உண்ணாதவர்களும்  இருக்கின்றார்கள் பிறருக்கு உதவி செய்யும் மேலானான  நல்ல இதயமுள்ளவர்களும் வாழ்கின்றார்கள்.  நம்மவர்கள் தீயதை மட்டும் எடுத்துக்கொண்டு  வெள்ளை மக்களின் நல்ல பக்கங்களை காணாது விட்டிருக்கின்றார்கள். ஔவையையும் வள்ளுவனையும்   வள்ளலாரையும்  தேவாரங்களையும் திருவாசகங்களையும் படித்துவிட்டு  பட்டும் பவளமும்  தரித்து  வன்னிவாழ்  தன்  இனத்துக்கு  தருமம் செய்யா மனமுடைய  தரித்திரர்கள்  நம்மிடையே நிறைந்து வாழ்கின்றார்கள் - தமிழ் என்பார் அதை காதலிக்கின்றேன் என்பார்  ஆனால்  தமிழ் கூறும்  அன்பு கருணைஇரக்கம் மட்டும் கைக்கொள்ளார். உதவிச்சேவை  செய்பவர்களுக்கு  ஆதரவும் கொடார் பொய்யான  சாட்டுகள் சொல்லி ஓடி ஒளிவர். மேடைகள்  பாராட்டுக்கள்   என்றால்   ஈ  இலையான் எறும்பு போல் மொய்ப்பார்கள்  அழகாகச்   சிரிப்பார்கள்  அறிவு சீவிகள்போல்  அளப்பார்கள் . பட்டப்பகல்  பட்டாடை  உடுத்தும்   இருட்டு மாந்தர்,   இவர்கள்தம்  இதயத்தில்  இல்லை  இரக்கம் .
"அச்சமே கீழ்களது  ஆசாரம் : எச்சம்
அவாவுண்டேல்   உண்டாம்  சிறிது "

ம - இரமேசு  - தொன்மார்க்.

வெள்ளி, 28 நவம்பர், 2014

 சிந்தித்த  முதல் நாள் 

அறுபதில் கிளியோடு பேசு   கிளி  கிடைக்காத  நாட்டில் வாழ்கின்றீர்களா   அல்லது கிளியை  வளர்ப்பது தவறு என்று நினைக்கின்றீர்களா   எனது  அமரரான  அப்பாபோல் ,  அப்படியென்றால்  உங்கள் வீட்டில்  இருக்கும்  முகம் பார்க்கும்  கண்ணாடியுடன்  பேசுங்கள்  ஏனெனில்  அறுபதுக்குப்பிறகு  எளிதில் உங்களுடன்  கதைப்பதற்கு  யாரும்  வரமாட்டார்கள்  கண்ணாடி  பேசாது ஆனால்  பேசுவது போன்ற  உணர்வைத்தரும்  -  சிறுவயதில் கிளி வளர்க்க  ஆசைப்பட்டதனால்  எனது  மாமா  ஒருவர் ஆறு  பற்றி  (மின்கலம்)  டோச்லைட்  ( கைப்பிடி ஒளிவிளக்கு  )  அடித்து  ஒரு  கிளிக்  குஞ்சை  என்னிடம்  கொண்டுவந்து  தந்தார்  அதைக்கண்டு  நான் அடைந்த பரவசம்  மகிழ்ச்சி  எல்லையில்லை - கிளிக்கூண்டு  வேண்டித்தருமாறு  கெஞ்சியதைக்கண்டு  3 ரூபாவுக்கு  பெரிய  கிளிக்கூண்டு  வாங்கித்தந்தார்கள்  எனது தாயார்   சில நாட்கள்  அந்தக்கிளியுடனே  எனது வாழ்வு ஓடியது  நான் சாப்பிட மறந்தாலும்  அதற்கு  எள்ளு ,  கொவ்வைப்பழம்  எல்லாம்  வைத்துவிடுவேன் எங்கள் வீட்டு நாய்  கிளியை  பார்த்து  குலைக்கும்  விதமும்   பார்வையும்   எனக்கு பிடிப்பதில்லை .  இப்படியிருக்கையில் ஒரு நாள் எனது  தந்தையார்  கொழும்பிலிருந்து  லீவில்  (விடுமுறை)  வந்திருந்தார்  இரண்டு  நாட்கள்  எனது கிளியுடனான  நட்பைக்   கண்டார்  மூன்றாம் நாள்  என்னை  நெருங்கி  அன்பாக  சாதாரணமாகக் கேட்டார்   மகனே   இதுபோல்  உன்னை  ஒரு கூட்டில்  அடைத்தால்  நீ  மகிழ்வாயா  என்று,    அன்றைய பொழுதே  நான்  சிந்தித்த  முதல் நாள்  அடுத்த கணமே  கூட்டைத்  திறந்தேன்   கிளி  சுதந்திரமாக வெளியே  பறந்தது .

ம.இரமேசு
தொன்மார்க் .

வியாழன், 27 நவம்பர், 2014

விபூதி உருவான கதை 

  அன்பான  தமிழர்கள்  அனைவரும்  படித்து  அறிந்து கொள்ளுங்கள்  இதோ !

பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைந்து கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணைத்  திறந்தான். அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தன. பசியால் முகம் வாடி இருந்தவனைக்  கண்ட பறவைகள் பழங்களை பறித்து பர்னாதன் முன் வைத்தது. இது ஈசனின் கருணையே என்று மகிழ்ந்து பசி தீர கனிகளை சாப்பிட்டு முடித்து மீண்டும் தவத்தைத்  தொடர்ந்தான். இப்படியே பல ஆண்டுகள்  கடந்தோடியது. தவத்தை முடித்துக்  கொண்டு சிவவழிபாட்டை தொடங்கினான். ஒரு நாள் தர்பைப் புல்லை அறுக்கும் போது அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது. ஆனால் அவனுக்கோ எந்த பதற்றமும் இல்லை. குழந்தைக்கு ஆபத்தென்றால் தாய் பதறுவதைப் போல பதறியது ஈசன்தான். சிவபெருமான் வேடன் உருவில் தோன்றி, பர்னாதன் கையை பிடித்து பார்த்தார். என்ன ஆச்சரியம்…. ரத்தம் சொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது. வந்தது தாயுமானவர் என்பதை அறிந்தான். “ரத்தத்தை நிறுத்தி சாம்பலை கொட்ட செய்த தாங்கள் நான் வணங்கம் சர்வேஸ்வரன் என்பதை அறிவேன். இந்த அடியேனுக்கு தங்கள் சுயஉருவத்தை காணும் பாக்கியம் இல்லையா?“ என்று வேண்டினான் பர்னாதன். ஈசன் தன் சுயரூபத்தில் காட்சி கொடுத்தார். “உனக்காகவே இந்த சாம்பலை உருவாக்கினேன். அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என்று அழைக்கப்படட்டும். உன் நற்தவத்தால் விபூதி உருவானது. அக்னியை எதுவும் நெருங்க முடியாததைப்  போல விபூதியை பூசி அணிந்து கொள்பவர்களின் அருகில் துஷ்டசக்திகள் நெருங்காது. விபூதி என் ரூபம். அதற்கு நீயும் துணையாக இருந்த வா“ என்று ஆசி வழங்கினார் சிவபெருமான். விபூதியைக்  கட்டை விரலாலும் மோதிர விரலாலும் சேர்த்தெடுத்து மோதிர விரலால் நெற்றியில் இட்டுக்கொள்ளல்  வேண்டும். ஆனால் கட்டை விரலும் நடுவிரலும் சேர்த்து விபூதியை எடுக்கக்கூடாது. கட்டைவிரலாலும் நெற்றியில் விபூதியை வைக்கக்  கூடாது என்கிறது சிவபுராணம் விபூதியால் என்ன நன்மை? என்று ஸ்ரீ ராமர், அகத்திய முனிவரிடம் கேட்டார். “பகை, தீராத வியாதி, மனநல பாதிப்பு, செய்வினை பாதிப்பு இப்படி எது இருந்தாலும் தொடர்ந்து விபூதியை அணிந்து வந்தால் அந்த பிரச்சனைகள் விலகும்“ என்று அகத்திய முனிவர் ஸ்ரீ ராமருக்கு உபதேசம் செய்தார். ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்ததும் விபூதி. அதனை விரும்பி விபூதி கலந்த நீரில் தினமும் அவள் நீராடுகிறாள். திரு என்றால் மகாலஷ்மி. அதனால்தான் விபூதியை திருநீறு என அழைக்கிறோம்.

“மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு காண இனியது நீறு கவினைத் தருவது நீறு தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே“

 
அன்புடன் 
ம.இரமேசு 

புதன், 26 நவம்பர், 2014

வார்த்தைகளில்  நாகரிகம் வேண்டும்  அது மீறும்போது மனிதன் தன்மானத்துக்கு சோதனை வருகின்றது உள்ளம் காயமடைகின்றது உணர்ச்சிக்கு மனிதன் அடிமையாகி வன்முறையில் ஈடுபடுகின்றான்
ஆதலினால்  எந்த நிலையிலும்  பேச்சிலும் எழுத்திலும்  பிறர் காயம் கொள்ளாத  வகையில்  ஈடுபடுவோம்  மாற்று கருத்தை  பண்புடன்  பணிவுடன் பகிர்தல் வேண்டும். ஒருவர் நம்மை  ஆத்திரம் ஊட்டும் விதம்  எழுதினால் பேசினால்  நாமும் அவர்  போல்  பதிலுக்குப் பதில்  அசிங்கமாக 
எழுதுவது பேசுவது அறிவாகாது  மாறாக அவரை போற்றிப் பாருங்கள்  அவர்  உங்களுக்கு  அடங்கி விடுவார்  தனது  நடத்தைக்கு உள்ளூர  வெட்கம் கொள்வார்  இது  நல்ல  பக்குவம்  உள்ள உயர்ந்த உள்ளங்கொண்டோராலேயே  முடியும்   அந்த பக்குவம்  உங்களின்  மேலான சிந்திப்பில்  உண்டாவது  பணிவு வந்தால் பக்குவம்  தானாக  வரும்.

செவ்வாய், 25 நவம்பர், 2014

 அகப்பா

சுடு சோறை பழையதென்பார்
கடுகேனும் உண்மை தெரிந்திலார்
உண்மை  உயிரோடு கலந்திடார்
பொய் நாவால் புரளி  பரப்புவார்
அன்று நான்  அறியவில்லை  
என் வீட்டு முற்றம்
நாகம் மொய்த்த  காடென்று
இன்றுதான்  புரிகின்றது
என்மீது விடம்  கொட்டினார்களென்று
அவர்கள் இனிதே வாழ்க  வாழ்க
 என் நெஞ்சில் வஞ்சம் இல்லை
பழிவாங்கும்  குறியும் இல்லை

அண்ணா தம்பி தங்கை சொன்னார்கள்
அவன்  கூடாதவன்  கூடாதவன்  என்று
நான் அவனை  அப்படி காணவில்லை
அவனை நட்பில் கூட   விழைகின்றேன்

எப்பொருள் யார்  யார்  வாய் கேட்பினும்
அப்பொருள்  மெய்ப்பொருளா  என்று  அறி--
காலத்தின் கோலத்தால் காட்சிகளில்  வில்லன்
ஞாலத்தில்  உண்மையில்  மாசற்ற    நல்லன்
என்னை நானறிவேன் என் உள்ளம்  யாரறிவார்
அம்மா    நயினைத்  தாயே என்னை  நீயே  அறிவாய்.


ம.இரமே


 

திங்கள், 24 நவம்பர், 2014

இருட்டு அறைகளுக்கு நீதான்  வெளிச்சத்தை பாய்ச்ச வேண்டும் 


உனக்குள் இருக்கும் அறியாமை,  அவா என்னும் 
இருட்டு அறைகளுக்கு நீதான்  வெளிச்சத்தை பாய்ச்ச வேண்டும் 
 இல்லையேல் இருட்டில்  கிடந்தே உழல்வாய்.
வெளிச்சம் வந்தால்  அறைகளின்  பூட்டுக்கள் தெரியவரும்
பூட்டைத்  திறக்க  உனக்கு  வெளிச்சம்  உதவி செய்யும்
ஆசையிலும்  அவாவிலுமிருந்து மீள்வாய்  உண்மை  அறிவாய்
நிம்மதி  கிட்டும்  மனம் மகிழும்  உணர்வாய்  மிளிர்வாய்
ஆசையும் அவாவுமே  உன்னை பிடித்த  சிரங்கு  சொறி.
நீ எத்தனை  கோடி செல்வம் கொண்டாலும்  இறுதியில்
உனக்கு  பயன்படுவது பஞ்சும்  கஞ்சியுமே  வேறு அல்ல. 
அ 1
மன வயலில்  மஞ்சல்  மின்னல்
மதுரகான  இன்ப மழை பொழிய
மாதுளம் பூவை   மெல்ல  அணைத்தே
மஞ்சல்  வெயில் மேனிக்கே கருணையுடன்
மந்திரத் தேன் மழை  பொழிந்திடவே
மங்காப்   பயிர்கள் செழித்து  வளர்ந்தனவே 
மனை    இல்லை என்னும் பசி நீக்கினவே

அ 2
தேவைகளை கூட்டி  வாழ்வது நாகரிகமாகாது
தேவைகளை  குறைத்து வாழ்வதே  நாகரிகம்
தனக்காக மட்டும்  உண்டு  வாழ்வது மிருகம் 
பிறருக்கு  கொடுத்து  வாழ்வதே மனிதம்
இந்தப்பூமியில்  மனிதன்  வந்தது 
உருவாக்கவும் அன்பு செய்யவுமே
கோடிக்கணக்கில் குவித்து  பெருவாழ்வு
முப்பத்தாறாயிரம்    மணிநேரம் மட்டுமே
அதுவும் நீ நூறு  ஆண்டுகள் வாழ்ந்தால்

அ 3
முடிச்சுக்களைப் போட்டு  வாழ்வது  வாழ்வா
முடிச்சுக்களை  அவிழ்த்து  வாழ்வது வாழ்வா
உன்னை  பொருள்   அடிமையாக்குகின்றது 
ஒரு  குறி  உன்  மகிழ்வான கணங்களை
விழுங்கி ஏப்பம் விடுகின்றது,  நீ  உயிருடன்
இருந்தாய்  வாழவில்லை   எதிர்பார்ப்பு
உன்னை கட்டுப்படுத்தி ஊனமாக்கியது
அதில்  நீ  சேர்த்திருக்கலாம்  ஆனால்  நீ
வாழ்வை   மன மகிழ்வை  இழந்தாய்
என்பதே உண்மை  மீண்டும்  அந்தக்கணங்கள்
உன்னைத்தேடிவராது  நீ  இழந்ததே அதிகம் 

ஞாயிறு, 23 நவம்பர், 2014

 காதல்  2014 ல்

கம்  கம்  கம்பியூற்றர்  காதல்
எம் எம்  எஸ் எம் எஸ் காதல்
பே  பே  பேஸ்புக்  காதல் 
ஒ  ஓ   ஓடும் காதல் 
சி சி  புளிக்கும் காதல் 
நோ  நோ  வேண்டாம்  காதல்

பேஸ்புக் நிலவே  பிரீப்போன்  உறவே
வாணிஸ் மயிலே  வணக்கம் வணக்கம் 
கீபோட் டான்சில்  கிளியின்  விரல்கள் 
பாஸ்போட் வேணும் பாரிஸ் போக

மக்டோனாலில்  பேகர்  உண்போம் 
ஒரே  கிளாசில்  கோலா குடிப்போம்
போதாத சீட்டில் உரசி உரசி இருப்போம் 
உதட்டோரம்  முத்தம் கொடுப்போம் 

ஒரு பிள்ளை பிறக்க  கனதொல்லை மிதக்க
காதல் தொலையும்  கடைவாய் நீளும் 
கட்டியணைக்கும்  விருப்பம் குறையும்
சிலர் கொமன்சுகள் போல  வார்த்தைகள்  குத்தும்

எங்கே நிம்மதி  எங்கே  நிம்மதி  பாடல்  பிடிக்கும்
வீட்டுக்கு வரவே  மனசு வெறுக்கும்
மதுக்கடை செல்ல  மனம்  விரும்பும்
மாட்டினாய் மகனே  வாழ்வில்   மாட்டினாய்

  
மார்கழிக் கண்ணாள்  மயக்கும்  விழியாள்
மாணிக்கக்  கொடியாள்  மனதுக்கு  இனியாள்
தாயுக்குத்  தாயாள்  தையுக்கும்  தாயாள்
மார்கழிப் பேராள்  மாந்தர் பசி தீர்ப்பாள்

அவள் பெருமை  உரைத்திட்டார்
அலைகடல்  அன்னை  மைந்தர்
அன்பின்  பண்பின்  தமிழ்ச் சிற்குணன்
சிறி  என்னும்  நற்பேருடை  நாயகன்

வாழ்க  வாழ்க   வாழ்க  வாழ்கவே.
உங்களிடம்  இல்லாதவருக்கு கொடுக்க பொருள் இல்லை என்று  கவலை கொள்ளாதீர்கள்  உண்மையில்  உதவி செய்ய வேண்டும் என்ற  தூய மனம்  உங்களிடம் இருந்தால் போதும்  நீங்கள்  உதவி செய்தது
போலாகவே  அமையும். ஏனெனில் உங்களிடம் பொருள் இருந்தால் நிச்சயம்  கொடுத்து உதவி செய்வீர்கள் .

மலையை  பாருங்கள்  அதன் உயரத்தை நோக்குங்கள்  அங்கிருந்து  உருவாகும்  நதியினை  அதன்
தன்மையை   சிந்தியுங்கள்  உயர்ந்த இடத்தில் பிறந்தும்  பள்ளம் நோக்கி கீழே  இருப்பவர்கள்
பயன் பெறவேண்டும்  என்ற  எண்ணத்தில்  கீழ்நோக்கி  வருகின்றது நதி  அதன்  சேவையால்  மக்கள்
மகிழ்கின்றார்கள்  தாகம் தீர்ந்து  அமைதி கொள்கின்றார்கள் . இதுபோல்  உயர்ந்த தரத்தில் இருப்போர்
தம்மிலும் கீழே  இருக்கும் அல்லல் கொள்ளும் மக்களுக்கு  உதவி செய்ய  வறியவர்களை  நாடி 
கீழே  செல்ல வேண்டும்   அவர்களுக்கு  மருந்தாக  உங்கள்  உள்ளம் இருக்க வேண்டும் . அப்படி
தேடிச்சென்று  உதவுங்காலே  நீங்கள்  நல்லறிவுகொண்ட   மேன்மக்கள்  என்று பொருட்படும்
நமக்கேன் வம்பு  என்றெண்ணி   ஒதுங்கினால் கற்ற கல்விக்கு சேற்றை  பூசுவது போலாகும்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்  இங்கே இருக்கப்போவது  கொஞ்ச நாட்கள்  அதில்
நன்மைகள் செய்தோம்  உதவினோம் என்று வாழ்ந்து முடித்தலே  நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாகும்
பிறருக்காக  நெஞ்சை திறந்து வாழ்ந்தாலே  நாம்  உலகைவிட்டு நீங்கிய பின்னும்  நமது பெயர் அழியாது காலம் காலமாக  நிலைக்கும் என்ற உண்மையை  உணர்தல் வேண்டும்
இந்த உலகில்  நிறைய பணக்காரர்கள் தோன்றி மறைந்தார்கள்  அவர்கள் பெயர்கள்  எவருக்கும்
உடனே  ஞாபகம்  வருவதில்லை   ஆனால்  பிறருக்கு  நன்மை செய்து  எல்லோரையும் தன்னைப்போல்
தன்குடும்பத்தைப்போல்  எண்ணி  வாழ்வில்  செயற்பட்டவர்களே  இன்றும்  மக்கள் மனதில்
நிலைத்திருக்கின்றார்கள்    ஆதலினால்  நம் நாட்டில் இன்னற் பட்டுக்கொண்டிருக்கும் எளியவர்களை
அணுகி  அவர்களுக்கு நீங்களும்  உங்கள் நண்பர்களுமாக  இணைந்து  உதவி செய்ய  இன்றே எழுங்கள்
பெரிய தொகைகள் அனுப்பினால் தான்  மதிப்பு என்று எண்ணாதீர்கள்  பத்துப்பேர் சேர்ந்து  பத்து ஈரோ  போட்டு  அதை நூறாக்கி அனுப்புங்கள்  அங்கிருக்கும்  ஒரு ஏழைக்குடும்பம்  ஒருமாதம்
பசியாறும் - அங்கே 63 ரூபா  ஒரு இறாத்தல்  பாண்  என்பதை  அறியுங்கள் .

தற்சமயம் அங்கே  சரியான  மழை  குழந்தைகள் தாய்மார்கள்  என்று சகல  ஏழை மக்களுக்கும்  வயற்றில் பசி,  கூரைகள்  நன்றாக இல்லை  அவர்கள் எப்படி நிம்மதியுடன் உறங்குவார்கள் -  எனது சக  இனத்தவன் துடிக்கும் போது  நான்  பல லட்சம்  செலவு செய்து  ஆடம்பர விழா  நடத்துவது  அறிவுடமையாகுமா  என  சிந்தியுங்கள்   அப்படியே  விழா நடத்துவது இன்றியமையாதது எனுமிடத்து  அங்கு துடிப்போருக்கு உதவி செய்துவிட்டு  ஆடம்பரம் இல்லாது  அளவுடன்  அடக்கமாக விழாவை நடத்துங்கள் கொண்டாடுங்கள்  அதுவே நல்லறமாகும்.

சனி, 22 நவம்பர், 2014

வாழ்வை  அனுபவித்து வாழ  காசை  செலவிடாது    சேர்த்து சேர்த்து  அதை பெருக்கி  சீதனம் கொடுக்கவும் அளவுக்கு மீறி  சொத்துக்களை  குவித்து   வாழும்    வாழ்வு முறையை உருவாக்கி விட்டது  நம் மூதாதையர்கள்  அவர்கள்  காட்டிச்சென்ற  வழியையே  சற்றும் சிந்தியாது  சரி பிழை நோக்காது செம்மறி ஆடுகள் போல்  இன்றும்  நம் பெருவாரிக்கூட்டம் அதே பாதையில்   நடைபோடுகின்றது. தனது  செல்வத்தை  தனது இரத்த உறவுகளே அனுபவிக்க வேண்டும் என்று  கருதி  சொந்தத்துக்குள்ளே மகளை  திருமணம் செய்து வைத்தார்கள்,  இதனால்  சாதிப்   பிரிவு  வளர்க்கப்பட்டது  நாங்கள்  வேறு நீங்கள் வேறு என்று சக  மனிதர்களை  ஒதுக்கும் அசிங்கம் வலுப்பெற்றது - ஆங்கிலம் படித்தார்கள் பல்கலைக்கழகம்  சென்றார்கள் வெள்ளையர்களுடன் உட்கார்ந்து தொழில் பார்த்தார்கள்  தவிர  தனது  சமூகம், இனம் எப்படி இருக்கின்றது  அதை  நல்ல திசைக்கு சமதர்ம வழிக்கு இட்டுச்செல்ல  எந்தப் படிப்பாளியும்  சிந்திக்கவில்லை  துணியவில்லை  குரலும் கொடுக்கவில்லை  இது பற்றி பல்கலைக்கழங்கள்  கூட  சிந்திப்பதில்லை,  ஒரு குறிப்பிட்ட  பிரிவினர் மீண்டும் மீண்டும்   அதே  தொழிலை செய்து  குப்பி விளக்கில்  குடிலுக்குள்ளே வாழ்ந்து  வாழ்ந்து  குறிப்பிட்ட   வர்க்கத்துக்கு அடிமைகளாகவே வாழ வேண்டுமா .  எத்தனை ஆண்டுகளாச்சு  இனியும் அசிங்கம் தொடர வேண்டுமா , வெளிநாடுகளில்  பிறந்த  குழந்தைகளின் நெஞ்சிலும் பெற்றோர்கள்  நஞ்சை ஊற்றுகின்றார்களே ,  அவருடன் பழகு   இவருடன் பழகாதே என்று பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து  பிரிவினை வளர்க்கின்றார்களே .

  வெள்ளைக்கார  மக்களை  நோக்கும் போது  அவர்கள்  இப்படி  தங்கள்  இனத்துக்குள் யாரையும் ஒதுக்குவதில்லை மாறாக இயலாதவர்களை (போதைக்கு அடிமையானவர்களை) மீட்டு புனர்வாழ்வு  அளிக்கும்  நெறிமுறையை  வலுப்படுத்த  நல்ல கட்டமைப்பை நிறுவி  நல்லபடி  நடாத்துகின்றார்கள் .  தாழ்ந்து கிடக்கும் நம் மக்களின்  பிள்ளைகள் படிக்க செழிக்க  இன்று  உயர்நிலையில் இருக்கும் நம்  மக்கள் கூட்டம் ஏதாவது புதிய வகையில் சிந்தித்து  செயற்படுமா   இல்லை   இன்னும்   காதல் பிரிவையும்  நடந்து முடிந்த சோகத்தையுமே கவிதையாக்கிக்கொண்டே வாழ்ந்து சாகுமா - நல்ல  படைப்பாளிகள் அறத்தையும்  சமத்துவத்தையும்  மக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும்   விடுத்து   வெறும்  சுவையூட்டும் எழுத்தை மட்டும் எழுதி  யாருக்கும் பயனில்லை  ஒருவரின் எழுத்தால்
ஒருவர்  சிந்தித்து   நல்வழிக்கு  தன்னை இட்டு செல்லுதலே  பயன் தரும்   இப்பொழுது  இதை
வாசிக்கும் ஒருவர்  தன்னை  நோக்கி சிந்திப்பார்  சற்றாவது  தனது  எண்ணக்கருத்தை  நல்ல நிலைக்கு மாற்றுவார்   என்பது திண்ணம்  இப்படியாக  இருக்க வேண்டும் எழுத்து  என்று  பணிவுடன்  பகிர்வேன்.

ம.இரமேசு 
சுழிபுரம்  சங்கானை  சித்தங்கேணி நெல்லியடி  கரவெட்டி கரணவாய்  கச்சாய் வசாவிளான்
மட்டுவில்  ஓமந்தை  பொத்துவில் பொலிகண்டி  கொக்குவில் கோண்டாவில் பளை  கைதடி
மல்லாகம் சுண்ணாகம்  மன்னார்  மட்டக்களப்பு  சுதுமலை  சுட்டிபுரம்  நெல்லியடி  நெடுந்தீவு
புன்னாலை  மாவடி  சங்கரத்தை துணைவி  அராலி  அவிசாவளை  அல்லைபிட்டி  ஆவரங்கால்
அளவெட்டி   அம்பாறை  நல்லூர்  குருநகர்   இறுப்பிட்டி சிறுப்பிட்டி  பண்ணாகம்  பரந்தன்
ஊறாத்துறை  உடுவில்  உடுத்துறை   வவுனியா  மயிலிட்டி  கதிர்காமம்  குரும்பசிட்டி  நுணாவில்
கோவளம்  பொன்னாலை  குளியாப்பிட்டி  இருபாலை  கல்லடி  விசுவமடு களுத்துறை  சில்லாலை
கண்டி  கம்பளை   தெல்லிப்பளை  நயினாதீவு  சிறுவிளான்  பருத்தித்துறை  திருநெல்வேலி புத்தூர்
புங்குடுதீவு  புளியங்குளம்  காங்கேசன்துறை  கட்டுவன்  உரும்பிராய்  கோப்பாய்  மானிப்பாய்  மகோ
ஓட்டுமடம்  அரியாலை  ஓட்டிசுட்டான்  முல்லைத்தீவு  அனலைதீவு  புலோலி  தொண்டைமனாறு
கீரிமலை  பன்னாலை  மாதகல்  மதவாச்சி   கிளிநொச்சி  கம்பர்மலை  மடு  காரைநகர்
நீர்வேலி  நிச்சாமம்  செம்பியன்பற்று  மருதனாமடம்   உடுவில்  கல்லுண்டாய்  நவாலி  நாவாந்துறை
மாதகல் புலோலி  சரசாலை  சங்கத்தானை  சாவகச்சேரி  பண்டத்தரிப்பு  வதிரி வட்டுக்கோட்டை 
மூளாய்  மூதூர்  அச்சுவேலி  பலாலி  புளியங்கூடல்  புன்னலைக்கட்டுவன்  வேலணை  மண்டைதீவு
கொழும்பு பதுளை  வீமன்காமம்  கொடிகாமம் பட்டிருப்பு  பாணந்துறை  சிலாபம்  முருங்கன்
வென்னப்பு  நீர்கொழும்பு   கொளும்புத்துறை  பாண்டியன்தாழ்வு பண்டிவிரிச்சான்  பாலாவி 
ஆணையிறவு  ஆனைப்பந்தி  செட்டிகுளம் 

  

வெள்ளி, 21 நவம்பர், 2014

உறைக்க  சொல்லும்  உண்மைக்கருத்து 
இதை அறிவாய்  தெளிவாய்  தமிழா.

" கொடுத்தலும்  துய்த்தலும் தேற்றா  இடுக்குடை
 உள்ளத்தான்  பெற்ற பெரும் செல்வம் ,- இல்லத்து
உருவுடைக் கன்னியரைப்போலப் ,  பருவத்தால்
ஏதிலான் துய்க்கப்  படும் "

பொருள்

தானும்  அனுபவியாது  பிறருக்கும் கொடுத்து உதவாது
ஒருவர்  சேர்க்கும் பெரும்  செல்வமானது  வீட்டில்
வளர்க்கும்  அழகிய இளம் பெண்ணை  மாற்றான்
அனுபவித்தலுக்கு சமம் ( வீட்டுப் பெண்ணை  அவ்வீட்டின் ஆண்கள்
அனுபவிப்பதில்லை  திருமணம்  செய்து வைக்கும்  இரத்த  சம்பந்தம்
இல்லா ஆளே  அனுபவிப்பான் ) அதாவது  என்றோ ஒருநாள்
அச்செல்வம்  வேறு ஒருவரால்  அனுபவிக்கப்படும்  .

குறிப்பு
அறஞ் செயாதான் செல்வம் அழியும்
ஆன்மீக  மனமுடையோராய்  அழகாக
பலர்  தோன்றுகின்றார்கள்  இனிக்க இனிக்க
பேசுகின்றார்கள்  தேவாரம்   பாடுகின்றார்கள்
பிள்ளைகளுக்கும்  சொல்லிக்கொடுக்கின்றார்கள்
நிறைவான செல்வம் கொண்டிருக்கின்றார்கள்
வன்னியில் வாடுவோருக்கு  100  குரோண்   10 ஈரோ 
தாருங்கள் என்றால்  பதில் இல்லை,   இப்படியானவர்களுக்கே
மேடைகளில்  பாராட்டுக்கள்  பொன்னாடைகள்  இன்னும்
நமது சமூகம்  எங்கோ  நிற்கின்றது . இந்த உண்மைகளை
சொன்னால் பொறாமையில்  கதைக்கிறான் விசரன் 
என்ற  அரும்பெரும்  சொற்கணை  பொழியும் .
இப்படிப்பட்ட எழில் நாட்டில் ஒன்றுபட்டு  வாழமாட்டாது   இனப்பகை கொண்டு இனங்கள்  பிரிந்து  அடிபட்டு சாவதை நினைத்தால் நாம்  எவ்வளவு முட்டாள்கள் என்று  எண்ணத்தோன்றுகின்றது
பொதுவில்  யாழ்ப்பாண  மக்கள் ( பெரும்பான்மை)  உல்லாசமாய் இயற்கையை எழிலை அனுபவித்து வாழத்தெரியாதவர்கள்  சமய  சடங்குகளை சாட்டி கீரிமலைக் கேணிக்கு  நீராடச்செல்வார்கள் அன்றில்
ஒரு விடுமுறை தினத்தில் கடற்கரைக்கோ வேறு இடங்களுக்கோ செல்வது மிக மிக குறைவு    இல்லை என்றே சொல்லலாம் .  ஒரு திரைப்படத்தை பார்க்க செல்வதானாலும்  ஊருக்குள்  குறிப்பாக சொந்தத்துக்குள் நாலாம்  பேருக்குத்  தெரியாமலேயே  சென்று  பார்க்க வேண்டிய சூழ்நிலை  யாழ்ப்பாண  வாசிகளுக்கு -  காசு சேர்ப்பது வயல் வாங்குவது  வளவு வாங்குவது  வீடு கட்டுவது (ஏற்கனவே ஒன்று இருக்க )  சீதனம்  கொடுப்பது  செத்துப்போவது,   ஒரு  பெரிய  எழுப்பங் காட்டும் நோக்குடனேயே   போலியான  மாய வாழ்வு -  சிங்களவர்களுடன் வாழ்ந்த அனுபவத்தில்,   அவர்கள் உல்லாசமாக  வாழ்வை அனுபவிப்பார்கள்;   ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து  சுற்றுலாச்  செல்வார்கள்   கீரிமலைக்கு , கசொர்ணா  கடற்கரைக்கு  பேருந்தில்  உல்லாசப்பயணம்  அனுபவிக்க  வந்த  சிங்கள மக்களை  அன்று  இலங்கையில்  வாழ்ந்த  போது  கண்டிருக்கின்றேன்  -   இங்கு  (வெளிநாட்டில்)பார்த்ததிலிருந்து  நமது  ஆட்கள் பலருக்கு  ஒரு தேநீர்க் கடையில் சென்று தேநீர் பருகி  களிக்கக்கூடத் தெரிவதில்லை  வீட்டுக்குள்ளேயே  இருந்து  தொலைக்காட்சி பார்ப்பது  முழுக்காசையும்  சீட்டு போடுவது  இதர பிற செலவுகளுக்கோ தருமம் செய்யவோ  மேலதிக  காசு வைத்திருப்பதில்லை  சொற்ப காசில்  சிக்கனமாக  (நப்பித்தனம்) சோறு கறி சமைத்து  சாப்பிடுவது,    பிறகு சீட்டுக்காசை எடுத்துக்கொண்டு  இலங்கை இந்தியா செல்வது அங்கே  உள்ளவர்களுக்கு  எழுப்பங் (பந்தா) காட்டுவது   புளுகுவது  இதுதான்  25 ஆண்டுகளில் இங்கு நான் காணும் பெருவாரி யாழ்ப்பாணத்தார் வாழ்வு  காசு காசு   வேறு அறியார்  நம் மக்கள்  "காசு வேண்டும் மகிழ்வாக வாழ  அதற்காக காசே  வாழ்வாகுது"  - நானும் யாழ்ப்பாணத்தில்  பிறந்தவன்
என்ன மாயமோ  எனக்கு  என்  சனத்தைப்போல  வாழ்வதில் நாட்டமில்லை 
அந்த வழிக்கு  நான் எண்ணவுமில்லை -  இலகு வாழ்வு  அன்றாடம் மகிழ்வாக இருக்கும் மனோபாவம்
இல்லாதவர்களுக்கு கொடுத்துதவும் குணம்  எல்லோரையும் மதிக்கும் பணிவு  இவைகள்  எனக்குள் இருக்கும்  தன்மைகள்,   தானாக வந்தது பாதி நானாக   சிந்தித்து என்னை உருவாக்கியது மீதி  இன்னும் 
நாளும் என்னை  நல்லவனாக்க  மேலும் மேலும்  படிக்கின்றேன்  பணிகின்றேன்  அதுவே இப்போதைய நிலை -  இங்கு ஒருவர் இறக்கும் வரை,   அரசு  மக்களை  பசியின்றி பாதுகாக்க  நோய்வந்தால் மருத்துவம் பார்க்க  சகல  வசதிகளும்  செய்திருக்கின்றது  பிறகு நான் எதற்காகவும்  பெருந்தொகை சேர்த்து  வைக்க வேண்டிய அவசியமில்லை -  பயணங்கள்  செய்யவும்  விடுதிகளில்  தங்கவும்  ஊர் உலகைப்  பார்க்கவும்  கூடப்பழகும் நலிவுற்றோரை  மகிழ்விக்க  சற்று  பொருளுதவி  செய்யவும்  உண்ணவும்  கண்ணில் காணும் ஏழைகளுக்கு  (இரப்போருக்கு) கொடுக்கவும்  கொஞ்சம்  சிறுதொகை சேர்த்தால் போதும்  என்பது இன்றைய  தேவை  நினைப்பு . இதுதான் என் பலம் +  என் பலவீனம்  எப்படி எடுத்துக்கொள்வீர்களோ   அறியேன்  பராபரமே   அன்புமிகு பரமேசுவரா. 

இப்படியொரு படத்துக்கு   நான் இப்படி எழுதுவேன் என்று  நானும் சிந்திக்கவில்லை  தானாக சிந்தனை  வந்து விழுந்தது .

 "அன்பே சிவம்     அறிவே  யாவும்     பணிவே பண்பாடு "

 " கொடுப்பதுவும்  துய்ப்பதுவும்  இல்லார்க்கு  அடுக்கிய
    கோடி    உண்டாயினும்   இல்"

வியாழன், 20 நவம்பர், 2014

கொடுமைகள் செய்த  வாஸ்கோடகாமா  - அனைவரும் கட்டாயம் வாசித்து வரலாற்றின்  கோரப்பக்கங்க்களை  அறிந்து கொள்ளுங்கள்   சிறிய வயதில்  வாஸ்கோடகாமா   நாடுகாண் பயணங்களில்   ஈடுபட்டவர்  என்று அவரை ஒரு  பெரிய  கதாநாயகனாக  ஆசிரியர்கள்  சித்தரித்தார்கள்
 அவரை  ஒரு எம் ஜி ஆர்  என்று நம்பியே  இருந்தோம்   இக்கட்டுரை  அவரை  எம்ஜிஆர்  இல்லை  கொடிய  நம்பியாராகக் காட்டுகின்றது உண்மையை  சொல்லி நிற்கின்றது  இதோ  படியுங்கள்.

வாஸ்கோடகாமா

  போர்ச்சுகீசியர்கள், ஸ்பானியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் சென்ற இடமெல்லாம் படு கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு வணிகத்தையும் அரசாட்சியையும் நிறுவியது உலகறிந்த உண்மை. மனிதர்களை கொக்கு, குருவி போல சுட்டுக் குவித்ததையும் வரலாறு அறியும். ஆஸ்திரேலிய, அமெரிக்கப் பழங்குடிகளையும், இன்கா, மாயா, அஸ்டெக் நாகரீகத்தையும் அழித்த ரத்தக் கரை எந்தக் காலத்திலும் இவர்கள் கைகளில் நாற்றம் வீசும். இந்தியாவில், இலங்கையில்,ஏன் ஆபிரிக்காவில் இவர்கள் இழைத்த கொடுமைகள் ஏராளம். இந்தியாவில் வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர் முதல் ஜாலியன்வாலாபாக் வரை ஆயிரக் கணக்காணோர் கொல்லப்பட்டனர்.
போர்ச்சுகீசியர்களும் ஸ்பானிஷ்காரகளும் நயவஞ்சகத்தில் வெள்ளைக்காரர்களுக்கு ஒரு படி மேல்தான். வாஸ்கோடகாமா என்ற கிராதகன் கோழிக்கோட்டில் 1498-ல் வந்திறங்கியபோது அப்போது அரசாட்சி செய்த ஹிந்து மன்னன் (ஜாமொரின்) நல்ல வரவேற்பு கொடுத்தார்.ஆனால்............
வாஸ்கோட காமா - வரலாற்று நாயகர்!
புதிய தேசங்களை கண்டுபிடிப்பதிலும், உலகின் ஆழ அகலங்களை அலசுவதிலும் ஐரோப்பியர்களே முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை. பல நாடுகாணும் ஆர்வலர்களின் கவனம் இந்தியா பக்கமே இருந்திருக்கிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை இந்தியாவில் மட்டுமே கிடைத்த பல பொருட்களை ஐரோப்பியர்கள் அதிகமாக விரும்பினர். உதாரணத்திற்கு நவரத்தினகற்கள், மயிலிறகு, மிளகு, கிராம்பு போன்ற நறுமணப்பொருட்கள். முன்பெல்லாம் அந்தப்பொருட்கள் தரைமார்க்கமாகத்தான் ஐரோப்பாவுக்கு சென்று சேர முடிந்தது. வழியில் பல இடைத்தரகர்கள் இருந்ததாலும், தரைப்பயணம் நீண்டநெடியதாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருந்ததாலும் அந்தப்பொருட்களின் விலை மிக அதிமாக இருந்தது. விமானமும் கண்டுபிடிக்கப்படாத காலகட்டம் அது. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்மார்க்கத்தைக் கண்டுபிடித்து விட்டால் வாணிபம் இன்னும் சுலபமாக இருக்கும் பொருட்களின் விலையும் நியாயமாக இருக்கும் என்பதுதான் ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கான கடல் மார்க்கத்தைக் கண்டுபிடிக்க விரும்பியதன் மிகமுக்கியமான காரணமாக இருந்தது.
1498-ஆம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்து ஐரோப்பாவின் கனவை நனவாக்கினார் ஒரு போர்ச்சுக்கீசிய நாடுகாண் ஆர்வலர். அவர்தான் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்மார்க்கத்தைக் கண்டுபிடித்து வரலாற்றில் தடம் பதித்த வாஸ்கோட காமா. 1460-ஆம் ஆண்டு போர்ச்சுக்கலின் Sines என்ற இடத்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் வாஸ்கோட காமா. அவரது தந்தை Estevao da Gama ஒரு நாடுகாண் ஆர்வலராக இருந்தவர். இந்தியாவிற்கு கடல்மார்க்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முயன்றவர்களில் அவரும் ஒருவர் ஆனால் அந்தக்கனவு நிறைவேறாமலேயே அவர் இறந்துபோனார். தன் கனவை தன் மகன் நனவாக்குவான் என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்காது. அவரது மறைவிற்கு பிறகு போர்ச்சுக்கீசிய மன்னர் இரண்டாம் John அந்தப் பணியை முடித்துத் தருமாறு வாஸ்கோட காமாவைக் கேட்டுக்கொண்டார்.
சிறந்த பள்ளியில் படித்த வாஸ்கோட காமா கடற்படை அதிகாரியாக சிலகாலம் பணியாற்றினார். எனவே இந்தியாவிற்கான கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித்து வருமாறு மன்னர் தன்னை பணித்தபோது அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு செய்து முடிக்க புறப்பட்டார். 1497-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் நாள் போர்ச்சுக்கல் தலைநகர் (Lisbon) லிஸ்பனிலிருந்து நான்கு கப்பல்கள் புறப்பட்டன. Sao Gabriel, Sao Rafael, Berrio, starship எனப்பெயரிட அந்த நான்கு கப்பல்களில் மொத்தம் 170 பேர் வாஸ்கோட காமாவின் தலைமையில் இந்தியா நோக்கி புறப்பட்டனர். கிட்டதட்ட 90 நாட்கள் நிலத்தையே காணாமல் கடலில் பயணம் செய்த அவர்கள் அந்த ஆண்டு நவம்பர் 22-ஆம் நாள் ஆப்பிரிக்காவில் தென்கோடியிலுள்ள Cape of Good Hope-ஐ அடைந்தனர். அதன்பிறகு ஆப்பிரிக்காவின் கரையோரமாக வடக்கு நோக்கி பயணத்தைத் தொடங்கினர்.
போர்ச்சுக்கீசிய மொழியில் Natal என்றால் கிறிஸ்துமஸ் என்று பொருள். அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நெருங்கியபோது அவர்களின் கப்பல் ஆப்பிரிக்காவின் கிழக்கு கரையோரம் சென்றது. அந்தப்பகுதிக்கு Natal என்று பெயரிட்டார் வாஸ்கோட காமா. அதே பெயரில் அந்த இடம் இன்றும் அழைக்கப்படுகிறது. பின்னர் இஸ்லாமிய வர்த்தகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த Mombasa, Mozambique, Malindi போன்ற துறைகளில் தரையிறங்கினார் வாஸ்கோட காமா. தங்கள் வர்த்தகத்திற்கு தீங்கு விளைவிக்க வந்தவர்கள் என்று கருதிய இஸ்லாமிய வர்த்தகர்கள் வாஸ்கோட காமாவை எதிரியாகப் பார்த்தனர். அவரது கப்பல்களையும் கைப்பற்ற முனைந்தனர். அவற்றையெல்லாம் முறியடித்ததோடு Malindi-யில் ஒரு குஜராத்தி மாலுமியை தன்னோடு சேர்த்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார் வாஸ்கோட காமா. அந்த மாலுமியின் ஆலோசனையுடன் அரேபியப்பெருங்கடலில் பருவநிலை மாற்றங்களை உணர்ந்து 23 நாட்கள் கவனமாக கப்பல்களை செலுத்தி இந்தியாவின் தெற்கு கரையோரமுள்ள கேரளப்பகுதியின் கள்ளிக்கோட்டைக்கு (கோழிக்கோடு) வந்து சேர்ந்தார் வாஸ்கோட காமா. அந்த வரலாற்று சிறப்புமிக்க நாள் 10498-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி.
கேரளாவின் கோழிக்கோடு துறைமுகம்தான் தென்னிந்தியாவின் மிகமுக்கியமான வர்த்தகமையமாக விளங்கியது. அப்போது கோழிக்கோட்டை ஆண்டு வந்த Samudiri (Zamorin) ராஜா வாஸ்கோட காமாவை வரவேற்று விருந்தளித்தார். ஆனால் வாஸ்கோட காமா தனக்கு உகந்த பொருட்களை பரிசாக தராததால் அவர் கோபமடைந்தார் மேலும் உள்ளூர் வர்த்தகர்களோடு பகைத்துக்கொள்ள விரும்பாத அவர் போர்ச்சுக்கீசியர்களோடு வர்த்தக உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள மறுத்து விட்டார். இருப்பினும் நிறைய இந்திய நறுமணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் நாள் லிஸ்பன் நோக்கி பயணமானார் வாஸ்கோட காமா. இந்தப்பயணம் மிக கடுமையானதாக அமைந்தது வழியில் அவருடைய வீரர்கள் பலர் scurvy எனும் நோய்க்கு பலியாயினர். கிட்டதட்ட ஓராண்டு பயணத்திற்கு பிறகு சென்ற நான்கு கப்பல்களில் இரண்டு மட்டும் பத்திரமாக போர்ச்சுக்கல் வந்தடைந்தன. கப்பலில் சென்ற 170 பேரில் 55 பேர் மட்டுமே நாடு திரும்பினர்.
கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய வாஸ்கோட காமாவை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மன்னர் அவருக்கு பெரும் பொருளை பரிசாக தந்தார். அதோடு இந்தியப்பெருங்கடலின் தளபதி என்ற பட்டத்தைத்தையும் தந்து கெளரவித்தார். 80 ஆண்டுகளாக காணப்பட்ட கனவு நனவாகிவிட்டதாக மகிழ்ந்தார் மன்னர். மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியா நோக்கி பயணமானார் வாஸ்கோட காமா. இம்முறை தன்னை எதிர்த்த முஸ்லீம் வர்த்தகர்களை எதிர்த்து சமாளிக்கும் திட்டத்தோடு இருபது கப்பல்கள் புடைசூழ பயணமானார். அந்தப் பயணத்தில் சில கொடூரமான காரியங்களில் அவர் ஈடுபட்டதாக வரலாறு கூறுகிறது. போர்ச்சுக்கீசியரோடு வர்த்தகம் புரிய மறுத்த பல இந்தியர்களை கொன்றார். ஒரு சம்பவத்தில் ஒரு கப்பலை வழிமறித்து பொருட்களையெல்லாம் அபகரித்துக்கொண்டு கப்பலில் இருந்த 380 பேரை அங்கயே வைத்து பூட்டி கப்பலை தீயிட்டு கொளுத்தினார் கப்பலிலிருந்த அத்தனை பேரும் பரிதாபமாக மடிந்தனர்.
இரண்டாவது முறை வாஸ்கோட காமா கோழிக்கோட்டிற்கு வந்த போது முஸ்லீம்களை அங்கிருந்து அகற்றுமாறு Samudiri மன்னரை கேட்டுக்கொண்டார். மன்னர் தயங்கவே வாஸ்கோட காமா ஈவு இரக்கமின்றி 38 பேரை கொன்று உடல்களை கடலில் மிதக்க விட்டார் அதோடு கோழிக்கோடு துறைமுகத்தையும் குண்டுகள் வீசி தாக்கினார். வேறு வழியின்றி அவரோடு வர்த்தக உடன்படிக்கை செய்து கொண்டார் Samudiri ராஜா. அந்த உடன்படிக்கையோடு போர்ச்சுக்கல் திரும்பும் வழியில் கிழக்கு ஆப்பிரிக்காவில் பல போர்ச்சுக்கீசிய காலனிகளை உருவாக்கினார் வாஸ்கோட காமா.
மூன்றாவது முறையாக இந்தியா வந்தபோது இந்தியாவுக்கான அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் வாஸ்கோட காமா. ஆனால் வந்த சில மாதங்களில் நோய்வாய்ப்பட்டு 1524-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி அவர் கோழிக்கோட்டிலேயே காலமானார். கொச்சியில் உள்ள ஒரு தேவலாயத்தில் அவரது உடல் புதைக்கப்பட்டு பின்னர் 1539-ஆம் ஆண்டு அதன் மிச்சங்கள் போர்ச்சுக்கலுக்கு அனுப்பபட்டன. கடைசிப்பயணங்களில் அவர் புரிந்த கொடுமைகளையும், வன்முறைகளையும் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் வாஸ்கோட காமாவின் கண்டுபிடிப்பு வரலாற்று சாதனைகளில் முக்கியமான இடத்தைப் பெற வேண்டிய ஒன்று. இந்தியாவிற்கான கடல் மார்க்கத்தை அவர் கண்டுபிடித்த பிறகு உலக நாடுகள் அதன் நேரடி வர்த்தகப் பலனை உணரத்தொடங்கின. இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் நேரடித் தொடர்புகள் ஏற்பட்டன.
பல நாடுகளில் போர்ச்சுக்கீசிய காலனிகள் உருவாவதற்கும் வாஸ்கோட காமாவின் முதல் பயணமே வழிவகுத்தது

செவ்வாய், 18 நவம்பர், 2014

சோறாலும்  கறியாலும்  கட்டிய சுவர் தேகம்
ஊராலும் உறவாலும்  கண்டு வளர்ந்த தேகம்
பொல்லாப் பகை வீழ்த்தப்  போராடிய தேகம்
மழையோடும் வெயிலோடும் பொறுத்த தேகம்
மலரோடும்  மங்கையோடும்  முகர்ந்த தேகம்
உயிரோடும் உணர்வோடும்  உறவாடும் தேகம்
மானங்காக்க  மாடாய் உழைக்கும் தேகம்
முதுமையில்  பெரு வலிகாணும் தேகம்
நெருப்பு நீரால் உருவு பெற்ற தேகம்
மண்ணோடு மண்ணாக  சாம்பலாகும் தேகம்
இதற்குத்தான்  எத்தனை  எத்தனை  பூச்சு
வாசனைத் திரவியங்கள்  வண்ண  வண்ண ஆடைகள்
வசதியான இருப்பிடம்  மகிழுந்து
எல்லாம் முடிந்து  இறுதியில்   பிணம் பிணம்
என்ற பெயரே மிஞ்சும்  இதை  அறிந்தும்
அறிவின் கண் திறவாது  அவாக்களுடன்
அலைகின்றதே  மனிதக்கூட்டம்
முடிவை அறிந்தவன் எந்நிலையிலும்
அமைதியாக இன்பமாக  இருக்கின்றான்
எதையும்  பெரிதாக  எதிர்பார்ப்பதுவுமில்லை
எண்ணுவதுமில்லை  உள்ளத்தில் நிம்மதி நிம்மதி

ம.இரமேசு 


காலம் வளர  கலாச்சாரமும்  மாறுபட்டு வளரும் இதனை  பொறுத்துக்கொள்ள  அன்றில் ஏற்றுக்கொள்ளப்  பழகவேண்டியதே -  நடிகனும் நடிகையும்  கட்டிப்பிடித்து  முத்தங் கொடுத்து உருண்டு புரண்டு நடித்ததை  இரசித்து பார்த்தவர்கள்தானே நம்  மூதாதையர்கள்    அவர்கள் கலாச்சாரப்பற்று  உடையவர்களாக இருந்திருந்தால்  அப்படியான  திரைப்படங்களுக்கு எதிராகப்  போராடியிருக்க வேண்டும்,  விரட்டி விரட்டி பெண்ணின் உள்ளாடை  தெரியுமளவுக்கு  பலாத்காரக்காட்சிகளை  எடுத்து  இரசிக்கத்தந்த போது எந்தத்  தமிழன்  எதிர்த்தான்  குடும்பத்துடன் சேர்ந்து  படம் பார்த்து இரசித்தானே - இப்பொழுது   தமிழர்கள்  பிள்ளைகள் படங்களைப் பார்த்துவிட்டு தாமும்  நடு ரோட்டில் முத்தம் கொடுத்து மகிழ்கின்றார்கள்  என்ன செய்ய முடியும் 


ஆங்கிலக் கல்வி கற்றால் ஆங்கிலப் பழக்க வழக்கம் தானாகவே  வந்து சேரும்  தடுக்க முடியாது வேலி  போடவும் முடியாது  அனுபவிக்க வேண்டியதே  - லோங்ஸ்  போட்ட  பெண் இரண்டு கால்களையும்  விரித்தபடி காரில்      பயணிப்பதை சென்னையில் கண்டு  ஆச்சரியப்பட்டேன்  சென்னை  அமேரிக்கா  ஆங்கில நாடுகளை  ஐரோப்பாவை  முந்திவிட்டது  கவர்ச்சியிலும் காமத்திலும் மற்று எல்லா விடயத்திலும்  ஆனால்   சொந்த மக்களுக்குள் பாகு பாடு பார்ப்பது ஏற்றத்தாழ்வு  பார்ப்பது  உடல்வருத்திச்செயும் தொழில்களை  தொழிலாளர்களை   கேவலமாகப் பார்ப்பது போன்ற வற்றில் மட்டும் கற்காலத்தில் நிற்கின்றார்கள்  அதில் மட்டும் வெள்ளையர்களை  பின்பற்றத்  தயாரில்லை,   வெள்ளையர்கள்  தகுந்த ஊதியம் கொடுத்து தொழிலாளர்களை  மதிக்கின்றார்கள்   அன்பாகப் பண்பாக  நடத்துகின்றார்கள் -    "ஏய்"  என்று தொழிலாளியை  அழைப்பதில்லை  பெயரைச்சொல்லி  பண்பாக உரையாடுவார்கள்  - 25ஆண்டுகள் முன்பு  ஒரு இந்தியக்கப்பல்  வந்தது  அதில் பணியாற்றிய மாலுமிகளை நகரில் சந்தித்து மகிழ்ந்து  வீட்டில் விருந்து கொடுத்ததற்குப்   பதிலாக  அவர்களும் என்னைக்   கப்பலுக்கு அழைத்தார்கள்  சென்றேன்  அங்கு கண்ட காட்சி  என்னை  ஆத்திரப்பட வைத்தது - ஒரு ஆபிசர்  இருந்து  உண்கின்றார் அவருக்கு ஒரு  வாழைப்பழத்தை  எடுத்து  உணவு பரிமாறும் இந்திய மாலுமி  உரித்துக்கொடுக்கின்றார்  அந்த  ஆபிசர்  பெரிய  திமிருடன்  வாங்கி உண்கின்றார்  முகத்தைப்  பார்த்து அன்பாகப் பேச  மாட்டாராம் எல்லாம் அதிகாரத்   தோரணையாம்  இந்திய  அதிகாரிகளுடன் (ஆபிசர்கள்) வேலை செய்வது   மிகவும் வேதனை தருகின்றதென அந்த  இனிய தொழிலாளர்கள்  வருத்தத்துடன் கூறினார்கள் - என்னத்தைப்   படித்து  என்னத்தைக்   கண்டார்கள் -  கேட்டால்  > கொஞ்சம் கனிவாக நடந்தால் தலைக்குமேல்   ஏறிவிடுவார்கள் என்பதனால்  கடுமையாக நடக்கின்றோம் என்பது அதிகாரிகள் தரப்பு  வார்த்தை    - யாரை  நொந்து என்ன செய்வது  ஒண்ணுமே புரியலையே.  
காலம் வளர  கலாச்சாரமும்  மாறுபட்டு வளரும் இதனை  பொறுத்துக்கொள்ள  அன்றில் ஏற்றுக்கொள்ளப்  பழகவேண்டியதே -  நடிகனும் நடிகையும்  கட்டிப்பிடித்து  முத்தங் கொடுத்து உருண்டு புரண்டு நடித்ததை  இரசித்து பார்த்தவர்கள்தானே நம்  மூதாதையர்கள்    அவர்கள் கலாச்சாரப்பற்று  உடையவர்களாக இருந்திருந்தால்  அப்படியான  திரைப்படங்களுக்கு எதிராகப்  போராடியிருக்க வேண்டும்,  விரட்டி விரட்டி பெண்ணின் உள்ளாடை  தெரியுமளவுக்கு  பலாத்காரக்காட்சிகளை  எடுத்து  இரசிக்கத்தந்த போது எந்தத்  தமிழன்  எதிர்த்தான்  குடும்பத்துடன் சேர்ந்து  படம் பார்த்து இரசித்தானே - இப்பொழுது   தமிழர்கள்  பிள்ளைகள் படங்களைப் பார்த்துவிட்டு தாமும்  நடு ரோட்டில் முத்தம் கொடுத்து மகிழ்கின்றார்கள்  என்ன செய்ய முடியும் 


ஆங்கிலக் கல்வி கற்றால் ஆங்கிலப் பழக்க வழக்கம் தானாகவே  வந்து சேரும்  தடுக்க முடியாது வேலி  போடவும் முடியாது  அனுபவிக்க வேண்டியதே  - லோங்ஸ்  போட்ட  பெண் இரண்டு கால்களையும்  விரித்தபடி காரில்      பயணிப்பதை சென்னையில் கண்டு  ஆச்சரியப்பட்டேன்  சென்னை  அமேரிக்கா  ஆங்கில நாடுகளை  ஐரோப்பாவை  முந்திவிட்டது  கவர்ச்சியிலும் காமத்திலும் மற்று எல்லா விடயத்திலும்  ஆனால்   சொந்த மக்களுக்குள் பாகு பாடு பார்ப்பது ஏற்றத்தாழ்வு  பார்ப்பது  உடல்வருத்திச்செயும் தொழில்களை  தொழிலாளர்களை   கேவலமாகப் பார்ப்பது போன்ற வற்றில் மட்டும் கற்காலத்தில் நிற்கின்றார்கள்  அதில் மட்டும் வெள்ளையர்களை  பின்பற்றத்  தயாரில்லை,   வெள்ளையர்கள்  தகுந்த ஊதியம் கொடுத்து தொழிலாளர்களை  மதிக்கின்றார்கள்   அன்பாகப் பண்பாக  நடத்துகின்றார்கள் -    "ஏய்"  என்று தொழிலாளியை  அழைப்பதில்லை  பெயரைச்சொல்லி  பண்பாக உரையாடுவார்கள்  - 25ஆண்டுகள் முன்பு  ஒரு இந்தியக்கப்பல்  வந்தது  அதில் பணியாற்றிய மாலுமிகளை நகரில் சந்தித்து மகிழ்ந்து  வீட்டில் விருந்து கொடுத்ததற்குப்   பதிலாக  அவர்களும் என்னைக்   கப்பலுக்கு அழைத்தார்கள்  சென்றேன்  அங்கு கண்ட காட்சி  என்னை  ஆத்திரப்பட வைத்தது - ஒரு ஆபிசர்  இருந்து  உண்கின்றார் அவருக்கு ஒரு  வாழைப்பழத்தை  எடுத்து  உணவு பரிமாறும் இந்திய மாலுமி  உரித்துக்கொடுக்கின்றார்  அந்த  ஆபிசர்  பெரிய  திமிருடன்  வாங்கி உண்கின்றார்  முகத்தைப்  பார்த்து அன்பாகப் பேச  மாட்டாராம் எல்லாம் அதிகாரத்   தோரணையாம்  இந்திய  அதிகாரிகளுடன் (ஆபிசர்கள்) வேலை செய்வது   மிகவும் வேதனை தருகின்றதென  அந்த  இனிய தொழிலாளர்கள்  வருத்தத்துடன் கூறினார்கள் - என்னத்தைப்   படித்து  என்னத்தைக்   கண்டார்கள் -  கேட்டால்  > கொஞ்சம் கனிவாக நடந்தால் தலைக்குமேல்   ஏறிவிடுவார்கள் என்பதனால்  கடுமையாக நடக்கின்றோம் என்பது அதிகாரிகள் தரப்பு  வார்த்தை    - யாரை  நொந்து என்ன செய்வது  ஒண்ணுமே புரியலையே.  

வெள்ளி, 14 நவம்பர், 2014

பொன்மேகம் கரைத்த  புனல்
மண்மேகம் நிறைத்து வழிய
தன்தேகம்  வளர்க்க  மனிதன்
உழவுசெய்தான் இலவச மருந்தாக
மழை  பெய்தது  அதற்குக்  கட்டணமில்லை
வரியும் கேட்பதில்லை வட்டியும் பார்ப்பதில்லை
அதனால் விளைந்த  பயிரை  பணமாக்கிக் கொழுத்த 
மனிதனே  வரியும் வட்டியும் கேட்கின்றான்

எங்கிருந்தோ  கடல் தாண்டி  வந்த  வெள்ளை
எங்கள்  வயலையும் வாழ்வையும்  அடிமைகொண்டானே
எம் நிலம் பார்த்து  செழிப்பை  வியந்து
நம்மைக் கொள்ளையடித்தானே
கொலைசெய்தானே  தன்  கொடி நட்டானே
என்ன துணிவெடா  அவனுக்கு
 அவன் கூலி வேண்டி  அடிமையாகி
நம்மவன்  சேவகம் செய்து  வயிறு  வளர்த்தானே
தன்மானத்துடன்  எதிர்த்த  மறவரைக் காட்டிக் கொடுத்து
பரிசாக  வயல்களையும்  வளவுகளையும்  பெற்றான்
தீரத்துடன் போராடி  மாயந்தவரை  அவரின்
எச்சங்களை  தீண்டத்தகாதவர்கள் என்று  ஒதுக்கி
நாட்டாண்மை  காட்டிய நரிகள்  நய வஞ்சகர்கள்
நல்லவர்கள்  போல் வேடமிட்டார்களே

கல்வியையும் கழகங்களையும் தமக்கே
என்று  கொள்ளும் விதம்  வறியவர்களை
முன்னேற விடாது  முடக்கினார்கள்
எந்த  மேதாவியும்  இன்னலுற்றோரை
ஏற்றிவிட  எண்ணவில்லை 
மாடிவீடு கட்டுவதிலும்  கார்வாங்கி  ஓட்டுவதிலும்
சுகபோகம் அனுபவிப்பதிலுமே  கொழுத்தவர்
குறியாக  இருந்தனர்  உருண்டனர்  புரண்டனர்
பணமென்னும் கத்தைகளைப்  பதுக்கி
படாடோபம்  காட்டியவர்கள்  நெஞ்சில் 
நஞ்சே  நிறைந்திருந்தது 
அவர்கள் வாரிசுகளும் அப்பன் பாட்டன் பூட்டன்
வழியிலேயே  நடை போடுகின்றார்கள் இன்று
இந்த நிலை மாறுவதெப்போ 
அழுபவர்கள்  சிரிக்க 
இன்று சிரிப்பவர்கள் சிந்திப்பார்களா ???

ம.இரமேசு    
   
அலைவரும்  திசை நோக்கி துணைவரும் தோணியிலென்று
அங்கையற்கன்னி  காத்திருக்க சிலைவரும்  முகிலென
தலை காட்டி  அத்தான்  தண்டு வலிக்கக் கண்டே
மழைகண்ட  மயிலாக முகம்   மிளிருங்  கணம்
இனி யுகம்  என் பொழுதே என  மகிழும் கோதையின்
மகிழ்வில்  வான்  புயல்  வழிந்தோடும் 

கன மழையுங் காற்றுங் குளிரும்  அவன் தேகம்  சுமக்கும்
நிலமதில் மானத்துடன் வாழும்  மனத்துடன்  அவன்
நிலம் பறி  நீசர்  வாழ்வுபோல்  ஏமாற்றிடும் வாழ்வில்லை
நெய்தல்  அன்னை  அரவணைப்பில்  நிதம்  ஒரு  போர் 
வலைகள் அள்ளும்  பொன்  வானுயரும்  தன்மானம்
வாட்டமில்லா   வாழ்வு  வஞ்சமில்லா நெஞ்சு
கஞ்சன்   இவன் என்று சொல்ல யாருமில்லை
அள்ளிக்கொடுக்கும் வள்ளல் குணம்  அங்கே

பஞ்சம்  என்று கண்டறியார்  பொங்கிப்  படையலிடுவார்
ஒன்றார்க்கும்  உதவிடுவார்  ஒன்றென்றால் ஓடிவருவார்
நிலவினில்  கூடிடுவார்  நிலாச்சோறு  உண்டுமகிழ்வார்
நல்லுரைகள் நாளும்  நாவில் நயமாய் நவின்றிடுவார்   
நல்லவர்க்கெல்லாம்  தோழரவர்  நரிகளுக்கு  எமனாவார்

ம.இரமேசு



 

ஜெர்மனிலிருந்து  பிரான்சுக்கு சென்ற  தொலைபேசி----"""""​ -----

அத்தான்!!  பிள்ளையளை   நாலு  இடங்களுக்குப்போய்  பார்த்துவர   விடுங்கோவன்   அவங்கள்  வளந்த  பெடியள்தானே   உப்பிடியே   வீட்டுக்குள்ளையே  வைச்சு   சோத்தையும் கறியையும் போட்டு  வளத்தா போதுமே ,   உலக அறிவு வரவேணுமெண்டா  பிள்ளையளை   தனிய   வெளியில போக விட வேணும்  நாலிடம் அடிபட்டாத்தான் அவங்களுக்கு  சொந்தக்காலில எப்பிடி நிக்கிறது மற்ற  ஆக்களோடை  எப்படி நடந்து  கொள்றது எண்டு தெரிய வரும்  இல்லாட்டி   பட்டிக்காடுகளாத்தான்
நாளைக்கு  பிள்ளையள்   வருங்கள்.   முந்தி   வெளிநாட்டுக்கு   வந்த  எங்கடை   சனங்களில   முக்கால் வாசியும்   எப்பிடி  இஞ்சை  நடந்து கொண்டவையெண்டு  உங்களுக்குத்  தெரியுந்தானே 
நீங்கள்   நாங்கள்   எண்டே   சொல்லிக்   கதைக்கத்தெரியாமல்   நீ  உன்னை    உனக்கு   எண்டு
அசிங்கமா  கதைச்சதுகள்தானே    இப்ப   காரையும் வீட்டையும் வைச்சுக்கொண்டு   ஹெலிகொப்டரில
பிள்ளையளை  ஏத்தி இறக்கி  எழுப்பங்காட்டி  பிறந்தநாள்  கொண்டாடுதுகள்   அங்கை  சாப்பாடில்லாமல்   மருந்துக்கு காசில்லாமல்  எங்கடை  சனங்கள்  அந்தரிக்க   இஞ்சை  பெருவாரி
காசைக்கொடுத்து   நெய்யரிக்கூட்டம்   எழுப்பங் காட்டுதுகள்   எட  சாகப்போறவைக்கு   உதவி செய்ய   ஒரு   பிட்சா   வாங்கிற  காசைத் தன்னும்  தருமம் செய்யாத  நம்ம  சனங்கள்  எப்பிடித்தான்   பகட்டுக்கு
ஆயிரக்கணக்கா   அள்ளி இறைக்குதுகளோ கடவுளே  கடவுளே // உதுகள் திருந்தாத  கேசுகள் -  காத்திகேசும்     சனங்கள்  சிந்திச்சு  திருந்த  மாய்ஞ்சு மாய்ஞ்சு  எத்தனையோ   அறிவுரை  எழுதிப்போட்டார்   கதையா  கட்டுரையா  கவிதையா  ம்கூம்   சனம்   மருந்துக்குந்  திருந்தேல்லை 

 
ஆசிரியர்கள்  போற்றுதலுக்குரியவர்கள்  மாற்றுக்கருத்து இல்லை  எவருக்கும் இருக்கவும் முடியாது
ஆனால்  அன்று   பாடசாலையில் கல்வி கற்றபோது  சில  ஆசிரியர்களை  சர்வாதிகாரிகளாகவே காண
முடிந்தது  அவர்களிடம் அன்பு  என்ற  பூவை  முகமலர்வுடன் காண்பது அருமையாகவே இருந்தது அவர்கள் சிரித்துப் பேசியதைக்   கண்டதில்லை  கையிலே கோலை வைத்துக் கொண்டே அங்கும்  இங்கும் வகுப்பு மாறுகையில்  நடந்தார்கள் - வளர்ந்தவர்களாக இருந்தும்  அவர்கள்
தங்கள் நடத்தை பற்றி சிந்திக்காதே  வாழ்ந்திருந்தார்கள் - வெள்ளைக்காரன் தனது  அதிகாரத்தைக்காட்ட 
தடிகொண்டு  மக்களை  அடிமைகளாக பாவித்து தனது மேலாதிக்கத்தைக் காட்டினான்  பணியாதவர்களை  கொடுமைப்படுத்தி சாகடித்தான்   அதிகாரத்தை  காட்டும்  ஆணவ அடக்குமுறையின்  சின்னமே பிரம்பு   அதை  கையில் வைத்திருப்பவர்களிடம்  அன்பை  காண்பது
குதிரைக்கொம்பே ,  கரும்பலகை மீது  எழுதினார்கள் தங்கள் பாட்டுக்கு உரை நிகழ்த்தினார்கள்
மணியடிக்க  அதிகாரத் தோரணையுடன்  மிடுக்காக  அடுத்த வகுப்புக்கு நடந்தார்கள்  படிப்பித்தது
யாருக்காவது புரிந்ததா  என்று வினவியதுமில்லை  அன்பாக கனிவாக  நடந்துகொண்டதுமில்லை
வீதியில்  அவர்கள் நடந்தோ  சைக்கிலிலோ  வந்தால் அவர்களைக் கண்டு அஞ்சி ஒதுங்குதல் அதற்கு மரியாதை என்று  அர்த்தம் சொல்லல் என்று மாணவப் பராயத்து வாழ்வு நகர்ந்தது  அதை   இன்று  நினைக்க  அருவருப்பாக  இருக்கின்றது தன்மானம் பின்னே எப்படி வரும் - இங்கு பாடசாலையில் சில காலம்  பணியாற்றும் வாய்ப்பு சில ஆண்டுகள் முன்பு கிட்டியது அப்பொழுது  இங்கு எப்படி ஆசிரியர்கள்  மாணவர்கள் தொடர்பாடல் இருக்கின்றது என்பதை நோக்கினேன்  அதிசயித்தேன்  ஆசிரியரின் பெயரை உரக்கச்சொல்லி  மாணவர்கள் அழைக்கின்றார்கள்  ஆசிரியர்கள் புன்னகையுடன் என்ன என்று கேட்கின்றார்கள் கனிவாக மாணவர்களுடன் உரையாடுகின்றார்கள்  இங்கு எந்த ஆசிரியரும் தகப்பன் என்ன தொழில் செய்கின்றான் என்று அறிந்துவிட்டு மாணவர்களை  மட்டமாக நடத்துவதில்லை,  வீதியில் ஆசிரியரைக்கண்டு  பயந்து ஒதுங்கும் மாணவர்களை  ஐரோப்பாவில் காண முடியாது மாறாக  ஆசிரியரைக் கண்டால் கிட்ட சென்று மகிழ்வாக உரையாடும் மாணவர்களே  இங்கு. எவரும் எவருக்கும் பயப்படுவதில்லை தன்மானத்தை மறந்து பணிவதுமில்லை  காலில் விழுவது  கும்பிடுவது  என்ற கோணங்கி வேலைகளை  கண்டதில்லை  நாங்கள் கலாச்சாரம் பண்பாடு என்ற போர்வைக்குள் தன்மானத்தை தொலைக்கின்றோம் -  உண்மையாக உள்ளத்தால்  மகிழ்ந்து  ஒரு பெரிய மனிதருக்கு  காலில் விழுந்து பணிவது  வேறு விடயம்  அது  அவரின் மீதான பற்றை  வெளிக்காட்ட  செய்யும்  முறை  அதற்காக  உள்ளத்தில்  பற்றின்றி  வீணே  விழுந்து எழும்புவது எதற்கு,  மற்றவர் எனது காலில் விழுந்து பணிய வேண்டும் என்று எதிர்பார்ப்பது  மிகவும் இழிவான எதிர்பார்ப்பு 

ம.இரமேசு 

வியாழன், 13 நவம்பர், 2014

புரட்சித்துறவி   வடலூர் வள்ளலார் 

இல்லறத்தாரை நம்பி  வாழ்ந்த துறைவிகளின் நடுவில்
இல்லறத்தாருக்கும் உணவளிக்க வகை செய்தவர்  வள்ளலார்
சாதி முக்கியமில்லை ஜோதி  முக்கியம் என  மொழிந்தவர்
சமய சடங்குகளை நிராகரித்தவர்  அன்பையும்  கருணையையும் 
அகிலம்  போற்றவேண்டும் என்று  வாழ்ந்துகாட்டியவர்
காவி உடுக்காது   வெள்ளை ஆடை உடுத்தியவர்   வள்ளலார்
சாதியில் நம்பிக்கை இல்லாதவர் அன்பின்வழி  நின்றவர் வள்ளலார் 
கலியாணம் செய்துகொள்ள  அரசியலில்  பதவி பெற  சாதி  உதவியதே  தவிர
இந்து மதத்துக்கு  சாதி நன்மை செய்ததா தீங்கு செய்ததா என்று சிந்தித்த துறவி வள்ளலார்
பழக்க தோசங் காரணமாக சாதியை விட முடியாது மக்கள் கஸ்டப்படுகின்றார்கள்  என்றார் வள்ளலார்
பரம்பொருள்  சோதியை தரிசியுங்கள்  சாதியை போற்றாதீர்கள் என்று தைரியமாகக்  குரல்
கொடுத்த புரட்சித்துறவி வள்ளலார் .

 
சரியை  கிரியை   யோகம்  ஞானம் - நான்கு படிகள்

சரியை - மனம் ஒன்றாது  இறைவனை வணங்குதல்  < புறம்

கிரியை - மனம் ஒன்றியும் ஒன்றாமலும்  வணங்கல் < புறமும் அகமும்

யோகம் -  மனம் ஒன்றி  வணங்கல் < அகம்

ஞானம் -  வணங்கலிலிருந்து மேற்பட்ட நிலை < அகத்துக்கும் அப்பால் 
உங்களுக்கு ஒரு இன்பமோ துன்பமோ  ஏற்படுகின்றது என்றால்  அது நீங்கள் செய்த செயலாலேயே  உண்டாகின்றது  அதற்கு வேறு எவரும் பொறுப்பல்ல  விடுத்து கடவுள் என்னை  கைவிட்டு விட்டார்
என்பது  அறிவீனம்  கடவுள் எவருக்கும் தீமை செய்யமாட்டார்  என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்  தீமை செய்பவராயின் அவர் கடவுள் இல்லை  நாம் தவறு செய்தாலும் அதை மன்னித்து அருள்பவரே கடவுளாக விளங்க முடியும்  மன்னிக்கத் தெரிந்தவரின் உள்ளம்  மாணிக்கக்  கோயில் போன்றது அதில் வஞ்சகம்  சூது இருக்காது   அன்பும் கருணையும் இரக்கமும்  நிறைந்திருக்கும்  உள்ளம் எவர்க்கெல்லாம் இருக்கின்றதோ அவர்களிலே  தெய்வம் இருக்கும் .
தைலாப்பெட்டிகள்  யாழ்ப்பாண  வீடுகளின்  களஞ்சியம் அதற்குள்தான்  தமிழர்களின்  உயிர்காக்கும்  மருந்துகள்  அடக்கம் - அரிசி மா சீனி பருப்பு உளுந்து கொத்தமல்லி என்று  நிறைய  நிறைய  நிறைந்திருக்கும்  களஞ்சியம்  தைலா , கோர்க்காலி அன்று தமிழன் கண்டு பிடித்த  மேசை
அதன்மீதே  பெட்டிகள்  மற்றும்  கனமான  யாவும்  குந்தும்  அவற்றிற்குள்  பட்டும் நகையும்
இதர பெறுமதியான யாவும் அடக்கம்  அப்படியே வெளியில் வந்தால் அட்டாளை  நிமிர்ந்து நிற்கும்
கழுவிய பாத்திரங்கள் யாவும்  ஏந்தி நிற்கும் அட்டாளை,  தேங்காய் பொச்சும் குருவுமணலும் புளியும்
பாத்திரங்களைக்  கழுவி விளக்கப்   பயன்படுத்தப்பட்டன    இரசாயனக்  கலவைகள் கலக்காத  வாழ்க்கை  அதனால் மனதும் குற்றமின்றி  இருந்தது  - கோயில் குளம் ஆடு மாடு கேணி வயல்  தோட்டம்,  கடல், கரை  ஆடல் பாடல்   கொண்டாட்டம்  முக மலர்ச்சி  மூளை சுறுசுறுப்பு  முப்பரிமாண  நட்பு உறவு எந்நேரமும் துணைகள்  தோழோடு  தோதகமில்லா  வாழ்வு  இன்று  மனிதர்கள்  நிறையவே  மாறிவிட்டார்கள்  ஐரோப்பிய  வாழ்வியல்  எளிய முறைக்கு  வாழ  அழைத்துவிட்டது  நானுண்டு என்பாடுண்டு  வேற்று  நபர்களின் மூச்சுப்பட்டால்  அருவருப்பு உண்டாகின்றளவுக்கு  ஐரோப்பியம் மாற்றிவிட்டது சிந்தையை  அதிலே  புதிய கண்டுபிடிப்புக்களினால்  உருவான கருவிகள் தொடர்பாடற்  சாதனங்கள்  மனிதனை வீட்டோடு  இருத்தி  விட்டது  ஆனால்
நகரங்கள் நாடுகள் கண்டங்கள் எட்டவிருக்கும் ஆட்களுடன்  அன்பைக்   காட்டவும்  அறிதலைப்  பகிரவும்  வழிதேடித்தந்திருக்கின்றது  உடல்தான் அசையாமல் நோய்க்குப்   பாதை திறக்கின்றது 
நடை பயிலுதல் குறைந்து  உடல் இறுகிவருகிறது  உடற்பயிற்சி செய்ய விளையாட்டுக்களில் ஈடுபட
மனம்  இடந்தர சோம்புகின்றது  ஆயாசங் கொள்கின்றது  விழாக்களுக்கு செல்லவும்  மனிதர்களைக்காணவும்  வெறுப்பு மேலிடுகிறது  பக்குவம் பணிவு  இல்லாதோர்  நிறைந்திருக்கும்
அவைகளில்  வீற்றிருக்க முடிவதில்லை  இன்று இப்படி  நாளை  மாறலாம்  மாற்றமே  மாறும் .

புதன், 12 நவம்பர், 2014

கதிரவன்  சென்றதால்
களையிழந்து வாடி
கைகாட்ட முடியாது
மண்ணில் விழும்
மஞ்சல்  இலையே
நீ வடித்த கண்ணீரெல்லாம்
குளிராகி எம்மை  தாக்குதே
சுந்தரிபோல் நின்றாய்
மாலையில்  மயக்கினாய்
வெக்கையில் அரவணைத்தாய்
இன்றோ  காற்றின் கனம் இறுக
கோடை  பாடையேற
குளிர்வந்து கொல்லுதே   கொல்லுதே 

சுந்தரக்கனவுகளில்  சொர்க்கம்சென்றே
அந்தர அர்ச்சனைகளில் மனம்  அமைதிகண்டே
அவசர வாழ்வில்  அவாக்களுடன் வாழ்ந்து
அவசர  அவசரமாகத்   தொலைகின்றோம் 
அல்லலும்  கொஞ்சமல்ல ஆதரவும்  யாருமில்லை
நெஞ்சம்  அடக்கி  காசில் நேசங் கொண்டே
நிலையாத  வாழ்வில்  நெஞ்சின் இனிமைக்கு
ஒரு நிமிடந்தன்னும் வாழாது  தொலைகின்றோம் 

கஞ்சல்  என்று பட்டம்  எடுத்து  காசைத்தொழுது
கருணையின்றி பொய்பேசி  கனவான் வாழ்வு
அது  களங்கம்  சுமந்த  வண்டில்  வாழ்வு
ஒரு நாளும் ஒரு பொழுதும் நெஞ்சம்  திறப்பதில்லை
நீசன்   நெருப்பு  நெஞ்சங்  கறுத்தான்  என்று
நல்லவர்கள்  நினைத்திடவே  பகட்டு வாழ்வு
பணம் பணம்  அதுமட்டுமே  குறி பொறி
குணமுமில்லா  மணமுமில்லா  குப்பை நாற்றம்
இந்த  வாழ்வுக்கு  பிறக்காது இருந்திருந்தால்  நன்று

ம.இரமேசு
 
மரணபயங் காட்டி  மக்களை  சீர்திருத்த முயல்வது அறிவீனம்  அது நல்ல விளைவுகளை எட்டித்தராது
மக்கள்  சிந்திப்பதனால்  மட்டுமே நல்ல முன்னேற்றம் வரும் அதற்கு மக்களை சிந்திக்க வைக்க செய்தல்  வேண்டும் -  அன்பாக  பணிவாக  பொறுமையுடன்  சொன்னால் எந்த மிருகமும் பணியும் கேட்கும் அடங்கும்  என்பது மெய் .  உப்பை பொதிசெய்து கொண்டுபோய் பசிக்கு உண்ண முடியாது
விட்ட பிழையை மீண்டும் விடக்கூடாது என்று சிந்திக்கும் போது  மனிதன் தூய்மையின்  ஏற்றம் நோக்கி விரைகின்றான்   ஆணவத்தில் பெரியது கல்வியால் வருவதே  அது வந்தவிட்டால்   கல்வியாளன் என்ற  தரத்திலிருந்து எவ்வளவு கற்றவனும்  அடிசறுக்கி விழுகின்றான் பண்பை இழக்கின்றான் - கல்வியாளன்  செல்வந்தன் என்போரது கடமை  தம்மில் நலிவுற்றோரை முன்னிலைக்கு  உந்தித்தள்ளி விடுதலே .
அறிவின் கண்கள் விழிக்கும்போது  அறம்  கைக்கொள்ளல் வேண்டும்   அறத்தை மறந்ததால் ஏற்பட்டதே கீரோ  சீமா  அழிவுகள்   கொடூர மனித சாய்ப்புக்கு அறிவு பயன்பட்டு  ஏது பெருமை 
நேரம் கிடைக்கும் போது மனிதன் தான் விட்ட  பிழைகளை  சிந்தித்து  நல்ல பக்கத்தில்  யோசிக்க வேண்டும்  கோபத்தை அடக்க  அடக்க  மனிதன்  குணம் என்ற குன்றில் ஏறுகின்றான்  எல்லோராலும் மதிக்கப்படும் நிலைக்கு உயர்கின்றான்.

ம.இரமேசு  

செவ்வாய், 4 நவம்பர், 2014

காற்றினில்  கரைந்த  காலங்கள்
நீண்ட  வானாய் நினைவில் நீளுதே
நெஞ்சம்  சிலருக்கு மட்டும்
பழைய  நினைவில் துஞ்சுகிறதே

வஞ்சமில்லா அந்த வாழ்வில்
வந்து போன மனிதர்கள்
வட்டங்கட்டிக் கூடி இருந்து
வகை வகையாய் பேசி மகிழ்ந்த
 வடிவான  நண்பர்கள் எங்கே

பட்டந் தெளித்தான்
என்று  பகைத்து
கட்டிப்பிடித்து அடிபட்டு
பந்தடியில் ஒன்று கூடி
பின் இணைந்த சிநேகிதர்கள் எங்கே

செக்கல் மீன்  வாங்கி வந்து
சித்தப்பா சித்தி கையில் கொடுத்திடவே
பச்சையரிசி சோற்றுடன்
பால்ச்சொதி வைத்து முடிக்க
பாசத்துடன்  வந்தே  சித்தப்பா
நித்திரைப்பாயிலெனை 
தட்டியெழுப்பி
முகங் கழுவித்தே
முதற் கவளம்  சீத்திவிட
சுவை  பிடிபட்டு  சொந்தக்கையால்
சுடு சொதிக்குள்  கைவைத்து
ஆ  ஊ  என்று சுடச்சுட அள்ளிச்
சுவைத்து  மகிழ்ந்த காலம்
நினைவில் குழைகின்றதே

இங்குநானும்  செக்கல் செக்கலாய்
எங்கெல்லாமோ  ஏறி இறங்கி
என்னவெல்லாமோ  சுவைத்து விட்டேன்
அந்த ஆறுரூபா  மீனில் பால்ச் சொதி தந்த
சுவைக்கு  மேலாக மேதினியில்
 சுவையில்லையென்பேன்

சங்கானைச்  சாந்தியிலே
பாட்டும் பரதமும் பார்க்க
 பாசத்துடன் கூட்டிச் சென்று
இனித்திடவே சோடா வாங்கித்தந்து
படம் முடிந்து வீடு  நடக்க
சிவாஜி நடிப்பை  புகழ்ந்துகொண்டே
சித்தப்பா  வீறுநடை
போட்டதை  பொன்னாக
நினைவில் வைத்தேன்
போகிற போக்கில்
பொக்கிச நினைவுகளை
 மறக்க முடியவில்லையே

ம.இரமேசு .
 

a

ஏடென்பார்  எழுத்தென்பார்
 சாமியென்பார்   பூசை என்பார்
 சரித்திரத்தில் சான்று பகிர்வார்
சாதனைகள் சொல்லி மகிழ்வார்
 ஏழைக்கு நிதிகேட்டால்
 எள்ளி நகைத்திடுவார்
போ போ  என்றே
நெஞ்சு பொசுங்கும் சொல் வீசி
  விரட்டியடித்திடுவார்

மண்ணோடு  மறைந்துவிட்டால்
அந்தியெட்டிக் கல்வெட்டில்
அழகான  படம் போட்டு 
ஊருக்கு  உழைத்த உத்தமர்
ஏழைகள்  நேசன்
வாரிக்கொடுத்த  வள்ளல்
மனிதகுல மாணிக்கம் என்றே
 வரிக்குவரி வாழ்த்திடுவர் 

இதுதான்  நாம் வாழும்  உலகம்
தமிழின்  அன்னைபெற்ற 
தமிழ்க் குலத்தின் பிள்ளைகள்
தயை  இழந்து  தன்மானமிழந்து
காசுக்காய்  இரக்கங் கொன்று
வெறும் பேருக்காய்
மரத்தினைப்போல் 
வாழ்கின்றாரிங்கே

ம.இரமேசு  
சிந்தனையால் அறிவு மேம்படுகின்றது  சிந்தனைக்கு  கல்வி வேண்டும்   அன்றில்  உலகப் படிப்பு வேண்டும்,  மனம்  பொறிகளின்  ஆளுமைக்குள் வதங்குவது  அது  கட்டுக்குள்  நிற்க  மறுக்கும்
 கேடுவரும் என்ற  சூழ்நிலையை அறிவு  சிந்தித்து கொடுத்தால்  அடக்கும்  நிலையில் மனம் தனக்கான தூண்டுதல் நிலையிலிருந்து  பின்வாங்கும்  சந்தர்ப்பம்   கிட்டினால்  வேலியைத்தாண்டும் பெரிய  தலைவர்களாக மக்கள்  போற்றும்படி வாழ்ந்தவர்களே  சின்ன சின்ன விடயங்களில் மனதை அடக்க முடியாது  திணறியிருக்கின்றார்கள்  - காமராசர்   உணவுப் பிரியம்,  அண்ணா  வெற்றிலை பாக்கு நேசம் , கலைவாணர்  கள்  மகிழ்வு , கண்ணதாசன் , எம் ஜி ஆர்   எதிலென்று  நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை ,  நேரு  புகைத்தல் , இன்னும் பலர்  சில சில  சின்ன  சின்ன  ஆசைகளில் மனதை
வெல்ல முடியாது  தோற்றார்கள் -  சாதா  மனிதர்கள் நாம்  பெரும் போராட்டத்துக்குள்  நிற்கின்றோம்
அறிவுக்கும் மனதுக்கும் நடக்கும் போராட்டத்தில் அனேகமாக  மனமே  வெல்கின்றது - மனதை
வென்றவன்  ஞானி ஆகின்றான்  - விவேகானந்தர்  ,  இராமகிருஷ்ணர்  , புத்தர்  இந்த வரிசையில் சிலர்  நீள்வார்கள். மனக்கட்டுப்பாடு  ஆரோக்கிய வாழ்வுக்கு  இன்றியமையாதது  . 

 
வெள்ளைக்காரர்கள்  செய்வது  பலவற்றை செய்ய ஆசைப்படும் நம் பெரும்பான்மை மக்கள் கூட்டம்  அவர்கள்   கடைப்பிடிக்காதவற்றை  மட்டும்  காட்டுமிராண்டிக்காலத்தில் நின்று  கடைப்பிடிக்கின்றார்கள்   சாதி பார்ப்பது  தொழில்  வேற்றுமை பார்ப்பது  பெரிய  அளவில் மரியாதையை  மகத்துவத்தை எதிர்பார்ப்பது - முன்னாள்  அமெரிக்க சனாதிபதி றொனால் ட்ரீகன்  மகன்  தந்தையிடம் இருந்து ஒரு செப்புக்காசும் வாங்காது  ஒரு  மரவேலை செய்யும் தொழிலாளியாகவிருந்து  பின்  சொந்தமாகக் தொழிற்கூடம்  (மரவேலை)  அமைத்து  அதில்  வரும் வருமானத்தில்  வாழ்ந்து  வருகின்றார்  - நம் செல்வங்கள்  அப்பா  அரசியலில் இருந்தால்  வாழைப்பழம்  உரித்துத்தர  ஆள்  வைப்பார்கள்    நம்  சமூகம்  இப்போதைக்கு  திருந்தப்போவதில்லை  என்றே  காட்சிகள் கோலங்கள்  நிரூபிக்கின்றது - வீடுகளை  விசாலமாகக்  கட்டத் தெரிந்தவர்களுக்கு  மனத்தை விசாலமாக்கத் தெரியவில்லை  இன்றும் பழைய  குண்டுச்சட்டிக்குள்  கொம்பில்லாததை  வைத்து ஓட்டுகின்றார்கள் - கடின வேலையா  அவனைக்கூப்பிடு  என்று  அழைக்கும் நிலையில்  மனிதர்களில்  ஒரு  கூட்டத்தை
வேண்டுமென்றே ஒதுக்கி வைத்து வேற்றுமை கடைப்பிடிக்கின்றது  இன்னொரு  மனிதக்குழு
அவர்கள்  சகிப்புத்தன்மையுடன்  கடின  வேலைக்கென்றே தலைமுறை தலைமுறையாக இருக்க வேண்டுமா  இப்படி  ஒரு  மக்கள்  கூட்டத்தை  அடிமைகளாக  வைத்துக்கொண்டு  சாமிக்கு
கோயில்கட்டி  பட்டுடுத்தி  பொன் போட்டு  மீசை முறுக்கி எழுப்பங்காட்டுவதனால் என்ன
பெரிய  மகிழ்வைக்காண்கின்றாய் -  அவர்கள்  பிள்ளைகள்  படித்து நல்ல  தோற்றத்தில்
வரக்கூடாது என்பதற்காக  அவர்களுக்கு ஊதியத்தையும் சொற்பமாகக் கொடுத்து வைத்திருக்கின்றாயே   இததான்  நீ சாமி  கும்பிடும் லட்சணமா   இதுதான்  உன் பண்பாடா - குதிரை முதுகிலிருந்து
அதை  ஓட்டுகின்றவனுக்கும்  உனக்கும்  என்ன  வேறுபாடு  -  நீ உன்  இனத்தானுக்குள்
வேற்றுமை காட்டுவாய்   சிங்களவன் உன்னைத்  தாக்கினால்  தருமமில்லை என்று பொங்குவாய்
சிங்களவன்  செய்ததையே  நீயும்  உன்  இனத்தில்  குறைந்த சாதிக்காரன் என்பவனுக்கு செய்தாய்  பிறகு----- 
(சிங்களன் செய்த கொடுமைகளை நியாப்படுத்துவதில்லை கட்டுரையின் நோக்கம்  சாதி வெறி
கொண்டவர்களை  சிந்திக்க வைப்பதே)
தராசு 
தியாகம்

அன்றும்  வந்த  மெல்லிய  மலர்க்காற்றில் 
இலைகள் சிரிக்க  மகிழ்ந்து  அசைந்தது பூவரசு
அதன்மடியில்  மைனாவும்  பிலாக்கொட்டைக் 
குருவியும்  பறந்து வந்து  குந்தியிருந்தே 
காதல் மொழிபேசி  மகிழ்ந்தன  மயங்கின
என் மகிழ்வுக்கும்  அதுவோர்  இலை  தந்தது
அதைப்பறித்து  குழலாக்கி  ஊதி மகிழ்ந்தேன்
சிறிது  நேரத்தில்  காற்று  விசைக்க தலைசீவிய
முதிர்ந்த  இலைகள்  பிரியாவிடை  கொடுத்தன
 
ஐயோ ஐயோ  கணேசு  காங்கேசன்துறையில்
சீமெந்தாலையில்  மின்சாரம்  தாக்கி உயிர்பிரிந்தானாம்
ஊரே  கூடியழுதது  உடல்  வீடு  வந்தது ஒப்பாரி ஒப்பாரி
பாடையில்  கணேசை  ஏற்ற முன்னரே  அவனுக்காய்
உயிர் துறந்தது  பூவரசு முந்திச்சென்று  சுடலையில்
அதுவும்  பிணமாய்க்  கிடந்து  கணேசுடன் எரிய
குருவிகள்  பறந்து தேடின வாடின  பூவரசைக் காணாது 
ஐயோ   காணவில்லையே  என்னாயிற்றோ துடித்தன
ஈர  நெஞ்சு  அவைகளுக்குமுண்டு யாரறிவார் கண்ணீரை 
வேலியிற்  காவலனே ; வீட்டில்  ஒருவர்  பிணமானால்
கூடவந்து  எரிகின்றவன்  நீயொருவனே
தியாகத்தின்  மொத்தமும் நீதான்  பூவரசே  பூவரசே

ம.இரமேசு
 
தியாகம்

அன்றும்  வந்த  மெல்லிய  மலர்க்காற்றில் 
இலைகள் சிரிக்க  மகிழ்ந்து  அசைந்தது பூவரசு
அதன்மடியில்  மைனாவும்  பிலாக்கொட்டைக் 
குருவிகளும்  பறந்து வந்து  குந்தியிருந்து
காதல் மொழிபேசி  மகிழ்ந்தன  மயங்கின
என் மகிழ்வுக்கும்  அதுவோர்  இலை  தந்தது
அதைப்பறித்து  குழலாக்கி  ஊதி மகிழ்ந்தேன்
சிறிது  நேரத்தில்  காற்று  விசைக்க தலைசீவிய
முதிர்ந்த  இலைகள்  பிரியாவிடை  கொடுத்தன
 
ஐயோ ஐயோ  கணேசு  காங்கேசன்துறையில்
சீமெந்தாலையில்  மின்சாரம்  தாக்கி உயிர்---
ஊரே  கூடியழுதது  உடல்  வீடு  வந்தது  ஒப்பாரி ---
பாடையில்  கணேசை  ஏற்ற முன்னரே  அவனுக்காய்
உயிர் துறந்தது  பூவரசு ; சிதைக்கு விறகாக 
குருவிகள்  பறந்து தேடின  தம்  காதலனை
ஐயோ   காணவில்லையே  என்னாயிற்றோ துடித்தன
ஈர  நெஞ்சு  அவைகளுக்குமுண்டு யாரறிவார் கண்ணீரை 
வேலியிற்  காவலனே ; வீட்டில்  ஒருவர்  பிணமானால்
கூடவந்து  எரிகின்றவன்  நீயொருவனே
தியாகத்தின்  மொத்தமும் நீதான்  பூவரசே  பூவரசே

ம.இரமேசு
 

திங்கள், 3 நவம்பர், 2014

நல்ல  விழிப்பு  - மாற்றாரைப்பார்த்து அப்படி வாழ  ஆசைப்படுவதால்த்தான்  நொந்துபோகின்றோம்  -    நான் நானாக  எனது இயல்பின் படி வாழ  வேண்டும்  அங்ஙனம்  வாழ்கையில்  மற்றவர்போல் பணத்துக்கு முக்கியம் கொடாது குணத்துக்கு முக்கியம் கொடுப்பதனால்  பணக்காரர்களின்  பார்வையில் அந்நியப்படுகின்றேன் , மற்றவர்களைப்  பார்த்து  தனது இயல்பைப்  புறந்தள்ளி  மற்றவர்கள்போல்  வாழ்வது  இதுவே இன்று  எங்கும் நடக்கும் பெரும்பான்மைத் தமிழர்கள் வாழ்க்கையோட்டம்  எவரும் இயல்பாக  வாழ்வதில்லை  எல்லோர்  குறியும் அதிக  பணம்
சேர்த்து ஆடம்பரமாக  வாழ்வதே   இதில்   ஒரு சிலர் மட்டும்  தூர நிற்கின்றார்கள்  விதிவிலக்கு என்றுங்  கொள்ளலாம்  தமக்கான  உணர்வின் உண்மையின் ஊரை  நோக்கிப் பயணஞ் செய்கின்றார்கள்

பொதுவாக  எனது தமிழன்  எதை நோக்குகின்றான்  பல ஆண்டுகள் ஐரோப்பிய மண்ணில் வாழ்ந்தால்
ஒரு தமிழனிடம்  வீடு கார்  பெருந்தொகைப்பணம்  இருக்க வேண்டும் என்றே  நோக்குகின்றான்
அதை  மட்டும் கருத்திற்  கொண்டே  நட்புக் கொள்கின்றான்  அப்படி  பொருள் கருதி  சிநேகிக்கும்
சிநேகம்  உண்மையான்   சிநேகம்  ஆகாது  - தானும் வாழ்ந்து பிறருக்கும் உதவி  வாழும் இரசனையுடைய  மனிதர்களால்  பெரும் பொருள் சேர்த்துக்  குவிக்க முடிவதில்லை
அவர்கள்  எதிர்காலக்  கவலை அற்று நிகழ் காலத்தை  மட்டும்  இன்பமாக்குபவர்கள் 
இங்கே  பலவாண்டுகள்  வாழும் என் தமிழர்கள் பெரும்பான்மையானோர்  தமது இனிய வசந்த
வாழ்வை  தொலைத்தே  இன்று  அதிக பொருட் செல்வம்  சேர்த்து வைத்திருக்கின்றார்கள்  அவர்கள்
இங்கு இளமையின்  இரசனையில் ஆசைப்பட்டதை  அனுபவித்து  வாழ்ந்ததில்லை  என்பது மட்டும் கண்கூடு .

"கொடுப்பதுவும் துய்ப்பதுவும் இல்லார்க்கு  அடுக்கிய
கோடி உண்டாயினும் இல் "  

புதன், 29 அக்டோபர், 2014

அந்த  மேக வலி அவளுக்குமட்டுமில்லை 
அருகே நிற்கும்  டரோபியோ  மரத்துக்குமே 
வறண்ட நிலங்களும்  அழுகின்றன 
யாருக்கும்  கேட்பதில்லை 
மண்கள் மட்டும்  ஒப்பாரி வைக்கும் 
அந்தப்பாலையிலே  பரவி 
அங்கே  துன்பங்கள்  காண  யாரும்  வருவதில்லை 
வழிப்பறி செய்ய  இன்று  வர்த்தகர்கள்  வருவதுமில்லை 
ஐயோ  அந்தப்பாலையும்
அவள்போல்  துடிக்கின்றதே 
யார்  அணைப்பார் 
 
 
 
கல்வீடு  கட்டி  கண்ணாடி  யன்னல் போட்டு
விறாந்தையிலே  அவ்டிக்   காரை நிறுத்தி
ஆங்கிலத்தில் பேசி  அழகியை  மணந்து
கோடியில்  பணம் சேர்த்து  கொண்டாடிட
எல்லோர் மனமும் துடிக்கிதிங்கே

சோழனுக்கு வறுமை வந்தால்
சொத்தில்  சில பாதி கொடுத்து
நாட்டை காக்கும்  வல்லமை கொண்ட
பட்டினத்தார்  சட்டையை  கழட்டி
கோவணத்துடன்  சென்ற கதை
அறிந்தும்  மனம்  பணம்  நாடுதே

ம.இரமேசு 
தலைவிரி கோலம்

இன்று  எனது  நண்பருக்கும் அவரின்  ஒன்றுவிட்ட தங்கைக்கும் பிரச்சினை
என்ன வென்றால்  - தமா  தனது  புருசனுடன்  போட்டோ  எடுக்கத்   தயாரானா
தலை மயிரை  பரப்பி விரித்துப் போட்டிருந்தா  விரலால்  கோதியபடி
எடுப்பா இருந்தா 

 எனது நண்பனுக்கு அது  பிடிக்கவில்லை -    தமா ,  வடிவா தலையைப்  பின்னி
குங்குமப் பொட்டு  வைச்சு    குடுப்பப் பொம்பிளைபோல நில் ,  என்றதுதான்
வெடித்தது அங்கே  வியட்னாம்  ஈழம்  பாலஸ்தீனம்  சிரியா  ஆப்கான் 

தமா  - இப்ப இதுதான் பாஷியன்  (fashion )

குணா - அதெல்லாம் சினிமா  நடிகைக்கு , நீ  குடும்பப் பொம்பிளை
             உனக்கு அதெல்லாம்  தேவையில்லை  விட்டா   பிகினி யோடையும்
             நாளைக்கு வந்து  இதுதான்  பாஷன்  என்பாய்

தமா - என்ரை  விருப்பப்படி  நடக்க  முடியாதே 

குணா  -  இல்லை  உன்ரை   விருப்பப்படி  நடக்க முடியாது -  தமிழாக்களுக்கெண்டு
               தனியா ஒரு  சிறப்பிருக்கு  அதன்படி தான் நடக்க வேணும் குடும்பப் பொம்பிளையள் .
               இல்லையெண்டா  வீட்டை விட்டு வெளிய போய்  விபச்சாரம் செய்து கொண்டு
                தாரளாமா  உன்ரை விருப்பப்படி  வாழலாம்  ஆரும் தடுக்க மாட்டினை 

மாமி கனகமணி -  அவன்  சொல்றது சரிதான்  பிள்ளை  அண்ணை  சொல்றதைக்  கேள் - நாகரிகம்!
                    மற்ற  ஆம்பிளையளை  சபலத்துக்கு  உள்ளாக்கிறதில்லை - நான் 
                  அவருக்கு மட்டுந்தான்   கொலுசு   கட்டி  நடந்து காட்டுவன்  ஆராவது
                  வீட்டை  வந்திட்டா  உடனெ   கழட்டிப்போடுவன் - எல்லாம்  சிந்திக்கவும்
                  கேட்கவும்  பேசவும் தெரியிற  உங்களால  ஏன்  மற்றவையளுக்கு 
                  சபலமூட்டும்  செய்கையள்        செய்யக்கூடாது  எண்டு  சிந்திக்க முடியிறேல்லை 

இதுக்குமேலும்  அங்கை  நிண்டு  வேடிக்கை  பார்ப்பது  சரியல்ல  என நினைத்து  வெளியில்  வந்துவிட்டேன் . தலைவிரி  கோலம் சோகத்தின் அடையாளம்  - பாஞ்சாலி  ,  கண்ணகி  போன்றோர்
தங்களுக்கு இன்னல் ஏற்பட்ட போது  தலைவிரி கோலமாகவே  சோகத்துடன் அலைந்தார்கள்
என்பது இதிகாசங்கள் காட்டும் செய்தி .

குறிப்பு - டென்மார்க் பிரண்டா  அபிராமி அம்மன்  கோயிலிலே  ஒரு  அறிவித்தலுண்டு  பெண்களுக்கு
                அதாவது -  "தலையை விரித்துப் பரவ விட்டு  ஆலயத்துக்குள்  பிரவேசியாதீர்கள்
                                    பின்னலிட்டு  வரவும் "
                    
புதைக்கப்பட்ட  பிணங்களின் கீழே
அழகிய  ஆறுகள்  ஓடுகின்றன
அதன்  சல சலப்பை கேட்க முடிவதில்லை
அதில் நீந்தும்  மீன்களைப்பார்க்க  முடிவதில்லை
நீரும் மண்ணும்  செய்யும் காதல்  அமர  காவியம்
பூகம்பம்  அவற்றுக்கு வில்லன்  ஆனாலும்
நிரந்தரமாகப்   பிரிக்க முடியாது

ஈரமுள்ள  இடங்களிலே  நல்லவை  விளையும்
ஈரமுள்ள  இதயங்களிலே  நல்ல எண்ணங்கள் நிலையாகும்
மண்ணுக்குள் உவர் நீருமுண்டு 
மனிதரில்  கொடியவர்களுமுண்டு 
கூடாததைப்   படைத்ததன் நோக்கம்
நல்லதை  அறியவே

தேடுதலின் வெற்றி  மனிதனின்  முயற்சி
அறிவின் முதுமை ஞானம்
ஞானத்தின்  பக்குவம்  ஏற்பு சமதர்மம்
சமத்துவம்  பரந்த மனம் பெருந்தன்மை


 

செவ்வாய், 28 அக்டோபர், 2014

கசாக்கள்  - உரைச்சித்திரம்

கடையடியில்  சந்திப்பு

சுந்தரலிங்கம்  - யாழ்ப்பாணம்  போய் என்னத்தையோ  கட்டியாளப்போகினையாம்

மணியத்தார்  -  என்ன  லிங்கத்தார்  உம்மட பாட்டில  புறு  புறுக்கிறீர்

செல்வன்  -  அவர் ஏன்  புறுபுறுக்கிறார்  எண்டு  எனக்குத்   தெரியும்

மணி -  என்ரா   என்ன  நடந்தது

செல்வன் - அது !!  இப்ப கொஞ்ச நாளா   வீட்டில  ஒரே  விரதம்  மனிசனுக்கு  மரக்கறி  சாப்பிட்டு  நாக்கு  சீயெண்டு போச்சு  அதோட  அவையள்  பெரிசா  செலவழிச்சு  ஒண்டும்  வாங்காயினை  அதுதான் மனுசனுக்கு  ஆத்திரம் அவையளில  புறு  புறுக்குது

மணி -  ஓ  நானும் சாடைமாடையா  கேள்விப்பட்டனான்   ஊரில போய் பெரிய  எழுப்பங்  காட்ட
இஞ்ச  தின்னாமல் குடியாமல் சனமெல்லாம்  சேர் சேரெண்டு சேர்க்குதுகள்  - நாலு  பேருக்கு   பதிநைஞ்சு  பயித்தங்காயில ஒரு  குழம்பு வைச்சு காலத்தை ஓட்டுதுகள் -  சரி சரி  எங்களுக்கேன்   மற்றவையின்ர  கதை  நட நட - நான்  கூப்பிட்டது  கூட மனுஷனுக்கு கேக்கேல்லை


கந்தசாமி  -  வணக்கம் மணியண்ணை  

மணி -  எடை கந்தன் !     எப்படியடா   எங்கையடா  கனநாளாக்   காணேல்லை

கந்தசாமி -  நான்  ஊருக்கல்லே   போனனான் -  அங்கை அந்த மாதிரி  ஒரு பிரச்சினையுமில்லை

மணி  -  ஒரு பிரச்சினையும்  இல்லாட்டி பிறகேன்ரா  இஞ்சை வந்தனி ,  நீதான்  கோடிக்கணக்கில
வைச்சிருக்கிறாய்  இன்னும்  நாப்பது  அம்பது  வருசத்துக்கு  காலாட்டிக்கொண்டே  சாப்பிடலாம்
இந்தக் குளிருக்குள்ள  வந்து  ஏன்  கஸ்டப்படுறாய் - உங்களைபோல  ஆக்களாலதான்  புதிசா
வாற  எங்கண்டை   ஆக்களுக்கு  அக்சப் பண்றாங்களுமில்லை - காசைக்   கொண்டுபோய்  அங்கை இருக்கிற  ஏழைச்   சனத்துக்கு   ஆ ஊ  காட்டிப்போட்டு  வரத்தானே  அங்கை  போறனியள்
அதுசரி  அங்கை  போகேக்கை  ஆருக்கும்  ஏதாவது  குடுக்கிறனியளே

கந்தசாமி -  என்னண்னை  இப்பிடி  கதைக்கிறியள்  நான்  செத்தவீடண்டாப்போலையல்லோ
போன்னான் - அங்கை  நான்போக  தெரிஞ்ச  சனங்கள்  குவிஞ்சிட்டினம்  ஆளுக்கு   ஆயிரமெண்டு
அம்பதாயிரம்  குடுத்துப்போட்டு வந்திருக்கிறான் -  சரியண்ணை  கொமூனுக்கு  போகவேணும்
நான்  வாறன்

செல்வன் -  ஐயோ   அங்கிள்  எனக்கு  சிரிப்பு அடக்க முடியேல்லை   பச்சை   புளுகொண்டை
புளுகிப்போட்டு போறான்  கந்தன்

மணி -  என்னடா  என்ன சொல்றாய்

செல்வன் -   உவர்   இஞ்சை  பேசே  கொண்டு  திரியிறேல்லை  மனிசிதான்  சகல  நிர்வாகமும்
 நாலு பேணி சிகரெட் தூள்  மட்டும்  வாங்கி  போட்டுடும் மனுசி  மற்றப்படி  மருந்துக்கும்  காசை
கண்ணில காட்டுறேல்லை   ஓசியில  குடிக்கிறதுதான்  உவற்றை  வேலை அதாலை  பெடியள் இப்ப
உவரை சேர்க்கிறேல்லை  உவர் சொல்றார் தான்  அம்பதாயிரம் குடுத்தனாநெண்டு  ரெண்டாயிரம்
குறோணுக்கும் மேலை வரும் - இஞ்சை  பொக்கற்றில  ஒரு  குறோணே   கொண்டு திரியாதவர்  சொல்றார்  கதை

மணி  - சீ   உந்தக்கதை  எனக்கு இப்பதானே  தெரியுது  வா  வா  போவம்  உனக்கும்  ஊரா வீட்டு 
கதையெண்டா  காணும்  போலை

செல்வன் -  ம்  இதுதான்  நானா  வாய்  திறக்குறேல்லை  திறந்தா  உண்மையா  வரும் பிறகு எனக்குக்  கெட்ட பேர்

மணி  -    சரி சரி  கோவிக்காதை  வா  வா  ......

(யாவும்  கற்பனை )



 
அறிவு  கூடிக்கொண்டே செல்ல 
உணர்வு  குறைந்துகொண்டே  செல்லும்

உணர்வு  நிறைந்தவனுக்கு
அறிவு  ஒரு மட்டில்  நிற்கும்

அறிவு என்பது  அன்பு பாராட்ட
அணைக்க  உதவவே

அறிவின் பயன்  அறியாதாருக்கு
அறிந்தவன்  அறிவை இயம்பல்

அறிவின் நிலை  சமூகத்துக்கு  விழிப்புணர்வூட்டல்  
அறிந்தவன் அறிவை  தனக்குள் மூடி  செல்வதனால்
யாருக்கு ஏது பயன் கற்றதனால்

அறிவு நிரம்பல்   தம்பட்டம்  அடிக்க  வைக்காது
அரைக் குட  அறிவே  தன்னை  புகழ்ந்து ஆடும்


ம.இரமேசு