வியாழன், 16 அக்டோபர், 2014

நிம்மதி  நிம்மதி

அன்றொரு காலம்
வாங்கிய போத்தில்களும்  நிறைய
அதன்  வகைகளும் நிறைய
ஊற்றிக்குடித்த  கிளாசுகளும் நிறைய
பற்றவைத்த  சிகரெட்டுகளும்  நிறைய
செலவு செய்த காசுகளும் நிறைய
ஆடிய ஆட்டங்களும் நிறைய
பேசிய பேச்சுக்களும் நிறைய
சேர்ந்திருந்த  சிநேகிதர்களும் நிறைய
கொண்ட மன நோக்களும் நிறைய
உண்ட  வகையறாக்களும் நிறைய
எல்லாம் நிறைய நிறைய
கண்ட மிச்சம் என்ன
குடிக்க  வந்தவர்கள்  எங்கே
அவர்கள் சீட்டு போட்டு
வீடும்  காரும் வாங்கிவிட்டார்கள்
வெறுங்கையுடன்  சிரித்தபடி வந்தார்கள்
வாங்கோ  இருங்கோ  என்றுவிட்டு
கடைக்குபோய்  போத்திலும்  கோலாவும்
டீ பிறிச்சிலிருந்து ஆட்டுத்தொடை
கொஞ்சம்  டேஸ்ட்டுக்கு பொரியல்
மிச்சம்  குழம்பு
நாலாவது பெக்கில்
இஞ்சைவாரும்  ஐசே
என்று  தொடங்குவார்கள் 
அது எங்கோ எங்கோ போய் முடியும் 
அடுத்த சில நாட்களில் , அண்ணே
ஐநூறு குறோண் மாறித்தாறியளே
வியாழக்கிழமை திருப்புறன் என்றால்
விசர்க் கதை  கதைக்கிறீர்
நானே  மினுசில்  காட்டை
வைச்சிருக்கிறன்  நீர்  ஒருபக்கம் என்பார்
நா  கூசாது  பொய்  சொல்லுவார் 
நன்றி மறப்பார்  நல்லா  யூஸ்  பண்ணுவார்கள்
கூடுமிடங்களில்  அறிவாளியாக  கதைப்பார்கள்
நல்லவனை  கண்டால்  நாலு பக்கமும்  நக்குவார்கள்
நெஞ்சில்  என்னதான்  நினைத்து  வைத்திருப்பார்களோ 
தமிழ் பெண்ணாக  இருந்திருந்தால்  குடிக்க வேண்டி  வந்திராது
மன  அழுத்தம்  வரும்போது  கொஞ்சம்  பாவித்தால் 
மகிழ்வு  வந்து  நல்லபடி  தூக்கமும்  வருவது  உண்மையே
நம்ம  ஆட்களுடன்  கூடி களிப்பது  வீண்  மனத்தாங்கலை உருவாக்கும்
நல்ல கொம்பனி  டி எம் எஸ்  , சிவாஜி , எம்ஜிஆர் , கவுண்டமணி ,செந்தில்
ஒரு பிரச்சினையுமில்லை   நிம்மதி  நிம்மதி .

ம.இரமேசு   

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக