திங்கள், 27 அக்டோபர், 2014

வெம்மைகளில் வெந்து தினம் வாழ்கின்றோம்
உண்மைதனை  பலர்  திரைபோட்டு  மூடுகின்றார்
காற்றையும் விற்பான்  வியாபாரி
முடியவில்லை  என்பது அவன் கவலை 

ஒருபக்கக்  கதவுகள்  ஒருநாளும்  உருப்படியாகாது
மறு பக்கம்  அறியாமல் நீதி சொல்லக்கூடாது
புறக் கண்ணில்    உண்மை  புலப்படுவதில்லை
அதைப் புரிந்து கொண்டால்  உண்மை தெளிவாகும்

தூக்கணாங் குருவிகளை  சிகரத்தில்  வைப்பதில்லை
துயிலும்  கனவுகள் விழித்திட  நாள் பார்த்து காத்திருக்கும்
எண்ணத்தின்  விரிப்புக்கு  எல்லைகள்  ஏதுமில்லை
அதில் படுத்துறங்க எவராலும்  முடிவதில்லை

ம.இரமேசு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக