செவ்வாய், 7 அக்டோபர், 2014

பத்தோடு  பதினொன்றாக  எடுக்கமுடியாத  வரிகள்  சாதா  சினிமாப்பாடல்  என்பதைக் கடந்து
தமிழன்னைக்கு மாலை தொடுத்த  சிந்தனையின்  அழகு மிளிரும் நயம் பொதிந்த தமிழ்த்தேன் வரிகள்
  நண்பர்களின் இரசனைக்கு 

1)வளர்ந்துவிட்ட   பருவப்பெண்போல் உனக்கு  வெட்கமா ,  தலை  வளைந்து சும்மா  பார்க்கிறியே
தரையின் பக்கமா,  இது வளர்த்துவிட்ட  தாய்க்குத்தரும்  ஆசைமுத்தமா , என்மனைக்குவர  காத்திருக்கும்  நீயென்  சொத்தம்மா   -  கவிஞர்  மருதகாசி

2)  மண்ணிலே  முத்தெடுத்து  பிறர்வாழ  வழங்கும் குணமுடையோன்  விவசாயி  - மருதகாசி

3) மஞ்சள் முகமே  வருக  மங்கல  விளக்கே வருக,  கொஞ்சும் தமிழே  வருக  கோடான கோடி தருக - கவியரசர்

4)கட்டித்தங்கம்  வெட்டியெடுத்து  காதல் என்னுஞ் சாறு பிழிந்து  தட்டித்தட்டி  சிற்பிகள்  செய்த  உருவமடா,  அவள்  தளதளவென்று  ததும்பி நிற்கும்  பருவமடா  - கவியரசு

5) நதியில் விளையாடி  கொடியில் தலைசீவி  நடந்த  இளந் தென்றலே - கவியரசு


6) அந்த நீல நதிக்கரையோரம்  நீ நின்றிருந்தாய்  அந்தி  நேரம்  - கவியரசு

7) வெண்சங்குக்  கழுத்தோடு  பொன்மாலை  அசைந்தாட  நான் கண்ட பொருள் கூறவா
    என்  அண்ணாவை  ஒருநாளும்  என்னுள்ளம்  மறவாது  என்றாகும்  விதமல்லவா - புலமைப்பித்தன்
(இதை  படித்துவிட்டு  எம்ஜிஆர்  புலமைப்பித்தனை  கட்டியணைத்து  தன் பாராட்டை  வெளிப்படுத்தினார்)

8) மனதோடு  கோபம்  நீ  வளர்த்தாலும் பாவம் மெய்யான  அன்பே  தெய்வீகமாகும் - வாலி

9) செந்தணலின்  ஒளியெடுத்து  சந்தனத்தில்  குளிர்கொடுத்து பொன் தகட்டில்  வார்த்து வைத்த
     பெண்ணுடலை  என்னவென்பேன்  - வாலி

10) பகை கொண்ட உள்ளம்  துயரத்தின் இல்லம்  தீராத கோபம்  யாருக்கு இலாபம் - புலமைப்பித்தன்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக