ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

சிதறிய சிந்தனை முத்துக்கள்

சிதறிய சிந்தனை  முத்துக்கள்

எல்லா உயிர்களும் சாய்ந்து கொள்ள ஒரு தோளை எதிர்பார்க்கின்றன
சாய்த்துக்கொள்  உன் தோளை

எது பருப்பு  எது  பாயாசம்  என்று  தெரியாது தடுமாறும்  அளவுக்கு 
இருட்டில்  நடக்கிறது ஐந்து  நட்சத்திர விடுதி

சீசரை  அறுத்து  எடுத்ததனால்  சிசேரியன் எனப்பெயர்  வந்தது

பொது நீதியில் புதுப் பாதையில் வரும் நல்லவர்கள் அடியொற்றி  நடவுங்கள்

பொய்மை எப்போதும் நிலைத்து ஒங்குவதில்லை  உண்மை  எப்போதும்
நிலையாக  தூங்குவதும் இல்லை

நன்றி  மறவாது  இருப்பாயானால்  அதுவே  நீ  கீழே  சென்றாலும்
 மீண்டும் மேலே  எழுவதற்கு மூலதனமாக அமையும்

நல்ல  போதனைகள்  உன் வானத்தை  அழகாக்கும்  செயல்களை  இனிதாக்கும்

 நீங்கள்  தொழிலாளியாகி  விட்டீர்கள்  என்று  வேதனை கொள்ளாதீர்கள்
இறைவன்  போடும் பந்தியில்  தொழிலாளிக்கே  முதல்  இடம்

ஆயிரம்  பேர்  குளிரூட்டிய  அறைகளில்  இருந்து  வரையும்  திட்டங்களை
ஐநூறு   தொழிலாளர்களே  முடித்துக்கொடுக்கின்றார்கள்

உழைப்பவர்கள்  வளைவதனால்  உலகம்  நேராக  உருள்கின்றது
அதுகண்டு  மகிழ்ந்து  மழையும்  பூமிக்கு  இறங்குகின்றது

ம.இரமேசு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக