வெள்ளி, 10 அக்டோபர், 2014

காற்றுப்படாத  பக்கங்களில் 
எழும் உணர்வுகள்  சில சமயம் 
தீட்டுப்படுகின்றன  தீட்டாததால் 
வந்த தீட்டு  என  திட்டும் விழும் 


நாள் ஞாயிறு  கண்ட  பொழுதில் 
மலரும் மலர்கள்  நாள்  திங்கள் 
காண்பதற்குள்  ஞொள்கல் ஆவோம் 
என வாடாது  மகிழ்கின்றனவே


ஒரு மாலைக்குள்  மடிவது  அறியாதவை 
ஒரு மாலையில்  மணக்கின்றனவே 
அவற்றிலும் வண்ணமும்  வர்ணமுமுண்டு
ஆனாலும்  பக்கத்தில்  உரசியபடி  சிரிக்கின்றன

ரோஜா மல்லிகை  கனகாம்பரம்  செவ்வந்தி என 
சாதிகள்  பல ஆனால்  யாரும்  எதையும் 
ஒதுக்காது விருப்புடன்   முகர்கின்றார்கள் 
வசம் செய்யும் வாசம்  எல்லோர்க்குமுண்டு

யாருமேலே  கீறினாலும்  இரத்தம்  ஒன்றுதான் 
ஆக மொத்தம் நீயும் நானும்  பத்து மாசந்தான் 
தேசமெல்லாம்  நேசத்தோடு சேர்ந்து வாழுது 
தமிழ்த் தேசம் மட்டும் ஒன்று கூட மாட்டேனெங்குது  
ம.இரமேசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக