திங்கள், 24 நவம்பர், 2014

அ 1
மன வயலில்  மஞ்சல்  மின்னல்
மதுரகான  இன்ப மழை பொழிய
மாதுளம் பூவை   மெல்ல  அணைத்தே
மஞ்சல்  வெயில் மேனிக்கே கருணையுடன்
மந்திரத் தேன் மழை  பொழிந்திடவே
மங்காப்   பயிர்கள் செழித்து  வளர்ந்தனவே 
மனை    இல்லை என்னும் பசி நீக்கினவே

அ 2
தேவைகளை கூட்டி  வாழ்வது நாகரிகமாகாது
தேவைகளை  குறைத்து வாழ்வதே  நாகரிகம்
தனக்காக மட்டும்  உண்டு  வாழ்வது மிருகம் 
பிறருக்கு  கொடுத்து  வாழ்வதே மனிதம்
இந்தப்பூமியில்  மனிதன்  வந்தது 
உருவாக்கவும் அன்பு செய்யவுமே
கோடிக்கணக்கில் குவித்து  பெருவாழ்வு
முப்பத்தாறாயிரம்    மணிநேரம் மட்டுமே
அதுவும் நீ நூறு  ஆண்டுகள் வாழ்ந்தால்

அ 3
முடிச்சுக்களைப் போட்டு  வாழ்வது  வாழ்வா
முடிச்சுக்களை  அவிழ்த்து  வாழ்வது வாழ்வா
உன்னை  பொருள்   அடிமையாக்குகின்றது 
ஒரு  குறி  உன்  மகிழ்வான கணங்களை
விழுங்கி ஏப்பம் விடுகின்றது,  நீ  உயிருடன்
இருந்தாய்  வாழவில்லை   எதிர்பார்ப்பு
உன்னை கட்டுப்படுத்தி ஊனமாக்கியது
அதில்  நீ  சேர்த்திருக்கலாம்  ஆனால்  நீ
வாழ்வை   மன மகிழ்வை  இழந்தாய்
என்பதே உண்மை  மீண்டும்  அந்தக்கணங்கள்
உன்னைத்தேடிவராது  நீ  இழந்ததே அதிகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக