வெள்ளி, 14 நவம்பர், 2014

அலைவரும்  திசை நோக்கி துணைவரும் தோணியிலென்று
அங்கையற்கன்னி  காத்திருக்க சிலைவரும்  முகிலென
தலை காட்டி  அத்தான்  தண்டு வலிக்கக் கண்டே
மழைகண்ட  மயிலாக முகம்   மிளிருங்  கணம்
இனி யுகம்  என் பொழுதே என  மகிழும் கோதையின்
மகிழ்வில்  வான்  புயல்  வழிந்தோடும் 

கன மழையுங் காற்றுங் குளிரும்  அவன் தேகம்  சுமக்கும்
நிலமதில் மானத்துடன் வாழும்  மனத்துடன்  அவன்
நிலம் பறி  நீசர்  வாழ்வுபோல்  ஏமாற்றிடும் வாழ்வில்லை
நெய்தல்  அன்னை  அரவணைப்பில்  நிதம்  ஒரு  போர் 
வலைகள் அள்ளும்  பொன்  வானுயரும்  தன்மானம்
வாட்டமில்லா   வாழ்வு  வஞ்சமில்லா நெஞ்சு
கஞ்சன்   இவன் என்று சொல்ல யாருமில்லை
அள்ளிக்கொடுக்கும் வள்ளல் குணம்  அங்கே

பஞ்சம்  என்று கண்டறியார்  பொங்கிப்  படையலிடுவார்
ஒன்றார்க்கும்  உதவிடுவார்  ஒன்றென்றால் ஓடிவருவார்
நிலவினில்  கூடிடுவார்  நிலாச்சோறு  உண்டுமகிழ்வார்
நல்லுரைகள் நாளும்  நாவில் நயமாய் நவின்றிடுவார்   
நல்லவர்க்கெல்லாம்  தோழரவர்  நரிகளுக்கு  எமனாவார்

ம.இரமேசு



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக