திங்கள், 25 ஆகஸ்ட், 2014

உனக்கு  என்னடா  தெரியும்


  தமிழ்ப்  பாடத்தில் கெட்டிக்காரன் என்று எனது மதிப்புக்குரிய  ஆசரியர் அமரர்  நடராசா  கோயில் கேணியில்  கால்  கழுவும் போது என்  அன்னையிடம் சொல்லியிருக்கின்றார் அதை  என்னிடம் சொல்லி  என்னை  உச்சி முகர்ந்தாள்  என்  தாய் மரியாதைக்குரிய ஆசிரியர்  செல்வராசா  அவர்களிடம் ரமேசுக்கு  டியூசன்  சொல்லிக்கொடுங்கள்  கணித்தத்தில்  அவன்  மக்காக  இருக்கிறான் என்று கேட்ட  என் தந்தைக்கு  அவர்  சொன்ன பதில் அவனுக்கு  அடிப்படையே தெரியாது  என்னால்  முடியாது அவன்  முட்டாள்  - என்வீட்டு கண்ணாடிக்கு முன்  நின்று  என்னை  நான்  கேள்விகேட்டேன்  டேய் ரமேஸ்  உனக்கு என்னடா  தெரியுமென்று,  என்  உள் மனம்  சொன்னது  உனக்குத்தான்  நல்லா  தமிழ்  எழுத வருமே அதையே  உன்  வெளிப்புக்கு  பயன்படுத்தென்று  அதன்வழி  நான்  சென்றதன்  விளைவே  இன்று என்னை  பல முகநூல்  நண்பர்களும்  அவர்கள்  வாயாடியதால்  வெளியில்  இருப்போரும்  என்னை மதிப்பதும்  புகழ்வதும் போற்றுவதும்  - உன்னை  அறிந்தால்  நீ  தலை  நிமிரலாம்  என்ற  தத்துவம்  பொய்யல்ல. 


(இதை மேடை போட்டு  பேசும் அளவுக்கு  வளரவில்லை  அப்படி  பேசினால்  அடுத்த  மேடைக்கு  இலட்சம்  ரூபா  கொடுப்பார்கள்  என  எண்ணுகின்றேன்   நாட்டில் நடக்கும் நடப்பு அதுதானே  இல்லையா  அன்பர்களே )

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக