சனி, 25 அக்டோபர், 2014

இதைத்தான் காண   சித்தர்களும்  யோகிகளும்  ஞானிகளும்  புத்தரும்  விவேகானந்தரும்  இராமகிருஷ்ணரும்  தேடி தேடி  அலைந்தார்கள்  கண்டுகொண்டார்கள் - எங்களுக்கு அடுத்த வேளைக்கு சமைக்க  காசு வேண்டும்  இல்லை உயிர்  எம்மிடம்   இல்லை என்னும் நிலை - சாப்பிடும் போது தெருவில் சாப்பாடு இல்லாமல் இருக்கும் ஒருவருக்கு ஒரு சாப்பாட்டு பொதியை கட்டிக்கொண்டுபோய்  கொடுத்தால் உங்களுக்குள் நீங்கள்  தெரிவீர்கள் -  கதிரையில்  இருக்கும் போது காலுக்கு மேல்  கால்  போடாமல் இருந்தால் உங்களைக் காணலாம் - கை நீட்டுமொருவனுக்கு இரண்டு கடலைக்கொட்டையை  கொடுக்கும்  போது  நீங்கள்  உங்களுக்குள்  தென்படுவீர்கள்  இதை  உங்களுக்கு  நான் எழுதும்போது என்னை நான்  காண்கின்றேன்   பொய்யில்லை புளுகில்லை  உண்மை இதுதான்  உண்மை  மனத்தை பக்குவப்படுத்தி  ஆழமாக  சிந்தியுங்கள்  அகப்படும்  அம்புட்டுந்தான் .
தன்னைப்போல பிறரை எண்ணும்  தன்மை வேண்டும்  அந்த தன்மை வந்துவிட்டால்  நீங்கள்
உங்களை  காண்பீர்கள்  உங்களை  நினைத்து உள்ளுக்குள் நெக்குருகுவீர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக