ஞாயிறு, 19 அக்டோபர், 2014






இதயத்தின்  நரம்புகள்  வாசிக்கும் முகாரி
அதில்  எரியும்  விறகுக்  கட்டைகள்
அந்த வசந்தத்தின்  வடிவை  இரசிக்க முடியாத 
நெஞ்சின் கீறல்கள்  அதில்  கொட்டும் குருதி 
படக்கென  முறிக்கலாம்  தடியை
சிறையில்  நல்லவர்கள்  வேண்டாம்
அது கொடியோரின் கூடாரம்

சக்கரங்கள்  நிற்பதனால்  அவை  ஓட
மறுக்கின்றன  என  அர்த்தமில்லை
தேவைகள்  ஏற்படின்  அவைகள்  ஓடும்
தூண்டிலில்  எந்நேரமும் அகப்படுவதில்லை  மீன்
நேரம்  அதற்கு துரதிஸ்டம் என்றால் அதிஸ்டம்  நமக்கு

முகில்கள் ஓடி  இளைக்கும்  வியர்வை மழையாகும்
காட்டின்  காற்று  ஆற்றின்  வேகம்  முகிலுக்கு திகில்
முதுகு தெறிக்க ஓடும்  அழகு  எமக்கு  களிப்பு
ஒருவர்  நோவில்  ஒருவர்  கொண்டாட்டம் 
ஏனிந்த  களிப்பு  எப்போ  வரும் விழிப்பு

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக