வெள்ளி, 3 அக்டோபர், 2014

நெஞ்ச மலரில்  நஞ்சுகக்கும்  நாகங்கள்

துஸ்டரைக்  கண்டு  தூர  விலகினும்
இஸ்டமுடன்  வம்பிழுக்க நாவாடுகின்றார்
பண்பாடு காக்கப்   பணிந்து  நடப்பவரிடம் 
என்பாடு  பெரிதென்று இறுமாப்புடன்  

சிந்தனையில்  வறியவர்களாக ஊர்கின்றார்
நாவடக்கம்  பணிவு  பக்குவமிலாப்பஞ்சம்  
மடிநிறையப் பொருள் கொண்டு நிறைத்தார் 
மண்டைக்குள்  நல்மதி  நிறைக்க மறந்தார் 

ஆயிரம் செருப்புகள் கண்டும் 
புத்தியில்  மாற்றமில்லை 
தொண்டைக்குள்  நீட்டி  ஒலித்தே
சந்தைக்குள்  கேட்கும்  இசை தருகின்றார்

எங்கே  எப்படி  நடந்திடலறியார் 
இறுதிச்சடங்கிற்   கலப்பார்
இன்னுயிர்த்  தோழர்களைக்  காண்பார்
 மா குசலம்  மண்டி மகிழ்ந்துரைப்பார்

வேண்டாதா  அழுக்குரைத்தே  நெஞ்சம்  நோவார்
வீணான  கதைகள் பேசிக் கும்மாளம்  கொட்டிடுவார்
முந்தநாள் வடுக்களை  நாவினால்  வாட்டிடுவார்
பண்பாடுமில்லை  பழக்கவழக்கமுமில்லை

என்னைவிட்டால்  ஆளில்லை  என்றே வீங்குகின்றார்
அடித்து  நொருக்க  ஆத்திரம்  அலையாய் எழினும் 
கற்ற அறிவு  அடக்கித்  தடுத்தாட்கொள்கின்றது
பொறுமை பொறுமை  வேண்டாம்  சண்டையென

 பணத்திமிரால்  பண்ணின்றி ஆழ் நெஞ்சிற்   செருக்கேறி
பாரினிலே  பெரியவர்போல்  வாய்தூக்கி  அசைகின்றார்
சீச்சீ  தூத்தூ எங்கிருந்து வந்தார்   என்ன மனிசரடாவென்றே 
ஈங்கோர் பெரியவரும்  கரம்விரித்தே  மனநோக்கொண்டார்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக