வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

மரியாதைக்குரிய  நியாஸ் அவர்கட்கு  இதனால்  அறியத்தருவது  -  கல்வியின் பயன்  அறிவு   அறிவின் பயன்  பண்பு,  கருத்தில்  முரண்பட்டு  மறுதலிப்பு  உண்டென்றால் அதை நாகரிகமாக  மொழிதலே  பண்பு  நாரிகம்.  உங்கள் நண்பரானவர்  என்னை "லூசுப்பயலே"  என்று அநாகரிகமாக  எழுதியிருந்தார் 
  அவ்வாறு அல்லது  அதற்கு    மேலும்  அசிங்கமாக  எழுத  என்னாலும்  இயலும்  அவ்வாறு  செய்தல்  எனக்கே  நான் தேடிக்கொள்ளும்  அசிங்கம்  என்பதை  அறிவேன் அப்படி பழிவாங்கும்  இழி செயலை செய்யமாட்டேன்  என்னையும்  என்னை  அசிங்கப்படுத்துவோரையும் இறைவன்  கண்காணித்தபடியே  இருக்கிறான்  ஆதலால்  இறைவனிடம்  தீர்ப்பை  விட்டுவிட்டேன்   -  தங்களை  எனது  நட்பு வட்டத்தில் இருந்து  நீக்கவேண்டியவனாகின்றேன்  காரணம்  உங்கள்  நண்பருக்கு  பண்பாட்டின் பக்குவம்  இல்லை  அவரை  நட்பாக  கொண்டிருக்கும்  உங்களை  என்னால்  இணைத்துக் கொள்ள மனம் இடந் தரவில்லை -  நேற்று முழுவதும்  மிகுந்த மன நோவில் வாடினேன்  ஏனிப்படி  மனிதர்கள்  இருக்கின்றார்களே  என  எண்ணி , நான் அன்பையும் அகிம்சையையுமே  நேசிப்பவன்  வன்முறைகளை  ஆதரிப்பவன் இல்லை  என்  குடும்பத்தவர்க்கு  அன்றில் எனக்கே  ஒருவன் தீமை செய்யினும்  அவனை  கொல்ல மாட்டேன் அவனை  தண்டிக்க  எனக்கு  அதிகாரமில்லை  அவன் மீது ஆத்திரம் இருந்தாலும்  அதை  அடக்குதலே மிருகத்துக்கும்  மனிதனுக்குமுரிய  சிந்தனை வேறுபாடு  அதுவே  கற்றதன்  அடையாளம்,  அறிவு பண்பாடு --   நீங்கள்  என்றும்  இனிதே வாழ  இறைவனை  வேண்டிக் கொள்கின்றேன்  - வணக்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக