ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

மழையில் நனைந்த  மரம்



பழம்  கொத்த  வந்த  பறவை
மரத்திடம்  கேட்டது  ஏன்  உனக்கு
வியர்வை ஆறாய் ஓடுகின்றது
அதுவா  நான்  காற்றால் மகிழ்ந்து
ஆடியதை கண்ட  கார்முகிலும்
நீல வானும் ஐயோ  ஏதோ  விபரீதம்
வருமோ என  பயந்து ஓடின
ஓடிய ஓட்டத்தில்  அவர்களுக்கு
வியர்த்து கொட்டிய  வியர்வை
என்மீது  விழுந்து  என்னை
 நனைத்து விட்டது

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக