திங்கள், 6 அக்டோபர், 2014

ஒரு பொழுது பிறக்க
புதுமலர்கள்  சிரிக்க 
பரிமளங்கள் கொழிக்க
வான் தேனாறு பாய்ந்தே
மண்ணெங்கும்  களிக்க
வந்தமழை  மா மாடு
தேர் கொண்ட மன்னரும்
பார்கொண்ட  அறிஞரும்
போர் செய்யும் வீரரும்
கார்   கண்டு  ஏர் செய்யும்
வீரர் பின்னே பின்னே
பள்ளர்  அவர் இல்லெனில்
இங்கு  உள்ளார்  ஒருவருண்டோ

மா  மாடு = பெருஞ் செல்வம்
பள்ளர் = உழவர்

ம.இரமேசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக