வாழ்க சங்கானை நூல் நிலையம்
பரவாயில்லை பெடியன் கொஞ்சம்
தமிழறிவு உள்ளவன் என்று யாராவது
என்னை தடுமாறி சொல்லி விட்டால்
அதற்கு பொறுப்பு நானில்லை
சங்கானை நூல் நிலையம்
சுடு வெயிலால் சுத்தி சுத்தி
சைக்கிலோடி சண்டித்தனம்
காட்டும் துணவிச் சந்தியை
தாண்டி ஓடிவர சங்கரத்தை
வரவேற்கும்
ஐயோ அதுமட்டுமா
ஆங்கோர் எலுமிச்சையழகி
படலையை அரைவாசி சாத்தியபடி
என்னை பார்த்து விருப்ப முறுவல்
காட்டுவாள் சில சமயம்
முப்பத்திரெண்டையும்
காட்டுவாள்
ஐயோ
என்று மனம் பயந்து
இறுக்கி மிதிக்கும் கால்கள்
காதல் பேசும் தைரியமில்லாத
பிள்ளை, அந்த நினைவு
எப்போதாவது எனக்குள்
நெளியும் சுழியும்
கடைசிப்பந்தி வாசிக்கையில்
தம்பி பூட்டப்போறம்
என்ற குரல் இயமன் வந்த ஓசை போல்
அல்லது டென்மாக்கில்
ஆறரை மணி குளிரில்
அலாரம் அடிப்பதுபோல் இருக்கும்
அண்ணே ஒருநிமிஷம் என்று
இடதுகையை தூக்கி காட்டியபடி
அந்தக் கையை மடக்க வேண்டும் என்ற
உணர்வின்றி பந்தி படித்து வெளியேறிய நாட்கள்
அதிகம்.- வாழ்க சங்கானை நூல் நிலையம்.
பரவாயில்லை பெடியன் கொஞ்சம்
தமிழறிவு உள்ளவன் என்று யாராவது
என்னை தடுமாறி சொல்லி விட்டால்
அதற்கு பொறுப்பு நானில்லை
சங்கானை நூல் நிலையம்
சுடு வெயிலால் சுத்தி சுத்தி
சைக்கிலோடி சண்டித்தனம்
காட்டும் துணவிச் சந்தியை
தாண்டி ஓடிவர சங்கரத்தை
வரவேற்கும்
ஐயோ அதுமட்டுமா
ஆங்கோர் எலுமிச்சையழகி
படலையை அரைவாசி சாத்தியபடி
என்னை பார்த்து விருப்ப முறுவல்
காட்டுவாள் சில சமயம்
முப்பத்திரெண்டையும்
காட்டுவாள்
ஐயோ
என்று மனம் பயந்து
இறுக்கி மிதிக்கும் கால்கள்
காதல் பேசும் தைரியமில்லாத
பிள்ளை, அந்த நினைவு
எப்போதாவது எனக்குள்
நெளியும் சுழியும்
கடைசிப்பந்தி வாசிக்கையில்
தம்பி பூட்டப்போறம்
என்ற குரல் இயமன் வந்த ஓசை போல்
அல்லது டென்மாக்கில்
ஆறரை மணி குளிரில்
அலாரம் அடிப்பதுபோல் இருக்கும்
அண்ணே ஒருநிமிஷம் என்று
இடதுகையை தூக்கி காட்டியபடி
அந்தக் கையை மடக்க வேண்டும் என்ற
உணர்வின்றி பந்தி படித்து வெளியேறிய நாட்கள்
அதிகம்.- வாழ்க சங்கானை நூல் நிலையம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக