ஞாயிறு, 12 அக்டோபர், 2014

அவர்கள்  தங்களுக்குள்
 ஒரு  முடிவை  முடிச்சு 
 வாழ்கின்றார்கள்
 போகுமிடமெல்லாம்
 அதை  காவிச்செல்கின்றார்கள்
 தங்கள்  முடிச்சில்
முடியப்பட்டவரை
 கண்டதும் முடிச்சு
 அவிழ்கின்றது
ஏனோ தெரியவில்லை
சில இதயங்களுக்கு
இன்னும்  ஆதவன்  அருள்
கிட்டவில்லை  அவை
இன்னும் இருட்டிலேதான்
கிடக்கின்றன
 சூரியன் வரும்வரை 
அங்கு ஞாயிறு உதிக்குமா
அவர்கள்  சிந்தனையில்
முடிவுகள்  மாற்றப்பட்டால்
வெளிச்சம்  வரலாம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக