வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

தமிழே பேரழகு 

இன்ப  வெள்ளி  பூத்திருக்க
நெய்தல் கரையின் பால் மண்ணில்
பருவ வாசல் திறந்திருக்க உள்ளே
இனிய காதலர்  சேர்ந்திருந்தார்
அந்தோ  காதலன்  வாய் மலர்ந்தான்
கண்ணே உன்  அழகு அழகா
இல்லை  இந்த  நிலவு அழகா
கடலின் அலைகள் அழகா
அலைகள் அணையும்  கரையழகா
அத்தான்  இவையெல்லாம்  அழகுதான்
அதனிலும் அழகு உங்கள்  சொல்லன்றோ
அன்பே  அது  தமிழ்  தந்த  வசந்தம்
உன்வழி  முறையின்  தமிழே பேரழகு 

ம.இரமேசு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக