திங்கள், 13 அக்டோபர், 2014

அன்று  இனிய பொழுது
காதலன்  வந்தான்
கன்னி பறந்தாள்
ஊரெல்லாம்  தேடி
அலுத்து  அழுதாள்
அம்மா,   நீயும்  உன்ரை
வளர்ப்பும்  என்று
புருஷன்  கடிந்தான்

வாடி போய் 
காட்டுப்பக்கம்
தேடுவம் 
நானும் வாறன் மாமா 
மூவரும்  தேடியதில்
ஓரிடத்தில்  இருவர்
சென்ற  தடம்  தெரிந்தது

ஓகோ  இந்த வழியில் தான்
போயிருக்கினை  என்ன துணிவு
அவனுக்கு  என்று  உள்ளே
பொங்கியபடி  கால் தடங்களை
நோக்கி பின்தொடர்ந்தார்கள்

பாதை  முடியுமிடத்தில்
முட்கள்  நிரம்பியிருந்து
ஒரு ஓரமாக  சற்று  கால்
பதிக்க  இடமிருந்தது

அங்கே  ஒருவர்  சென்ற
தடமே  தெரிந்தது
ஆகா  என்  பிரச்சினை
தீர்ந்தது  அவன்  என்னைவிட
நல்லா  வைச்சு  காப்பான்
என்ரை  மகளை  வாங்கோ
வீட்டை போவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக