ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தமிழ்நாட்டில்  ஒருவர்  திரைக்கு பாட வருவது மிகுந்த சிரமம் அந்நாட்களில்  அப்படியான  சூழ்நிலையில் வந்து சில நெஞ்சு மறக்க முடியாத  பாடல்களை  தந்தவர்கள்  ஜென்சி , டி கே கலா
அன்புமலர்களே பாடிய  அஞ்சலி  இவர்களெல்லாம்  சிறந்த  குரல்வளம்  இருந்தும்  அதிகமாக 
பாட  முடியாது போனதேன் - இசையமைப்பாளர்களுக்கு  தைய  தக்க போட்டால்  வாய்ப்பு
நிரந்தரமாகும் இல்லை  தயாரிப்பாளர்கள்  இவர்தான் பாடவேண்டும் என்று  சொல்லவேண்டும்

இசையமைப்பாளர்கள் தங்களின்  திறமையை  சர்வாதிகாரமாக்கி  தங்களுக்கு  நன்றாக சலாம்  போடும்  பாடகர்களை  பாடவைக்க  தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் உச்ச  நடிகர்களையும் மருட்டி   அன்றில்  அடம் பிடித்து பாட வைத்தவர்களே  எம் எஸ் வியும்   இளையராஜாவும் .

 இந்த கூத்துக்கு நானறிந்து முதல் தாளம் போட்டவர்  எம் எஸ்  வியே  தெலுங்கில்  கண்டசாலாவே
என் டி ஆருக்கும்  ஏ என்  ஆருக்கும்  பாடி வந்தார்  அதையே அங்கு  எல்லோரும் வரவேற்றார்கள் 
தமிழில்  டி எம் எஸ்  எப்படியோ  அப்படி  தெலுங்கில்  கண்டசாலா  .  அவரை  தவிர்த்து  பி பி  சீனிவாசை  பாடவைத்தவர்  எம் எஸ் வி ,   இரசிகர்கள்  நொந்து கொண்டனர் .  சீனிவாஸ்  நல்ல பாடகரே    ஆயினும்  தெலுங்கில் தலைமை  நடிகர்களுக்கு  அவர்  குரல்  கண்டசாலாவுடன் ஒப்பிட்டால் பொருத்தம்  சற்று குறைவே  அது  தெலுங்கு  இரசிகர்களின்  இரசனை கணிப்பு .

தமிழில்  ஏ எம்  ராஜாவை  ஒதுக்கி
பி பி எஸ்ஸை  முன்னுக்கு உயர்த்தியவர்  எம் எஸ்வி  ,  கன்னடத்தில்  பி பி எஸ்ஸே
தலைமைப் பாடகர் - பின்பு  டி எம் எஸ்ஸை  ஒதுக்கி  பாலுவுக்கு  வாய்ப்பு  கொடுத்தார்  எம் எஸ் வி,
அப்படி  வந்த பாடலே   "வெற்றி மீது வெற்றி வந்து" பாடல்   நல்லாயிருந்தாலும்   டி எம் எஸ்  பாடும்
நிறைவைத்  தரவில்லை, எம் ஜியாரும்  டி எம் எஸ்ஸையே
பாட வேண்டியும்  எம் எஸ் வி  தன்  பிடிவாதத்தை  அன்பால் தன்  விருப்புக்கு மாற்றி  நடந்து கொண்டார் - இளையராஜா  கூத்துகள்  உலகே  அறியும்  இங்கு விபரிக்கத்   தேவையில்லை
இவர்கள் இருவரும்  பெரும் திறமை சாலிகள்  அதில் மாற்று கருத்தில்லை  அவர்களின் 
தனிப்பட்ட  திணிப்பையும்  திறமை மிகுந்த  கலைஞர்களை  ஒதுக்கியமையுமே   அவர்களின்பால்
பிடிப்பின்மையை  உண்டாக்குகின்றது

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக