செவ்வாய், 7 அக்டோபர், 2014

தாங்கள்  இலாபங் காணவேண்டி  மக்களுக்கு பிரபல்யமானவர்களை அரசியலுக்குள்  இழுப்பது
அசிங்கம்  கபடம்,  எத்தனை  அறிவாளிகள் சுத்தமான கையுடையோர்கள்  இருக்கின்றார்கள்  நாட்டில்
அவர்களை மேடையில் ஏற்று  பேச வை;  மக்கள்  அறியட்டுமே.   கையாட்டி காலாட்டி  புறங்காட்டி
கூத்தடித்த   நெய்யரியர்களை   மேடையேற்றி  நல்லோர் பெரியோர் கட்டிக்காத்த  இயக்கத்தினையும்
கொள்கைகளையும்  காற்றில் பறக்கவிடுதல்  பண்பாமோ ,  எம் ஜி ஆர்  ஓர்  விதிவிலக்கு  பிறப்பினிலே
வளர்ப்பினிலே  வள்ளல் குணத்துடன் பிறந்தவர் வளர்ந்தவர்,  வெள்ளம்  பாய்ந்த  காலத்தில்  காங்கிரசு  கடிதங்கள் முடித்து  உலைவைக்குமுன் தனது சொந்தக்காசில் நாட்டு மக்களுக்கு  சோறூட்டிய  மகா மனிதன் .  தானே  புயலில்  சிக்கிச்   சின்னாபின்னமான,  சீக்காயடித்து   கைதட்டிய  ஏழைகளுக்கு உதவாமல்  அது அரசின்  பணியென்று சுருண்டு  தூங்கியவர்களே  கமலும் ரஜனியும், இது  தமிழருவி சொன்ன  சேதி,  அவரின்  வேண்டுதலுக்குப்பின்  பத்துலட்சத்தை  கொடுத்தார்கள்   இந்தா  என்று
  தமிழிசை  சௌந்தரராசன்  ரஜனியை  இழுக்க முயல்வதும்  ஏற்கனவே
கலைஞர்  குஸ்புவை  இழுத்து  வைத்திருப்பதும்  அறிவிலித்தனங்களே,  இந்தக்  குஸ்பு  நாளை
இன்னொரு  ஜெயலலிதாவாகலாம் யார் கண்டார்,  மதிகெட்டு  நெறிகெட்டு   மது மயக்கத்திலும்
சினிமா மோகத்திலும்  புரளும் தமிழகத்துப்  பாமரர்களை  ஏய்த்து  கொண்டாட்டம் போடுகின்றார்கள்
அறிவாளிகள்  என்னும் நரிகள்,  இதைத் தட்டிக்கேட்பவர்கள்,  புத்தி சொல்லி  விளக்குபவர்களை
தட்டின்றி  வாழும்  அரிவாள்  கொலைஞர்களால்  வெட்டிச்  சாய்க்கின்றார்கள் நெய்யரியர்,  சகாயம்  என்னுமோர் உத்தமனை   கொல்லத்துடிக்கின்றது   கழிசறைக் கூட்டம் , நல்லவர்கள் எல்லோரும்  ஓரணி திரண்டால் நாசகாரிகள்  நாட்டைச்  சுரண்டுவோர்  போவார்  பரலோகம்  சிந்தி  தமிழனே  சிந்தி .

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக