வியாழன், 2 அக்டோபர், 2014

பொன் பொழுதில் என் மனம் 
விதைக்கும்  கோடி தினம்
அந்த நீலவானிற்  பறந்து
நெய் மணக்கும்  காட்டில் விழுந்து
ஓடிவரும்  அருவியில் குளித்து
ஆடிவரும்  தென்றலில்  அசைந்து
பாடிவரும் பாவைக்கு மலர்சூடி
 மன்மதன்  தேரிற் பறந்து
குறையில்லாக்  கன்னியுடன்  கூடி
குழவிதனையேந்தி  கொஞ்சிக் குலாவி 
படியளி  நிலத்தில்  பயிர் விதைத்து 
நெய்தல் மிசை நீலம்  மேவி   
வங்கம்  ஏகித்   தங்கம் வாங்கி
மாதங்கம் பூட்டி  மகிழவோர்  கனவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக