சனி, 25 அக்டோபர், 2014

உதிரும்  பூக்கள்   அழுவதில்லை
தழுவும் கைகள் பேதம் பார்ப்பதில்லை
உருகும் நெஞ்சு வஞ்சமில்லாதது
வடிக்கும் சிலை  பொறுமையின் சின்னம்
பனிக்கும் விழி இரக்கத்தின் அடையாளம்
இனிக்கும் மொழி  ஆக்கத்தின் திறமை 
குளிக்கும் குருவி தூய்மையின்  தேவை
அளிக்கும்  கரம் கருணையின் கடல்
தளிர்க்கும் மரம்  பிறப்பின்  அழகு
ஓடும் முகில்  முயற்சியின்  வலிமை
பாடும் மீன்  மொழியில்லா  கவிதை
கூடும் இனம் ஒற்றுமையின்  நிழல்
நாடும் மனம்  வேதனையின்  ஆரம்பம்
தேடும் சொந்தம்  உரிமையின்  பெருமை

ம.இரமேசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக