செவ்வாய், 25 நவம்பர், 2014

 அகப்பா

சுடு சோறை பழையதென்பார்
கடுகேனும் உண்மை தெரிந்திலார்
உண்மை  உயிரோடு கலந்திடார்
பொய் நாவால் புரளி  பரப்புவார்
அன்று நான்  அறியவில்லை  
என் வீட்டு முற்றம்
நாகம் மொய்த்த  காடென்று
இன்றுதான்  புரிகின்றது
என்மீது விடம்  கொட்டினார்களென்று
அவர்கள் இனிதே வாழ்க  வாழ்க
 என் நெஞ்சில் வஞ்சம் இல்லை
பழிவாங்கும்  குறியும் இல்லை

அண்ணா தம்பி தங்கை சொன்னார்கள்
அவன்  கூடாதவன்  கூடாதவன்  என்று
நான் அவனை  அப்படி காணவில்லை
அவனை நட்பில் கூட   விழைகின்றேன்

எப்பொருள் யார்  யார்  வாய் கேட்பினும்
அப்பொருள்  மெய்ப்பொருளா  என்று  அறி--
காலத்தின் கோலத்தால் காட்சிகளில்  வில்லன்
ஞாலத்தில்  உண்மையில்  மாசற்ற    நல்லன்
என்னை நானறிவேன் என் உள்ளம்  யாரறிவார்
அம்மா    நயினைத்  தாயே என்னை  நீயே  அறிவாய்.


ம.இரமே


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக