கதிரவன் சென்றதால்
களையிழந்து வாடி
கைகாட்ட முடியாது
மண்ணில் விழும்
மஞ்சல் இலையே
நீ வடித்த கண்ணீரெல்லாம்
குளிராகி எம்மை தாக்குதே
சுந்தரிபோல் நின்றாய்
மாலையில் மயக்கினாய்
வெக்கையில் அரவணைத்தாய்
இன்றோ காற்றின் கனம் இறுக
கோடை பாடையேற
குளிர்வந்து கொல்லுதே கொல்லுதே
சுந்தரக்கனவுகளில் சொர்க்கம்சென்றே
அந்தர அர்ச்சனைகளில் மனம் அமைதிகண்டே
அவசர வாழ்வில் அவாக்களுடன் வாழ்ந்து
அவசர அவசரமாகத் தொலைகின்றோம்
அல்லலும் கொஞ்சமல்ல ஆதரவும் யாருமில்லை
நெஞ்சம் அடக்கி காசில் நேசங் கொண்டே
நிலையாத வாழ்வில் நெஞ்சின் இனிமைக்கு
ஒரு நிமிடந்தன்னும் வாழாது தொலைகின்றோம்
கஞ்சல் என்று பட்டம் எடுத்து காசைத்தொழுது
கருணையின்றி பொய்பேசி கனவான் வாழ்வு
அது களங்கம் சுமந்த வண்டில் வாழ்வு
ஒரு நாளும் ஒரு பொழுதும் நெஞ்சம் திறப்பதில்லை
நீசன் நெருப்பு நெஞ்சங் கறுத்தான் என்று
நல்லவர்கள் நினைத்திடவே பகட்டு வாழ்வு
பணம் பணம் அதுமட்டுமே குறி பொறி
குணமுமில்லா மணமுமில்லா குப்பை நாற்றம்
இந்த வாழ்வுக்கு பிறக்காது இருந்திருந்தால் நன்று
ம.இரமேசு
களையிழந்து வாடி
கைகாட்ட முடியாது
மண்ணில் விழும்
மஞ்சல் இலையே
நீ வடித்த கண்ணீரெல்லாம்
குளிராகி எம்மை தாக்குதே
சுந்தரிபோல் நின்றாய்
மாலையில் மயக்கினாய்
வெக்கையில் அரவணைத்தாய்
இன்றோ காற்றின் கனம் இறுக
கோடை பாடையேற
குளிர்வந்து கொல்லுதே கொல்லுதே
சுந்தரக்கனவுகளில் சொர்க்கம்சென்றே
அந்தர அர்ச்சனைகளில் மனம் அமைதிகண்டே
அவசர வாழ்வில் அவாக்களுடன் வாழ்ந்து
அவசர அவசரமாகத் தொலைகின்றோம்
அல்லலும் கொஞ்சமல்ல ஆதரவும் யாருமில்லை
நெஞ்சம் அடக்கி காசில் நேசங் கொண்டே
நிலையாத வாழ்வில் நெஞ்சின் இனிமைக்கு
ஒரு நிமிடந்தன்னும் வாழாது தொலைகின்றோம்
கஞ்சல் என்று பட்டம் எடுத்து காசைத்தொழுது
கருணையின்றி பொய்பேசி கனவான் வாழ்வு
அது களங்கம் சுமந்த வண்டில் வாழ்வு
ஒரு நாளும் ஒரு பொழுதும் நெஞ்சம் திறப்பதில்லை
நீசன் நெருப்பு நெஞ்சங் கறுத்தான் என்று
நல்லவர்கள் நினைத்திடவே பகட்டு வாழ்வு
பணம் பணம் அதுமட்டுமே குறி பொறி
குணமுமில்லா மணமுமில்லா குப்பை நாற்றம்
இந்த வாழ்வுக்கு பிறக்காது இருந்திருந்தால் நன்று
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக