வெள்ளி, 17 அக்டோபர், 2014

அன்பான சபா தம்பி -  பெண்ணின் கண்ணடக்கத்தை  வைத்தே  அவளுக்கு  சிறப்பு பெண்ணின்  ஒழுக்கம் கண்ணில் இருந்தால்  அவளை  ஆண் மதிப்பான்
காம  நோக்குடன் நோக்கான்  என்பது அடிப்படை  அதை வைத்தே கம்பர்
எழுதியிருக்கின்றார்  இன்றைய வாழ்வியலுடன்  கம்பராமாயணத்தின் அனைத்து கூறுகளையும் ஒப்புநோக்குதல் நன்றன்று  அது அன்றைய  வாழ்வியல்  சூழலுக்கு ஏற்ப  வடிக்கப்பட்டது ஆயினும் அதற்குள்  நிறைய
இன்றைக்கும்  ஏற்ற விடயங்கள் உண்டு  ஆழமாக  படித்து உணராமல்  பொழுதுபோக்குக்கு அவர் இவர் சொன்னதை வைத்து  வீண் வம்பிழுத்தல்  பண்பல்ல  இதிகாசத்தை  அதன் வழியில்  நோக்க வேண்டும்  பொய் புளுகு
என்று கிண்டலடித்து  உங்களை காட்டிலும்  ஆயிரம் மடங்கு  தாக்கியவர்கள்  எல்லோரும் இறுதி நாட்களில்  சாயி பாபாவை  வீட்டுக்கு அழைத்து களவாக கும்பிட்ட கதைகள்  அறியவில்லையா  பெரியார் தாசன்  கண்ணதாசன்  போன்றோர்  மகா சிந்தனாவாதிகள்  அவர்களைப்போல்  கடவுளை  திட்டி தீர்த்தவர்கள்  இதுவரை யாரும்  இரார்  அப்படியானவர்களே  கடைசியில் 
பெரும் பக்தர்களானார்கள்  பெரியார் தாசன்  இஸ்லாத்துக்கு மாறியது அறியவில்லையா  நன்றாக  படித்துவிட்டு  இதுபற்றி பேசவேண்டும்  கம்பராமாயணத்தை  நக்கலடிக்கவே  கண்ணதாசன் அதை  படித்தார்  கடைசியில்  அதன் வீரியத்தில்  தன்னை ஒப்படைத்தார்  என்றால்  அதை  கேலி செய்யும்  மற்றவர்கள்  எம்மாத்திரம்,   அதை நம்ப வேண்டும் என்றில்லை  நமக்கு தேவையான
நல்லதை  மட்டும் எடுக்க வேண்டும்  உங்களுக்கு  எப்படி விளக்கினாலும்
புரிந்து கொள்ளாது வீண்  வாதம் செய்கின்றீர்கள்   -  கோயிலுக்கு  நேர்ந்த கிடாய் ஆகக்கூடாது தம்பி , வாழ்வில் அடக்கம்  பணிவு  பண்பு  வேண்டும்
இன்றைய  தொழில் நுட்ப வளச்சியை  200 ஆண்டுகளுக்கு முன்னர்  இருந்தவர்கள்  நம்பியிருப்பார்களா  புளுகு  உதெல்லாம்  சாத்தியமில்லை
என்று எள்ளி நகைத்திருப்பார்கள்  ஆனால்  இன்று...   அப்படித்தான்  எங்களுக்கு
இன்று பொய் புளுகு  என்று  தெரிவது  திரேத யுகத்தில்  உண்மையாக  இருந்திருக்கலாம்  இந்த கழிசறை  உலகே  என்னவெல்லாமோ  கண்டு
பிடிக்குதென்றால்  அன்றைய   உலகு  ஏன்  கண்டு பிடித்திராது
இன்று நாம்  நம்ப  மறுக்கும்  விளைவுகளை - வில்லின்  நவீனமே  துப்பாக்கி
மறுக்க முடியுமா  ஏவுகணைகள்  அஸ்த்திரங்கள்  புஷ்பக விமானம்  உலங்குவானூர்தி (கெலிகப்டர்) இன்னும்  நிறைய இருக்கின்றது  ஆழமாக
வாசித்து நல்வழியில்  சிந்தியுங்கள்  குறுக்கு வழியில்  சிந்தித்தால் 
வீணாக  பகைமையே  வளரும்  உங்களை விட  பல  பல  பெரிய  சிந்தனையாளர்கள்  கடவுளை அதன் கதைகளை  எதிர்த்து கிண்டல் செய்தவர்கள்  கடைசியில்  தங்களின் அறியாமையிட்டு  உள்ளுக்குள் நொந்து கொண்டார்கள்  என்பது வெளிச்சமாக  இருக்கும்  வெளிச்சம் - வாழ்க நலம்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக