செவ்வாய், 4 நவம்பர், 2014

தியாகம்

அன்றும்  வந்த  மெல்லிய  மலர்க்காற்றில் 
இலைகள் சிரிக்க  மகிழ்ந்து  அசைந்தது பூவரசு
அதன்மடியில்  மைனாவும்  பிலாக்கொட்டைக் 
குருவிகளும்  பறந்து வந்து  குந்தியிருந்து
காதல் மொழிபேசி  மகிழ்ந்தன  மயங்கின
என் மகிழ்வுக்கும்  அதுவோர்  இலை  தந்தது
அதைப்பறித்து  குழலாக்கி  ஊதி மகிழ்ந்தேன்
சிறிது  நேரத்தில்  காற்று  விசைக்க தலைசீவிய
முதிர்ந்த  இலைகள்  பிரியாவிடை  கொடுத்தன
 
ஐயோ ஐயோ  கணேசு  காங்கேசன்துறையில்
சீமெந்தாலையில்  மின்சாரம்  தாக்கி உயிர்---
ஊரே  கூடியழுதது  உடல்  வீடு  வந்தது  ஒப்பாரி ---
பாடையில்  கணேசை  ஏற்ற முன்னரே  அவனுக்காய்
உயிர் துறந்தது  பூவரசு ; சிதைக்கு விறகாக 
குருவிகள்  பறந்து தேடின  தம்  காதலனை
ஐயோ   காணவில்லையே  என்னாயிற்றோ துடித்தன
ஈர  நெஞ்சு  அவைகளுக்குமுண்டு யாரறிவார் கண்ணீரை 
வேலியிற்  காவலனே ; வீட்டில்  ஒருவர்  பிணமானால்
கூடவந்து  எரிகின்றவன்  நீயொருவனே
தியாகத்தின்  மொத்தமும் நீதான்  பூவரசே  பூவரசே

ம.இரமேசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக