புதன், 29 அக்டோபர், 2014

கல்வீடு  கட்டி  கண்ணாடி  யன்னல் போட்டு
விறாந்தையிலே  அவ்டிக்   காரை நிறுத்தி
ஆங்கிலத்தில் பேசி  அழகியை  மணந்து
கோடியில்  பணம் சேர்த்து  கொண்டாடிட
எல்லோர் மனமும் துடிக்கிதிங்கே

சோழனுக்கு வறுமை வந்தால்
சொத்தில்  சில பாதி கொடுத்து
நாட்டை காக்கும்  வல்லமை கொண்ட
பட்டினத்தார்  சட்டையை  கழட்டி
கோவணத்துடன்  சென்ற கதை
அறிந்தும்  மனம்  பணம்  நாடுதே

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக