குடியால் தெருவினிலே
நல்ல பொழுதொன்றில் சேர்ந்திடுவர் நால்வர்
அழகான வட்ட மேசையிலே குந்திடுவார்
அன்பாக அடுக்கிடுவார் ஆனந்தக் குவளைகளை
தெம்பாக நிமிர்ந்தே தேய்த்திடுவார் குவளைகளை
நயந்து பேசிடுவார் நாலு சுற்று முன்னே பின்
நா தளர்ந்தே ஆற்றிடுவார் அகில வெறு சொல்லுகளை
எத்தனை மேசைகள் கண்டார் எத்தனை குவளைகள் கண்டார்
வெற்று பிதட்டல்கள் முழங்கிடுவார் பெரிய வீரர்கள் போல்
கட்டுப்பாடின்றி வெட்டி பேச்சுக்கள் வீணான நேரங்கள்
பொருளும் போனது போதையிலே புகழும் தேய்ந்தது போதையினால்
அமுதும் நாறி அழகும் இழந்து வீழ்ந்தார் குடியால் தெருவினிலே
ம.இரமேசு - தொன்மார்க்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக