சோறாலும் கறியாலும் கட்டிய சுவர் தேகம்
ஊராலும் உறவாலும் கண்டு வளர்ந்த தேகம்
பொல்லாப் பகை வீழ்த்தப் போராடிய தேகம்
மழையோடும் வெயிலோடும் பொறுத்த தேகம்
மலரோடும் மங்கையோடும் முகர்ந்த தேகம்
உயிரோடும் உணர்வோடும் உறவாடும் தேகம்
மானங்காக்க மாடாய் உழைக்கும் தேகம்
முதுமையில் பெரு வலிகாணும் தேகம்
நெருப்பு நீரால் உருவு பெற்ற தேகம்
மண்ணோடு மண்ணாக சாம்பலாகும் தேகம்
இதற்குத்தான் எத்தனை எத்தனை பூச்சு
வாசனைத் திரவியங்கள் வண்ண வண்ண ஆடைகள்
வசதியான இருப்பிடம் மகிழுந்து
எல்லாம் முடிந்து இறுதியில் பிணம் பிணம்
என்ற பெயரே மிஞ்சும் இதை அறிந்தும்
அறிவின் கண் திறவாது அவாக்களுடன்
அலைகின்றதே மனிதக்கூட்டம்
முடிவை அறிந்தவன் எந்நிலையிலும்
அமைதியாக இன்பமாக இருக்கின்றான்
எதையும் பெரிதாக எதிர்பார்ப்பதுவுமில்லை
எண்ணுவதுமில்லை உள்ளத்தில் நிம்மதி நிம்மதி
ம.இரமேசு
ஊராலும் உறவாலும் கண்டு வளர்ந்த தேகம்
பொல்லாப் பகை வீழ்த்தப் போராடிய தேகம்
மழையோடும் வெயிலோடும் பொறுத்த தேகம்
மலரோடும் மங்கையோடும் முகர்ந்த தேகம்
உயிரோடும் உணர்வோடும் உறவாடும் தேகம்
மானங்காக்க மாடாய் உழைக்கும் தேகம்
முதுமையில் பெரு வலிகாணும் தேகம்
நெருப்பு நீரால் உருவு பெற்ற தேகம்
மண்ணோடு மண்ணாக சாம்பலாகும் தேகம்
இதற்குத்தான் எத்தனை எத்தனை பூச்சு
வாசனைத் திரவியங்கள் வண்ண வண்ண ஆடைகள்
வசதியான இருப்பிடம் மகிழுந்து
எல்லாம் முடிந்து இறுதியில் பிணம் பிணம்
என்ற பெயரே மிஞ்சும் இதை அறிந்தும்
அறிவின் கண் திறவாது அவாக்களுடன்
அலைகின்றதே மனிதக்கூட்டம்
முடிவை அறிந்தவன் எந்நிலையிலும்
அமைதியாக இன்பமாக இருக்கின்றான்
எதையும் பெரிதாக எதிர்பார்ப்பதுவுமில்லை
எண்ணுவதுமில்லை உள்ளத்தில் நிம்மதி நிம்மதி
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக