புதன், 26 நவம்பர், 2014

வார்த்தைகளில்  நாகரிகம் வேண்டும்  அது மீறும்போது மனிதன் தன்மானத்துக்கு சோதனை வருகின்றது உள்ளம் காயமடைகின்றது உணர்ச்சிக்கு மனிதன் அடிமையாகி வன்முறையில் ஈடுபடுகின்றான்
ஆதலினால்  எந்த நிலையிலும்  பேச்சிலும் எழுத்திலும்  பிறர் காயம் கொள்ளாத  வகையில்  ஈடுபடுவோம்  மாற்று கருத்தை  பண்புடன்  பணிவுடன் பகிர்தல் வேண்டும். ஒருவர் நம்மை  ஆத்திரம் ஊட்டும் விதம்  எழுதினால் பேசினால்  நாமும் அவர்  போல்  பதிலுக்குப் பதில்  அசிங்கமாக 
எழுதுவது பேசுவது அறிவாகாது  மாறாக அவரை போற்றிப் பாருங்கள்  அவர்  உங்களுக்கு  அடங்கி விடுவார்  தனது  நடத்தைக்கு உள்ளூர  வெட்கம் கொள்வார்  இது  நல்ல  பக்குவம்  உள்ள உயர்ந்த உள்ளங்கொண்டோராலேயே  முடியும்   அந்த பக்குவம்  உங்களின்  மேலான சிந்திப்பில்  உண்டாவது  பணிவு வந்தால் பக்குவம்  தானாக  வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக