வானின் வியர்வை
வெள்ளி நிலவும்
வெண்பனியும்
சில்லெனும் சாரலும்
கண்டு களிக்க
துள்ளி விளையாடும்
கடலலைகள்
நீல ஆடையில்
உடல் மறைப்பாள் ஆழி
அவள் கார் கூந்தலில்
வளையும் பூவாய்
குடியிருக்கும்
வெள்ளி அலைகள்
கரை வந்து ஏதோ சேதி
சொல்லி சொல்லி
மீண்டும் ஓடும் அலை
அவள் தலை சூட
வானம்இதனை பார்த்து
மகிழ்ந்து கூத்தாடும்
அது ஆடியிளைத்த
வியர்வை மண்ணில்
பொன்னாகும் முத்தாகும்
பூமிக்கும் உணவாகும்
மண்ணும் மகிழும்
மற்று மனதும் மகிழும்
ம .இரமேசு
வெள்ளி நிலவும்
வெண்பனியும்
சில்லெனும் சாரலும்
கண்டு களிக்க
துள்ளி விளையாடும்
கடலலைகள்
நீல ஆடையில்
உடல் மறைப்பாள் ஆழி
அவள் கார் கூந்தலில்
வளையும் பூவாய்
குடியிருக்கும்
வெள்ளி அலைகள்
கரை வந்து ஏதோ சேதி
சொல்லி சொல்லி
மீண்டும் ஓடும் அலை
அவள் தலை சூட
வானம்இதனை பார்த்து
மகிழ்ந்து கூத்தாடும்
அது ஆடியிளைத்த
வியர்வை மண்ணில்
பொன்னாகும் முத்தாகும்
பூமிக்கும் உணவாகும்
மண்ணும் மகிழும்
மற்று மனதும் மகிழும்
ம .இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக