புதன், 8 அக்டோபர், 2014

அம்பாள்  பாமாலை

சஞ்சலம்  போக்கும்  சர்வ சக்தி
உன் தலம்  எனக்கு  துனையம்மா
கண்மலர்  சொரியும்  கண்ணீரால்
உன்தாள்  நனைத்தே தொழுதிடுவேன்

வெண்பனிப் பூவால்  விளக்கேற்றி
நின்னருள்  வேண்டி  நிதம்பணிவேன்
பொன்னருட்  பூக்கள்  உன்னருளே 
புவியில் உன்போல்  யாரம்மா

கண்ணெதிர்  நின்றே  காத்திடுந்தேவி
காலை மாலை  கசிந்து  தாழ்வேன்
உன்கரம் ஒன்றே  எனைக்காக்கும்
உலகில்  நீதான்  என் தெய்வம்

 ம . இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக